Saturday, August 11, 2018
கலைஞரின் வழியில்
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்!
-தளபதி மு.க.ஸ்டாலின்
..
மிக தெளிவாக இருக்கிறார் சரியாகவும் சொல்லியிருக்கிறார் நானென்ற அகந்தையில்லை என்னால் முடியும் அதேவேளை மூன்று முத்தான தலைவர்களின் வழிநின்று அவர்கள் ஆற்றிய பணியை .. இந்த சமூகத்திற்கு செய்வேன்
அனைவரோடும் கரம்கோர்த்து செல்வேன் என்கிறார்..
தமிழக அரசியல் இந்த முப்பெரும் தலைவர்களால் வடிவமைக்கபட்டிருக்கிறது திராவிடச் சிந்தாந்தமென்பதின் அடிநாளம் இவர்களின் சொல், செயல் .. நம் எதிரிகளை இனம்கண்டு நமது உரிமைகளை எங்ஙனம் பெறவேண்டும் எம் மக்களின் மீதான மறைமுக மற்றும் நேரடி தாக்குதலை எம் பகைவர் தொடர்ந்து செயல்படுத்துவர் பாசிசத்தின் கோரபற்களை எப்படி பிடிங்கியெறிவதென நமக்கு பாடம் நடத்தி சென்றிருக்கிறார்கள்..
..
கலைஞர் மீது எந்தளவிற்கு வன்மம் இருந்தால் அவர் வாழும் போது தொடர்ந்து பொய் பிரச்சாரங்களால் நம்மிடையே ஒருவித வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்தார்கள்
அதையெல்லாம் பொருட்படுத்தாது பணி செய்துகிடப்பதே எமது வேலையென வாழும் நொடிகள் தோறும் எமது மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே சிந்தித்து செயலாற்றினார்.. இறந்த போது கூட ஆர்எஸ்எஸ் தலைமை அவர் மீது கொண்ட கோபத்தால் அவருக்குரிய மரியாதையை தர மறுத்ததோடு தர கூடாதென மாநில அரசிற்கு இடைஞ்சலை தந்து .. நீதிமன்றம் மூலம் பெற நேர்ந்தது.. மக்களின் கோபம் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்துவிட கூடுமென நீதிமன்றமே சொன்னபோது 352 பிரிவை பயன்படுத்தி அரசை கலைத்துவிடுங்களென ஆர்எஸ்எஸ் வைத்தி சொல்லும் அளவிற்கு கலைஞர் மீது.. தமிழ் மக்கள் மீது வன்மம் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.. இந்த கிழவனின் மரணம் கூட அவர்களை தூங்கவிடவில்லை..
..
தளபதி.மு.க.ஸ்டாலின் ..
இனி இந்த தமிழ் மண்ணின் நம்பிக்கை இந்த இனத்தை காக்க.. மக்களை காக்க மானமுள்ள தமிழினத்தின் போர்வாளாய் .. எம் பகைவர் அஞ்சுகிற குலைநடுங்குகிற எம்படையாய் தளபதியாய் நிற்கிறார்.. காலம் கனிந்து நிற்கிற போதும் அமைதியாய் நீண்ட அனுபவத்தின் சுவடாய்.. பக்குவபட்ட அரசியல் முதிர்ச்சியாய் .. அரசியல் இலக்கணத்திடம் நேரடி பயிற்சிபெற்றவராய் கலைஞரின் அரசியல் நெளிவுசுழிவுகளை அருகில் இருந்து கண்டுபடித்தவராய்.. விருப்புவெறுப்பற்ற அனைத்து மக்களின் அன்பை பெற்றவராய் .. கட்சி இயக்கம்,கொள்கை தாண்டி எதிரணியில் நிற்போரிடமும் கரிசனம் காட்டும் அரசியல் தெளிவாய் .. அதேவேளை எம் மக்களின் மீதான அவர்தம் உரிமை மீதான பாசிச தாக்குதல் தடுத்து அரணாய் நின்று வேரடி மண்ணோடு பிடிங்கி வீழ்த்தும் ஆற்றல் கொண்டோராய் .. எம் தளபதி நிற்கிறார்..
பெரியாரின் உறுதியும் .. அண்ணாவின் பண்பும் கலைஞரின் செயலும் உழைப்பும் ஒருங்கே பெற்று தமிழகத்தை மிளிர செய்வார்.. அவரை நம்புவோம் பின்துணைப்போம் .. கட்சி பேதமின்றி இந்த தமிழ் சமூகம் அவரின் கரத்தை பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இல்லையெனில் ..
பார்பனீயம் நம்மை மீணிடும் பழைய சூழலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடும் .. போராடி பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் இழக்க நேரிடும் கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு என சமூகநீதியை இழக்க நேரிடும்.. சில கூத்தாடிகளை காட்டி நம்மை பல்லிளிக்க வைக்க முனையும்.. "திறக்கபடாத கதவுகளையும் மடிக்கபடாத விரிப்புகளையும்" ஆயுதமாய் கொண்ட வந்தேறி கூட்டம் நம்மை நம் சந்ததியின் எதிர்காலத்தை சுரண்டிவிடும்..
..
பெரியார் அண்ணா கலைஞர் காட்டிய வழியில் பயணித்தால் மட்டுமே தமிழகத்தின் தமிழர்களின் எதிர்காலம் சிறந்துவிளங்கும் அதைதான் தளபதி அவர்கள் சொல்லியிருக்கிறார் ..செய்துமுடிப்பார்.. நம்மிடையே இருக்கும் கசப்புணர்வை கலைந்து தளபதியோடு பயணிப்போம்..
..
பெரியார் வழியில் .. அண்ணாவின் கனவோடு
கலைஞரின் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம்.. இனி..
தளபதியே நம் தலைவர்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment