Saturday, September 1, 2018

கலைஞர் புகழ் வணக்கம்

கலைஞருக்கு புகழ் வணக்கம்.. எந்த தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாய் பல்வேறு துறை சார்ந்தவர்கள்,இந்த தலைவனை புகழ்கிறார்கள். .. அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் மறைந்த அரசியல் தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதென்பது நாம் கண்டதுதான் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவரை புகழ்வதை நாம் கண்டும் கேட்டுமிருக்கிறோம்.. தேசிய தலைவர்களில் ஒரு சிலரை புகழ்ந்து வரலாற்றில் படித்திருக்கிறோம் .. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மனிதரை புகழ்கிறது ..பல்வேறு துறைசார்ந்த சான்றோர்கள் விருப்புவெறுப்பின்றி கலைஞரின் சாதனைகளை பேசுகிறார்கள் .. தனி மனிதனால் அதுவும் அதிகம் வெளிச்சம் வராத சிற்றூரின் பின்னணியில் வளர்ந்து மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் நவீன இந்தியாவின் சிற்பிகளுள் ஒருவராக திகழ முடிந்ததெப்படி என வியக்கிறார்கள்.. எத்தனை சோதனைகள் எவ்வளவு பொய் பிரச்சாரங்கள் தனிமனித தாக்குதல்கள் .. பொய் குற்றசாட்டுகள் இவை அனைத்தையும் .. கடந்து "அறம் வெல்லும்" என்ற நம்பிக்கையோடு ஒரு சமூக போராளியாக .. இந்த இந்திய சமூகத்தின் வர்ணாசரம கோட்பாடுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை ஏற்றிவிட தன் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் செயல்படுத்தி அவர்கள் தம் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒரு மனிதர்.. யாராலும் அடையமுடியாத சாதனைகளை ..செய்து காட்டிய ஓய்வில்லாத உழைப்பை இந்த நாடே போற்றி புகழ்ந்து தன் நன்றிதனை செய்கிறது.. .. இந்த மா மனிதரை தரம்தாழ்ந்து விமர்சித்தும் ஊழல் அளவிற்கதிகமாக சொத்தை சேர்த்துவிட்டார் .. உலகமே காண ஊழல்புகார் சுமத்திய இவரது குடும்ப உறுப்பினர்களை ஏதோ கொள்ளைக்காரர்கள் போல ஊடகங்களின் மூலம் செய்திகள் பரப்பி.. ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் செய்தால் ..ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை தடுக்கலாம் என்றெண்ணி .. அடுக்கடுக்காக விமர்சனங்கள் .. ஆனால் உண்மையை என்றைக்கும் ஆழ புதைத்தாலும் அது விதையைப்போல கிழித்து வெளிவரும் என்ற உண்மை இப்போது மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. எத்தனை குற்றசாட்டுகள் ஒன்றில் கூட இவரையோ இவர் சார்ந்த இயக்கத்தையோ சட்டத்தின் முன் குற்றவாளியென்று நிரூபிக்க முடியவில்லை அவர் மீது தொடுக்கபட்ட வழக்குகளெல்லாம் பொய்யால் குரோதத்தால் எப்படியும் அவரை வீழ்த்திட வேண்டுமென்று சொல்லபட்டவை .. அறம் வெல்லுமென்று அமைதி காத்து கடைசியில் எல்லா பொய்களையும் சூழ்ச்சிகளையும் வென்றார்.. .. இன்றைக்கு சாதி மதம் பார்க்காமல் மொழி இனம் பார்க்காமல் இந்தியா முழுவதும் கொண்டாடபடுகிற .. எங்கள் மண்ணில் இப்படியொரு மனிதர் .. அரசியல்வாதி கலைஞர் சமூகநீதி காப்பாளர் பிறக்கவில்லையே .. இப்போது நாங்கள் யோசித்து செயல்படுத்த நினைக்கும் விடயங்களை திட்டங்களை முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியிருக்கிறார் இந்த தொலைநோக்கு சிந்தனையாளரென வியக்கிறார்கள்.. நீதியரசர்கள் திறந்த மனதோடு எந்தளவிற்கு சமூகநீதிக்காக பாடுபட்டவர் எத்தனை அழகாக சட்டங்களை இயற்றி இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் தெளிவான பாதையை வகுத்து .. நீதிமன்றங்களால் தடைபோட முடியாத அளவிற்கு சட்டமியற்றியதை புகழ்ந்திருக்கிறார்கள் .. பிற மாநிலங்களில் இடஒதுக்கீடு தந்த சட்டங்கள் நீர்த்து போனபோதும் தமிழகத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சட்டசிக்கல்களை கலைந்து செயல்படுத்தியதை வியந்து போற்றுகிறார்கள்.. நீதியரசர் அக்பர் அலி இஸ்லாமிய சமுதாய மக்களின் உள்ளுணர்வை மிக தெளிவாக பதிவு செய்தார் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் பரவி கிடக்கும் கலைஞரைப்பற்றிய அறியாமை ஒருவித கசப்பு விலகும்.. நீதியரசர் மோகன் கோகுலகிருஷ்ணன் போன்ற சமூகநீதியரசர்கள் புகழ்மாலை தமிழரிடையே ஏற்பட்டிருக்கிற தெளிவின்மைக்கு விளக்கமாக அமையும் .. தமிழக மக்கள் இப்போதுதான் கலைஞரை சரியாக புரிந்து .. இந்த மாபெரும் தலைவனை சில விவரகேடுகளின் பேச்சை பொய் பிரச்சாரத்தை நம்பி அதிகாரத்திலிருந்து சிலகாலம் அகற்றி நிறுத்தினோமே என வருந்துகிறார்கள் .. தொடர்ந்து வாய்ப்பை வழங்கியிருந்தால் தமிழகம் மிக சிறந்த மாநிலமாக திகழ்ந்திருக்கும் .. கிடைத்த குறைந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டி ..மண்,கலாச்சாரம், மொழி,இனம் என்ற பல்வேறு தளங்களிலும் தனிமுத்திரை பதித்து யாருமே செய்ய முடியாத சாதனையை எட்டமுடியாத உயரத்தை தொட்ட மாபெரும் தலைவருக்கு .. நாடும் இனமும் என்றைக்கும் நன்றி மறவாமல் புகழ்பாடும்... .. வாழ்க! கலைஞர் புகழ்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment