Saturday, March 31, 2018

காவிரி எமது உரிமை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் தேவை.. மத்திய அரசு.. சொல்லும் காரணம் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கே கலவரம் வரலாம் .. தேர்தல் நடைமுறைக்காக அல்லது ஒரு கட்சி பயன்பெறும்/பெறாதென்பதற்காக தீர்ப்பை நடைமுறைப் படுத்த மறுப்பது ..காலஅவகாசம் கேட்பது நீதிமன்றத்தை நீதியை கேலிகூத்தாக்கும் செயல் .. யார் வரவேண்டுமென்பதை அந்த மக்கள் முடிவுசெய்வார்கள் .. அதற்காக இருமாநில மக்களையும் ஏமாற்றும் மோசக்கார செயலை மத்திய அரசே செய்வது கவலையளிக்கிறது இந்திய ஒன்றியத்தை சிதைக்க மக்களுக்குள் பகையை வளர்க்க அரசு உதவுகிறதோ என்கிற அச்சம் எழுகிறது.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகம் கொந்தளிக்குமாம்.. அப்படியெனில் தமிழகம் வறண்டு சுடுகாடாய் போனால் பரவாயில்லையென பாஜக நினைக்கிறதா .. நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த எந்த மாநில அரசையும் கேட்கவேண்டிய அவசியமில்லை.. காரணம் நதியை எந்த மாநில அரசும் உரிமை கொண்டாட முடியாதென்று தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது.. கர்நாடகாவையோ அல்லது தமிழகத்தையோ கேட்க வேண்டியதென்ற கேள்வியே எழாத போது வாக்குவங்கி அரசியலை அப்பட்டமாக செய்கிறது பாஜக.. சிலர் ராகுல் தலையிட வேன்டும் ஸ்டாலின் தலையிடவேண்டுமென்றெல்லாம் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் அவர்களை கவனியுங்கள் யாரென்று தெரியும்.. .. முன்பெல்லாம் காவிரி தீரத்தில், கரையோரங்களில், பார்பனர்கள் அதிகளவில் குடியிருந்தார்கள் அக்ரஹாரங்கள் காவிரி கரையில் தானே அதிகம் இருந்தது.. காவிரியில் அதன் கிளை நதிகளில்தான் பார்பன குடியிருப்புகள் இருந்தன .. அதிகாலை குளித்துவிட்டு ஈரத்துணியோடு வலம்வருவார்கள் அப்போதெல்லாம் காவிரி பிரச்சனை வந்ததா.. இல்லையே.. தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரங்களில் பிற சாதியினர் குடியேற தொடங்கியதும் பார்பனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிட்டு சென்றார்கள் .. அதற்கு பிறகுதான் காவிரி பிரச்சனை உருவானது இதன் பின்னணி குறித்து யாருமே எழுதுவதில்லை.. .. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாரியம் அமைப்பதை எதிர்க்கவில்லை என்னும் போது .. ஒரு தேர்தலுக்காக ஒரு ஜீவாதார உயிர்நாடி பிரச்சனையை நிறுத்தி வைப்பதென்பது அயோக்கியத்தனமான செயல் .. நண்பர் பிரசன்னா சொன்ன வார்த்தை பிரயோகம் எவ்வளவு சரியென்பதும் தமிழ் மக்களின் மீதான வன்மம் .. வஞ்சம் எப்படியெல்லாம் பழிவாங்க துடிக்கிறதென்பதும் தெரிகிறது.. தமிழ் மீதும் தமிழர் மீதும் நடத்தப்படும் தாக்குதல் ..இங்கே இருக்கிற மானங்கெட்ட அரசை வைத்துக்கொண்டு எதையும் செய்யலாமென்ற நினைப்பு .. இனி எந்தகாலத்திலும் பாஜக தமிழகத்தில் காலூன்றவே முடியாது .. அதை ஆதரிக்கும் அயோக்கியர்களும் இந்த மண்ணைவிட்டே துடைத்தெறிய படுவார்கள்.. .. எந்தவொரு நதியின் உரிமையும் .. வெள்ளப்பெருக்கில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கானதென்ற அடிப்படை உரிமை கூட தெரியாத மத்திய அரசு ..நயவஞ்ச நரித்தனத்தை நம் மீது காட்டுகிறது.. இனியும் பொறுப்பதிற்கில்லை.. காவிரி எமதுஉரிமை.. .. Aalanci Spm

Friday, March 30, 2018

இந்தியா நமக்கானதில்லை

இந்தியா என்னும் நாடு .. ஒரு போதும் நமக்காக இருந்ததில்லை.. அது நமக்கானதும் இல்லை என்றார் தந்தை பெரியார்.. .. காவிரி என்றில்லை எந்தவொரு சமூகநீதியிலும் தமிழகத்தின் கருத்திற்கெதிராக செயல்படுவதுதான் வடவர்களின் செயல்திட்டமாகவே உள்ளது.. இடஒதுக்கீடு கல்வி உரிமை மொழி திணிப்பு .. உயர்கல்வியில் நமக்கான உரிமை/பங்கு நீட் தேர்வில் இரண்டுவிதமான நடைமுறை.. என எல்லாவற்றிலும் தமிழகத்திற்கு கெதிரான போக்கை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது.. மத்தியில் கூட்டாச்சி தத்துவத்தை செயல்படுத்தவேண்டுமெனில் திமுக போன்ற கொள்கை பிறழா கட்சிகள் ஆதரவில் இயங்கும் அரசாக இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப் படுத்தமுடிகிறது.. திரு.வி.பி.சிங் அதிகாரத்தில் இருந்தபோது திமுக தந்த அழுத்தம் மண்டல் பரிந்துரையை நடைமுறைபடுத்தினார்.. அப்போது கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு சில மாணவர்களை தூண்டி தீக்குளிப்பெல்லாம் நடத்தியது ஆனால் உறுதியாக இருந்து செயல்படுத்தினார்.. அதேபோல காவிரி நடுவர் மன்றம் கூட கர்நாடகாவின் கடும் எதிர்ப்பை மீறிதான் அமைத்தார்.. திமுக ஆட்சியில் இருந்த போது காவிரி இடைக்கால தீர்ப்பையும் பெற்று தந்தது.. ஆனால் பிறகு வந்த அதிமுக காவிரி விடயத்தில் தொடர்ந்து அழுத்தம் தராததும் திமுகவை வசை பாடுவதுமாக இருந்தது (நடுவர் அமைத்தபோதே அதை ஜெயலலிதா எதிர்த்தார்) இப்போதிருக்கிறவர்களால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை .. .. அரசியல் கட்சிகள் தனித்தனியே குறைகூறி திரிவதை விடுத்து.. உண்ணாவிரதம் கருப்புகொடி காட்டுவது என்று தனித்தனியே செயல்படுவதால் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுமே தவிர விரைந்து வழிபிறக்காது.. திமுக கூட்டம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் கலந்துக்கொண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழகமே அசையவில்லை (ஸ்தம்பித்தது) என்று இருக்கவேண்டும்.. தமிழகத்திற்கு வருகிற பிரதமரை 20 லட்சம் பேரை திரட்டி வரவேற்கவேண்டும்.. இனி அதிமுகவால் எதுவும் நடக்காதென்று தெரிந்த பிறகு திமுக மட்டுமே களத்தில் தலைமையேற்க தகுதி திமுகவிற்கே உண்டு. .. சில அரைகுறைகள் ராகுலை சந்திக்கவேண்டியதுதானே கர்நாடகாவிற்கு அழுத்தம் தரவேண்டியதுதானே என்கிறார்கள்.. ராகுல் பிரதமராக இருந்து ஸ்டாலின் முதல்வரென்ற நிலை இருந்தால் இந்நேரம் மேலாண்மை வாரியம் அமைக்கபட்டிருக்கும்.. தீர்ப்பை முதலில் ஒழுங்காக முழுவதுமாக படியுங்கள் .. காவிரியை எந்த மாநிலமும் (கர்நாடகா,தமிழகம்,கேரளா,பாண்டிச்சேரி) உரிமை கொண்டாட முடியாதென்று தெளிவாக சொல்லியிருக்கிறது.. மத்திய அரசு கூட மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டு ஒதுங்கி கொள்ளவேண்டும் .. அந்த வாரியம் (board) நீர் இருப்பை கொண்டு பகிர்ந்தளிக்கும்.. இதில் யாரும் எதிர்க்க முடியாது .. கர்நாடகாவோ பிற மாநிலங்களோ எதிர்க்க முடியாது என்ற பிறகு அவர்களை கேட்க வேண்டிய அவசியமில்லை இனி மத்திய அரசின் கையில்தான் உள்ளது ஆனால் வேண்டுமென்றே கடைசி நேரத்தில் விளக்கம் கேட்பதாக சொல்வது கர்நாடக தேர்தலுக்காகவே தவிர வேறில்லை.. நம்ப வைத்து பாஜக தமிழர்களை கழுத்தறுத்த கதையாகிவிட்டது .. நீண்ட காலமாய் தமிழர்களுக்கெதிரான போக்கை பாசிசவாதிகள் கொண்டிருப்பர் யாரெல்லாம் மத்திய அரசின் பாஜகவின் நயவஞ்சகத்தை நியாயபடுத்துகிறார்கள் என்று பாருங்கள்.. திருப்பதி நாராயணன் ..ராகவன் எஸ்.வி.சேகர்... எச்சை.. என பார்பனர்கள்தான் தமிழகத்தில் பிழைத்துக்கொண்டே தமிழனுக்கு தீங்கு விளைவிப்பதில் இடையூறு செய்வதில் தொடர்ந்து தமிழ் மொழி கலாச்சாரம் பண்பாடு என தாக்குதலை நடத்திக்கொண்டே இருப்பர் இப்போது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையிலும் எதிராக செயல்படுகிறார்கள்.. இந்த அயோக்கியர்கள் தமிழகத்தில் வாழ தகுதியில்லாதவர்கள் விரட்டபடவேண்டியவர்கள்.. .. இனியும் காலதாமதபடுத்தாமல் விரைந்து திமுகவோடு ஒத்த கருத்துடையவர்கள் மிகப்பெரிய போராடிடத்தை கையிலெடுக்கவேண்டும்.. ஒன்றுபடவேண்டும்.. இனி அதிமுக அரசை நம்பி பலனில்லை.. ஐம்பது எம்பிக்களை வைத்திருந்தும் ..ஐம்பதும் அடிமாடாய் போனது விளைச்சலுக்கு பயன்தாராது .. கசாப்பிற்கு தான் .. .. மீண்டும் நினைவுபடுத்துகிறேன் இந்தியா என்னும் நாடு .. ஒரு போதும் நமக்காக இருந்ததில்லை.. அது நமக்கானதும் இல்லை என்றார் தந்தை பெரியார்.. தீர்க்கமான பார்வை .. #ஒன்றுபடு_வென்றுகாட்டு_எதிர்பவனை_விரட்டு .. .. Aalanci Spm

Thursday, March 29, 2018

தண்ணி கொடு இல்லையெனில் தனியே விடு

காவிரி மேலாண்மை வாரியம் .. கடைசியில் நாம் எல்லாம் நினைத்ததுதான் நடந்தது .. கர்நாடக தேர்தலையொட்டி பாஜக ஆடிய நாடகம் இங்கே உள்ள அரசியல் கழிவுகள் ஆட்சியில் இருப்பதால் பெரிதாக எதுவும் பிரச்சனை வராது மீறிப்போனால் நீதுமன்ற அவமதிப்பு வழக்கு அது விசாரணைக்கு வரும் போது ஏதேனும் காரணத்தை சொல்லி அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் .. என்ற தைரியத்தில் தமிழக மக்களை இந்த பாஜக அரசு வஞ்சித்துவிட்டது.. அவர்களுக்கு தெரியும் தமிழகத்தில் இழப்பதற்கு ஒன்றுமில்லை ..இழக்க என்ன இருக்கிறது .. ஆனால் கர்நாடகத்தில் பெரும் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாமென்று எண்ணி காய் நகர்த்தியிருக்கிறது... .. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இருக்கிறவரை எதையும் சாதித்துக்கொள்ளலாம் .. இவரது தீர்ப்புகள் பெரும்பாலும் பாஜக கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மேலும் பல வழக்குகளில் அவருக்கு சாதகமான நீதிபதிகளை நியமித்து வாழக்கின் போக்கை தான் விரும்பியவர்களுக்கு சாதகமா மாற்றினார் என்ற குற்றசாட்டு நிலுவை உள்ளது .. எவ்வளவு பெரிய அநீதி தவறு செய்தவர்கள் கூட இவரது தீர்ப்பின் மூலம் மாபாதக குற்றங்களில் இருந்து தப்பித்து கொண்டனர்.. அதனால் நீதிமன்ற அவமதிப்பைப் பற்றி பாஜகவிற்கு கவலையில்லை.. .. இனி என்ன செய்யவேண்டும்.. எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் அறிவித்துவிட்டு காலம் கடந்து நாள்குறித்து அல்ல தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும் அரசு நிலைகுலைந்து போகவேண்டும்... நீதிமன்ற வழக்குகளைப்பற்றி கவலைபட தேவையில்லை அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத போது நமக்கு என்ன சங்கடம்.. கடைசிவரை நம்பவைத்து கழுத்தறுத்த கயவர்களை ரோட்டில் இறங்கவிடாதீர்கள்.. பதவிக்காக மலத்தை கூட தின்னும் இந்த கயவர்களை விரட்டுங்கள் .. பேசிக்கொண்டே இருந்தால் தானாக கனியுமென நம்பி பயனில்லை .. "தண்ணியை கொடு இல்லையேல் தனியே விடு" என கேட்க வேண்டிய சூழலுக்கு நம்மை இட்டுச்செல்கிறது மத்திய அரசு இந்திய ஒன்றியத்தில் தமிழகத்திற்கு இனி நியாயம் கிடைக்குமென நம்புவது முட்டாள்த்தனம் .. இந்த கயவர்கள் பதவிக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள் எதையும் காவுகொடுக்க தயங்கமாட்டார்கள்.. நாடாளுமன்றத்தில் அசுரபலம் .. ஐம்பது எம்பிக்கள் கதறவிட்டிருக்கலாம் செய்யமாட்டார்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாய் இவர்கள் கொள்ளையடித்தது நிற்கிறது.. .. இனியும் பொறுப்பதற்கில்லை .. Aalanci Spm

Wednesday, March 28, 2018

நான் யார்

நான் யார்.. இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் சமூதாய சிற்பி.. சிந்திக்க தெரிந்தவர்கள் வந்ததுண்டு .. செயல்படுவோரையும் நாம் கண்டதுண்டு.. சமரசமற்ற பகுத்தறிவு பாதையில் சிந்தித்தும் வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் செய்தும் காட்டிய திராவிடப் பெருவுடையான் .. பேராசான் பெரியார் சிந்தித்ததை சொல்லியதை செய்துகாட்டிய பெரியாரின் நேரடி சீடர்.. வாய்ப்பை வேண்டாமென்று மறுத்தவர் பெரியார்.. காலம் வாய்ப்பை தராமல் போனது அண்ணாவிற்கு.. காலம் தந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியவர்.. இன்று மத்திய அரசால் இந்தியாவிற்கே செயல்படுத்த நினைக்கும் திட்டங்களை 30 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றவர்.. .. முற்போக்கு பேசிய பொதுவுடைமைவாதிகள் ஆட்சிநடந்த கொல்கத்தாவில் கூட மனிதனை மனிதனே இழுக்கும் கைரிக்சாவை... 45 ஆண்டுகளுக்கு முன்பே ஒழித்தவர்.. பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கென்றதை .. சொத்தை கொடுத்தால் ஆம்பளையாண்டானுக்கு அடங்கமாட்டா என்ற பெரியவா.. எல்லாம் தடுத்தார்கள் .. இந்த பெருமகன் தான் இந்தியாவிற்க்கே வழிகாட்டியாக சொத்தில் சம பங்கென சட்டம் இயற்றியவர்.. சுயவேலைவாய்ப்பு, பெண்கள் கல்வி பயில இலவசம்... முதல்பட்டதாரிக்கு இலவச உயர்கல்வி.. இந்தியாவிற்கு வழிகாட்டுதலாய் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .. உரிமைக்குரல் கொடுத்தவர் .. மிசாவை ரத்து செய்யாவிடில் .. இங்கே வர விசா எடுக்கவேண்டிவருமென்று எச்சரித்தது யார் .. அடிக்கிக்கொண்டே போகலாம்.. .. தலைவர்கள் வருவார்கள்.. ஒரு சிலரே காலம் கடந்தும் பேசபடுவார்கள்... சிலர் மட்டும் வரலாறாய் நிலைத்து நிற்பர்.. இவர் வரலாறு .. புதிய வரலாற்றை உருவாக்கும் வரலாறு.. எதிர்ப்பிலேயே வளர்ந்து ..எதிர்த்தால் தான் இனி எதிரிக்கே வாழ்வென்ற நிலை உருவாக்கியவர் ..பேசும்போதும் ஊர் கவனிக்கும் .. பேசாதபோதும் இவரின் அசவைகூட உற்றுநோக்கும்.. ஒவ்வொரு சமிக்ஞையும் ஒவ்வொரு கதை சொல்லும்.. பகைவனும் வணங்கும் பண்பாளர்.. துரோகிகளையும் மன்னிக்கும் பெரிய மனசுக்காரர்.. தடுமாற்றமில்லா நேர்மை தோல்வியில் துவளாத நெஞ்சுரம்.. வெற்றி பணிசெய்ய வந்த வாய்ப்பென்ற தெளிவு.. நாளைய நலன் கருதி செயல்படும் தொலைநோக்கு.. சாதியற்ற சமுதாயம் காண சமுத்துவம் சொன்ன பேரறிவு.. குற்றம் சொன்னவர்களை அரைநூற்றாண்டாய் நிருபிக்கமுடியாமல் திணறவைத்து வாய்மை வெல்லும் ..அறம் வெல்லும் என்ற துணிவு.. துவண்டுவிடாத தொடர்பணிகள்.. ஓய்வறியாத உழைப்பு .. எங்கும் எதிலும் திடமான முடிவோடு இந்தியாவிற்கே அரசியல் சொல்லும் திராவிடத்தலைவர்.. தமிழ் பேசினால் தேன் கொட்டும்..எழுதினால் திகட்டாது ..இனிக்கும்.. இனிக்கும் பேரின்ப தேன்மழை.. உண்மையில் இந்தியா கண்ட உண்மையான #இரும்பு_மனிதர்.. .. நான் யார்.. இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் .. Aalanci Spm

Tuesday, March 27, 2018

இனி..

இனி.. நிறைய பணிகள் காத்துகிடக்கிறது தினம் தினம் அருகில் இருப்பவரிடம் அரசியல் பேசுங்கள் இந்த நாடு கயவர்களிடம் சிக்கி தவிப்பதை ..சுயநல கிருமிகளால் மாநில நலன் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை.. இந்தியாவிற்கே வழி சொன்ன தமிழகம் இன்று தலைகுனிவோடு நிற்பதை பேசுங்கள்.. உங்கள் வீட்டுப்பெண்களிடத்தில் நண்பர்களிடத்தில் தெரிந்தவர்களிடத்தில் .. ஏன் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்பதை விளக்குங்கள்.. நாம் செய்த சின்ன சின்ன தவறுகளால் இன்று மாநிலம் எந்த நிலையில் நிறுத்தபட்டிருக்கிறது .. சில சொற்ப பணத்திற்காக மொத்த மாநிலத்தையும் கேலிபேச வைத்திருக்கிறோமே என்று வருந்துங்கள்.. திண்ணைப் பிரச்சாரங்கள் தெருமுனைப் பிரச்சாரங்களை .. ஏற்பாடு செய்யுங்கள் திமுக செய்துவிட்டு போன சாதனைகள் தான் காலம் கடந்து நிலைத்து பலன் தருகிறதென்பதை சொல்லுங்கள் .. கலைஞரின் தொலைநோக்கு .. இந்தியாவிற்கு வழிகாட்டுவதை சிறிய அளவிலேனும் கதையுங்கள்.. காலம் தந்த பரிசு தளபதியென பக்கத்திலுள்ளவரிடம் பேசுங்கள்.. .. ஆம்.. சரியான நேரத்தில் சரியானவரைப்பற்றி நாம் பேசாமல் போனால் நாளைய நம் தலைமுறைக்கு நாமே வினை செய்தவராகிவிடுவோம்.. இன்றைய இழிநிலைக்கு தெரிந்து நாமே காரணமானோம்..இனியும் தொடரவிடுவோமாயின்... ஒட்டுமொத்தமாய் அடகுவைத்த கதையாகிவிடும்.. திமுக மிக சரியான பாதையை தேர்வு செய்திருக்கிறது இடையில் பிறழானதை சரிசெய்து ஈரோட்டில் இருந்து புதிய பயணத்தை ..அந்த ஈரோட்டு கிழவனின் பாதைதான் தமிழினத்தை காக்குமென உணர்ந்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.. அதனால் தான் 97 பேரின் ஒற்றுமையின்மையின் பலனை 3 பேர் அனுபவிக்கிறானென்று அதிரடியாய் .. இந்த மண்ணுக்கு பெரியாரிஸம் தான் தேவையென்பதை செயல்தலைவர் பேசியிருக்கிறார்.. பழைமைவாதம் பேசி திரிவோர் மிக கவனமாக நாமெல்லாம் இந்து என்ற கசவத்தை அணிந்து.. பார்பனர் நலன் என்ற ஒற்றை லட்சியத்தோடு செயல்படுகிறார்கள்.. மூன்று வாழ தொண்ணூற்றை பலி கொடுக்கிறார்கள் .. மெல்ல மெல்ல எல்லோரும் சமம் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பென உயர்க்கல்வியில் பிற்படுத்தப்பட்டவனின் ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறார்கள் இது தொடக்கம் தான் .. மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் அரங்கேற்றுவார்கள் .. இந்த பாழாய்போனவர்களை தயவில் அவாள்களின் முன்னேற்றம் வெகு ஜோராய் நடக்கிறது.. .. எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களுக்கு அடிமைகள் கிடைத்ததும் அத்தனை உயர்பதவிகளையும் அடைகிறார்கள் இடஒதுக்கீடென்றாலே குலைநடுங்கும் இவர்களை இனியும் அனுமதித்தால் நாம் மீண்டும் கைகட்டவேண்டிய சூழல் வரும் அதை தடுத்திட சுயமரியாதையோடு வாழ்ந்திட/விளித்திட .. நமது உரிமைகளை காத்திட நம் இனம் மொழி கலாச்சார பண்பாடுகளை சிதைத்திட நினைக்கும் பாசிசகாரர்களிடமிருந்து நம் பெருமைகளை நிலைத்திட செய்ய .. மொத்தத்தில் நல்லதொரு ஆட்சியை தந்திட.. தளபதியோடு கரம்கோர்க்க வேண்டுமென .. அனைவரிடமும் செப்பிடுவோம்.. .. இன்றே தொடங்குவோம்.. முதலில் நம் வீட்டிலிருந்து... .. Aalanci Spm

Monday, March 26, 2018

மனிதனை நினை

இயேசு உண்மையில் உயிர்த்தெழவில்லை.. நான் பார்த்த ஏராளமான டாக்குமெண்டரிகள் மூலம் தான் இயேசு உயிர்தெழவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.. இளையராசா .. கூடவே ரமண மகரிஷி மட்டுமே உண்மையில் உயிர்த்தெழுந்தார். உலகில் வேறு யாரும் ‌இதுவரை உயிர்த்தெழவில்லை என்கிறார் இளையராசா .. .. மரித்தவர்கள் உயிர்தெழுவதில்லை உயிரோடு எழுந்தால் அவர் மரிக்கவில்லை என்றே பொருள். சில நம்பிக்கைகள் அறிவுசார்ந்து இருப்பதில்லை மதம் சார்ந்தே இருக்கும் விளக்குங்கள் என்றால் வேதத்தில் இருக்கிறதென்பார் .. இயேசுவை ஈஸா என முஸ்லிம்களும் கொண்டாடும் அதேவேளை மீண்டும் வருவாரென (உலக அழியும் நாளில்) கடைசி நாளில் நம்பிக்கை கொள்கிறார்கள் .. உயிர்தெழுந்தாரென்று ஒரு மதமும் .. பின்னர் உயிர்தெழுவாரென மற்றொன்றும் சொல்கிறது.. உண்மையில் மரித்தவர்கள் வரமாட்டார்கள்.. சரி இடையில் ரமணர் மட்டுமே உயிர்தெழுந்ததாக சொல்கிறார் எங்கே என கேட்டால் வேறேதாவது கதை சொல்வார்.. ரமணர் கிருஸ்துவ பள்ளியில் தான் படித்தார் அவருன் கடைசி காலம் மிக கொடுமையாக இருந்தது .. நல்ல விடயங்களை சொன்னார் எளிமையாக வாழ்ந்தாரென சொல்லி சென்றிருக்கலாம் .. .. இளையராசாவை இசையோடு நிறுத்துக்கொள்வோம்.. மதம் ஆன்மீகம் என்றால் கொண்டாடினால் படுகேவலமாக தோன்றும்.. தன்னை தானே உயர்த்திபிடிக்காதவன் புழுவை விட கேவலமானவன் இந்த இழிபிறவிக்காக (தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததை சொல்கிறார்) பிராயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றவரிடம் வேறேதை எதிர்பார்க்கமுடியும்.. .. ராசா ஆரம்பகாலங்களில் தன் அண்ணனோடு சேர்ந்து பொதுவுடைமை மேடைகளில் பாடிய காலங்களில் எல்லாம் இத்தனை முக்திப்போய் இல்லை .. நாத்திக சீர்த்திருத்த கருத்துகளை கிராமங்கள் தோறும் பாடியவர்.. எங்கள் கீழ்தஞ்சை மாவட்டங்களில் பாவலர் சகோதரர்கள் பாடாத கிராமங்கள் இல்லை.. சினிமா வாய்ப்பு கிடைத்த புதிதில் கூட சிலகாலம்.. சுயமரியாதையோடுதான் இருந்தார்.. புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே என அவரால் இசையமைக்க முடிந்தது .இப்போது இதுபோன்ற பாடல் வரிகளுக்கு இசையமைக்க சொன்னால் மறுத்துவிடுவார்.. அவரின் நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவில்லை ஆனால் நம்பிக்கையென்ற பெயரில் உளறுவதும் மூடநம்பிக்கையை விதைப்பதும் சுயமரியாதையற்று குனிந்து கிடப்பதும்.. இளையராசா போன்ற ஆளுமைகள் செய்கிற போது அது இந்த சமூகத்தில் தாக்கத்தை தரும்.. முட்டாள்த்தனமான கருத்துகளை எதிர்க்கவேண்டியதும் தவறை சுட்டிகாட்டுவதும் .. அசிங்கத்தின் மீது நிற்கிறீர் என சொல்லி புரியவைப்பதும் எமது கடமை.. .. ஒருமதத்தை ஏற்றுக்கொண்டு வேறொரு மதத்தை விமர்சிப்பவன் அயோக்கியன் என்றார் தந்தை பெரியார்.. கடவுள்,அவதாரம்,வேதம்,சாதி, சடங்கெல்லாம் நாமே உருவாக்கியது அதில் ஒருவருக்கொருவர் உயர்வென்றும் தாழ்வென்றும் சொல்லி நம்மை குத்தி குதறி இரத்தம் கொட்ட நிற்கிறோம்.. .. மனிதனை நினை மனிதனை நினை.. .. Aalanci Spm

Sunday, March 25, 2018

திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது

'திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது! ஆனால் மக்களிடம் அதன் மதிப்பைக் குறைக்கும் வேலையைத் தொடர்வோம்' _ துக்ளக்கை ஆட்டை போட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.. நிறைய தண்ணீர் குடி .. வயித்தெறிச்சல் தெரிகிறது .. .. இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் திராவிடர்களென்பதும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது மனிதனைப்பற்றி ஆய்வில் தொடக்ககாலமென அறிய படுகிற காலத்தில் வாழ்த்தவன் திராவிடன் எத்தனைதான் பொய்யும் புரட்டும் அதிகாரமும் ..லாபிகளும் அரங்கேற்றினாலும் உண்மை கிழித்துக்கொண்டு வெளிவந்தே தீரும்... .. இந்த வந்தேறிகள் தொடர்ந்து திராவிடத்தின் மீதான போரை செய்துகொண்டே இருப்பர் .. ஆனால் அவர்களை மீறி திராவிட தொன்மை வெளிவந்துக்கொண்டே இருக்கும் எந்தவொரு நாட்டிலும் தொல்பொருள் ஆய்வின்போது கிடைக்கும் வரலாற்றை ...மீண்டும் புதைப்பதில்லை ஆனால் இந்தியாவில் தான் இதெல்லாம் சாத்தியம்.. நம் கீழடி தந்த செய்தியை மூடி மறைக்க இனத்தின் துரோகிகளை கொண்டே மண் மூடிய வரலாறு எங்கும் கண்டதில்லை.. .. அரசியலில் ஏன் இவர்கள் திராவிடத்தை கொடூரமாக பார்க்கிறார்கள் அவர்களின் வரலாறு தெரிந்து விரட்டபட்டுவிடுவோமோ என அஞ்சுவது வெளிப்படையாக தெரிகிறது இங்கே பெருங்கிழவன் பெரியாரின் பேராற்றலால் .. திராவிடத்தை அரசியல் சமூக ரீதியாக கட்டமைத்தது ஆரியர்களின் வாழ்வை புரட்டி போட்டது .. யாருமே எதிர்க்காத வளையத்தில் நின்று கொண்டு உச்சிகொட்டியவர்களின் தலையை தட்டி கீழிறக்கி கொஞ்சம் கொஞ்சமாய் பூர்வீக குடிகளை கல்வி வேலைவாய்ப்பில் அமர்த்தியது திராவிடம் ..அதனால்தான் எப்படியும் திராவிடத்தை இல்லாமாக்க எண்ணி.. தமிழ்தேசியம் சாதிய நிலைபாடு என பல்வேறு வழிகளில் காய் நகர்த்தினாலும் கடைசியில் அவர்களுக்கு புரிந்து போனது.. திராவிடத்தை வீழித்த முடியாதென்று ..திராவிட இயக்கத்தை வெல்ல முடியாது.. .. ஈராயிரம் அடிமைபடுத்தியவர்களை தன் வாழ்நாளுக்குள்ளாகவே ஓட ஓட விரட்டியவர் தந்தை பெரியார் .. கத்தியின்றி இரத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.. இந்த சமூகத்தின் கடைநிலை மனிதனையும் அவன் உரிமையையும் மீட்க போராடியவர்... சாதி மதம் சமூகம் கடவுள் வேதம் என எவையெல்லாம் சமூக மாற்றத்திற்கு ..சமதர்மத்திற்கு இடையூறாய் இருக்குமோ அதையெல்லாம் தூக்கியெறிந்து மனித மேம்பாடொன்றே லட்சியமாய் செயல்பட்ட மாமனிதர் உருவாக்கிய திராவிட இயக்கம்.. இன்னமும் இந்த மண்ணில் சாதி மதம் மனிதர்களிடையே ஏற்றதாழ்வு இருக்கும் வரை.. திராவிட இயக்கத்தின் பணி தேவை.. ஆரியத்தை எழ விடாமல் செய்திட திராவிட இயக்கம் தேவை .. அதை எதிர்க்கிறவர்கள் இருக்குமிடம் தெரியாமல் கரைந்து போவார்கள் .. .. இளந்தலைவர் தளபதி அவர்கள் மாநாட்டில் சொன்னதைப்போல.. 3% விழுக்காட்டினரிடம் இருக்கும் ஒற்றுமை 97% விழுக்காட்டிடம் இருந்திருக்குமேயானால்.. வடக்கு நோக்கி எப்போதே அவர்களை விரட்டி இருக்கலாம் அந்த காலம் வரும்.. அப்போதுதான் திராவிடத்தின் முழுவெற்றி அடைந்ததாக பொருள்.. கலைஞரின் கட்டளையை ஏற்று தமிழனை தமிழை உயர்த்தி பிடித்து மதவெறியை மாய்த்து மனிதம் வளர்த்து அதிகார குவியலை அடித்து நொறுக்கி வளமான தமிழகத்தை வார்த்தெடுப்போம் .. இனி..வெற்றிதான் இலக்கு.. .. Aalanci Spm

Saturday, March 24, 2018

நான்காம் தலைமுறை மிளிர்கிறது

ஈரோடு.. எம்மை செப்பனிட்ட மண்.. அந்த மண்ணிலிருந்து ஒரு பெரும் முழக்கம்.. தளபதியை இனி.. முதல்வரென அழைப்போம்.. அடுத்த விடுதலைநாளில் கோட்டையில் கொடியேற்ற வைப்போம்.. நண்பர் சிவா அதிரவைத்து சொன்னார்.. .. இன்றைய தமிழகத்தின் நம்பிக்கையாக .. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய துணைக்கண்டமே காத்திருக்க ஒரு செய்தி உண்டெனில் அது தளபதி தமிழக முதல்வராக வேண்டுமென்பதுதான் இன்றைக்கு தமிழகத்தில் நடக்கிற கூத்துக்களை காணும் போது விரைந்து விடியல் வராதா என மக்கள் எண்ணுகிறார்கள்.. மண்டியிட்டு கும்பிட்டு காலில் விழுந்து முதல்வரானவனெல்லாம் உயர்ப்பால் உயர்ந்தவன் என்கிற போது... நாற்பத்தைந்து கால அரசியலில் படிபடியாக உயர்ந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் நாடாள வருவதுதானே நியாயம்.. .. நிறைய மாநாடுகளை திமுக நடத்தியிருக்கிறது இந்த மாநாடு செயல்தலைவராக ஸ்டாலின் பொறப்பேற்றபிறகு நடத்தபடும் மாநாடு திடல் நிறைய இளைஞர் பட்டாளம் .. பேசுகிறவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் .. அடுத்த தலைமுறை நகர்வை இந்த மாநாட்டில் உணர்கிறேன் .. புதிய வரலாற்று எழுதுகிறது பழையதை நினைவுகூர்ந்து வண்ணம்.. திருச்சி சிவா சொன்னதைப்போல //பாசிச கட்சிகள் எங்களை வரலாறு பேசாதே என்கிறார்கள்.. ஏன் தெரியுமா பேசினால் இவர்களின் வரலாறு தெரிந்து விடும். வரலாறு தெரிந்தால் இவர்கள் வந்தது தெரிந்து விடும். வந்தது தெரிந்தால் இவர்கள் வாழ்ந்தது தெரிந்து விடும். வாழ்ந்தது தெரிந்தால் இவர்கள் இருந்தது தெரிந்து விடும்.. இருந்தது தெரிந்தால் நாங்கள் இழந்தது புரிந்து விடும்... ஆம் நம் முன்னோடிகள் விதைகளை நெடுக தூவி சென்றிருக்கிறார்கள் இன்று அது படர்ந்து வளர்ந்த பெரும்கடாய் நமக்கு பலன் தருகிறது.. .. இன்னமும் சற்று வீரியத்தோடு .. இந்த மாநிலத்தை மீட்கும் கடமை நமக்கு இருக்கிறது புதர்மண்டி கிடக்கிற நிலத்தை .. சமன்படுத்தி செம்மையாக்கும் பெரும் கடமை நமக்கு இருக்கிறது பழைமைவாதிகள் அதிகார திமிரில் ஆடும் கள்ளாட்டத்தை தடுத்துநிறுத்தி விரட்ட.. #நூலுக்கு தகுந்தாய் போல் ஆடும் பொம்மலாட்டத்தை நடத்தும் நாடே காரி உமிழும் கேடுகெட்ட அடிமைகளை விரட்டிட.. பறிபோகும் தமிழர்களின் உரிமைகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பெற்றிட இனமான உணர்வோடு .. சுயமரியாதையோடு வாழ .. இந்த மாநாடு நம்மை இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. .. நாளை நம் கையில் என்ற பூரிப்பு தெரிகிறது.. வரும் காலங்களில் இளைஞர்கள் வழிநடத்திட ஒரு பயிற்சி பாசறையாக இந்த மாநாடு திகழுமென்ற நம்பிக்கை இருக்கிறது .. பெரும் மகிழ்வோடுதான்... ஆனாலும் பெருங்கிழவனை காணோம் என்ற கவலை கண்ணில் நீர்கோர்க்கிறது .. நான்காம் தலைமுறை மிளிர்கிறது.. .. Aalanci Spm

Friday, March 23, 2018

கம்பீர தலைவர் கலைஞர்

கம்பீரம்: தலைவர் எங்கள் கருணாநிதி.. .. செல்வி ஜெயலலிதா தன் இறுதிநாட்களில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக திருமதி.சசிகலா சொல்லியிருக்கிறார்.. ஆம்.. இரும்பு பெண்மணி என்று பொய்யான பிம்பத்தில் நின்று அதிகாரம் இருக்கிறதென்ற தைரியத்தில் ஆணவத்தோடு எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடு சிலரால் அவரை இரும்பு பெண்மணி என புகழ தொடங்க அந்த புகழ்ச்சிக்குரிய தகுதி தன்னிடத்தில் இல்லையென்று கூட உணராதவர் தான் ஜெயலலிதா.. .. தன் பிறப்பு காக்குமென நம்பி ஆளும் பாஜக துணையிருக்கிறதென்ற தெனாவட்டில் எதற்கும் விலையுண்டு எதையும் விலைக்கு வாங்கிவிடலாமென்ற நினைப்பு தான் அவரை விசாரணை நீதிமன்றத்தில் இருமாப்போடு செல்லவைத்தது .. நீதித்துறையில் சிலர் நீதிமான்களாக இருப்பாரென்பதை மறந்து போனார்.. முதல்வராக திமிரோடு போனவரை.. காரின் கொடியையும் அரசு முத்திரையோடு கூடிய பலகையை அகற்றி .. தனியறையில் இருக்க வைத்து.. நான்காண்டு சிறை ₹100 கோடி அபராதம் என்று தீர்ப்பை வாசித்த போதே தளர்ந்து போய்விட்டார்.. சிங்கமென வலம் வந்தோமே நம்மை சிறையில் அதுவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக அனுப்பவிட்டார்களென்ற அதுவும் 23 நாட்கள் சிறையில் குற்றவாளியாக இருந்ததும் .. அவரை வெகுவாக பாதித்திருக்கிறது.. அதைதான் திருமதி சசிகலா சொல்லியிருக்கிறார்.. உண்மையில் ஜெயலலிதா மிகவும் பலவீனமானவர்.. தவறை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்தவர்.. நீதியை விலைக்கு வாங்கி தற்காலிக தீர்வை பெற்ற போதே (குமாரசாமி தயவில்) அவருக்கு தெரிந்திருந்தது எப்படியும் களி திங்க நேரிடுமென்று அதனால் தான் உடலை பேணுவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை சசிகலாவின் வாக்குமூலம் இதை தான் உணர்த்துகிறது.. அஞ்சாத நெஞ்சம் போல் நடித்தே வாழ்ந்துவிட்டார்.. உண்மையில் பயம் அவரை தின்றுவிட்டது.. துணிவில்லாமல் ஒருவித பதட்டதோடே கடைசி காலத்தை கழித்தவர்.. மனவலிமை உடையவரென்று அவரே ஏற்படுத்திக்கொண்டது வெறும் பிம்பம் ..போலியானது.. .. எது மனவலிமை.. வெற்றியில்..தன் பின்புலத்தில்..தன் சாதீய பெருமையில் .. அதிகார திமிரில் தானென்ற ஆணவத்தில் நிற்பதல்ல மனவலிமை .. தோல்விகளை தொடர்ந்த போதும்.. சுற்றி நின்றவர் முதுகில் குத்தியபோதும்.. நட்பைச்சொல்லி கழுத்தறுத்த போதும்.. வழக்குகளால் வேட்டையாடபட்டபோதும்.. பொய்யைச்சொல்லி வீண் பழியைச் சுமத்தியபோதும் உளஉறுதியோடு வாய்மையின் பக்கம் நின்று பொய்களால் வீழ்த்த முடியாதென்ற உறுதியோடு .. கொண்ட கொள்கையில் தளராமல் .. செயல்படுவதும் ..எதையும் எதிர்கொண்டு உண்மை வெல்லுமென்ற நம்பிக்கையோடு இருத்தலே மனவலிமை.. சின்ன சின்ன தோல்விகளால் எம்மை வீழ்த்திட முடியாது ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்காமல் கிடைக்கிற வாய்ப்பில் இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லதை அது காலங்கடந்தும் பயன் தரும் வகையில் பணியாற்றிய பெருந்தகை #கலைஞர் ..அவர்தான் மனவலிமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.. உண்மையான இரும்பு மனிதர் அவர்தான்.. இந்தியா கண்ட தலைவர்களில் இவ்வளவு துயரங்களை ரணங்களை துரோகங்களை சந்தித்தவர் எவருமில்லை ..மக்களின் அவசர முடிவால் தோல்வியை தந்தபோதும்.. அறியாமையில் வீழ்ந்துவிட்ட சமூகத்தின் துயரத்தை கலைய அதிகாரமில்லாத போதும் போராடிய பெருந்தலைவர் .. எதிரிகளை விட கூட இருந்த குழிப்பறித்த துரோகங்கள் .. நயவஞ்சகர்களை புன்முறுவலோடு சந்தித்த தன்நிகரற்ற தலைவர்.. வெற்றி களிப்பில் மகிழ்வின் மதமதப்பில்.. அதிகாரம் இருக்கிறதென்ற தெம்பில் வருவதெல்லாம் வலிமையல்ல.. தோல்வியிலும் துவளமால்.. கட்சியை ஏற்றுக்கொண்ட கொள்கையை நழுவாமல் காத்துநிற்கும் மனவலிமை .. இந்தியாவில் #கலைஞரை தவிர யாருக்குண்டு. கம்பீர தலைவர் எங்கள் கருணாநிதி... .. Aalanci Spm

Thursday, March 22, 2018

பைத்தியங்கள்..

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்த தமிழகம் ஒத்துக் கொண்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு...! அடபாவிங்களா.. எந்தளவிற்கு அடிமைபட்டு கிடப்பீர்கள் உச்சநீதிமன்றம் நீண்டதொரு விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு இடைக்கால தீர்ப்பை விட குறைந்தளவே தர உத்தரவிட்டு அதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் .. கடைசியில் சொந்த மக்களின் வாழ்வாதாரத்தையே .. நசுக்கபார்க்கும் இந்த பாவிகளை என்ன செய்வது.. பதவிக்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயை கூட வாடகைக்கு விட தயங்காத கொடியவர்கள் இனியும் பொறுக்காமல் உடனடியாக .. அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தை கையிலெடுக்கவேண்டும்.. இன்னும் சிலகாலம் இவர்களை அனுமதித்தால் மொத்தத்தையும் அடமானம் வைத்துவிடுவார்கள்.. .. ஹெச்.ராஜாவை மனநிலை டாக்டரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்--உயர் நீதிமன்றம்.. உண்மையில் மன சிதைவிற்குள்ளானவர் போலதான் அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன தினம் தினம் பிற மதத்தவர்களை இழிவாக பேசுவதும் .. பாஜகவை எதிர்க்கிறவர்களை ஆன்டி இந்தியன் என்பதும்.. மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் .. அவரது செயல்கள் நமக்கு உணர்த்தும் .. இவரை மட்டுமல்ல திருமதி தமிழிசை கூட நல்ல மனநல மருத்துவரை நாடலாம் .. பாஜக இருக்கிறவர்களின் அறிவிற்கு உதவாதவற்றை பேசி திரிவார்கள் நாம் அறிந்தது தான் ஆனால் தமிழிசை இனியும் பொறுக்கமுடியாது பொங்கினால் நாடு தாங்காது என்றெல்லாம் உளறுகிறார் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது.. சம்பூகவதத்தை பற்றி அறிந்திராமல் வானதி போன்றோர் விவாதத்திற்கு வந்து உளறுகிறார்கள்.. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பிராமண குழந்தை திடீரென விழுந்து இறந்து போகிறது .. பெற்றவன் அரசன் ராமனிடத்தில் போய் .. பிராமண குழந்தை இறந்து போனது ஆட்சிக்கு ஆபத்தென்க.. யாரோ சூத்திரன் தவம் செய்கிறான் அதனால் தான் குழந்தை இறந்ததென்க .. ரசயு நதிக்கரையில் தலைகீழாக தொங்கி கடும் தவம் செய்யும் சம்பூகனை யாரென்று கேட்டு அவன் சூத்திரன் என்றவுடன் தலையை வெட்டி .. அதை கொண்டு இறந்த பிராமண குழந்தையை உயிர்தெழ செய்கிறான் இதுதான் அதன் சுருக்கம்.. ராமராஜ்ஜியத்தில் பிராமணர்கள் மட்டுமே வாழ தகுதியானவர் என்ற நிலையை கூட புரிந்துக்கொள்ள முடியாத வானதிகளும்.. பிராமணர்களுக்கு நான் காவல் நிற்பேன் என்கிற கிருஷ்ணசாமி போன்ற நிறைய பைத்தியங்கள் இங்கே உலவுகின்றன..என்ன கொஞ்சம் முத்திப்போன நிலையில் எச்சை ..அவ்வளவுதான்... .. சந்தையூர் தீண்டாமை சுவர்.. அருந்ததியர் சமூகமக்கள் மதம் மாற போவதாக வேதனை .. உண்மையில் இப்போதுதான் தாழ்ந்துபோய் நிற்கிறீர் பறையர்களே.. தன்னிலும் தாழ்ந்தவன் உண்டென்று எண்ணும் கீழ்தரமான எண்ணம்.. பிராமணனின் வர்ணசரமத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.. உண்மையில் உயர்ந்தவர்கள் அவர்கள்தான்.. மனிதனின் கழிவுகளை அகற்ற சுகாதாரமாய் வாழ வழி செய்யும் உன்னதமானவர்கள்.. உண்மையில் தாழ்ந்து போனீர்கள் .. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் அ.செல்லப்பாண்டியன் "தீண்டாமைச் சுவர் என்று உறுதி செய்யப்பட்டால் அதை இடிக்கிற முதல் நபர்களாக நாங்கள் இருப்போம்.. என்கிறார்.. அவ்வாறே செய்யுங்கள் தோழரே.. ஆதிக்க சாதியினரைப்போல நடந்துக்கொள்வது ஒருவகை பைத்தியகாரத்தனம்.. .. Aalanci Spm

Wednesday, March 21, 2018

காக்கும் வண்ணம் கருப்பு

பெரியார் படம் பொறித்த கருப்பு சட்டையில் தமீமுல் அன்சாரி.. .. ரத யாத்திரையை அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பை சட்டமன்றத்திலே பதிவு செய்த போது கொஞ்சம் மிகையாக தோணலை தந்தது ஆனாலும் அவரின் உணர்வை நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும் .. அரசியலில் சந்தர்ப்பவாதிகள் சிலர் உண்டு அந்த வகையை சேர்ந்த அன்சாரி .. இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாக தம்மை காட்டிக்கொள்கிற .. தமுமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி கண்டு உடனேயே ஜெயலலிதா தயவில் சட்டசபை உறுப்பினராகிய அவரின் நேர்மை..? நமக்கு வியப்பை தரும்.. உணர்ச்சிகரமான பேச்சாற்றால் சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரிந்த கொள்கை புடலங்காயெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாமென்று வாய்ப்பை பயன்படுத்துகிற ஒரு இளைஞர்.. நேற்றிலிருந்து பதிய வேசம் கட்டியிருக்கிறார்.. ஆனால் இந்த முறை கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கிறது யாரை துணைக்கழைக்க வேண்டும் யாரோடு பயணிக்கவேண்டும் யார் பெயரை சொன்னால் எதிரிகள் அஞ்சுவர் என்று அறிந்து கடைசியில் வந்து நிற்கிறார்.. இனியும் மாறலாம் அதுபற்றி கவலையில்லை.. அபயமென்று வரும் போது கரம் கொடுப்பது எமது பண்பு..,அதைதான் திமுகவும் செய்தது. .. தமிழக அரசியலில் சிலர் ..சில அமைப்புகள் மூர்ச்சர்சையாகி விழுகிறபோதெல்லாம் ஆக்சிஜனைப்போல திராவிடமும் பெரியாரும் தேவைபடுவார்கள் இங்கே மதம் கடந்து நம்மை காக்கும் பேராயுதமாய் திராவிடம் நிற்கிறது .. உண்மையில் இந்த மண்ணின் சாயம் வெளுக்காமல் இன்னமும் காத்துநிற்கும் பெரியாரெனும் பெரும் அரக்கர்.. அதனால் தான் ராமன் கூட வந்த சுவடு தெரியாமல் படுவேகமாக ஓடவேண்டியிருந்தது.. இங்கே யாருக்கும் ராம ராஜ்ஜியம் தேவையில்லை மாறாக ராமசாமி(பெரியார்) ராஜ்ஜியம் தான் தேவை.. எல்லா மதத்தவருக்கும் அவரவர் பின்பற்றும் கோட்பாடுகள் கொள்கைகள் எல்லாம் ஒரு வரையறைக்குள் நின்றுவிடும் அல்லது நிறுத்திவிடுவார்கள் மதம் சாதி சாயம் பூசப்பட்டு அதே மதத்தை சாதியை கொண்டு கல்லெறிந்து போவார்கள்.. ஆனால் இவை அனைத்தையும் எதிர்த்து நின்று ..ஏன் பகைவர்கள் நின்ற நிலையிலேயே மூத்திரம் போக செய்யும் ஒரு மந்திரசொல் உண்டு அதை நீங்கள் கையிலெடுத்தால் மட்டுமே எதிரிகள் அலறுவதை காணமுடியும் அந்த சொல் திராவிடம்.. நீங்கள் யாரை துணைக்கழைத்தாலும் இங்கே புதைக்குழியில் புதைத்துவிட்டு போய்விடுவார்கள்.. பகைவர்கள் அஞ்சும் ஒருவர் உண்டெனில்.. மறைந்தும் நம்மை எதிர்களால் களவாட முடியாமல் காத்துநிற்கிற ஒரே தலைவர் பேராசான் பெரியார்தான்.. அவரை கொண்டு நடந்தால் மட்டுமே இங்கே மரியாதையோடு வாழ முடியும்.. .. சில சாதிவெறியர்கள் உறுதி அனுமதி பெற்றுதானே யாத்திரை என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.. எத்தனையோ மத ஊர்வலங்கள் .. பிரச்சாரங்கள்.. தேரோட்டம் உரூஸ் குருத்தோலை என்று அவரவர் மதத்தின் நிலைபாட்டில் உறுதியாய் அதனினும் அமைதியாய் நடத்துகிறார்கள் அதை யாரும் எதிர்ப்பதில்லை .. அதுபோல அல்ல இந்த ரதம் .. அது புரிவதற்கு சாதீய சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும் மதத்தில் சாதியில் நின்று பேசுவோருக்கு .. பாஜகவின் செயல்பாடுகள் விளங்க அது தரும் கேடுகள் உணர வெகுகாலமாகும் .. நெருப்பு அடுத்த வீட்டில் தானே எரிகிறதென்று நமக்கென்ன வந்ததென எண்ணி அமைதியாக இருந்தால் .. நெருப்பு நம் வீட்டையும் தின்றுவிடும்.. மத சாதி தீயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நமக்கு எப்போதும் தேவைபடுபவது ..பெரியாரும் திராவிடமும் தான்.. .. .. #காக்கும்_வண்ணம்_கருப்பு.. .. Aalanci Spm

Tuesday, March 20, 2018

இராவண லீலா

இனி.. இராவண லீலா .. ரத யாத்திரை என்ற பெயரில் ஒருவித பதட்டத்தை இந்த தமிழ் மண்ணில் நிறுவ முயற்சிக்கும் வேலை இது ஏன் ஊர்வலத்தை தடுக்கவேண்டுமென்றும் மற்ற மாநிலங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லையா என்றெல்லாம் கேள்வி எழுகிறது .. யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் இந்துக்களின் விரோதி என்கிறார் எச்சை ராசா.. முதலில் அவருக்கு நம் பதில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல லிங்காயத்துகள் போல தமிழர்களும் வெளியேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை சமணத்தையும் பௌத்தத்தையும் கூட அவன் இரவல் வாங்கியவன் பின்புதான் இந்து என்ற சொல் வந்து ஒட்டிக்கொண்டது.. பெருவாரியான மக்கள் எதிர்ப்பதால் அனைவருமே இந்துக்கள் அல்ல என்று ராசா பேச்சே உண்மையை சொல்கிறது .. பிற மாநிலங்களில் இதுபோன்று தினம் தினம் திட்டமிட்டு விசம கருத்துகளை பரப்பபடவில்லை இங்கே பலதரபட்ட மக்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும் செயலை அனுமதிக்கமுடியாது.. ஏதோ இந்துக்கள் என்று தங்களை நம்புகிற மக்களின் உணர்வுகளை சிதைப்பதல்ல .. ஓடாத திருவாரூர் தேரையை ஓடவைத்தவர்கள் நாங்கள் அவர்களின் நம்பிக்கையை தகர்ப்பதல்ல நோக்கம் மாறாக அதையே காரணம் காட்டி மததுவேசத்தை பரப்ப அனுமதிக்க கூடாது .. முன்பெல்லாம் மத நல்லிணக்கம் பேணபட்டது அங்காளி பங்காளியா உறவுமுறைச்சொல்லி வாழ்ந்த மண் இது இங்கே மதவெறிக்கு இடமில்லை எப்போது பாஜக மதவெறியை மக்களிடத்திலே விதைத்ததோ.. அதற்கு பிற மதத்தவரை பயங்கரவாதிகளைப்போல .. மதமாற்றம் செய்யவந்தவர்கள் போல சித்தரித்து சூழ்ச்சி வலை பிண்ணியதோ அதிலிருந்து பாஜக சங்பரிவார் நோக்கம் என்னவென்று புரியும்.. .. நெல்லை மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார் .. 144 என்றாலே நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செல்லவோ கதைக்கவோ கூடாது ஆனால் ஊர்வலமென்ற பெயரில் எப்படி காவிகள் ஊர்வலம் நடத்தலாம் அதுவும் சட்டப்படி குற்றம்தானே.. 144 தடை உத்தரவின் போது பிண ஊர்வலம் மட்டுமே அமைதியாக செல்லலாம்.. ஒருவேளை ரத யாத்திரையை #பிண_ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் கருதியிருப்பாரோ..? .. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை மீறி ஏன் புதிதாக கட்சி தொடங்கியிருக்க கமல் .. தொடங்க போகிற ரஜினி கூட இலைமறையாக எதிர்த்தாகிவிட்டது .. சாதிவெறியர்களை தவிர.. ஆனால் இந்த அடிமை அரசு எது செய்தாலும் கள்ள மௌனத்தோடு கடந்துவிடலாமென்று நினைக்கிறது இனி எந்தகாலத்திலும் பொதுவாழ்விற்கு வர முடியாதென்று தெரிந்திருந்தும் மக்கள் தூக்கியெறிவார்கள் அதுவரை இருப்பதை சுருட்டிக்கொள்ள எஜமானின் கருணை பார்வைக்காக.. ஏதேனும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ .. ஆட்சியை கலைத்து விரட்டிவிடுவார்களோ என அஞ்சி தொடைநடுங்கி இந்த அரசு கேவலமான ஆட்சியை நடத்துகிறது.. .. பெரியார் சிலையை இரவில் வந்து தகர்த்திருக்கிறார்கள் ..கள்ளத்தனத்திற்கு பிறந்தவர்கள்.. முடிந்தால் பகலில் வந்து சிலை மீது கை வைக்கட்டும்.. வைப்பவன் கை மட்டுமல்ல .. முண்டமாக விழ நேரிடும்.. இனி இந்த கேடுகெட்ட அடிமைகளை நம்பி பயனில்லை நாமே பாதுகாப்பில் இறங்க வேண்டுமென தளபதி அறிவித்திருப்பது தான் சரி. சிலையை உடைத்தவனை அறிந்து கைது செய்யவேண்டும் அப்போதுதான் அவன் உயிருக்கு பாதுகாப்பு.. இந்த அரசின் நாட்கள் எண்ணபடுகின்றன.. இருந்த இடமே தெரியாமல் அதிமுகவை அழியும் காலம் கண்ணில் தெரிகிறது... .. ஆட்டம் முடியும் நேரம் வந்துவிட்டது.. .. Aalanci Spm

Monday, March 19, 2018

ஆன்மீகம் ஒரு பொய்

ஆன்மீகம்.. ஒருவகை பொய்.. இங்கே மதம் கடவுள் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும்.. அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்.. மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும் எதையுமே ஏனென்று கேட்காமல் சொல்வதை ஏற்க நம் மூளையின் GOD பகுதியை சலவை செய்யும்.. மனித தேவைகளை மறந்த தெய்வத்தின் நிலை தேடும் போலி பாசாங்கு வரும்.. ஞானமெனும் அறிவை மழுங்கடித்து மெய்ஞானமெனும் பூச்சுற்றும் வேலை செய்யும்.. ஞானமென்றால் அறிவு அறிவெனில் அது தெளிவென்றே பொருள்.. பிறகெதற்கு மெய்யென்று பொய் சொல்லும் கூத்து .. .. ஆன்மீகவாதிகளை கூர்ந்து கவனியுங்கள்.. கவனமாக நம்மை அவர்கள் பக்கம் இழுப்பார்கள் ..எப்படியென்றோ ஏனென்று கேள்வி எழுப்பினால் .. நம்மை புறக்கணித்து சரிவராதென்றும் ஏன் நம்பிக்கையில்லாமல் வந்தீர் என்பார்கள்.. ஆன்மீகவாதிகளின் ஆயுதம் பொய் .. மக்களின் பயம்/பலவீனம் அவர்கள் மூலதனம்.. வேதம் கடவுளோடு தொடர்பு மனிதனின் செயல்பாட்டால் விளையும் கெடுதிகளுக்கு.. பரிகாரங்களென நம்மை மடமையில் வீழ்த்தும் வித்தை அறிந்திருப்பார்கள்... துறவு அல்லது இல்லறத்தை விடுதல் என்பது இயற்க்கைக்கு முறணானது.. காமம் இயல்பான நமது ஆசைகளின் வடிகாலாய்.. இன்பமெனும் நிலையை அடைதல்.. இங்கே காமம் அசிங்கமாக பார்க்கபடுவதும்.. அதை தவறென்றும் கற்பென்றும் கட்டுபாட்டை கடுமையாக்கியதும் .. ஒழுக்கமென்று நம்பவைத்ததும் .. காமத்தில் திருட்டுத்தனம் வந்தது அதற்கு ஆன்மீகம் பெருந்துணையானது.. எந்த ஜீவராசியும் காமத்தை அழுக்காகியதில்லை மதம் பேசும் பித்தர்கள்..மக்களின் பலவீனத்தின் மீதே வீற்றிருப்பார்கள்.. சில செப்படிவித்தைகள் அறிந்திருப்பர்.. அதைவிட கடைசி ஆயுதமாக காமத்தில் நம்மை நிறுத்தி .. ஒருவகை ஆசையை தூண்டி அடிமைபடுத்தும் வேலை நடக்கும்.. காமம் அழகு.. எந்த ஜீவராசியும் காமத்தை அசிங்கமென்றதில்லை மனிதனை தவிர அதை திருட்டுத்தனமாக அடைய இந்த ஆன்மீகம் துணைக்குவரும்.. .. ஆன்மீகம் பேசுவோரை மதபோதகர்களை பாருங்கள் தான் மட்டுமே சரி தன் கடவுள் மட்டுமே சரி .. நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோமென்று மூளைச்சலவை நடத்துவர்.. ஒருவகை போதை தரும் சொற்களால் நம்மை கட்டி போடும் சாகசம் அறிந்து பிற வழிபாடுகளின் மீது வெறித்தனமான வன்மத்தை விசவிதையை தங்களை பின்பற்றும் மக்களிடம் விதைக்கும் கேடுகெட்டவர்கள் தங்களுக்குள் போட்டிவந்துவிட்டால் அவர்களின் கடந்த கால நிகழ்கால அசிங்கங்களை பொதுவெளியில் வைத்து அதற்கு இறைவனை துணைக்கழைத்து விவாதிப்பார்கள்.. ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை நாம் ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் பேச வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் யோக்கியன் அவன் அயோக்கியன் என்கிற ரீதியில் கதைப்பதற்கு பெயர் இவர்கள் மொழியில் ஒழுக்கம் .. .. இப்போதெல்லாம் ஆன்மீகம் ..அரசியலென்று ஆகிவிட்டது அது எவ்வளவு தீமையை தருகிறதென்பதற்கு நடந்தேறும் நிகழ்வுகளே சாட்சியம் வகிக்கின்றன.. எதை உண்பது என்பதில் தொடங்கி எதை செய்யவேண்டும் எதை பேசவேண்டுமென திணிக்கிறார்கள்.. எதுவாகயிருந்தாலும் அது திணிக்கபடுமேயானால் அது மக்கள் மனங்களிலிருந்து அறுந்துவிழும் .. இந்த உலகில் மனிதம் பேசுகிற இல்லாததை இல்லையென்று உரக்கசொல்லி .. பொய் புரட்டு இதிகாசம் வேதம் சாதி சடங்கு என மூடமும் மடைமையை புறக்கணித்து அறிவின் நிழலில் நிற்கிற இயற்கையை அதன் வழியில் நம்புகிற வழிமுறையே காலம் கடந்தும் நிலைக்கும் அதற்கு பெயர் நாத்திகமென்றால் அதுவே உலகிற்கு அமைதியை செழிப்பை உயர்வை நம்பிக்கையை ஒற்றுமையை தரும்.. மதமென்பது ஒருவகை பிரிவினை அதில் கடவுள் ஆன்மீகம் என்பதெல்லாம்.. ஒருவகை ஏமாற்று.. இது எல்லா மதத்திற்கு பொருந்தும்.. நானே உயர்ந்தவன் என்மதமே சரியென்கிறதைவிட அயோக்கியத்தனம் வேறேதுமில்லை.. .. அன்பே சிறந்த வழி.. .. Aalanci Spm

Sunday, March 18, 2018

திராவிடம் 2.0

ஆதிக்கத்திற்கெதிரான குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது.. ஆனால் இங்கே அமைதியாக வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் அடிமைகள் .. கொஞ்சமும் ரோசமின்றி வெந்ததை தின்று வீணாய் போன வீணர்களாய் சிலருக்கேனும் இரத்தம் சூடேறினால் எஜமான் விசுவாசத்தில் கட்டம் கட்டி நீக்கி பல்லளித்து எஜமானனை குளிர்விக்கிற கொடுமை நடக்கிறது.. .. மடையனாய் இருப்பவனை கூட கொஞ்சம் செப்பனிட்டு அறிவின் தொடக்கத்தில் நிறுத்திவிட முடியும் ஆனால் இங்கே மூடனாய் முடமாய்.. நினைவிழந்தவனாய் ...மானத்தை விற்று வயிறு வளர்ப்பவனாய் அதிமுககாரன் இருக்கிறான்.. காலம் அவன் கையில் ஆட்சியை தந்தது ஆதிக்கவாதிகளுக்கு அல்வா சாப்பிடுவதைப்போல இனிக்கிறது.. கர்நாடக முதல்வர் தனிக்கொடியென்று .. விந்திய மலை நாடுகள் என்றும் உணர்வை கொட்டுகிறார் அதற்குமுன்பே .. நாங்களென்ன உண்பதென்ன நாக்பூர் தீர்மானிக்க முடியாதென்று ..உரக்க சொல்லி .. திராவிடர் நாங்களென பிரணாய் விஜயன் முன்மொழிந்தார்.. மாநில உரிமைகளை மத்தியில் யாசித்து பெறுவது இழுக்கென்று உணர தொடங்கி புதிய தொடக்கத்தை பேரறிஞர் அண்ணாவின் திராவிட நாடு முழக்கத்தை தென்னகம் ஒலிக்க தொடங்கும் நேரத்தில் இங்கே அண்ணாவின் பெயர் சொல்லி தொடங்கிய கட்சி மூச்சுவிட கூட பயந்து குலைநடுக்கி கிடக்கிறது.. .. திராவிட நாடு முழக்கம் மீண்டும் உயிர்பிக்க தொடங்கியதான் காரணம் என்ன..? பாஜகவும் பிராமணர் தலைமையகமான நாக்பூரும் தான்.. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உணவு உடை மொழி கலாச்சாரமென்று எல்லாவற்றிலும் ஆரிய திணிப்பதை தருவதும் ..அதை எதிர்ப்பவர்களை மிரட்டுவதும் .. அறிவுடையோரை கொல்வதும்.. எளியவர்களை அடித்துதைப்பதும்.. வலுத்த கூட்டம் எதிர்நின்றால் பம்முவதும்.. இந்த நான்காண்டில் நாடு கண்டு தன் தவறை உணர்கிறது.. ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளும் மீறபடுகிறது .. எதிர்க்கட்சியினரை.. எதிர்த்து வென்றவரை மொத்தமாக விலைக்கு வாங்கும் கேடுகெட்ட செயல்.. திருடர்கள் என்று தெரிந்தும் அவர்கள் ஆதரவு தேவையென கருதி பெருபான்மை இழந்து நிற்கும் போதும் நமக்கு கிடைத்த அடிமைகள் சிறந்தவர்களென எண்ணி .. ஆட்சியில் வைத்து தங்களின் எண்ணங்கள் செயல்திட்டங்களை சத்தமே வராமல் அரங்கேற்றுவதும் .. அதே பாணியை பிற தென்னக மாநிலங்களில் நிகழ்த நினைத்ததே பெருவினாயாய் போனது.. .. சரியான காலமிது பழைமைவாதம் பேசும் அடிப்படைவாதிகளின் செயல்கள் நம்மை ஒருங்கிணைத்திருக்கிறது.. பெரியாரின் பேரன்கள் .. திரண்டு திராவிடம் 2.0 தொடங்கியிருக்கிறார்கள்.. அரசியலை கடந்து சமூக சிந்தனைக்கொண்ட இளைஞர்கள் மத்தியில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.. பெரியாரின் பெருந்தீ.. யை அணையாமல் காத்திட இவர்களால் முடியுமென்ற நம்பிக்கை வெளிச்சம் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது சமூகநீதியை நிலைநாட்ட மதவெறி கும்பலின் பேரிரைச்சலுக்கு மத்தியிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒருங்கிணைந்து இசைக்க தொடங்கியிருக்கிறார்கள்.. நல்லது நடக்குமென்ற நம்பிக்கை பிறக்கிறது.. எந்தவொரு சித்தாந்தமும் அடுத்த தலைமுறையினரிடம் .. கொண்டு சேர்க்க சின்ன தீப்பொறி அளவிலாவது தந்துவிட்டு போகவேண்டும்.. ஆனால் இங்கே .. பெருஞ்சுடராய் கொண்டு சேர்த்திருக்கிறது .. இதற்கு காரணமான கலைஞர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றி உண்டு.. நம்பிக்கை பிறக்கிறது.. புதியதொரு விடியல் விரைந்து வருமென்ற நம்பிக்கை கீற்று ஒளி வீசுகிறது.. திராவிடமே இந்த மண்ணுக்கு உகந்தது.. இந்த மண்ணின் இயல்பு அது ..அதை மீறிய எதுவும் அறிவுடைமையாகாது.. ஏற்காத எதிரிகளும் உணரும் வரை.. நாம் தொடர்ந்து திராவிடம் 2.0 இளைஞர்களிடையே விதைப்போம்.. .. மலரும்.. மலர்ந்துதானே ஆகவேண்டும்.. .. Aalanci Spm

Saturday, March 17, 2018

மாநில சுயாட்சி

திரு சந்திரபாபு நாயுடு கேட்கும் சிறப்பு அந்தஸ்தின் இன்னொரு பெயர் என்ன தெரியுமா..? அது தான் திமுகவின் தாரக மந்திரம் #மாநில_சுயாட்சி.. எல்லா அதிகாரங்களும் மத்தியில் இருந்தால் எதையும் பெற வேண்டுமெனில் கைகட்டி நிற்கிற நிலையை தவிர்த்து .. வெளியுறவு கொள்கை ராணுவம் தவிரித்து எல்லா துறைகளிலும் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு வேண்டிய நிதியை தாமே ஏற்படுத்திக்கொள்ள .. மாநில வருவாயை மாநில நலனுக்கே செலவு செய்துக்கொள்ள.. கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் மண்ணின் மைந்தருக்கே முன்னுரிமை.. ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மொழிகளே செயல்பாட்டில்..வளர்ச்சியில் பிரதானமான பங்கை தாமே நிர்வகித்து கொள்ளல்... இவையெல்லாம் மாநிலங்களின் சுயத்தை நிறுவ பயன்படும்.. மத்தியில் அதிகார குவியல் என்பது சிறந்த ஜனநாயகமாக இருக்காது.. .. திராவிட நாடு கோரிக்கையை யாரும் இப்போது எழுப்பவில்லை எழுப்பினால் அதை திமுக ஆதரிக்கும் என்பதிலிருந்தே .. இன்னமும் அதற்கான தேவை இருப்பதை உணர்த்துகிறது .. மாநில உரிமைகள் பறிக்கபடுவதும் .. ஒரே இடத்தில் அதிகாரம் குவிதலும் நாட்டின் இறையாண்மையை உலுக்கும்.. இப்போது மெல்லிதாக கேட்கும் கேள்விகள்.. பின் பிரளயத்தை தரும்.. சிறிய உளிதான் மலையையே ஜல்லியாக்கிவிடும்.. தெற்கு உழைத்து வடக்கு உண்பதா என்ற சித்தராமையாவின் கேள்வி ஆயிரம் பொருள் பொதிந்தது.. தொடர்ந்து புறக்கணிக்கபட்டால் .. அதன் விளைவு அதிர்வாக இருக்கும்.. .. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பாக குஜராத்தியர்கள் வலிமையோடு வலம் வருகிறார்கள்.. சிறுதொழில்களை அழித்து பெரும் கார்ப்பரேட்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்கபடுகிறது.. கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் வெளிநாட்டிற்கு ஓட்டம்பிடிக்கிறார்கள்.. இன்னும் தென்னகத்தை சேர்ந்தவர்கள் தான் ஒழுங்காக வரிசெலுத்துவதும் அவை அனைத்தும் பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ பயன்படுகிறது அதுவும் கொள்ளை போகிறது.. வடமாநிலங்களுக்கு நலன் மட்டுமே காக்கபடுமேயானால் .. தொடர்ந்து தென்னகம் புறக்கணிக்கபடுமேயானால்.. தளபதி சொன்னதைப்போல.. திராவிடநாடு கொள்கையை கைவிட்டிருக்கிறோமே தவிர அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.. இப்போது நடப்பதை பார்த்தால் அது நூற்றுக்குநூறு உண்மை.. .. Aalanci Spm

Friday, March 16, 2018

இன்ப திராவிடம்

அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருக்கிறதென்றார் எம் அண்ணா.. இத்தனை காலம் கடந்தும் திராவிட நாடு கோரிக்கை மெல்ல துளிர்விடுகிறது தென்னகத்தை இணைத்த திராவிட நாடு கோரிக்கை வந்தால் திமுக ஆதரிக்கும் தளபதி.. தென்னகத்தில் இருந்து வரும் அதிகப்படியான வருவாயை கொண்டு வடமாநிலங்களுக்கு அதிகம் செலவிடபடுவதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருக்கிறார் .. நீண்டநாள்கள் கழித்து காதில் இன்பத்தேன் வந்து பாயுது கர்நாடகாவும் கேரளமும் ஏற்கனவே திராவிட சிந்தனையை நோக்கி வர தொடங்கியிருக்கும் வேளையில் ஆந்திரமும் கைகோர்ப்பது கண்டு மத்தியில் ஆளும் பாசிச அரசு அதிர்ச்சியடைந்திருக்கிறது .. நீண்டநாள்கள் ஒருசாரார் மட்டுமே தொடர்ந்து புறக்கணிக்கபடுவதோ அல்லது ஒருசாரார் தொடர்ந்து மற்றவர்களின் உரிமைகளை அபகரிப்பதோ நடந்தால் அது எதிர்வினையாற்றும் .. .. நாடாளுமன்றத்தில் பெருபான்மையை இழந்திருக்கிற நேரத்தில் .. YSR ரெட்டி கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொன்டுவர போவதாக அறிவிக்க நாயுடுவும் அதை ஆதரிக்க போவதாக சொல்கிறார் இரண்டு பேர் ஆதரவிருந்தாலே போதும் என்கிற சூழலில் அடிமை திமுக நிச்சயமாக ஆதரிக்கும் இல்லையெனில் மிரட்டபடுவார்கள்.. ஐம்பது எம்பிக்கள் இருந்தால் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும் இன்னும் சில கட்சிகள் சேர்ந்து கொண்டுவந்தாலும் அடிமைகளை கொண்டு தப்பிக்கலாம் ஆனால் இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவு.. பெருபான்மையாக இருந்த கட்சி தேய்ந்து வருவது நல்ல செய்தி.. .. "கலைஞர் திமுகவிற்கு மட்டுமல்ல, எனக்கும் அவர் தலைவர் தான் !" ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு.. ஆம் திராவிட பெருந்தலைவர் கலைஞர்தான்.. தென்னிந்தியாவில் கலைஞரைப்போல ஒரு தலைமையை இதுவரை கண்டதில்லை ஆளும் போதெல்லாம் தனக்கு வழங்கபட்ட எல்லைக்குள் நின்று அவர் ஆற்றிய அரும்பணிகள் காலம் கடந்தும் பேசபடுவதோடு .. பிறமாநிலங்களில் பின்பற்றபடுவதே.. ஏன் மத்தியஅரசே எல்லாமாநிலத்திற்குமான திட்டமாக கலைஞரின் ஏற்கனவே நடைமுறைபடுத்தியதை நிறைவேற்ற முடிவெடுத்திருப்பதே சிறந்த சாட்சியாகும் .. தென்னிந்தியாவின் தலைவராக திராவிட நாட்டின் பெருந்தலைவராக கலைஞர் இருக்கிறாரென்பது எவ்வளவு மகிழ்ச்சி.. இன்றைக்கு பேசாமலும் தன்னைப்பற்றி பேச வைத்திருக்கிற அரசியல் மாமணி.. காலங்கடந்தும் பேசபடுவார்.. .. திராவிட நாடு தவிர்க்க முடியாத கோஷமாக.. நாளை நடைமுறையில் வர அத்தனை சாத்தியகூறுகளும் தென்படுகிறது எல்லாவளமும் உள்ள நாட்டின் தென்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கபடுவதும் ..அதன் மீது மொழிரீதியாக கலாச்சார ரீதியாக .. பிற கலை பண்பாடுகள் திணிக்கபடுவதும்.. தமிழனின் தொன்மையை சிதைத்து வடவரின் வரலாற்றை நம்மீது திணித்து .. மதம் வேதம் சடங்கு விழா என எல்லா விடயங்களிலும் நம் மீது திணித்து கொண்டாட வைத்து (தீபாவளி சதூர்த்தி)ஒருவகை கலாச்சார போரை உருவாக்கி ஆரியத்தின் கொண்டாட்டங்களை நமதாக உருவகபடுத்தி .. திராவிடத்தின் அதன் கிளைகளின் தொன்மையை வரலாற்றை புறக்கணித்து .. அழித்து ஒருவகை கலாச்சார படையெடுப்பை தொடர்ந்து நிகழ்த்துவதும் .. அழுத்தி வைக்கபட்ட எதுவும் வெளியே வரும் அல்லது வெடித்து சிதறும்.. அதைப்போல இன்றைக்கு திராவிட நாடு கோரிக்கை உயிர்பெறுகிறது.. இன்னும் சிலகாலம் ஆகலாம்.. ஆனால் திராவிட நாடு தேவை இன்னும் அப்படியே இருக்கிறதென்பது உண்மை ஒருநாள் விடியும்.. திராவிடர்கள் இணைவர் திராவிடம் தழைத்தோங்கும்.. அண்ணாவின் சொல் ஒரு நாள் வென்றே தீரும்.. #திராவிடநாடு குறித்து .. அண்ணா 62 ல் சொன்னது.. திராவிட நாடு கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு முற்றிலும் இழந்திருக்க வேண்டும். அல்லது திராவிட நாடு கிடைக்கவே வாய்ப்பு இல்லை என்று இருக்கவேண்டும். அல்லது அதைவிட பெரிய லட்சியம் ஒன்று தோன்ற வேண்டும். இம்மூன்றும் இல்லாதபோது, திராவிடநாடு கோரிக்கை கைவிடுவதற்கு காரணமில்லை.” என்றார்.. .. ஆம் .. இதில் எதுவுமே நிகழாத போது திராவிட நாடு கோரிக்கை உயிர்ப்போடு இருப்பது நமக்கு விளங்கும் அதை தான் தென்னிந்தியாவை இணைக்கும் united states of south india (திராவிட நாடு) நமக்கு உணர்த்துகிறது/ சொல்கிறது.. .. இன்பத்தேன் வந்து பாயுது.. .. Aalanci Spm

Thursday, March 15, 2018

கவனம்..

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் சிலர் பதவி அளிக்கபட்டது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.. பாஜகவின் விசுவாசியாக அறியபடுபவர் பொறுப்பு வழங்கியிருப்பதை மீளாய்வு/ மறுபரிசீலனை செய்திடல் வேண்டும் அவரை பரிந்துரைந்தவர் யார் எங்கிருந்து அழுத்தம் வந்ததென வெளிப்படையாக விவாதிக்கவேண்டும்.. நண்பர் பழநிவேல் தியாகராஜன் மிக சரியாக செயல்படகூடியவர் ஆனால் உள்ளுர் அரசியலைப்பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கில்லை தொழில்நுட்ப அறிவு மட்டுமே,கட்சியை கரை சேர்க்குமென்கிற நிலைபாடு சரியானதல்ல.. எவ்வளவு திறமைகள் இருந்தாலும் சந்தேகத்திற்குரிய நபருக்கு வாய்ப்பு வழங்குவது கட்சிக்கு வளர்ச்சிக்கு நல்லதல்ல .. .. எடப்பாடி அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது .. ஓட்டை பானையில் சமையல் செய்ய முடியாதென்ற தளபதியின் விமர்சனம் .. இதைவிட சொல்லிவிட முடியாது .. ஆந்திர சந்திரபாபு நாயுடு .. எங்களை எடப்பாடி என்று நினைத்தீர்களா என்றபோது உண்மையில் வெட்கபட நேர்ந்தது இந்த அவல ஆட்சி இனியும் தொடர்வது தமிழக மக்கள் மானத்திற்கு விடபடும் சவால் அவமானகரமான ஒரு ஆட்சியை இனியும் வைத்திருக்கவேண்டுமா.. அதிமுக எனும் அழுக்கை துடைத்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம் .. திருடி என்று நீதிமன்றங்கள் உறுதியிட்டு ஜெயலலிதாவின் படத்தோடு கட்சிகள் தோன்றுவதும்.. ஜெயலலிதா நினைவகம் அமைப்பதற்கு மக்களி வரிப்பணம் செலவு செய்வதும் கிரிமினலை ஊடகங்கள் உயர்த்தி பிடிப்பதை தடுப்பதற்கும். மெல்ல மெல்ல படரும் பழமைவாத பாசிசத்தை துடைத்தெறியவும்.. கொஞ்சம் கொஞ்சமாய் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கபடுவதை தடுப்பதற்கும் (obc உயர்கல்வி இடஒதுக்கீட்டை திரும்ப பெற) தமிழனின் வரலாற்று சுவடுகளை மண்ணுக்குள் புதைக்கும் கொடுஞ்செயலை தடுத்து நிறுத்திடவும் (கீழடி).. சமூகநீதியும் சமதர்மமும் நிலைநாட்டவும் ...நல்லதொரு விடியலை நோக்கி காத்திருக்கிறார்கள் மக்கள். .. இவ்வேளையில் திமுகவிற்குள் புகுத்தப்படும் புல்லுறுவிகளை இனம் கண்டு விரட்டியடிக்கவேண்டும்.. சின்ன விடயம்தானே காலபோக்கில் சரி ஆகிவிடுமென மெத்தனமாய் இருப்போமேயாயின் அது இயக்கத்தை பலவீனபடுத்தும் அதைதான் எம் இனபகைவர்கள் விரும்புகிறார்கள்.. காலத்தின் தேவை கருதி .. எதிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டிய தருணம் இது.. உட்கட்சி பகை .. குடும்ப அங்கத்தினர் தலையீடு கொள்கையறியாதவர்களுக்கு பதவி .. குழிபறித்தல் யாரை எங்கே வைப்பதன்று அறியாமல் வளர்த்துவிடுவது இவையெல்லாம் இயக்கத்திற்கு ஊனத்தை தரும்.. விழிப்புணர்வோடு.. கொள்கை உறுதியாளர்களை அரவணைத்து இடம்தரும் விசமிகளை இனம்கண்டு எச்சரித்து விலக்கிவைத்து முழுவீச்சோடு தளபதியை அரியயணை ஏற்ற உறுதிபூண்டு செயல்படுவோம்.. மாபெரும் இயக்கத்தில் நடக்கும் சிறிய தவறுகளை .. நலம்விரும்பிகளும் நல்மனம் படைத்தோரும் கொள்கையாளர்களும் கவனத்திற்கு கொண்டுவருவது .. சிறந்த ஜனநாயகத்தை வளர்க்க காக்க உதவும்.. .. சீர்செய்வோம்.. .. Aalanci Spm

Wednesday, March 14, 2018

தளபதி ..

மூன்றாம் கலைஞர்.. .. சிலரின் அதீத ஆர்வகோளாறு இன்றைக்கு டிரெண்ட் ஆகியிருக்கிறது.. கலைஞர் ஒருவர்தான் கலைஞர் அவரை பிரதியெடுக்க முடியாது .. எப்படி பெரியாரென்றால் அண்ணா என்றால் அவர்களை குறிக்குமோ அதைப்போல கலைஞரென்றால் .. திராவிட பெருவுடையாரைதான் குறிக்கும்.. இரண்டாம் அண்ணா என்றோ,மூன்றாம் பெரியாரென்றோ கலைஞரை எப்படி அழைக்க முடியாதோ அப்படி கலைஞர் பெருமகனோடு யாரையும் ஒப்பிட்டோ அல்லது அவரின் தோன்றலென்றோ எவரையும் ஒப்பிடவோ இணைத்து பேசவோ முடியாது .. .. திரு.ஸ்டாலின் ஒரே நாளில் திணிக்கபட்டவரில்லை திணிக்கபட்டிருந்தால் காலம் அவரை புறக்கணித்திருக்கும்.. அழகிரியைப்போல.. திருமதி கனிமொழியை கூட இன்னமும் பயிற்சிக்கான காலமாக அவரின் அரசியல் கருதபடுகிறதே அன்றி தலைமைக்கான தகுதி இருப்பதாக கருதவில்லை.. கலைஞர் செய்த சில தவறுகளில் அழகிரி கனிமொழி வரவென்று நினைக்கிறேன் முதலாமவர் தகுதியில்லாதவராக அல்லது கொடுக்கபட்ட வாய்ப்பை பயன்படுத்த தெரியாதவராக இருந்தார் .. ஆனால் கனிமொழி சில சமரசங்களுக்காக கொண்டுவரபட்டாலும் .. தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்.. கலைஞரே ஒருமுறை கனிமொழி என் இலக்கிய வாரிசாக வருவதையே விரும்புகிறேன் என்றார்.. சில கசப்பான அனுபவங்கள் தரும் படிப்பினை பின் வரும் நாட்களில் மிகப்பெரிய தாக்கத்தை தருமென்பதை காலம் உணர்த்தியிருக்கிறது.. திரு.அழகிரியோ அல்லது இன்றைக்கு முன்னெடுக்கபடுகிறவர்களோ(கனிமொழி உதயநிதி) திராவிட இயக்கத்தில் எந்த மாற்றத்தையும் தரவல்லவர்கள் இல்லை .. இன்றைய காலகட்டத்தில் திரு.ஸ்டாலினை முன்னெடுக்க முயலவேண்டுமே அன்றி மற்ற விடயங்களில் கவனத்தை திசை திருப்புவது எதிராளிகளுக்கு பயனாகி போகும்.. .. தளபதி .. தவிர்க்கமுடியாத தமிழகத்தின் எதிர்காலம் நீண்ட வரலாற்று பின்ணணியோடு நீண்ட நெடிய பயிற்சியோடு படிப்படியான வளர்ச்சியும் மெல்ல மெல்ல மெருகேற்றிய திறமையும் எதிர்க்கிறவர்கள் கூட ஏன் பகைவர் கூட போற்றுகிற ஏற்கிற தலைவனாக வலம் வருவதை அவர்கள் குடும்ப உறுப்பினர்களே விரும்பவில்லையோ என எண்ண வேண்டியிருக்கிறது.. இப்படி கேனத்தனமான செயல்கள் வரும் தேர்தலில் ஒருவித மெல்லிய கேள்வியை எழுப்பி அது விரிந்து படர்ந்து தம்மையே திருப்பி தாக்குமென அறியாதவர்கள் .. கனிமொழியாக இருந்தாலும் உதயநிதியாக இருந்தாலும் உறுப்பினர் கார்டோடு கடைசி உறுப்பினரின் செயல்படுவதல் போல இருக்கவேண்டுமே தவிர முன்னிலை படுத்துவதோ .. அடுத்த வாரிசென்பதோ அவர்களுக்கு வினையாகும்.. தொடர்ந்து கழகப்பணியாற்றுங்கள்.. மக்கள் ஏற்கிற காலம் வருமெனில் அப்போதைய தேவையெனில் .. காலம் முன்னிறுத்துமே தவிர இன்றைக்கு இவர்கள் முன்னிலைப்படுத்துவது தேவையில்லாதது திருமதி கனிமொழி காத்திருப்பது நலம் இவரின் சில ஆதரவாளர்கள் குறிப்பாக நாடாரிய சகோதரர்கள் முன்பு முன்னெடுக்க ராசாத்தி அம்மாவால் களமிறக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தளபதியை கேலி செய்வதும் திமுகவில் தளபதியின் செயல்பாட்டை விமர்சிப்பதும் செய்து வருவது வெளிப்படையாக தெரிவது அவருக்கு சங்கடத்தை தரும்.. கடைசியில் தூக்கியெறியபடுகிற திமுக தொண்டர்களால் வெறுக்கபடுகிற நிலை உருவாகும்.. திறமை தகுதியை வளர்த்துக்கொள்வதோடு களப்பணியில் தளபதி தோளோடுதோள் சேர்ந்து பணியாற்றினால் நன்று.. இல்லையேல் சருகைப்போல .. விழ நேரிடும்.. கலைஞர் மொழியில் இவர்களுக்கு சொல்வதெனில் இது சங்கரமடமல்ல.. .. நிறைய பணி காத்துகிடக்கிறது .. இவரிகளின் அக்கறையின்மையை .. அதிகபிரசங்கிதனத்தை ஆர்வகோளாறை கடந்து தளபதி தலைமையில் தமிழகம் மிளிர செய்ய உறுதி ஏற்ப்போம்.. .. Aalanci Spm

Tuesday, March 13, 2018

இமயமலை ரகசியம்

வைகோ பிறக்கும் போதே லவுட்ஸ்பீக்கருடன் பிறந்தவர்... ஜெயக்குமார் கிண்டல்.. //தி.க.திமுக கம்யூனிஸ்ட்களை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் எச்சை.. மய்யத்தில் தமிழுசை சேர்ப்பு.. //இமயமலையில் ஆர்எஸ்எஸ் வினரோடு ரஜினி.. .. வைகோ யாரென்று இந்த அரைவேக்காட்டிற்கு தெரியுமா நிறைய கருத்துவேற்றுமை இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்தில் ஒருவகை நேர்மை.. கொஞ்சம் அவசரபடுதல் தவிர்த்து களப்பணி என்று வந்துவிட்டால் மிகவும் சுறுசுறுப்பாக ஏற்றுக்கொண்ட விடயத்தில் உறுதியாக செயலாற்றுபவர் ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு தமது தகுதியென்ன என்று அறிந்திருக்கவேண்டும்.. கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து பிரிந்து சென்றாலும் உணர்வோடுதான் இருந்தார்.. சில வரலாற்று தவறுகள் அரசியலில் நிகழ்ந்தது ஆனால் அடிமைத்தனம் அவரிடமில்லை ..மாறாக உளஉறுதியோடு இருந்தார்.. ஜெயகுமார் பதவி பறிக்கப்பட்ட போது கயிறுக்கு அப்பால் நின்று ஜெயலலிதா வாகனத்தை எதிர்பார்த்து கும்பிட்டு நின்ற நிகழ்வொன்றே போதும் அவரின் தகுதிக்கு .. இன்றைக்கு வாய்கிழிய பேசுகிறவர் அன்று மறந்தும் வாய்திறக்கவில்லை.. .. திமுகவையும் திகவையும் கம்யூனிஸ்ட்களையும் தமிழகத்தைவிட்டே விரட்டவேண்டுமென்கிற எச்.ராசா சர்மா முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் இங்கே திராவிடத்தை சொல்லிதான் அரசியல் செய்யமுடியுமே தவிர தேசியம் எல்லாம் சொன்னால் நோட்டாவை மிஞ்சவே முடியாது அதனால் தான் ஜெயலலிதா அந்த வரம்பை மீறாமல் .. அரசியல் செய்தார் வரம்பிற்குள் நின்று ஆரியர்களுக்கு சேவகம் செய்தார் எப்போது கழட்டிவிட வேண்டுமென்று அறிந்து செயல்பட்டார்..,அதாவது நடித்தால் கூட திராவிட வேடம் கட்டவேண்டும் இல்லையேல் நசுக்கிவிடுவார்கள்.. என்ன தான் கத்தினாலும் இங்கே ஒன்றும் ஆக போவதில்லை இருக்கிற கொஞ்ச ஓட்டும் எச்சை பேச்சால் போய்விடும் .. மய்யத்தில் தமிழிசையை சேர்தது போல வேறெங்காவது சேர்ந்து பலனடையலாம்... பாவம் தமிழிசை .. மிஸ்டு கால் கொடுத்து பாஜகவிற்கு ஆள் சேர்த்தா தலைமையையே மய்யத்தில சேர்த்து கலாய்க்கிறாய்ங்க.. பாஜக மய்யம் ரஜினி மன்றம் இவையெல்லாம் இணையத்தை நம்பி வந்தவர்கள் .. மக்களின் உணர்வோடு கலந்து அரசியலில் பயணிக்க வந்தவர்கள் இல்லை... இந்த மூன்று மரைகழட்டதையும் வைத்து காமெடி பண்ணலாம் அவ்வளவுதான் .. ரஜினியின் ஆன்மீக பயணம் .. இதற்கு முன்பும் ஒரு பரதேசியைப்போல இமயமலை அடிவாரத்தில் சுற்றிதிரிந்தவர்தான் அப்போதெல்லாம் எந்த அரசியல் தலைவரையும் சந்தித்ததில்லை அப்போது அவர் மீதோ அவரின் ஆன்மீக பயணம் மீதோ யாருமே குறைச் சொன்னதில்லை.. அது அவரின் தனிப்பட்ட விருப்பமென்று கடந்து சென்றிருக்கிறோம்.. அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு .. இப்போது கூட அவரின் தனிப்பட்ட தனிமைத்தேடிய ஆன்மீக பயணமெனில் கேள்வி எழ வாய்ப்பில்லை ஆனால் தமிழகத்தில் வாய்திறந்து கருத்துகூற மறுத்து .. இது அரசியல்பயணமல்ல என விளக்கமளித்துவிட்டு தனிப்பட்ட பயணமென சொல்லிவிட்டு ஆர்எஸ்எஸ்காரர்களை மட்டும் சந்திப்பதென்பது ஏன்.. வெளிப்படையாகவே பாஜகவையோ அல்லது தம்மை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு களம் காணட்டும் அதில் ஒரு நேர்மை இருக்கிறது அதை விடுத்து இந்த ஆன்மீக முகமூடியில் ஆர்எஸ்எஸ் பரிவார் கொள்கையை சுமந்து வந்தால் திராவிடம் கிழித்தெறிந்துவிடும் .. இந்துத்துவவாதியாக தம்மை காட்டிக்கொண்டு மோடி ஆதரிப்பதாக சொல்லி தமிழகத்தில் வந்தால் பாஜகவைவிட கேவலமாக நிலையையே மக்கள் தருவார்கள்.. எழுபதுகளில் எம்ஜிஆர் செய்தபோதெல்லாம் இதுபோன்ற விழிப்புணர்வோடு கூடிய சமூகவலைத்தளங்கள் இல்லாததால் அவரின் இயல்பை மக்கள் அறிந்திருக்கவில்லை மதிமயக்கும் மாய தோற்றம் அவருக்கு துணைவந்தது இப்போது அப்படியில்லை 24 மணிநேரமும் கண்காணித்து கொண்டே இருக்கிறது இந்த சமூகம் .. விவரகேடுகளை.. விரட்டியடிக்கும்.. இங்கே பாசிசம் பேசுவோருக்கும்.. பிராமணீய அடிவருடிகளுக்கும்.. வேலையில்லை.. .. #எச்சரிக்கை .. Aalanci Spm

Monday, March 12, 2018

வெற்றிடம்..

வெற்றிடம் வெற்றிக்கு இடம் என்று கல்கி முகப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது அதாவது பிராமணர்கள் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் வளர தொடங்கியது முதல் அவர்களின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நின்று கடைசியில் ஒருவித பவ்யத்தோடு நடந்துக்கொண்டார்கள்.. குலக்கல்வியை கொண்டுவந்த ராஜாஜியை கீழிறக்கியவுடன் இனி தமிழக தலைமைக்கு பார்ப்பனரை வரவிடாமல் செய்யவேண்டுமென்ற அய்யாவின் திட்டத்தில் கர்மவீரர் காமராஜரை முதல்வராக்க முடிவு செய்த போது கட்சிக்குள்ளும் வெளியேயும் எதிர்ப்பு வருமென காமராஜர் சொன்னபோது.. எதிர்த்தால் நான்தானே எதிர்க்கணும் .. எப்படி ஜெயிக்கவைக்கணுமென்று எனக்கு தெரியுமென்றார் பேராசான் பெரியார்.. அதை தொடர்ந்து .. காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் .. பார்பனர்கள் மெல்ல தனது சூழ்ச்சியை எம்ஜிஆரை வைத்து ஆரம்பித்து குறிப்பிட்டளவு தங்கள் நினைத்ததை சாதித்தாலும் திராவிடத்தை தாண்டிய சிந்தனையை விதைக்கமுடியவில்லை...தொடர்ந்து பார்பன ஜெயலலிதாவை கொண்டுவந்தும் ஓரளவு பயனடைந்தார்கள்...ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட வெற்றிடம் அதை எங்கே சசிகலா &கோ களீபரம் செய்துவிடுமோ என அஞ்சி வழக்கும் தீர்ப்பும் விரைநிது நடத்தி சிறையாக்கி அடிமைகளை கொண்டு ஆட்சி நடத்திட்டாலும் .. அது நீண்டநாள் நிலைக்காதென்றறிந்து .. ரஜினியை களமிறக்க திடிடம் வகுக்கிறார்கள்.. குருமூர்த்தி கூட ஒருஓரத்தில் ரஜினி மறு ஓரத்தில் மோடி போட்டா போட்டா போதும் வெற்றி கிடைத்துவிடுமென பேசுகிறார்.. இப்போது கல்கி அதை தொடர்ந்து செய்தியை கசியவிடுகிறது ‍.. .. இது ஒருவகை தந்திரம் .. ரஜினி வந்தால் வெற்றி கிடைத்துவிடுமென அடிக்கடி சொல்லி வந்தால் வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய ஏதுவாக இருக்கும் என்று திட்டம் தீட்டலாம் ..ஆனால் இங்கே ரஜினியை காமெடியாக்கி கொண்டிருக்கிறான் மிஸ்டர் பொதுஜனம்.. காவேரி தண்ணீர் பிரச்சினை குறித்து ரஜினி காந்த் கருத்து கூறவில்லை. பல விஷயங்களில் ரஜினி காந்த் எந்த கருத்தும் கூறாமல் நழுவி வருகிறார் என்கிறார் கமல் ஹாசன் தமிழ்நாட்டில் முறையாக கட்சி ஆரம்பித்து அரசியல் செய்ய வந்தவராக அறியமுடியவில்லை. வேறு யாருடைய மறைமுக உத்தரவை அமல்படுத்த வந்தவர் போன்று தான் ரஜினி தெரிகிறார்...இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான் .. ஆர்எஸ்எஸ் சொல்படி வாலாட்டுகிறவர் .. இவர்கள் நோக்கம் இதுதான் வெற்றியல்ல மாறாக எக்காரணம் கொண்டும் உண்மையான திராவிட ஆட்சி வந்துவிட கூடாது திமுகவின் வெற்றியை தடுத்து மீண்டும் அடிமைகளின் ஆட்சியை தொடர வழிவகை செய்வது அவர்களுக்கே தெரியும் .. நீண்ட திட்டமிடல் நடத்தியும் பெரியாரின் சிலையை தகர்ப்போம் என்றதற்கே ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது .. எந்தநிலையிலும் நேரடியாக அதிகாரமென்பது பகல்கனவு தான்.. அதனால் வாக்குகளை பிரிக்க இப்போதிலிருந்தே திட்டமிடல் தான் .. வெற்றிடம் வெற்றிக்கான இடம் என்ற பினாத்தல்.. கவனமாக இவர்களை களைகளை போல பிடிங்கியெறியவேண்டும் இல்லையேல்.. பயிர் வீணாகும்.. சிறிய இடைவெளி போதும் .. இன்னும் பத்தாண்டுகளுக்கு உயர்பதவிகளில் அவாள்களே நிரம்பிவிடுவார்கள்.. உனது உரிமை பறிபோய்விடும்.. இப்போதே அடிமைகளை வைத்து அபாரமாக இடத்தை நிரம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. விழித்துக்கொள் .. .. #எச்சரிக்கை .. Aalanci Spm

Sunday, March 11, 2018

பெரியார் சிலை ஏன்

பெரியார் இப்போது இருந்திருந்தால் ஏன் சிலை வைத்தீர்களென கேட்பார் என்கிறார்..கமல் முதலில் அரசியல் வரலாற்றை அறிந்துக் கொண்டு களமாட வரவேண்டும் .. கடலூரில் பெரியார் பேசிக்கொண்டிருந்த போது சில விசமிகள் செருப்பு வீசினார்கள்.. செருப்பிற்கு ஒரு சிலை முளைக்குமென்றார் கவிஞர் கருணானந்தம்.. கலைஞர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதே இடத்தில் பெரியார் முன்னிலையிலே திறந்து வைத்தார்.. எதற்கு பெரியார் சிலையென கேட்போருக்கு இதோ பிராமணீயத்திற்கெதிராக .. வர்ணாசிரமத்திற்கெதிராக இந்த கிழவன் வாழ்நாளெல்லாம் போராடினான் என வரும் தலைமுறை தெரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்காகவே தவிர.. கும்பிட அல்ல.. கலைஞர் முதல்வராக இருந்தபோது . பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கலைஞர் சிலையை நிறுவினார் ..பிறகு எம்ஜிஆர் மறைவையொட்டி சிலை உடைக்கபட்டது.. செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதியெனக்கு .. என்று கலைஞரால் கவிதைபாட முடிந்தது.... .. ராகுல் காந்தி.. தன் தந்தையை கொன்றவர்களை நானும் பிரியங்காவும் மன்னித்துவிட்டோம் .. முதலில் அவர்கள் மீது கோபம் இருந்தது .. இப்போது இல்லை பிரபாகரன் கொல்லபட்ட புகைப்படத்தை பார்த்த இவ்வளவு கொடூரமாக இலங்கை ராணுவம் நடந்துக்கொண்டிருக்கிறதே என்ற எண்ணம் வந்தது என்றார்.. உண்மையில் நீண்டநாட்கள் சிறையில் கழித்துவிட்டார்கள்.. பாதிக்கபட்டவர்களும் முழுமையாக மன்னித்துவிட்டதாக சொன்னபிறகு.. எழுவரையும் விடுதலை செய்யலாம் .. வருத்தியவர்களை மன்னிப்பது கூட சிறந்த தர்மம்தான்.. நியாமும் கூட.. நீண்டநாள் சிறைவாசம் தவறை உணர வைத்திருக்கும் சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விடுத்து அவர்கள் விடுவிக்கபட வேண்டும் .. .. ரஜினி.. இமயமலையில் ஆன்மீக தேடலுக்காக செல்லவில்லை..மாறாக ஆர்எஸ்எஸ் காரர்களை சந்தித்து எப்படி நடந்துக்கொள்ளவேண்டுமென்று கேட்டு தெரிந்துக்கொள்ள போயிருக்கிறார்.. யாரால் இயக்கபடுகிறாரென்று தமிழக மக்கள் புரிந்து தெளிந்திருக்கிறார்கள்.. இரு பெண்கள் மரணம் குறித்து கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.. அவர் சுயமாக சிந்தித்து பேசுபவரில்லை யாராவது அவரை இயக்கவேண்டும் எழுதி தரவேண்டும் சிஸ்டத்தில் update செய்தால் தான் கேட்கும் போது பதில் கிடைக்கும் இல்லையென்றால் சிஸ்டத்திற்கு பதில் சொல்ல தெரியாது தலைசுத்தும்.. அப்படிதான் திடீரென்று கேட்டால் ஓடியொளிகிறார்.. எங்கிருந்து தயாரிக்கபட்ட இயந்திரமென்பதை தமிழர்கள் அறிவார்கள்.. இமயமலை அடிவாரத்தில் கடைசிவரை ஆண்டியைப்போல கழிக்கவேண்டிவரும்.. .. Aalanci Spm

Saturday, March 10, 2018

பி.ஜே..எனும் ஆர்எஸ்எஸின் சிலீப்பர்செல்

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்.. தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்.. .. பெரியார் நாத்திகம் பேசி சம்பாதிக்கவில்லை இன்னும் சொல்லபோனால் பொதுவாழ்விற்கு வந்த பிறகு கஞ்சனைப்போல நடந்துக்கொண்டவர் அவருக்கு வந்த எல்லா தொகையையும் சேர்த்துவைத்து அதை எங்கே தன் உறவுமுறை சொந்தங்களுக்கு சென்றுவிடுமோ என அஞ்சி மணியம்மையை மணந்து அறக்கட்டளையில் வாரிசாக்கியவர். அப்போது உறவுமுறை தான் அறக்கட்டளையை நடத்தமுடியுமென்ற சட்டமிருந்ததால் அப்படி செய்தார்.. .. முதலில் ஒருவரைப்பற்றி குறை சொல்வதற்கு முன் அவரைப்பற்றி அறிந்திருக்கவேண்டும் சொல்லும் சொல்லில் உண்மையை மட்டுமே பேசுவதாக கூறி .. ஒரு மதத்தில் பிரிவினையை உண்டாக்கி அதன் மூலம் செல்வம் சேர்த்த யோக்கிய சிகாமணி சொல்லகூடாது.. தான் மட்டுமே சொல்வது சரியென்று பிதற்றி திரியும் எல்லாம் எனக்கு தெரியுமென .. எந்தகேள்விக்கும் விடைதெரியுமென .. எதையும் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றிவளைத்து ஒரு சமூகத்தையே மூளைச்சலவை செய்து பிரதான எதிரிகளுக்கு மறைமுக உதவி செய்து திரியும் மூடன் .. தன்னை நல்லவனென சொல்கிறவன் கூட நம்பலாம் தான் மட்டுமே நல்லவன் என்கிறவன் நம்ப முடியாது.. அப்படிபட்டவர் இந்த பி.ஜே.. .. பெரியாரை இழிவாக பேசி திரியும் பாசிசத்திற்கு வலு சேர்க்க இந்த கைக்கூலி தன் பங்கிற்கு பெரியாரை வசைபாடுகிறது.. இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைத்து அவர்களுக்கு அடிதடி பகை உணர்வை உண்டுபண்ணி அதன் மூலம் பாசிச ஆர்எஸ்எஸின் வேலை சுலபமாக்கும் இந்த கேடுகெட்ட இஸ்லாமிய சமூகத்தின் விரோதி இன்றும் தன் பங்கிற்கு கொஞ்சம் கூவிவிட்டுபோகிறது வாங்கும் காசிற்கு வஞ்சனையில்லாமல்.. .. பெரியார் மிகப்பெரிய செல்வந்தர்.. தன் சொத்துக்களை இந்த மண்ணிற்காக செலவிட்டவர் ஒரு சாரார் மட்டுமே உயர்ந்து கொண்டே போகிறார்கள் மற்றவர்கள் எழ முடியாமல் அடித்தமர்த்தபடுகிறார்களென என எண்ணி அதற்காக சமுதாய ஏற்றதாழ்வுகளை களைய இறுதி மூச்சுவரை போராடி உண்மையான போராளி.. நாத்திகம் பேசிதான் நாலுகாசு பார்க்கவேண்டுமென்பதில்லை.. நாத்திகத்தை அவர் கையிலெடுத்ததே இந்த கேடுகெட்ட வர்ணாசிரம நிலையை குழித்தோண்டி புதைக்கவேண்டுமென்பதற்காக தானே தவிர.. அவரே சொல்கிறார் எனக்கு என்ன கடவுள் மேல் வெறுப்பா.. இந்த ஏற்றதாழ்வை வர்ணம் கொண்டு பிரித்திரிப்பதை எடுத்துகளைய வேணிடுமென்றேன் அது வேதத்தில் இருக்கிறதென்றார் அந்த வேதத்தை புறநிதள்ளுவோமென்றேன் அது கடவுளின் மொழியென்றார் அந்த கடவுளையே எதிர்த்தேன் என்றார்.. பெரியார் சிலைக்கு ஏன் மாலை போடுறீங்க என்று கேட்கும் அறிவிலியே.. பெரியாரை கும்பிடவில்லை மாறாக எம்மை சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்த அந்த மனிதரை போற்றுவதும் நன்றி பாராட்டிவதுமே தவிர.. வணங்குவதல்ல பெரியார் சோத்துக்கு என்ன செய்தாரென்கிறார் அவர் ..இவரைப்போல படிப்பதற்கே அடுத்தவரின் உதவியை தேடியவரல்ல.. சாப்பாட்டு வழியில்லாமல் மதரஸாவிலே சேர்த்து விட்டா சோறாவது கிடைக்குமென்று வந்தவரல்ல.. அவர் பெருந்தனக்காரர்களில் ஒருவர்.. .. இப்போதுதான் ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்லாக வெளியே வருகிறது ஆரம்பத்தில் சில இஸ்லாமிய சமய பெரியவர்கள் பி ஜே வை ஆர்எஸ்எஸின் ஆள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்கள் அது உண்மையென்று இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது.. ஆர்எஸ்எஸ் அஜந்தாவில் மிக முக்கியமானது .. குறிப்பாக முஸ்லீம்களின் ஒற்றுமையை சிதைப்பது தமிழகத்தில் பெரியாரை மீறிய எதுவும் நடக்காமல் போவது கண்டு அவரை தொடர்ந்து சிறுமைபடுத்த முயற்சிப்பது .. முதலாவதில் பி.ஜே ஒரு பகுதிவரை வெற்றிக்கண்டிருக்கிறார்.. சொந்த குடும்பத்திலேயே பிரிவினையை.. நேர்வழியென்ற பெயரில் பகை உணர்வை வளர்த்து விட்டிருக்கிறார் ..அண்ணன் தம்பியும் அப்பனும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி .. உறவுகள் சிதைந்து ஒற்றுமையின்று இஸ்லாமிய குடும்பங்களை காணலாம் அடுத்ததாக பெரியாரிடத்திற்கு வந்திருக்கிறார்.. பாவம் பெரியாரை சரியாக கணிக்காத தெரியாத .. அறிந்துக்கொள்ளாமல் உளறியிருக்கிறார்.. .. உலகிலேயே தான் சொல்வதை சரியென்றுதான் அறிஞர்கள் ஞானிகள் மத பெரியவர்கள் மார்க்கம் பேசியவர்கள் எல்லோரும் சொன்னார்கள் .. பெரியார் மட்டும்தான் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றார்.. பெரியார் சேர்த்ததெல்லாம் அவருக்கு பிறகு ஆசிரியர் தலைமையில் நிர்வகிக்கபடுகிறது .. அது அவர்களின் உடமையல்ல.. நிர்வாகிக்க ஊதியம் தவிர வேறேதும் பெறுவதில்லை.. காசுவாங்காமல் மதபிரச்சாரம் செய்வதாக சொல்லும் பி.ஜே ..அடுத்தவேளை சோத்துக்கில்லாதவர் இன்று கோடீஸ்வரனாக எப்படி ஆனாரென கேட்கமாட்டோம் .. .. முதலில் சுற்றி வளைத்து பேசாமல் சரி தவறு என பட்டென்று சொல்ல பழகுங்கள்.. சுற்றிவளைத்து பேசுகிறவன் .. உண்மையோடு பொய்யை கலக்கிறவன் அல்லது தான் சொல்லவந்ததை நியாயபடுத்தி ஏற்க செய்யும் மூளைச்சலவை செய்கிறவன்.. .. பி.ஜே தன் சொந்த சமூதாயத்திற்கு கேடுவிளைவித்த நஞ்சு.. .. Aalanci Spm

Friday, March 9, 2018

கடவுள் ...

கடவுள் இல்லையென்கிற வீரமணியை கைது செய்ய வேண்டும்.. கே.டி.ராகவன்.. இல்லையென்கிறவரை அல்ல இருக்கிறாரென்கிறவரை .. அதை நிரூபிக்க முடியாமல் அதை வைத்து பிழைப்பு நடத்துகிறவனை.. கடவுள் பெயரை சொல்லி பார்ப்பு வேலை செய்கிறவனை ..கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுகிறவனை.. கடவுளின் அவதாரமென்கிறவனை.. அல்லது இது தான் இவர் தான் கடவுள் அவதாரமென கதை கட்டி காலந்தள்ளுகிறவனை.. கடைசியில் நான் தான் கடவுள் என்கிறவனை தான் கைது செய்யவேண்டும்.. .. இல்லாத ஒன்றை வைத்து இருப்பதாக சொல்லி அதற்கு யாரோ ஒரு மாடலை வைத்து வைரந்து வடிவம் தந்து அதை கடவுளென சொல்லி அந்த கடவுளை பார்த்து பார்த்து வடித்தவன் கூட அருகில் சென்று அர்ச்சனை செய்யவிடாமல் தாங்கள் மட்டுமே,செல்லமுடியுமென .. நீங்கள் தொட்டால் கடவுள் தீட்டாகி விடுவாரென கதைகட்டி காலம் காலமாய் கடவுள் காட்டி பிச்சை யெடுத்து தின்போரை அல்லவா கேள்வி கேட்டிருக்கவேண்டும்.. உலகில் எத்தனை கடவுள் எங்கிருந்து வந்தது யாரை கண்டெல்லாம் நமக்கு பயம் வந்ததோ அவனை/அதை கடவுளாக்கி வழிபட தொடங்கியது பின்னால் அதையே பிடித்துக்கொண்டு கொண்டாட .. அதை தூரத்தில் வைத்து பூஜை செய்ய ஒரு இடைதரகனை கொண்டுவந்ததும்.. அவன் தன்னை ..நம்மிலும் உயர்ந்தவனாய் காட்டிக்கொண்டதும் கடைசியில் நாமே அவனை சாமி என்றழைத்ததும்.. கடைசியில் கொண்டாடியவின் தெருவில் நிற்க.. இடையில் வந்தவன் நம்மை அடிமைபடுத்தியதுதான் கடவுளால் நமக்கு கிடைத்தது.. .. கடவுள் யார் நல்லது செய்பவர் ..பிறகேன் நம்மை தீமைகள் சூழ்ந்தன .. எதுவும் இயல்பானது இயற்கையின் ஏற்றம் இறக்கம் போல இருவகை செயல்பாடுகள் நன்மையும் தீமையும்.. நல்லதும் கெட்டதும் மாறி மாறிவரும் இருசூழல்கள் அது நம்மை வலிமைபடுத்த உதவும் அவ்வளவுதான்.. எதுவும் நாமாக தேடிக்கொள்ளுதலும்.. நம் செயல்பாட்டின் தவறுமே நம்மை திருப்பி தாக்கும்.. எல்லாமே நல்லவைகளாக இருந்துவிட்டால் தீமைகள் எதுவென நம் பின் வரும் தலைமுறைக்கு எப்படி படிப்பினையை தந்துவிட்டு போவது.. இரு பக்க நிலைதானே தவிர இதில் இறைவனென்றோ ..இல்லை புனிதனமென்றோ ஏதுமில்லை.. இயற்கை தரும் மாற்றம் அதை மீறும்போது வரும் சங்கடம் .. அந்த சங்கடம் வரும்போது வரும் பயம் .. அந்த பயம் தரும் பீதி அதற்கு நிவாரணம் தரும் என்ற தன்னம்பிம்பிக்கையின்மை.. கடவுள் பக்தி பலி .. சடங்கு சம்பிரதாயமென நம்மை சிந்தித்து தெளிவு பெற விடாமல் .. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி.. கடவுள் மதம் பிரிவினை ..என் கடவுள் பெரியது ..என காழ்ப்புணர்ச்சியை தந்து நம்மை பிரித்து கலகமூட்டி நம்மை எப்போதும் கலவரத்தோடே வைத்திருப்பதை தவிர.. கடவுளின் பெயரின் சொல்லி பிழைப்போரின் வேலை வேறெதுமில்லை.. கடவுளால் மதங்கள் தானே தோன்றியதே தவிர மனிதம் வளரவில்லை.. .. கடவுள் மறுப்பாளர்களைப் பற்றி மனநல மருத்துவர்கள் சொல்வது இதுதான்.. அவர்கள் சிறந்த மனிதநேயமுள்ளவர்கள்.. ஞானிகள் சூபிகள்.. அடுத்தவரின் வலி உணர்ந்தவர்கள்.. அன்பை அறத்தை மட்டுமே சொல்பவர்கள் எல்லோரையும் சமமென மதிப்பவர்கள் அடுத்தவரின் உரிமையை பறிக்காதவர்கள் இன்னும் சொல்லப்போனால் அடுத்தவர் உரிமைக்காக போராடுபவர்கள்.. ‍.. இப்போது சொல்லுங்கள் யாரை கைது செய்யவேண்டும் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி பிழைக்கிற கூட்டத்தையா.. கடவுள் மறுப்பை முன்னெடுத்து.. எல்லோருக்கு சமமான அந்தஸ்தை உரிமை பெற்று தர வேண்டி போராடுகிற அனைவரும் சமமென மதித்து செயல்படுவோரையா.. .. கடவுளின் பெயரைச்சொல்லி ஏமாற்றுவதை விட வேறெதும் அயோக்கியத்தனம் உண்டா என்ன..? .. மதம் தவிர்ப்போம் மனிதம் வளர்ப்போம்.. எல்லா ஜீவனையும் நேசிப்போம்.. வாழ்வது ஒருமுறை அதை அறத்தோடு வாழ்ந்துவிட்டு போ.. அன்பை போதி.. அமைதியாய் வாழ்.. அமுதம் வேறேதும் இல்லை.. வாழும் வாழ்க்கை அழகானது அதில் அழுக்கை சேர்க்காதே.. உள தூய்மையே உன்னதம் தரும்.. .. Aalanci Spm

Thursday, March 8, 2018

பெரியார்

பெரியார் தமிழ் மொழியை சனியனே என பேசினார் என்னிடம் ஆதாரமிருக்கிறது... எச்சை.. சமஸ்கிருதம் கலந்து தமிழ் பேசிக்கொண்டிருந்த காலத்தில் ..அதுவும் பாப்பான்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் .. அவாள் பாஷையை .. தமிழென்று முன்னெடுத்த போது .. அதை எதிர்த்தார்.. தனித்தமிழில் பேசவேண்டுமென்பதற்காக ஏன் சமஸ்கிருதம் கலந்து பேசுகிறீர்கள் என்றார் அதை வளைத்தொடித்து பெரியாரை சிறுமைப்படுத்த எண்ணி ..மீண்டும் மீண்டும் கேவலபடுவதே எச்சைக்கு வேலையாகி போய்விட்டது .. .. தமிழ் எழுத்துக்களை சீர்த்திருத்தி அதை ஒழுங்குபடுத்தி இன்றைய கணணி காலத்திற்கும் பொருந்துகிற வகையில் தந்தவர் அதை ..முதன்முதலில் அச்சில் அங்கீகரித்தது இன்றைக்கும் தமிழனுக்கெதிராக செயல்படும் தினமலர்தான்.. காரணம் அப்போது எம்ஜிஆர் ஆட்சி நடந்தது அதை சட்டபூர்வமாக்கவேண்டுமென கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர் அதை ஏற்று சட்டபூர்வமாக மாற்றினார்.. தினதந்தி கூட சிலகாலத்திற்கு பிறகுதான் சீர்செய்யபட்ட தமிழை அச்சில் கொண்டுவந்தது.. உதாரணமாக "னை" என்ற எழுத்தை கொம்போடு ன சேர்த்தெழுவார்கள் ..அது கணணி பயன்பாட்டிற்கு மட்டுமல்ல அச்சக பயன்பாட்டிற்கும் நிறைய சிரமம் தந்தது .. எச்சை சொல்வதைப்போல .. தமிழை சனியனாக எண்ணியிருந்தால் தமிழின் மொழி வளர்ச்சிக்கு பெருந்துணையான சீர்த்திருத்தை பெரியார் செய்யவேண்டிய அவசியமென்ன .. தமிழை நீசபாஷை என்ற காஞ்சி சங்கராச்சாரியாரை .. எச்சை ஏன் எதிர்க்கவில்லை.. பெரியார் மீது கோபம் வருவதற்கு முன் காஞ்சி பெரியவா..மீதுதானே வந்திருக்கவேண்டும்.. இன்றைக்கு மகளிர்தினம்.. வேலைக்கு போகிற பெண்களை விபச்சாரிகளென்றும்..பெண்களுக்கு சொத்து கொடுத்தால் மதிக்காமல் நடந்துக்கொள்வார்களென்றும்.. தீட்டுவந்த பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டதென்ற .. எச்சை.. பீ திங்கும் சேகரின் மகான் காஞ்சி பெரியவா ..தெய்வத்தின் குரலில் சொன்னாரே..அப்போது அதை எச்சை வகையறாக்கள் ஏன் எதிர்க்கவில்லை.. .. உண்மையில் தமிழகத்தை ஒருவித பதட்டத்தோடு வைத்திருக்கவேண்டுமென்பதே அவர்களது நோக்கம் அதற்காக எவ்வளவு தரம்தாழ்ந்து பேசமுடியுமோ எந்தளவிற்கு வன்மத்தை தூண்டமுடியுமோ அந்தளவிற்கு செய்துக்கொண்டிருப்பார்கள்.. மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் எடுபடாமல் ஒவ்வொரு முறையும் பதிலடி சரியாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது.. அவர்களின் துள்ளல் அதிகமாக ..இங்கே இருக்கிற ஆட்சி அதிகாரம் .. அட்மினுக்கு கண்டனம் தெரிவிக்கிற அதுவும்.. காலம்கடந்து வாய்திறக்கிற முதல்வர்.. இந்த ஆட்டம் நீண்டநாள் நிலைக்காது.. விழிப்புணர்வோடு செயல்படுகிற ..எதையும் ஆய்ந்தறிந்து எதுவரை விடலாமென கூர்ந்து நோக்குகிற தமிழ்மக்கள் இந்த மண்ணை பகுந்தாய்ந்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறவிதமாக செம்மையாக்கியிருக்கிறார் பெரியார்.. கருத்துசுதந்திரத்திற்கு அதிமுக்கியத்துவம் தரவேண்டுமென்ற ஒற்றை விடயத்திற்காக இங்கே கண்டதையும் பேசிவிட்டு நடமாட முடிகிறது.. தமிழனுக்காக தமிழுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற .. எச்சை வகையறாக்கள் முதலில் எதிர்க்கவேண்டிய நீசபாஷை என சொன்ன லோக குருவிடமிருந்து.. தமிழ் இசைக்குயிலாய் மிளிர்ந்த சுப்புலெட்சுமி அம்மையாரை .. தமிழில் பாடவிடாமல் தடுத்த கும்பல் இன்று தமிழ் தமிழென புலம்புகிறது உண்மையில் .. தமிழர் நலனுக்கெதிராக ..ஏன் ஒட்டுமொத்த இடைசைதி பிற்படுத்தபட்டோருக்கெதிராக உயர்க்கல்வியில் OBC இடஒதுகீட்டை ரத்து செய்ததை கண்டித்து எச்சை மற்றும் பார்பனர்கள் ஏன் கண்டிக்கவில்லை.. எந்த உரிமைகள் ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு வேண்டுமென போராடினாரோ அந்த பெரியாரை தொடர்ந்து அவமதித்து வந்தால்.. அதையே காரணமாக்கி .. 97% மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக எடுத்து களைந்துவிடலாமென காய் நகர்த்துகிறார்கள் அதனால் பெரியாரை தொடர்ந்து தாக்கிவருகிறார்கள்.. மக்கள் விழித்துக்கொண்டு இவரை போன்ற நாதாரிகளை விரட்டி அடிக்கவேண்டும்.. நிச்சயம் விரட்டபடும் நாள் வரும். .. Aalanci Spm

Wednesday, March 7, 2018

பெரியாரெனும் பெருந்..தீ

பெரியார்.. இந்த மண்ணில் .. சாதீய ஒழிப்பை முன்னெடுத்து அதற்கு தடையாக இருக்கிற மதம் கடவுள்.. அதிகாரவர்க்கம் ...எல்லாவற்றையும் போட்டுடைத்தவர்... இந்த மண்ணில் பெண்களின் மீது திணிக்கபட்ட கொடுமைகளை அநீதிகளை களைய வேண்டி அவர்களும் ஆண்களைப்போல எல்லா உரிமைகளையும் பெறவேண்டுமென ..குறிப்பாக பெண்கள் கல்வி கற்று யாரையும் சாராது தன்னம்பிக்கையோடு நிற்கவேண்டுமென விருப்பியவர்.. அதற்காக போராடியவர் .. அவரே சொல்கிறார் உங்கள் ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்களுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலைபார்த்தாவது படிக்கவையுங்கள் என்றார் அந்தளவிற்கு ஆண்களைவிட பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்பதிலே கறாராக இருந்தார்.. அதனால் தான் இன்று பெரியாரின் சிலையை உடைப்பேனென சொன்னவுடன் அதிகளவில் பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள்.. .. அவர்தான் வருத்தம் தெரிவித்துவிட்டாரே என சப்பை கட்டுகிறார்கள்.. முதலில் அவர் தான் அதை செய்யவில்லை எனது அட்மின் செய்தாரென சொல்ல கூட நாடோட வேண்டியிருக்கிறது ..பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் மதிப்பிட்டு பாஜக களமிறங்க அவரின் பன்முகம் இப்போது அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.. பெண்ணடிமைக்கு எதிரான களமாடியவர்.. சாதி ஒழிப்பு.. சமூக விடுதலை சமூக நீதி...அனைவருக்கும் சமமான உரிமை.. விளிம்பு நிலை மக்களுக்காக.. பிற்படுத்தபட்டோரின் உரிமைகளை பாப்பான் சுரண்டுவதற்கு எதிராக..சுயமரியாதையோடு வாழ சொல்லி தந்ததென பல்வேறு முகங்கள்/களங்கள்..அவரின் தொலைநோக்கு காலங்கடந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது.. .. இப்போது கூட வருத்கம் தெரிவிக்கும் போது தேவரை துணைக்கழைத்து வருகிறார்.. அவருக்கே தெரியும் அவர் இனத்தில் துணைக்கு வர எவனும் இல்லையென்று உண்மையிலேயே அவருக்கு தேவர் மீது அக்கறை இருக்குமானால் உயர்க்கல்வியில் OBC க்கு வழங்கபட்ட 27% இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை போராடவில்லை.. அந்த OBC தானே தேவரினமும் வருகிறது.. எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது அவர் எடுக்கும் தற்காப்பு தானே தவிர வேறொன்றும் அக்கறையில்லை.. எப்போதெல்லாம் தங்களுக்கு ஆபத்து வருகிறதோ.. தங்கள் சித்தாந்ததிற்கு ஆபத்தோ அப்போதெல்லாம் அவர்கள் துணைக்கழைப்பது சாதீயம் தான் .. இப்போது வருத்தம் தெரிவித்தது கூட தெரியாமல் நடந்ததற்காக அல்ல.. மக்கள் வெகுண்டெழுந்ததும்.. குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டுமென்ற குரல் ஓங்க தொடங்கியதும் மடைமாற்று செய்ய தேர்ந்தெடுத்த வழி.. ஓடியொளிதல்.. .. இறுதியாக எந்த வடிவில் வந்தாலும் இங்கே பெரியாரின் தந்து விட்டு சென்ற நெருப்பு கனல்.. அணையாமல் தனத்துக்கொண்டே தான் இருக்கும்.. தீ.. பிடித்தெறிய தொடங்கினால் சாம்பல் கூட மிஞ்சாது.. பெரியாரின் பெருந்தீ..ஆம் தீ..தின்றுவிடும்.. .. Aalanci Spm

Tuesday, March 6, 2018

பேராசான் பெரியார் சிலை.. மீது கை வைத்தால்..

பெரியார் .. தனிநபரென்று நினைத்தாயோ மூடனே.. தொட்டு பார் தெரியும்... உன் இனமே இங்கிருந்து குடிபெயரவேண்டிவரும்.. எம் தயவில் வாழ்ந்துக்கொண்டே எம் இன பெருந்தலைவனை .. எங்கள் பேராசான் சிலையை.. இங்கிருந்து அகற்ற நினைத்தால்.. தேசிய நீரோட்டத்தில் புதிய பாதை வகுக்க நேரிடும் .. .. பாவம் பார்பனர்கள்.. இந்த எச்சை நாலு செக்யூரிட்டியோட வலம் வருகிறார்.. அவர்கள் தனியே நடமாட வேண்டுமல்லவா.. எதிர்வினை கடுமையானால் வடக்கு நோக்கி நகரவேண்டிவரும் என்பதை புரிந்து பார்பனர்களே இந்த எச்சையை கண்டிக்கவேண்டும்.. தொட்டுபார் என தளபதியே சொல்லிவிட்ட பிறகு.. இனி தொடுவானா.. ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் வெறும் சிலையல்ல.. அது எங்கள் சித்தாந்தம் திராவிட பெருந்தலைவனின் சிலை மீது சிறிய சிராய்ப்பு ஏற்பட்டால் கூட விளைவுகள் கடுமையாக இருக்கும் அதனால் பார்பனர்கள் எச்சையை வாயடக்க சொல்லுங்கள்.. .. உடைப்பவனை விட அதற்கு தூண்டுகிறவன் மிக பெரிய பயங்கரவாதி அரசு உடனடியாக தேசிய பாதுகாப்பிலோ குண்டர் சட்டத்திலோ .. சமூகத்தில் பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டதால் உள்ளே தள்ளவேண்டும்... அரசு அமைதியாக இருந்தால் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.. .. திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதாலேயே அதே பாணியில் தமிழகத்தில் நடத்தலாமென்று தப்புகணக்கு போட்டுவிட்டார்.. பாவம் அடித்த அடி பலமாக விழ வழக்கம் போல பதிவை நீக்கி ஒளிந்துக்கொண்டார். லெனினுக்கும் இந்தியாவிற்கு என்ன சம்பந்தமென கேட்கும் ராசா .. ஆரியர்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்குவாரா.. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எச்சை பாப்பானின் துள்ளல் அதிகமாகியிருக்கிறது.. சுளுக்கெடுத்தாலே சரியாகும்.. கௌளத்தூர் மணி சொன்னதைப்போல .. பார்பனர்கள் நடமாட வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.. .. பெரியார் மீது செருப்பை வீசினார்கள் .. செருப்பிற்கொரு சிலை முளைக்குமென்றான் புரட்சிகவிஞன்.. செருப்பு வீசிய இடத்திலேயே பெரியாருக்கு சிலை வைத்தார் கலைஞர்.. எச்சையின் செயலால்.. ஆயிரம் கணக்கான சிலைகள் தோன்றும்.. பெரியார் மண்.. விதைக்க விதைக்க முளைப்பதெல்லாம் அறிவுடையதாய் இருக்கும்.. பாப்பானுக்கு முன் புத்தியே கிடையாதென்றார் பெரியார்.. பெரியார் தனி மனிதரல்ல ..எங்கள் கோட்பாடு.. .. மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை.. .. தொட்டு பார் தெரியும்.. எரியும் தீக்கனலென்று.. நெந்து போவாய்.. எரிந்து சாம்பலாவாய். .. எச்சரிக்கை.. .. Aalanci Spm

Monday, March 5, 2018

எளிமை

திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மிக எளிமையாக வாழ்ந்தாரென சொல்லி அவரோடு காமராஜரையும் துணைக்கழைத்து .. காமராஜருக்கு பிறகு எளிமையானவரென புகழ்கிறார்கள் .. இருவருக்குமான வேறுபாடுகளை கணக்கில் கொள்வதில்லை .. காமராஜர் வாழ்ந்த காலமும் காமராஜருக்கு குடும்பமில்லை என்பதையும் மறந்து கடந்து போகிறார்கள்... .. முதலில் காமராஜரை பார்ப்போம்.. காமராஜருக்கென்று தனி திறமைகளோ.. அதாவது வேறேதாவது துறைகளில் ஆளுமையுடையவரோ அல்லது பொருள் ஈட்டும் திறமையோ அவருக்கு இருந்ததில்லை பொதுவாழ்வு வந்தபிறகு அதிலிருந்து வரும் வருவாயை தவிர வேறு வருவாய் இல்லை.. அதோடு அவருக்கு குடும்பமென்று மனைவி மக்கள் வழியே வருவாய் இருந்ததில்லை.. அதனாலேயே அவர் வாழ்வு மிக எளிமையாக இருந்தது.. ஆனால் மாணிக் சர்க்காரின் வாழ்வின் பொருளாதாரம் அவரது மனைவியின் சம்பாத்தியமும் சேர்ந்தது கட்சி அவருக்கு வழங்கும் சம்பளத்தில் குடும்பம் நடத்தினார்.. .. முதலில் அரசியல் தலைவர்கள் தொழில்களில் ஈடுபட கூடாதென்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் இன்னும் பிற திறமைகள்.. எழுத்தாற்றல் தங்கள் குடும்பத்தினரின் வருவாய்.. தங்களின் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயெல்லாம் சரியான முறையில் வருமானவரி செலுத்தி நேர்மையான முறையில் சேர்க்க யாரும் தடுக்கவில்லை.. மாறாக முறைகேடாக சேர்த்தால் மட்டுமே தவறே தவிர.. யாரையும் பொருள் ஈட்டவேண்டாமென யாரும் தடுக்கவில்லை.. எளிமை என்பது எவ்வளவு பொருளீட்டினாலும் அமைதியாக... நிறைகுடத்தைப்போல ஆர்பாட்டாமில்லாமல் வாழ்வது.. எந்தவழியிலும் சம்பாதிக்க தடையில்லை ஆனால் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கு உட்பட்டதாக .. தவறாகவோ மோசடி செய்தோ .. அதிகாரத்தை பயன்படுத்தியோ இல்லாததாக இருத்தல் வேன்டும்.. அவ்வளவுதான்.. .. இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் தந்த தொடர்புகளை பயன்படுத்தமாட்டேன் என்பது அறிவீனமே தவிர.. எளிமையல்ல.. e.mail இல்லை சமூகவலைத்தளங்களிலே கணக்கில்லை என்பதை எளிமையாக சொன்னால் அது நகைப்புக்குரியது.. சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகள்/கருத்துகள் சாமானிய மக்களின் பிரதிபலிப்புகள்.. அவனின் கோபம் குறை எதிர்பார்ப்பு எதிர்ப்பு எல்லாம் தெரிந்துக்கொள்ளாமலேயே இருப்பதென்பது.. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்பதைப்போல.. நாட்டுநடப்பை நமக்கு வேண்டியவர்கள் மூலமும் கட்சிகாரர்கள் அதிகாரிகள் வழியே தெரிந்து கொண்டால் போதுமென்பது சரியான அணுகுமுறையாகாது.. எதையும் ஏற்றுக்கொள்ளாத பழைமைவாதத்தைப்போல.. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் போனால் தோல்வியே மிஞ்சும் .. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் வாழ்வேன் என்பதும் செயல்படுவேன் என்பதும் எளிமையல்ல அறிந்துகொள்ளாமை அடக்கமல்ல அறிவின்மை.. .. அரசியலில் காமராஜர் மிக சிறந்த தலைவரைப்போல சித்தரிக்கிறார்கள்.. நல்லவர் என்பதில் உடன்பாடுண்டு.. சிறந்த நிர்வாகியா என கேட்டால் நிறைய பேசவேண்டிவரும்.. விவசாயிகள் வீடுதேடி வந்து நெல்மூட்டைகளை அரசே அள்ளிக்கொண்டுபோன கொடுமையெல்லாம்.. எம்மை போன்ற விவசாயிகளிடத்தில் கேட்டால் தெரியும் வீட்டுக்கு இவ்வளவுதான் வைத்துக்கொள்ளவேண்டுமென.. சொல்லி விதை மூட்டையை கூட தூக்கி கொண்டு போனா்கள் அவ்வளவு அரிசி பஞ்சம் வந்தது .. இந்திய அரசியலில் மிக சிறந்த ஆட்சியை .. தொலைநோக்கோடு கூடிய திட்டங்களை.. காலம் கடந்தும் பேசபட கூடிய வகையில் செயல்படுத்தி காட்டி .. இந்தியாவிற்கே வழிகாட்டியது திராவிட ஆட்சிதான்.. கலைஞரின் ஆட்சிதான்.. இதுவரை திமுக மீது சொல்லபட்ட குற்றசாட்டுகளில் ஒன்றை கூட நிரூபிக்க முடியாமல் காலம் கடந்து தவறை உணர்கிறநிலையில் தான் உள்ளோம்.. .. #கையேறுநிலை.. .. Aalanci Spm

Sunday, March 4, 2018

ரௌத்திரம் பழகுவோம்

நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரைக்கான வாய்ப்பு வரும்போது எத்தனைக் கூச்சல்கள் இடை மறித்தாலும் ‘தம்’ கட்டி, பேச நினைத்ததை முடித்துவிட்டுத்தான் உட்காரும் மோடியை பார்த்திருக்கிறோம். அதேசமயம் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் புகார்களுக்கும் பதில் சொல்லும் சவாலை இதுவரை ஏற்றுக் கொண்டவர் இல்லை மோடி.. காவிரி மேலாண்மை வாரியம் : மவுனமே மோடியின் ஆயுதம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.. .. விவாதங்களுக்கு பயந்த ஒரு பிரதமர் மோடி மட்டும் தான் .. பொதுமேடைகளில் 56 இன்ச் மார்பை விரித்து .. உரத்தகுரலில் கதைக்கிறவர் நாடாளுமன்றத்தில் விவாதித்தால் ஓடி ஒளிந்துக்கொளிகிறாரே ஏன்.. நாடாளுமன்றத்தில் கூட யாரையும் எதிர்கேள்வி கேட்கவிடாமல் பேசி முடித்துவிட்டு அமர்ந்ததைதான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டு சொல்கிறது.. மேடைபேச்சிற்கு நாம் என்ன பேசவேண்டுமென தயாரித்து வந்துவிடலாம். ஆனால் விவாதங்களில் எதிர்கேள்வி கேட்பானே குறிக்கிட்டு தவறை சுட்டிகாட்டுவானே .. இதெல்லாம் கைதட்டி ரசிக்கும் மேடை பார்வையாளனான மக்களிடம் இருக்காது .. அப்படி அவன் கேள்வி கேட்டால் கலாட்டா செய்ததாக அவன் மீது குண்டர் சட்டமே பாயும்.. .. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் மௌனம் வாக்கு அரசியலை மையமாக கொண்டது ஏப்ரல் மே மாதங்களில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தடுத்திட நினைக்கிறார்.. உச்சநீதிமன்ற தீர்ப்பையெல்லாம் மாநில அரசு மீறினால் அதன் மீது நீதிமன்ற அவமதிப்போடு மட்டுமல்லாமல் .. அரசை கலைக்ககூட அதிகாரம் இருக்கிறது அதாவது செயலிழக்க செய்து .. அதிகாரிகளை கொண்டு தீர்ப்பை நடைமுறை படுத்தலாம்.. ஆனால் இங்கே உச்சநீதி மன்றத்தின் மௌனத்தில் கள்ளம் உள்ளது.. இப்போது அறிவித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கபடுவார்களென சிலர் பதிவிடுகிறார்கள். தேர்தல் முடிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் போராட்டங்கள் நடக்கதான் செய்யும் .. அதை சட்டத்தை கொண்டு அடக்கலாம்.. தமிழகத்தில் பந்த் General strike பொது வேலை நிறுத்தம் செய்தால் சட்டப்படி குற்றமென உயர்நீதிமன்றம் சொல்லிம் போது கர்நாடகாவில் கேரளாவில் நடக்கும் போது இந்த வார்த்தை பிரயோகங்களை நீதிமன்றங்கள் பயன்படுத்துவதில்லை.. எதிர்க்கட்சி தலைவர் சொன்னதைப்போல ஒட்டுமொத்த எம்பிக்களும் பதவி விலகலாம்.. ஒட்டுமொத்தமாக தமிழகமே ஸ்தம்பிக்க உறைந்துப்போக Paralyzed செய்யலாம்.. இப்போதைய நிலையில் யாரும் எந்த கட்சியும் பாஜகவை தவிர்த்து அதை எதிர்க்க முடியாது .. பாஜகவை தனிமைப்படுத்த இது உதவும் .. மோடியை இனியும் நம்புவதென்பது தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது.. அதிமுக அரசும் மோடியை பகைத்து கொள்ள மனமில்லாமல் தான் .. சந்திக்க மறுத்ததை கூட .. மறுக்கவில்லை துறை அமைச்சரை பார்க்க சொன்னார் என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.. ஏற்கனவே முடியாதென்வரிடமே பேச சொல்லும் திமிர் .. இந்த அடிமைகளால் எதுவும் செய்துவிட முடியாதென்கிற நிலையை உணர்ந்திருக்கிறார்கள்.. பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சி கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் அது இந்தியளவில் பேசபடும்.. .. உச்சநீதிமன்றம் நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை யாரும் உரிமை கோர முடியாதென்ற பிறகு கர்நாடகவையோ தமிழகத்தையோ கேரளாவையோ பாண்டியையோ கேட்க வேண்டியதில்லை மத்திய அரசே நியமிக்கவேண்டும் அது சட்டபூர்வமாக அட்டவணையில் வரவேண்டும் அப்போதுதான் மீதமுள்ள காவிரி படுகையை.. நிலங்களை வயல்களை காப்பாற்ற முடியும்... இனியும் அமைதி காப்பதென்பது .. டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு செய்யும் அநீதி விரைந்து கொஞ்சம் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையிலெடுப்போம்.. ரௌத்திரம் பழகுவோம்.. .. அரசியல் செய்வோம்.. .. Aalanci Spm

Saturday, March 3, 2018

திரிபுரா சொல்லும் சேதி

திரிபுரா சொல்லும் சேதி.. இனியும் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள் என்றா.. ஒரு உறுப்பினர் கூட இல்லாத சிறு மாநிலத்தில் .. ஒரேயடியாக அதிகாரத்தில் எத்தியது எப்படி.. மிக சாதூர்யமாக பிரகாஷ்காரத்தை .. ம.கம்யூனிஸ்ட் தலைமைக்கு அனுப்பிய போதே.. இன்னொரு கோர்பசேவ் என அப்போதே சில பழம்பெரும் பொதுவுடைவாதிகள் எச்சரித்தார்கள். நவீன படுத்தபடுத்தபட்ட தங்கள் சித்தாந்தம தோல்வியாக இவர்களே மிக கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.. மதசார்பின்மையை கட்டிகாக்க இவர்கள் தவறியதும்.. காங்கிரஸ் எதிர்ப்பை மட்டுமே முன்னெடுத்து .. அது பாசிசத்திற்கு வழி வகுக்கும் என அரசியல் பாலபாடம் படிப்பவர் கூட அறிந்திருக்கும் போது.. விவேகமற்று எதிர்ப்பென்ற பெயரில் பாஜகவை வளர்க்க தங்கள் கட்சியை பலிக்கொடுக்கிறார்கள்.. .. வங்கத்தில் என்ன நடந்தது.. காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி காய் நகர்த்த மம்தா காங்கிரஸை விட்டு வெளியேறி தனிகட்சி கண்டதும் எல்வாம் இலகுவாகுமென நினைத்தார்கள்..ஆனால் மம்தா தன் நிலைபாட்டை உறுதி செய்து மக்களின் தலைவராக வலம் வந்தார்.. இப்போது கம்யூனிஸ்ட் மூன்றாமிடத்திற்கு தள்ளபடுகிற சூழல்.. இப்போது திரிபுரா.. .. திரிபுராவில் நிறைய உள்குத்தும் .. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் கம்யூனிஸ்ட்களிடம் பேரம் பேசபட்டும் .. அதோடு வாக்கு இயந்திர செயல்பாடும் கச்சிதமாக வெற்றி பெற உதவியிருக்கிறது.. வழக்கம் போல் பொலிட்பீரோ விவாதிக்குமென பருப்புவடையையும் மசாலா டீ யையும் குடித்துவிட்டு வழவழ அறிக்கையொன்றை தருவார்கள்.. மிச்சமிருக்கும் கேரளாவையும் தாரை வார்த்துவிட்டு கம்யூனிஸத்திற்கு இறுதி சடங்கை செய்யலாம் .. பெரியார் மிக சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்.. கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே பிராமணர்கள் கையில் தான் இருக்கிறது அவர்களை மீறி எதுவும் நடக்காது என்றார்.. இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பெரியாரின் பார்வை எவ்வளவு சரியென்று புரியும்.. கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து பார்பனர்கள் இருப்பதும் தொடர்ந்து பொலீட் பீரோ வின் முடிவுகள் பாஜகவிற்கு பலம் சேர்ப்பதும் கூர்ந்து கவனிக்கவேண்டிய விடயம்..சட்டென்று ஒருநாளில் நிகழ்ந்துவிடவில்லை சில பத்தாண்டுகாலமாய் மெல்ல மெல்ல பாசிம் வளர ஒருவகையில் கம்யூனிஸ்ட்களே காரணமாகி இருக்கிறார்கள்.. காங்கிரஸை வீழ்த்தவேண்டுமென்று சொல்லி சொல்லியே அறிந்தே பாஜகவை வளர்த்து வந்திருக்கிறார்கள்.. காலில் தரையில் இல்லையென்பதை உணராமலேயே.. கம்பு சுத்துகிறார்கள்.. இனி மிச்சமிருப்பது கேரளம் தான் அதையும் காவு கொடுத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை முடிந்துவிடும்.. .. பாசிசத்தை வளர்தெடுத்ததில் பெரும்பங்கு பொதுவுடைமை போர்வையில் ஒளிந்திருக்கும் பார்பனர்களே காரணம்.... // பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.. என்றான் வள்ளுவன்.. கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை .. நாட்டின் நன்மையை நாடாது தீமைக்கு துணை போவது அறிவுடையோர் செயல் அல்ல அறிக பொதுவுடைமைகளே.. .. கடைசியாக .. திமுகவினருக்கு.. மிக சரியாக திட்டமிடாமல் எப்போதும் போல பழைமை பேசிக்கொண்டு திரிந்தோமேயானால்.. கட்சியை செப்பனிடாமல் கயவர்களை இனம் காணாமல் உள்முரண்பாடுகளை களையாமல் காலம் தருமென நம்பி வீற்றிருந்தால் தமிழகத்திலும் அச்சம் தரும் செய்தியை நாளை காணவேண்டிவரும்.. திமுக கடைசி நம்பிக்கையாக இருப்பதை .. எந்த விலைகொடுத்தும் எந்த அளவிற்கு இறங்கியும் பாஜக களமாற்றும்.. கவனம்.. இங்கே விழித்தெழும் நேரம் வந்துவிட்டதென்பதை நமக்கு உணர்த்துவதே திரிபுரா சொல்லும் சேதி.. .. Aalanci Spm

Friday, March 2, 2018

சர்வாதிகாரம்.. தளபதிக்கு வழங்கவேண்டும்

“கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை சர்வாதிகாரமாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின் .. இது சரியா என வினவும் போது பட்டென்று ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில்.. அதிக அதிகாரம் கொண்ட தலைவருக்கு இணையான செயல்தலைவர் பதவியில் இருந்தாலும் தலைவரின் கடந்தகால ஜனநாயக போக்கை அவர் கட்சியை நடத்திட்ட வழிமுறைகளை ..கொஞ்சம் சரி செய்யவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்பது அது ஒருவித சர்வாதிகார திமிரில் கொண்டுபோய் விடுமோ என்கிற அச்சம் ஏற்படதான் செய்யும்.. ஆனால் நீண்டநாட்களாக களையெடுக்காமல் போன பயிர் விளைந்தாலும் பயனற்று போகுமென்ற யதார்த்தம் நாம் உணரவேண்டும்.. .. திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே ஜனநாயகநெறிமுறைகளோடு பயனிக்க இயக்கம் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தால் ஒருவரின் கீழ் இயங்கும் கட்சியைப்போல தோன்றினாலும் எந்தவொரு முடிவும்.. செயற்குழு மற்றும் பொதுக்குழு அங்கீகாரம் பெற்றே தீரவேண்டும்.. அப்போதுதான் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்.. எனவேதான் தொடர்ந்து ஏற்படும் தொய்வுகளுக்கு காரணமாகிறது... .. தெளிவான புரிதலோடு கூடிய பாதையை வகுக்கும் போது சில முட்புதர்களை அகற்றி சமன் செய்திடவேண்டும் அதற்கான அதிகாரத்தை தான் திரு.ஸ்டாலின் கேட்கிறார் எதுவும் எல்லை மீறாதவரை.. ஜனநாயக வரம்புகளுக்குட்பட்ட அதிகார குவியலை.. அது இந்த இயக்கத்திற்கு சமூதாயத்திற்கு நல்லதை தருமென்கிற போது .. குறிப்பிட்ட வரையறைக்குள்ள சர்வாதிகாரம் சிறந்தது.. மக்களுக்கான இயக்கம் இது இந்த இனத்தின் ..இன மக்களின் மொழியின் அதன் மேம்பாட்டிற்காக.. இந்த சமூகத்தின் ஏற்றதாழ்விற்கெதிராக பின்னப்படும் வலைகளை அறுத்தெறிய.. தொடர்ந்து ஒரு இயக்கத்தின் சுணக்கம் அது இந்த சமுதாய மக்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய அநீதியை நம் இன பகையால்... இன துரோகிகளைக் கொண்டு சூழ்ச்சி வலைப் பின்னப்படும் காலக்கட்டத்தில் .. எழுச்சியோடு கூடிய புதியதொரு தாக்குதலுக்கு இயக்கத்தை தயார் செய்ய... நான்காம் தலைமுறையின் நவீனபடுத்தபட்ட செயல்திட்டங்களுக்கேற்ப .. செயல்படும் அதிகாரத்தை தளபதி அவர்களுக்கு வழங்க வேண்டும்.. அப்போதுதான்.. இன்னமும் வேகம் கூடிய விவேகத்தின் சரியான பாய்ச்சலில் இயக்கத்தை செலுத்தமுடியும்.. .. நாகரீகமாக செயல்படும் தளபதியாரின் மிக சாதூர்யமான செயல் திட்டங்கள் புதிய அரசியல் உக்தியை .. அது இந்த மக்களுக்கான உரிமைகளுக்காக .. பயன்படும் வகையில் இருத்தல் அவசியம்.. இதோ இப்போது கூட காவிரி பிரச்சனையில் முதல்வர் நம் தளபதியோடு ஆலோசிக்க முடிவெடுத்திருப்பது.. காலத்தின் கட்டாயம்.. திமுக மட்டுமே மிக சிறந்த வழிகாட்டுதலை இந்த தமிழக மக்களுக்கு காட்டமுடியுமென மக்கள் நம்ப தொடங்கியிருக்கும் தருணமிது.. இக்காலகட்டத்தின் அவசியம் கருதி தளபதி அவர்கள் விரைந்து செயல்பட .. எல்லைக்குட்பட்ட சர்வாதிகார செயல் நல்லது.. விளங்கும்படி சொல்லவேண்டுமெனில்.. பொம்மலாட்டமாக இல்லாமல் கட்டத்திற்குள் நின்றாடும் பாண்டியாட்டமாக விளங்கிட வேண்டும்.. .. வாழ்த்துக்களோடு .. அதிகார வரம்பை உயர்த்தி வழங்கி செயல்பட செய்வோம்.. நம்புங்கள் தளபதியை நல்லதே செய்வார்.. .. Aalanci Spm

Thursday, March 1, 2018

ஸ்ரீதேவி எனும் தேவதை

ஸ்ரீதேவி.. மரணம் நிறைய பேசபடுகிறது.. ஆரம்பத்தில் அய்யகோ என்றவர்கள் அவர் இரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது அறிந்து நிறைய பொங்கிவிட்டார்கள்.. அவரது உடலுக்கு தேசியகொடியா என கேள்வியில் முடிந்தது ஸ்ரீதேவியெனும் கலைஞியின் பயணம்.. .. முதலில் ஒரு தனிமனுஷியின்.. வாழ்வில் நடந்தேறிய விடயங்களை நாம் கேள்வி கேட்க முடியாது அவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் நம்மை சமூகத்தை பாதிக்காதவரையில் நாம் யார் அவரின் சொந்த விடயங்களைப் பற்றி பேச கருத்திட .. ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு சாதாரண கிராம பின்னணியில் பிறந்து .. பார்பனர்கள் ஆதிக்க நிறைந்த சினிமாலில் நுழைந்து தன் மழலை மொழியில் நம்மை கட்டி போட்டு .. தனித்துவத்தோடு நிலைநின்று .. கன்னியாய் அறிமுகமாகிய போது கவர்ந்திழுக்கும் அழகும் அதோடு சிறந்த நடிப்பு திறனும் ..அன்றைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியது.. ஸ்ரீதேவி என்ற நடிகையின் உழைப்பும் திறமையும் மட்டுமே சில நடிகர்களை சூப்பர் அந்தஸ்திற்கு உயர்த்தியதென்றால் அது மிகையில்லை.. .. ஒரு பெண் ..சாதாரண குடும்பத்திலிருந்து மிகப்பெரிய சினிமா தொடர்பில்லாத சூழலில் திரை உலகில் நுழைந்து அசாத்திய திறமையால் வென்ற கதை.. நிறைய வெற்றி படங்களுக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியென.. முக்கிய காரணிய திகழ்ந்தவர்.. கதாநாயனுக்கு இணையாக கட்அவுட் வைக்கப்பட்டதெல்லாம் ஸ்ரீதேவிக்குதான்.. அவரின் திறமையை சரியாக அங்கீகரிக்காத அரசு.. அவரோடு இணைந்து நடித்தவர்களை உயர்த்திப்பிடித்ததெல்லாம் நாடறிந்த கதை.. ஸ்ரீதேவியின் இந்தி நுழைவு அதுவரை தென்னகத்திலிருந்து சென்ற சில நடிகைகளைப்போல அல்லாமல் மிகப்பெரிய திருப்பத்தை தாக்கத்தை ஏற்படுத்தியது.. வசூலில் புதிய உச்சத்தை தொட்டதெல்லாம் அப்போது பேசபட்டது.. .. நம்மை மகிழ்வித்த கலைஞர்.. அசாதாரண சூழலில் இருந்து உச்சத்தை தொட்ட பெண்.. அழகும் கவர்ச்சியும் மட்டுமே உயரத்திற்கு கொண்டுபோகாது மாறாக அசாத்திய திறமை மிக முக்கியம்.. அந்த திறமையாளருக்கு அரசு செய்கிற மரியாதை.. சில அரசியல் தலைவர்களை போல ..பொய்பேசி திரியவில்லை மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை நியாயபடுத்தவில்லை.. எத்தனையோ தலைவர்கள் மது அருந்திவிட்டு.. கவர்னர் மாளிகையிலேயே கூத்தடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் அரசு மரியாதை செய்திருக்கிறது.. ஆனால் ஸ்ரீதேவிக்கு செய்வதை மட்டும் நாம் விமர்சிப்போம்.. .. காலம் கடந்தும் சினிமா உலகம் பேசும் பெண்மணி ஸ்ரீதேவி.. .. Aalanci Spm