Saturday, August 18, 2018

தளபதி..

மஞ்சள் துண்டுதான் கலைஞரின் அடையாளமென்று யாரோ அந்த அரைவேக்காட்டிடம் சொல்லியிருக்கிறார் பாவம்.. வான்கோழி மயிலாகுமா.. காக்கை குயிலாகுமா.. என்ன.. .. கலைஞரின் அடையாளம் நேர்வகுடோ.. லாவகமாய் துண்டை தூக்கிப்பிடித்து நின்று கதைப்பதோ அல்ல..உழைப்பு ..அந்த அயராத உழைப்பிலும் நேர்மை.. ஆழ்ந்த அரசியல் திறமை.. சாணக்கியம் ..பெரியாரின் உறுதி.. கடைசி தொண்டன் மீது காட்டிய அன்பு.. மொழி இனத்தின் மீதான பற்று.. எதையும் போராடி பெற வேண்டுமென்ற வெறி.. கடமை தவறாது கண்ணியத்தோடு.. மாபெரும் இயக்கத்தை கட்டுகோப்போடு.. இடர்கள் பலவந்தபோதும் நெருக்கடிகள் தந்தபோதும் .. துயரம் துரத்தியபோதும் மன உறுதியோடு கட்டிக்காத்த பேராளுமை.. கலைஞரின் தமிழ்.. கலைஞரை மஞ்சள் துண்டுக்குள் அடக்கிவைக்க நினைக்கும் முட்டாள்களே.. அவர் காட்டாறு.. .. கலைஞரின் அரசியல் வாரிசாக வேண்டுமெனில் .. நீண்ட உழைப்பும் நேரிய சிந்தனையும், நிதானமும் கொஞ்சமேனும் அரசியல் அறிவும் தேவை.. எதை எப்போது எப்படி செய்யவேண்டும் கையாளவேண்டுமென்றும்.. எப்போது பேசவேண்டும் என்பதைவிட எப்போது பேச கூடாதென்றும் அறிந்திருக்கவேண்டும்.. யார் பகையென்றும் எவரால் இந்த தமிழ் சமூகமும் நாடும் சூறையாட படுகிறதென்றும் .. எந்த சித்தாந்தத்திற்கெதிராக கலைஞர் காலமெல்லாம் செயல்பட்டாரோ ..அந்த பாசிச சித்தாந்தவாதிகளின் கைப்பாவையாய்.. திமுகவை உடைக்க நினைக்கிற சண்டாளித்தனத்தை முதலில் கைவிடவேண்டும்.. யாருக்கு ஆசையில்லை ஆனால் அதற்கான தகுதி வேண்டும் கடின உழைப்பில் எதுவும் வரவேண்டும் அப்பன் போனதால் அதிகாரம் வேண்டும் என நினைப்பது அரசியலில் சரிபடாது அப்படி வந்தவர்கள் .. சுவடே இல்லாமல் கரைந்துபோனதாக தான் வரலாறு.. எதுவும் இங்கே இலகுவாய் கிடைக்காது .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை காலம் மிக அழகாய் கட்டமைத்திருக்கிறது செதுக்கியிருக்கிறதென்றுகூட சொல்லலாம்.. கலைஞரோடு நீண்டதொரு பயணம் .. மிக தெளிவான பாதை .. எத்தனை இடர்பாடுகளிலும் நெஞ்சுரத்தோடு கடந்துவரும் ஆற்றல்.. பகையறிந்து அதன் பலமறிந்து மோதும் விவேகம்.. நிதானத்தோடு நேர்பார்வையோடு.. எதிரிகளை கலங்கடிக்கும் திறன்.. தொண்டர்களின் பேராதரவு.. கட்சியில் ஒருமித்த எதிரியில்லாத தேர்வாக #தளபதி திகழ்கிறார்.. கலைஞரின் வாரிசாக மட்டுமல்ல எம் இனத்தை காக்க வந்த கேடயமாய்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த காலம் செதுக்கி தந்திருக்கிறது.. வீழ்த்த முடியாது இனி.. வீணர்களே.. யாரை முன் நிறுத்தினாலும் ..எந்த வேசம்கட்டினாலும்.. எத்தனை வஞ்சனை சூது செய்தாலும் இனி எழவே முடியாதவாறு ஆழப்புதைத்துவிடுவோம்.. .. இனி.. தளபதியே.. தமிழகத்தின் எதிர்காலம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment