Thursday, August 30, 2018
தளபதி..
குமுதம்.com கருத்துக்கணிப்பு நடத்தி தினகரன் தகுதியுள்ள தலைவரென சொல்கிறது ஸ்டாலினை விட தகுதியான முதலமைச்சராம்,.
பாவம் எரிகிறது வரதராஜன் வகையறாக்களுக்கு .. எங்கே திராவிடத்தின் கடைசி அத்தியாயம் கலைஞரோடு முடிந்ததென கூப்பாடு போட்டு பார்த்து திரு.ஸ்டாலினெனும் இரும்பு மனிதரை உருவாக்கி கழகத்தை வழிநடத்த இயக்கத்தை காக்க உருவாகியிருக்கிறார் என்ற உண்மையை உட்கொள்ள முடியாமல் நொண்டிக்குதிரையை பந்தயகுதிரைப்போல காட்ட நினைப்பதை எண்ணி சிரிப்பு வருகிறது..
..
எவ்வளவு வன்மம்.. இருக்காதா பின்னே
அண்ணாமலை செட்டியாரை சரிகட்டி குமுதத்தை ஆட்டையபோட நினைத்ததை தடுத்து .. அவரது வாரிசு ஜவஹர் பழனியப்பன் உரியதை தந்துவிட்டு ரிப்போர்ட் இதழோடு போய்விடுங்களென கலைஞர் சொன்னதை .. அன்று மொத்தமும் கிடைக்காமல் போய் குமுதம் இதழை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வழக்குகள் தொடுத்து .. அண்ணாமலை வாரிசை ஏமாற்ற நினைத்ததை தடுத்ததின் கோபம் இருக்காமலா போகும்..
திரு.அண்ணாமலை செட்டியாரின் பலவீனத்தை பயன்படுத்தி பார்த்தசாரதி கையகபடுத்தியதும்
ஜவஹர் வெளிநாட்டில் டாக்டராக சென்றதும் ஒட்டுமொத்த குமுதம் நிர்வாகமும் பார்த்தசாரதியின் கையில் வந்தது .. ஆம் திறக்கபடாத கதவுகளை ஆயுதமாக கொண்டவர்கள் இப்போது பதறுகிறார்கள் .. எங்கே இருப்பதும் சொத்தின் சொந்தகாரனிடமே போய்விடுமோ என்று பதறுவது தெரிகிறது..
..
திமுக தவிர்க்க முடியாத தமிழகத்தின் அரசியல் கட்சி .. எத்தனையோ இடர்பாடுகள் வந்தபோதும் அதையெல்லாம் கடந்து இன்று மக்கள் நம்பிக்கை கொள்கிற கட்சியாக திகழ்கிறது .. திரு.ஸ்டாலின் கம்பீரான தலைவராக கட்சியிலும் மக்களிடமும் தெரிகிறார் அனைத்துதரப்பினர் ஏற்றுக்கொள்கிற தலைவராக நிதானம் அரசியல் நேர்மை நாகரீக செயல்பாடுகளால் உயர்ந்து நிற்பவரோடு ..
எதற்குமே லாயக்கில்லாதவரை ஒப்பிடுவதிலிருந்தே தீராத பகை தெரிகிறது
பாசிசத்தின் சூழ்ச்சி வெளிப்படையாகவே இந்த கருத்துகணிப்பென்ற பெயரில் வெளிப்படுகிறது ..
..
யாரிந்த தினகரன்
அதிமுகவிலிருந்தே விரட்டபட்டு .. வழக்குகளுக்காக மத்தியில் ஆள்போரிடம் அஞ்சி கேட்காமலேயே ஆதரவு தந்து சிறியதொரு வட்டத்திற்குள் செயல்படுபவர் காசு கொடுத்து ஆட்களை திரட்டி .. திருட்டுபுத்தியில் குறுக்குவழியில் ₹20 டோக்கன் கொடுத்து நப்பாசை காட்டி வெற்றி பெற்றதால் தலைவனாக முடியாது .. தினகரனை இணைத்து பேசுவதே எமக்கு இழுக்கு .. காசு கிடைக்கிறதென்பதற்காக குமுதம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல .. அண்ணாச்சியின் கைகளிலிருந்து குமுதம் போன பிறகு திராவிடத்திற்கெதிரான போக்கும் கலைஞரை அவர்தம் குடும்பத்தை வசைபாடுவதும் குறிப்பாக கேவலப்படுத்துவமாகவே தலையாகபணியாக கொண்டு செயல்படுகிறது ..
..
எங்கள் எதிரிக்கென்று தகுதிகள் வேண்டும் அது நிச்சயமாய் தினகருக்கில்லை..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment