Saturday, August 25, 2018
தளபதி ...
நிர்கதியாய்..நிற்கிறார் அழகிரி
..
அறிவின்மை.. கோபம்,அவசரபுத்தி,சொல்பேச்சு கேளாமை மூத்தோர் சொல்லை மதிக்காமல் தான்தோன்றித்தனமாய் தன்னால்தான் எல்லாம் என்ற அகந்தையில் சென்றதால் கேட்பாரற்று யாருமே கண்டுக்கொள்ளாத நிலையில் அழகிரி ..
..
மிகப்பெரிய அரசியல் ஆளுமையின் மகன் இந்தியாவே உற்று கவனிக்கிற அரசியல் சித்தாந்ததை உருவாக்கி தருகிற எதிர்ப்போரும் நிலைகுலைய செய்கிற மூத்த அரசியல்வாதியின் மகன் .. தந்தைச் சொல்லை மீறி தறிகெட்டுப்போய் வழிதெரியாமல் நிற்கும் அவலம் அசிங்கமாக இருக்கிறது.. அழகிரியை சிறுமைபடுத்தி இதோ பார் திராவிட சித்தாந்த பேராளுமையின் வாரிசு என கேலிபேசும் அவலநிலையை .. எதிரிகள் உள்ளுக்குள் சிரிப்பதேனோ விவரமறியா அழகிரிக்கு அவர் மகனுக்கும் தெரியவில்லை..
என் பின்னால் உண்மையான தொண்டர்கள் என்று சொன்னபோதே புரிந்தது பின்னால் யார் இருந்து இயக்குகிறார்கள் என்று.. கலைஞர் வெறுத்த விரட்டிய ஒருவரோடு .. எப்படி கலைஞரை நேசித்த விரும்பிய பின்தொடர்ந்த உடன்பிறப்புகள் செல்வார்கள் .. இது கூட தெரியாமல் என் பின்னால் உண்மையான தொண்டன் என்கிறார் .. செல்கிறவன் உண்மையான இயக்க தொண்டனாக இருக்கமுடியாது ..கொள்கை பிடிப்புள்ளவர்களோ .. கலைஞரை கழகத்தை நேசித்தவர்களோ உண்மையானவர்களோ நிச்சயமாக அழகிரி பின்னால் செல்லமாட்டார்கள் .. அது ஏனோ அவருக்கு புரியாமல் போனது..
..
யாரேனும் வருவார்களென காத்திருந்து உறுமீன் வரும்வரை காத்திருந்த கதையாய் யாருமே வராமல் போக .. தூது அனுப்புகிறார் கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் பதவி எதுவும் வேண்டாம் என செய்திகள் கசிகிறது ..
கலைஞரால் துரத்தப்பட்ட கலைஞர் அரசியல் செய்த தப்புகணக்காய் போன திமுக தோற்கும் என உளறிக்கொட்டிய இந்த விவரகேடை சேர்ப்பதென்பது திராவிட இயக்கத்திற்கு பெரும் இடைஞ்சலாய் அமையும் .. எக்காலத்திலும் நம்பிக்கைக்குரியவராய் இருக்கமாட்டார்..
சொத்தையைான பகுதியை வெட்டியெறிந்து விட்டுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் கெட்டுபோகும் .. வாய்ப்புகள் தந்தும் தன் தகுதியை வளர்த்துக்கொள்ளாத .. வீண் விளம்பரங்களால் வாய்சவடால்களால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளலாமென்ற அறியாமையை இந்த அறிவுடை இயக்கம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.. நிதானமில்லாத முன்யோசனையற்ற அனுபவமோ பக்குவமோ இல்லாதவர் இப்போதைக்கு தேவையில்லை..
..
தளபதி தலைவராக எல்லா மாவட்டங்களும் முன்மொழிந்திருக்கின்றன.. பொருளாளர் யாரென்பது இரண்டுநாட்களில் தெரியும்..கொள்கையாளராய் .. திடமான உறுதியான செயல்பாட்டாளராய் கொள்கையில் கிஞ்சுற்றும் ஏற்றமிறக்கமில்லாத பிடிப்பானவராய் தளபதியின் கரம்கோர்த்து செயல்படும் மாவீரராய்.. எதற்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வையுடவராய் வரவேண்டும் என்பதே எம் அவா... பாசிசத்திற்கு வெண்சாமரம் வீசாத நேரிய பார்வையுடையவராய்.. பகை எதுவென அறிந்தவராய்.. எதிரியை இனங்காணும் அறிவுடையோராய் ..வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி.. ஜனநாயக இயக்கத்தின் வேர் ஆழ ஊடுறிவி இருப்பதால் நல்லவரை, திறமையானவரை,தேர்வு செய்யும் எமது இயக்கம்.. நம்பிக்கை வளர்ப்போம்
..
நல்லதை விதைப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment