Tuesday, August 14, 2018

தளபதிபடை இனி.. தமிழகம் ஆளும்

ஒன்று நிச்சயம் தளபதியை எதிர்க்கிறவர்கள் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவரென்றாலும் காலசுழற்சியில் கரைந்தே போவர்.. கழகம் தன் குடும்பத்தைவிட மேலானது உயிரானதென சொல்லிவிட்டு சென்ற தலைவர் நிழலில் நின்று யாரெல்லாம் நம் பகைவரென நமக்கு உணர்த்திய தலைவர்.. துரோகிகளையும் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.. அவர்களை கட்சியைவிட்டே விரட்டியுமிருக்கிறார்.. .. அப்பன் சொத்தில் பங்கு கேட்பதைப்போல எண்ணிக்கொண்டு கழகத்தில் உரிமை கோருபவர்களுக்கு இது .. கருணாநிதியின் சொத்தல்ல என சொல்ல வேண்டியிருக்கிறது.. கலைஞர் எம் தலைவர் எமது வழிகாட்டி இயக்கத்தை கட்டிகாத்தவர் .. சமூகநீதியை வார்த்தெடுத்த சிற்பி .. ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட எதுவும் பயிற்சியோடும் பக்குவத்தோடும் உழைப்போடும் தேடி வரவேண்டுமென செய்தவர் .. கட்சியையும் குடும்பத்தையும் வெவ்வேறாக கண்டவர் அதனால் தான் அவரால் மகனென்று பாராது கட்சியை விட்டு நீக்கியதோடு அருகில் சேர்க்காமல் கட்சியா குடும்பமா என்றால் கட்சிதான் முக்கியமென ஊருக்கு உரக்க சொல்லமுடிந்தது.. .. படிப்படியாய் உயர்ந்து பக்குவத்தோடு வெற்றி தோல்வி இரண்டையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு செயல்படும் தளபதியார் குறுக்குவழியிலோ குடும்ப நிழலிலோ தனக்கான இடத்தை கேட்காமல் உழைப்பின் மூலம் எதுவும் கிடைக்கவேண்டும் அது தன் திறமைக்கு தகுதிக்கு கிடைத்ததாக இருக்கவேண்டுமென எண்ணி .. சிறப்பான செயல்பாட்டால் .. ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து இன்று உயரத்தை அடைந்திருக்கிறார் .. அவரை வீழ்த்த முடியாதென அறிந்த சில பகைவர் கூட்டம் தங்கள் அரிப்பை சொறிந்துக்கொள்ள கொள்ளைப்புற வழியில் கோல்மூட்டி தூண்டிவிட்டு சில சில்லறைபுத்தியாளனை கூர்தீட்டி குத்தபார்க்கிறது.. திமுகவை உடைக்கவேண்டுமென்ற நீண்டநாள் திட்டத்தை அரங்கேற்ற நேரம் பார்க்கிறது ..பாவம் கையிருப்பும் போகுமென அறியாமல் .. மிக தெளிவாக செயற்குழுவில் பேசியவர்கள் தளபதியை தலைவராக ஏறக்குறைய முன்மொழிந்துவிட்டார்கள் ..அதுதான் நடக்கும் ஒரு மாவட்ட செயலர் கூட துரோகிகளின் பக்கம் போக மாட்டார்கள் திமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் இயக்க நிர்வாகிகளும் தளபதியைதான் பின்துணைக்கிறார்கள்.. .. அப்பன் ஒளிந்துக்கொண்டு மகனை கொண்டு ஆசிரியரை கேலி செய்கிறாராம் அதற்கெல்லாம் இன்னும் வளரவேண்டும் விருந்துக்கு வந்தவர்கள் வடைபாயசத்தோடு கைகழுவி செல்லவேண்டுமே தவிர.. விளக்கம்தரகூடாது இவனெல்லாம் யாரென்றே கட்சிகாரனுக்கு தெரியாது.. நாங்கெல்லாம் மக்களுக்காக போராடிக்கொண்டிருந்தபோது மங்காத்தா படத்தை பற்றி சிந்தித்தவனெல்லாம் எங்க மயிறுக்கு சமம்.. ஆசிரியரை தகாத வார்த்தையில் விமர்சிக்கிறவர்களுக்கு இதுபோதும்.. உழைக்காமல் ஓசியில் பதவி ஆசையில் அப்பனும் மகனும் வந்தால் இங்கே இடமில்லை.. .. இன்று நேற்றல்ல கழகத்தை தகர்க்க துண்டாட.. பிரிவினைவாதிகளென பேசிபார்த்தார்கள் ஈ.வி.க.சம்பத்தை கொண்டு (பெரியார் குடும்ப வாரிசு) முயற்சித்தும்.. எம்ஜிஆரை வைகோவை ..பார்த்தாகிவிட்டது.. ஊழலென்றார்கள் நிரூபிக்கமுடியாமல் போனார்கள்.. எத்தனை சதிகள் துரோகங்கள் ..இதோ இப்போது மற்றொரு துரோகி.. கலைஞரின் மகன் அழகிரியை கொண்டு கொம்புசீவி பார்க்கிறது ‍. இதையும் கடந்து வெல்வோம்.. .. தளபதி விரைந்து கழக பொறுப்பை ஏற்பதோடு .. கலைஞரால் தூக்கியெறியபட்ட கிழிசல்களை அடையாளம்படுத்தி ஒதுக்கிவைத்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து புதியதொரு அத்தியாயத்தை எழுதவேண்டும்.. தளபதியார் அவர்களே விரைந்து தலைமையேற்க வாருங்கள் சோகத்தை துக்கத்தை விடுத்து நாட்டின் மக்களின் நலன் கருதி ஊகங்களுக்கு இடமே தாராது .. கலைஞரின் முதுகில் குத்திய துரோகிகளை உடன்பிறந்தவரென்றாலும் அடையாளங்காட்டுங்கள் .. நாடு நம்பியிருக்கிறது நல்லதை செய்வீர்களென நம்புகிறது .. இயக்கத்தை வழிநடத்த வாருங்கள் .. "தி.மு.க. கெட்டியான பூட்டு கள்ளச்சாவி போட்டுவிடாமல் கழகத் தொண்டர்கள் காத்துக் கொள்ளவேண்டும்.. என்றார் பெரியார் .. எவ்வளவு தீர்க்கத்தனம்.. கொள்ளையர்கள் போல் புறவழியே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் .. விரட்டிவீழ்த்துவோம் தளபதியின் கரம்கோர்ப்போம் கழகத்தை காப்போம்.. தளபதியின் படைகொண்டு.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment