Wednesday, August 8, 2018

நல்ல தலைவனாய்

தலைவா.. கண்ணீரோடு விடை தருகிறோம்.. அழுகையின் காரணம் புரியவில்லை.. நாங்கள் வாழ்வில் அழ கூடாதென்ற உழைத்த நின் பிரிவு கண்ணில் நீரை வரவழைக்கிறது.. ஆம் அழ கூடாதென்று தான் நினைத்தேன். எமது அழுகை ஆரியத்திற்கு பேரின்பம் தந்துவிடுமோ என்று கூட நினைத்தேன்.. உன்னை சந்தனபேழை வைத்தபோது .. ஓ..வென அறியாமல் கதறினேன்.. நாடே நாதியற்று நிற்பதைபோல ஒர் உணர்வு தமிழ் மண் இன்று துவர்க்கிறது மக்கள் விட்ட கண்ணீரால் ..கோடிக்கணக்காக மக்களின் இதயம் அழுததை இப்போதுதான் இந்திய துணைக்கண்டமே பார்க்கிறது.. உன் வரலாறு முழுக்க புதுமைகளை புரட்சிக்களை செய்து கொண்டே இருக்கிறது.. ஒருமுறை கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத உனக்கு இரு அவையும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியதோடு வரலாற்றில் முதல் முறையாய் அவை ஒத்துவைக்கபட்டது.. .. உன் இருப்பிற்கு கதிகலங்கியவன் உன் இறப்பிற்கும் பதறுகிறான் .. இறந்தும் நீ போராடி பெற்றாய் மெரினாவை.. இறப்பில் கூட பதறுகிற பரதேசி கூட்டம் செய்த சூழ்ச்சியை முறியடித்து எமக்கு பாடமாய் அமைந்திட்டாய்.. நான் கூட இறுமாப்போடு இருந்தேன் நீ.. தமிழகத்திற்கு தான் தலைவனென்று..நாடே 26 மாநிலங்கள் விடுமுறை விட்டு உனக்கு அஞ்சலி செலுத்துகிறது.. நீ.. இந்திய துணைக்கண்டத்தின் பெருந்தலைவன்.. நாட்டின் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவன் நீ என்பதை இந்திய மக்களின் மௌனம் கலந்த கண்ணீர் சொல்கிறது.. .. எம் மாநிலத்தில் நீ பிறக்கவில்லையென கவலைபடுகிறார்கள் உன் இருப்பின் பலம் அறிந்த அயல் மாநிலத்தார் ஆனால் தமிழன் நீ இருக்கும் போது உன் அருமை தெரியாமல் இருந்தான்.. மறைந்த சிலநொடிகளிலேயே ஆரிய தாண்டவத்தை கண்டு அதிர்ச்சியானான்.. இருந்து கண் மூடி உறங்கிய நிலையிலும் இடஒதுக்கீட்டு வெற்றி சூத்திரத்தை பாடம் நடத்திவிட்டு போய்விட்டாய்.. உன்னால் பலன் பெறாத ஒரு தமிழ் குடும்பகூட இல்லை வெவ்வேறு வடிவில் திட்டத்தில் சமூகநோக்கில் செயலில் நீ.. நன்மை செய்துவிட்டு போயிருக்கிறாய்.. நேற்றுவரை குதறிக்கொண்டிருந்த தொலைகாட்சிகள் .. இன்று உன் பிரிவு கண்டு கண்ணீர் விட்டு கதறின.. .. ஒரு போராளியின் ஒரு தொலைநோக்காளனின், பகுத்தறிவாளின், ஒரு எழுத்தாளின்:,இலக்கியவாதியின், சமூக விஞ்ஞானியின், நல்ல நண்பனின், நல்ல உழைப்பாளியின்.. அரசியல்வாதியின் ஆட்சியாளனின்..நல்ல குடும்பதலைவனின்.. நல்ல மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென எமக்கு உணர்த்தியது உமது இறுதி நிகழ்வு .. உன் வாழ்வே எமது பாடம் ஆம் படிப்பினை தரும்.. எதிரியை எம் இன பகையை வேரறுக்க.. துரோகியை அடையாளம்கண்டு வீழ்த்த.. எம் இனத்தின் மக்களின் மேம்பாட்டிற்கான சுயமரியாதையை நிலைநாட்ட.. விளிம்புநிலை மக்களின் உயர்த்த.. நல்லதொரு புதிய தொடக்கத்தை தொடங்க.. உன் வாழ்வெனும் ஆளுமைகொண்ட அத்தியையம் வழிகாட்டும்.. .. நீ.. தமிழ் குடிகளில் தமிழர் நெஞ்சங்களில் வீற்றிருப்பாய்.. அப்பனாய்.. அம்மையாய்.. அருள் தரும் இயற்கையாய்.. காவலாய்.. சென்று வா.. அப்பனே.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment