Wednesday, August 22, 2018

தளபதி

கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் இருக்கின்றன .. அதை பிறகு சொல்கிறேன்.. அழகிரி.. .. கலைஞருக்கு நல்ல தொண்டனாகவும் இல்லை தகப்பனுக்கு நல்ல மகனாகவும் இல்லை .. கலைஞர் எதிலும் வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.. கட்சியில் இருந்து மகனென்று பாராது வெளியேற்றியதை அவரே நேரடியாக ஊடகங்களை சந்தித்து சொல்லியிருக்கிறார்.. வீட்டிற்குள் வருவதை எதிர்க்காமல் ஆனால் தன்னை சந்திப்பதை விரும்பாமல் தாயை பார்க்க மகன் வருவதை தடுக்க விரும்பவில்லையென்று மிக தெளிவாக சுட்டிகாட்டி .. தனக்கு குடும்பத்தை விட கட்சிதான் பெரிதென மக்கள் அரங்கில் அறிவித்தவர்.. அவர் தன்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகளென சொல்லி sympathy அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.. கலைஞரின் கடைசி காலத்தில் மிகவும் மனஉளைச்சல் தந்தவர் தனக்கு அதிகாரம் பதவி வேண்டுமென்பதற்காக எதையும் செய்ய துணிந்தவர்.. சொந்த சகோதரனையே .. பெற்ற அப்பன் முன்பு இன்னும் மூன்று மாதத்தில் செத்துவிடுவானென சொல்லி வேதனையடைய செத்தவர் .. பதவி தந்தும் அதை ஒழுங்காக திறமையாக நிர்வகிக்க தெரியாத கையாலாகாதவனாய்... கலைஞர் விதைத்து விளைந்ததில் சொத்தையாகிபோனவர்.. இவர் எந்த அடிப்படையில் திமுகவை குறை கூறுகிறாரென தெரியவில்லை.. திமுகவில் சொந்த கொண்டாட இது குடும்ப சொத்தல்ல என்பதை உணரவேண்டும்.. .. திமுகவிலிருந்து கலைஞராலேயே விரட்டப்பட்ட ஒருவரை ஆசைகாட்டி .. திமுகவை நிலைகுலைய செய்யவேண்டுமென்பதற்காக திராவிட அரசியலின் தொடர்ச்சிக்கு முட்டுகட்டை போடவேண்டும் .. ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வீழ்த்தபட்ட பாசிச சக்திகளின் பின்னால் ஒளிந்துக்கொண்டு பதவியெனும் பேராசைக்காக பெற்றவனையே தூற்ற நினைக்கிற கேடுகெட்ட பிறவியாக நிற்பது கண்டு பச்சாதாபமே வருகிறது.. திறமையை வளர்த்துகொள்ள தெரியாமல் .. தகப்பனின் நிழலில் சுகம்கண்டு .. அதே தகப்பனுக்கு நேரே பகைகொண்டு கழுத்தறுக்க நினைத்த துரோகத்திற்கு மன்னிப்பை வழங்கமாட்டார்கள்.. திமுக தொண்டர்கள் அழகிரியை ஏறக்குறைய புறந்தள்ளி..மறந்துபோய்விட்டார்கள்.. ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட ஆதரிக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கபட்ட பழைய விசுவாசிகளை கூட்டி.. அதிமுகவிலிருந்து ஆட்களை வாடகைக்கு வாங்கி .. பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது தெரிகிறது.. எந்த கலைஞரின் தொண்டனும் திராவிட சிந்தையாளனும், தமிழகத்தின் முன்னேற்றத்தை விரும்புகிற நடுநிலையானவர்களோ அழகிரியை விரும்பவில்லை ..மாறாக அவரை ஊடகங்கள் தங்களுக்கு வழங்கபட்ட assignment வேலையை முடிப்பதற்கு விவாதமென்ற பெயரில் தூக்கிபிடிக்கின்றன.. இப்படி நிறைய பார்த்தாயிற்று.. கரைசேரமுடியாத துடுப்பில்லாத ஓட்டை விழுந்த படகில் ஏறி பயணம் செய்ய நினைக்கிற முட்டாளாய் தெரிகிறார் அழகிரி .. .. விவாதங்களுக்கோ விமர்சனங்களுக்கோ இங்கே இடமில்லை தவிர்க்கமுடியாத சக்தியாக மறுக்க முடியாதவராக உறுதியாகியிருக்கிறார் தளபதி.ஸ்டாலின் .. தமிழகம் காத்துநின்ற பொழுது விடிய தொடங்குகிறது.. சூரியனின் மறைவிற்கு பிறகு இருண்ட நிலம்.. கதிரவனின் வரவிற்காக காத்துநிற்பதைப்போல தமிழகமே எதிர்பார்த்து நிற்கிறது.. வெறுப்பை கக்கும் விசமதாரிகள் ஓரமாய் நிற்கவும் .. இல்லையெனில் .. வேகத்தில் அடிபட்டு தூக்கியெறியபடுவீர்கள்..இது இறுதி எச்சரிக்கை.. மக்களால் புறக்கணிக்கபட்ட எவரும் அரசியலில் இருக்குமிடமே தெரியாமல் புதைந்துபோனதாகதான் வரலாறு.. .. அழகிரி அவர்களே..அடங்கியிருக்கவும்.. இல்லையெனில் காலசுழற்சியில் அழிந்துபோவீர்.. தளபதி ஆளபோவதை காணதான் போகிறீர்.. அதுவரை #வாய்மூடி_இருக்கவும் … .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment