Wednesday, August 29, 2018

மெரினா

அதிகம் பேச விட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது .. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசு என்று நாம் கொஞ்சம் அதிகமாகவே அனுமதித்துவிட்டோம்,.. கண்டதுகள் என்ன கதைக்கிறோமென்று தெரியாமல் உளறிவைக்கிறது.. .. மெரினா .. திராவிட சுடுகாடாம் .. இங்கே புதைக்கப்பட்டடிருப்பவர்கள் .. இந்த திராவிட நாட்டை இந்திய துணைக்கண்டத்திலிருந்து மாற்றி .. புதியதொரு சிந்தனையை விதைத்தவர்கள்.. சுயமரியாதையை ஊட்டி மானமொன்றே பெரிதென வாழ வகை செய்தவர்கள் .. எதையும் போராடி பெறு என்று உரக்க சொல்லிவிட்டு சென்றவர்கள் இன்றைக்கு நீ பெற்றிருக்கிற உரிமைகள் அனைத்தும் முன்பு உனக்கு மறுக்கபட்டவைகள் .. கல்வி வேலைவாய்ப்பு என எதிலும் உன்னை உள்ளேயே விடாமல் அப்பன் தொழிலை பாரென்றவனிடம்.. நீ பார்ப்பு தொழில் பாரென்று கேட்க வைத்தவர்கள் .. விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்கள் .. மக்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்கள் .. மானமும் அறிவுமே மனிதர்கழகென்ற பேராசானின் வழியில் தமிழகத்தை வழிநடத்தியவர்கள் .. சிலர் இங்கே தவறான பாதையை வகுத்து பழி சுமந்திருந்தாலும் கடைசிவரை திராவிடத்தை கைவிட தயாராகவில்லை ..காரணம் இம்மண்ணில் இதை மீறி எது செய்தாலும் மக்களால் புறக்கணிக்கபடுவார்கள் என்றறிந்து அதன் சுவடுகளிலேயே பயணித்தவர்கள்.. இங்கே .. அண்ணாவும் கலைஞரும் உறங்குவது சில பாசிச சித்தாந்தவாதிகளுக்கு வயிறு எரிகிறது.. அவர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து ..எங்கே வழக்கு விசாரணை சிறை என்று காலம் முழுவதும் களி திங்க நேரிடுமோ என அஞ்சுகிற சீமான் போன்ற அரைகுறை மனநிலைபாதிக்கபட்டவர்கள் புலம்பகிறார்கள்.. .. பிணத்தை வைத்து பிச்சையெடுக்கிறவர்கள் ஈழம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ..மேலைநாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிற இவனை போன்றவர்களை ஆரம்பத்திலேயே பல்லை பிடிங்கிருக்கவேண்டும் பெரியாரை விமர்சித்த போதே.. கலைஞர் பெருமகனை சிறுமைபடுத்த எண்ணிய போதே தக்க பதிலடி தந்திருந்தால் இன்றைக்கு வெறி கூடி குரைத்திருக்கமாட்டார்.. இளைஞர்கள் உரக்க கத்தி 60,000 ஆனைகளென புருடாவிட்டு வரலாற்றை சரியாக அறியாமல் கதைத்து .. தினம் ஒரு பொய் என பார்பன கும்பலை மகிழ்வித்து தம் மீதான வழக்குகளிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இவன் பேசுகிற பொய்பேச்சுக்கள் எல்லை மீறி செல்கின்றன .. இவனுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா என்று நினைப்பதுதான் இவரை போன்றவர்களின் வரம்பு மீறலுக்கு காரணம் .. .. கொஞ்சகாலம் இவரைப்போன்றவர்கள் வெளியில் நடமாடாமல் பார்த்துக்கொண்டால் போதும் .. அடங்கி ஒடுங்கி போவார்கள் கொள்கைப் பிழைகள் .. பிழைப்பிற்காக பிணம் தின்பவர்கள் இவர்களால் இந்த தமிழ் சமூகம் ஒருதுளி நன்மை கூட அடைந்ததில்லை.. இவர்களை இன்னமும் இப்படியே பேச அனுமதிப்பதா என்பதை தி.மு.கழகத் தலைமை முடிவு செய்யவேண்டும் .. .. மெரினா கடற்கரை திராவிட சித்தாந்தவாதிகள் உறங்குமிடம் .. திராவிட தேசத்தை செதுக்கிய சிற்பிகளின் உறைவிடம் மெரினா எமது நினைவுகளின் பாதுகாப்பிடம் .. மெரினா எமது சுற்றுலாதளம் .. மெரினா எமது சித்தாந்த சுவடுகளை தாங்கி நிற்குமிடம் .. மெரினா தமிழர்களின் களஞ்சியம்.. மெரினா எமது நிலம் ..எமது உரிமை.. மெரினா எம் இனத்தின் சுவடுகளை தாங்கிநிற்குமிடம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment