Tuesday, August 28, 2018

தலைவராய் தளபதி

தந்தை பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதைக் கொள்கையில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது... தலைவர் தளபதி... ... மிக தெளிவாக இதுதான் எங்கள் கொள்கை எங்கள் சித்தாந்தம் என தெளிவாக பொட்டில் அடித்தாற்ப்போல சொல்லியாகிவிட்டது திராவிட இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டதோ.. எதற்காக அரசியல் அமைப்பில் சட்டமியற்ற தேர்தல் அரசியல் தேவையென்று தி.மு.கழகம் தோன்றியதோ அந்த அடிப்படையிலிருந்து சற்றும் மாறாமல் சமூகநீதிக்காக .. தமிழினத்தின் மீதான தொடர்ந்து வரும் பகை விரட்ட. மக்கள் நலன் ஒன்றே உயிர்மூச்சாய் கொண்டு செயலாற்ற இதோ புதியதொரு தொடக்கத்தை தளபதி அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.. .. நிறைய சந்தேகங்களை சிலர் வேண்டுமென்றே பரப்பி திமுகவை பலவீனமடைய செய்யும் செயலை தொடர்ந்து செய்துவரும் வேளையில் .. நாடும் மக்கள் இன்னல்களை களைய மிகப்பெரிய மாற்றத்தை .. சமூகநீதி மண்ணிலிருந்தே தொடங்க வேண்டுமென்ற யதார்த்தத்தை உணர்ந்தவராக .. நாடு முழுவதும் காவியை பூச நினைக்கும் மோடி அரசிற்கெதிராக .. போர் பிரகடனத்தை செய்திருக்கிறார் .. நாடு எதிர்பார்த்த நல்ல செய்தி இது.. தளபதியிடம் எதிர்பார்த்த ஒன்று தான் .. கலைஞரின் வார்ப்பு தவறாகாது என்று அறிவோம் .. தலைவராக பொறுப்பேற்று முதல் பேச்சிலேயே தெளிவு படுத்தி .. எங்கள் பாதை இதுதான் என ஊருக்கு சொன்ன செய்தி.. எமது இயக்கத்தின் நான்காம் தலைமுறை மிக துடிப்போடு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு செயல்படுமென்ற சேதி சொல்கிறது இதுவரை பார்த்த தளபதி வேறு இனி பார்க்க போகும் தலைவர் வேறு .. கொள்கையில் கிஞ்சுற்றும் விட்டுவீழிச்சி இல்லையென்று பகைவர் பதற பறைச்சாற்றியிருக்கிறார்.. “ எம்முளும் உளன் ஒரு பொருநன்! திங்கள் வலித்த கால் அன்னோனே!!” .. எதற்காக இந்த இயக்கம் .. ஏன் கட்டமைக்கபட்டது இதன் லட்சியம் கொள்கை என்ன.. என்பதறிந்து யார் நம் பகைவர் என்ற தெளிவோடு மிக நிதானமாக அதே நேரம் உறுதியோடு மிக நேர்த்தியாக செயல்படுவதை காட்டி தலைமைப் பொறுப்பேற்றவுடன் தான் நிகழ்த்திய முதல் உரையில் மக்களுக்கு சேதியாக சொல்லியிருக்கிறார்.. இதோ இதுவரை பார்த்த ஸ்டாலின் அல்ல நான் திராவிட மரபணுகளோடு கனவுகளை நிறைவேற்ற புதிதாய் பிறந்திருக்கிறேன் இனி புதியவனை காண போகிறீர் என்றார்.. ஆம் பெரியாரின் ஒளியில் அறிஞர் அண்ணாவின் வழியில் கலைஞரின் பயிற்சியில் .. நாடும் எம் இனமும் நலம் பெற .. சமதர்ம சமுதாயம் அமைத்திட இதோ.. சமூகநீதி நாட்டில் இருந்து புதியதொரு சூரியன்.. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வெளிச்சம் தர உதயமாகியிருக்கிறது.. கிழக்கு வெளுத்தது ..கீழ்வானம் சிவந்தது.. புதியதொரு விடியல் தொடங்கியது .. #உதயசூரியன் எழுந்தான்.. #DMKThalaivarStalin .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment