Thursday, November 30, 2017
யாருக்கு வாக்களிக்க கூடாது..
யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை விட யாருக்கெல்லாம் வாக்களிக்க கூடாதென்பது உணர்ந்து செயல்பட்டால் தமிழகம் இனியேனும் மிளிரும்..
சிறிது நேரம் என் கறுப்புசட்டையை கழட்டிவைத்துவிட்டு பேசுகிறேன்.. ஒரு இடைத்தேர்தல் இதற்கேன் இத்தனை சிங்காரம் என கேட்ககூடும்.. சில உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும் சில கெடுதிகள் நம்மை நோக்கி வர தொடங்கியிருக்கிற காலகட்டமிது மிதமான வேகத்தில் வருகிற அந்த ஆபத்து சிறிய வெற்றி அதன் வேகத்தை கூட்டி புயலைப்போல புரட்டிவிட்டு போய்விடும்..
..
ஆர்.கே.நகர் தமிழகம் மௌனமாய் கவனிக்கிற தேர்தல் ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஏற்கனவே நின்ற கட்சிகள் தவிர்த்து சில பின்மாறியும் சில திமுகவை ஆதரித்தும் அறிவித்துவிட்டன.. திமுக.. அதிமுக.. தினகரன் அணி.. என களம் தெளிய தொடங்கியிருகிகிறது நாம்தமிழரையோ பாஜகவையோ நாம் பொருட்படுத்த தேவையில்லை ஆனால் பாஜகவின் பொருட்கூடிய பார்வையை புரிந்துக்கொள்ள வேண்டும் ..
..
ஒரு தொகுதிக்கு ஆள் தேடுகிற அவலம் இவர்கள் தமிழகத்தை வழிநடத்த நேர்மையான வழியில் தேர்தலை சந்தித்து ...இதெல்லாம் நடக்காதென்பதை அவர்கள் அறிவார்கள்.. மறைமுகமாக அதிமுக வெற்றி அவர்களுக்கு உதவுமென அறிவார்கள்.. இந்த மடையர்கள் கையில் ஆட்சி இருக்கும் வரைதான் தாங்கள் நினைத்த காரியம் நடக்குமென அறிவார்கள்.. ஐம்பதாண்டுகளாக வதம் செய்து ஆட்சி அதிகாரத்தில் ஓரம்கட்டபட்டவர்கள் .. சிலமாதங்களுக்குள்ளேயே .. தலைமைசெயலர் பதவி முதல் எல்லா அதிகார கேந்திரங்களிலும் (மையங்களிலும்) முன்னெப்போதுமில்லாத அளவு நிறைந்திருக்கிறார்கள் அவர்களின் ஆட்டத்தை நிறுத்த இந்த இடைத்தேர்தல் உதவும் .. மதுசூதனன்
25 ஆண்டுகளாக ஜெயலலிதாவால் தேர்தல் நிற்க வாய்ப்பு மறுக்கபட்டவர்.. சந்திரலேகா ஆசிட் வழக்கில் அவரே குற்றம் சாட்டி சிபிஐ விசாரித்ததும் .. அவரை நகரவிடாமல் அருகிலேயே வைத்திருந்தார் .. ஏதேனும் உண்மையை உளறிவிடுவாரென அஞ்சி அருகில் வைத்திருந்தார்
அவரை அதிமுக நிறுத்தியிருக்கிறது அவரின் வெற்றியால் ஏதேனும் மாற்றம் வருமா என்றால் மக்களுக்கு ஏதேனும் பலன் வருமா என்றால் நிச்சயமாக இல்லை பாஜகவிற்கு இன்னும் வளைந்த முதுகன் கிடைப்பான் அவ்வளவுதான்.. தினகரனோ கட்சியை கைப்பற்ற பலமுனை போராட்டத்தில் பிரதானமாக இந்த தேர்தலை நம்புகிறார் ..அவர் பாசிசத்திற்கு எதிரானவரென்று கூறிவிட முடியாது..
..
இந்த அடிமைகளால் தமிழர்களின் கௌரவம் ..மரியாதை எல்லாம் கேலிக்குரியாக நிற்கிறது எந்தவொரு முடிவையும் எடுக்கும் திராணியற்றவர்களாக மத்தியரசு சொல்கிறபடி ஆடுகிற .. பொம்மலாட்டத்தை நம்முன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.. பின்னிருந்தும் இயக்கும் சக்திகளின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட இது ஒரு தொடக்கமாக இருக்கவேண்டும் .. இல்லையெனில் தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கபடும் .. அண்ணாவும் கலைஞரும் அரும்பாடுபட்டு தமிழனின் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஒவ்வொன்றாய் சிதைக்கபடும்.. இனியேனும் விழித்துக்கொள்ள மறுத்தால் பெரும் அழிவை தேடி போனதை போல ஆகிவிடும்..
..
இன்றைய காலகட்டத்தில் வெற்றி எளிதாக கிடைக்குமென அயர்ந்தால் பிறகு பெரிய விலை தரவேண்டிவரும்..
எச்சரிக்கை....
..
Aalanci Spm
மாட்டரசியல்
மாட்டிறைச்சிக்கு விதிக்கபட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..
மாட்டை வைத்து பாஜக செய்த அரசியல் அயோக்கியத்தனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல வியாபாரிகள் மாட்டை அறுக்கதான் கொண்டு செல்லவதாக சொல்லி அடித்தே கொன்றதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது.. வெகுமக்களின் உணவை சிலரின் கொள்கைக்காக தடுத்தது தவறென்று உணர தேர்தல் தேவைபடுகிறது.. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு .. நீதிமன்றங்களில் இவர்களது ஆதிக்கம் அதிகம் ஆனதும் ..சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கூட மறுத்தது ..
இந்திய அரசியலமைப்பு தந்த உரிமையை கூட மறுத்து கடவுள் மதம் சடங்கு நம்பிக்கையென்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை கொன்றது எந்த வகை நியாயம்.. செத்து விழுந்தவன் வெகு சாதாரணமானவன் செல்வாக்குள்ள சாதியிலோ அல்லது மதவெறி கும்பலிலோ இல்லை தினம் தினம் வருவாய் ஈட்டுபவன் .. விவசாயத்திற்கு மாட்டை வாங்கினால் கூட அறுப்பதற்கென்று சொல்லி ..மாடை அறுக்க கொண்டுசெல்கிறான் என்று விசமத்தை பரப்பி மனிதனை அறுத்த கொடூரம் .. விடுதலை இந்தியாவில் பாஜக ஆட்சியில் தான் நடந்தது..
..
ஆரம்பகாலங்களில் ஆரியர்களுக்கு மாடு பிரதான உணவாக இருந்தது
மாட்டிறைச்சியை பற்றி பார்பனர்களின் மாபெரும் ரிஷி #யக்ஞவல்கியார் .. "என்னை பொறுத்தவரையில் மாட்டிறைச்சி மிக மென்மையாக இருந்தால்தான் அதை சாப்பிடுவேன் என்கிறார்..
பார்பனர் மாட்டிறைச்சியை உண்பதை விட்டதற்கு காரணத்தை
பிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர் #காபிரியல்_டார்டே சொல்கிறார் ..
மேல்தட்டு வகுப்பினரின் பழக்கவழக்கங்களை கீழ்தட்டு மக்கள் பின்பற்றுவர் ஆனால் கீழ்தட்டு மக்களிடம் மாட்டிறைச்சி உண்பது வந்தவுடன் அவர்களை விட தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளவே உண்பதை விட்டார்கள் என்கிறார் ..அதனால் தான் மாட்டை உண்ணும் வழக்கத்தை பார்பனர்கள் கைவிட்டார்கள்..
..
Holy Cow in India என்ற புத்தகத்தை எழுதிய டி.என்.ஜா 2001 வெளியிட்டார் அதை இந்திய அரசு தடை செய்தது மீண்டும் 2002 ல் The Myth of the Holy Cow என்ற தலைப்பில் லண்டனில் இருந்து வெளியிட்டார் அதை எரித்து சாம்பலாக்க இந்திய அரசு முயன்றதாக டி.என்.ஜா.வே முன்னுரையில்
குற்றம் சாட்டினார் ..
அதில் மாட்டுக்கறியை உண்ணும் பழக்கம் பிராமணர்களிடத்தில் இருந்தது ஆனால் முஸ்லீம்கள் இந்தியாவிற்கு வந்தபிறகுதான் மாட்டிறைச்சி வந்ததை போல பேசி.. பசுவை புனிதமாக்க நினைக்கிறார்கள்.. ஆனால் பசுவை பலியிட்டு அந்த உணவை உண்ணும் பழக்கம் இருந்ததாக ரிக் வேதம் சொல்கிறது ...சாதாபாதா பிராமணா என்ற ஆரியர்களில் நூல் மாட்டிறைச்சி மிக சிறந்த உணவு என்கிறது..
..
அண்மையில் எடுக்கபட்ட சர்வே படி குஜராத் 49% பஞ்சாப் 50% உ.பி69% மே.வங்கம்95% ம.பி 61% ஒரிசா95% கேரளா 91% ஆந்திரா 95%தமிழ்நாடு 84%
பேர் அசைவ உணவை உண்கிறார்கள் அதாவது அவர்களின் பிரதான உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது மாமிச உணவில் மிக குறைந்த செலவு கூட மாட்டிறைச்சி தான்.. மக்களின் கோபம் எதிராக போய்விடுமோ என அஞ்சி திடீர் பல்டி அடிக்கிறார்கள்..
குஜராத் தேர்தல் பயத்தில் இன்றைக்கு இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்..
..
சி.இலட்சுமண அய்யர்
மெயில் இதழில் 20.11. 1966 ல் ஆரியர்களுக்கு கடிதம் என்ற பகுதியில் இவ்வாறு எழுதினார்..
நான் இந்து ..புலால் உண்ணாதவன் ஆனால் பசுவை கொல்வதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்
பழங்காலத்திலேயே மாட்டை உண்ணும் பழக்கம் இருந்தது இந்துக்களில் கூட மாமிசம் உண்பவர்கள் இருக்கிறார்கள் மற்ற மதக்காரர்களில் உரிமையில் தலையிடுவதை எப்படி ஏற்க முடியும்.என்கிறார்
..
ஆம் மற்றவர்கள் உரிமையில் எப்படி தலையிட முடியும்.. பிடிக்காவிட்டால் சாப்பிடாதே.. என் தட்டில் என்னயிருக்கிறதென்று பார்க்க யாரும் உரிமையில்லை.. எதை உண்ணவேண்டுமென நானே தீர்மானிப்பேன்.. அதை மக்கள் சொல்கிறார்கள் இப்போதுதான் புரிய தொடங்கியிருக்கிறது..
காலம் கடந்த ஞானோதயம்
..
#சூழ்ச்சிகள்_வெல்வதில்லை..
..
Aalanci Spm
Wednesday, November 29, 2017
கண்டவனெல்லாம் புத்தி சொல்லும் நிலைமை
சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்
பட்டிருக்காது எஸ்.வி.சேகர்....
..
எப்படி ₹2000 நோட்டில் சிப் இருக்கு சொல்லி அசிங்கபட்டியே அப்படியா.. சோ இருந்தால் உங்களுக்கெல்லாம் ராஜகுருவா இருந்திருப்பார் அவர் சொல்வதை கேட்டு அடங்கி போயிருப்பீர் .. இப்ப இருக்கிற குருமூர்த்தியெல்லாம் உமக்கு சரிபட்டுவரமாட்டா.. புரிகிறது உமது கோவம்..
தலைமைசெயலருக்கு நிகரான அதிகாரத்தை ராஜகோபலுக்கு வழங்கி கவர்னரின் சிறப்பு செயலராக நியமிக்கபட்டபோதே உமது அத்தாச்சியின் யோக்கியதை தெரிகிறது.. தகுதியில்லாமல் பெரிய பொறுப்பை சுமந்து குற்றவாளி படத்தை கையில் பிடித்து நின்றபோது ..எடுபடி வேலைக்குதான் லாயக்கென்று அப்போதே பேசபட்டதுதான்.. இருந்தும் இத்தனைகாலம் இருப்பது பெரியவிடயம்தான்.. அதிகாரபகிர்வு சோ வை நினைக்கவைத்திருக்கிறது ஜெயலலிதா பற்றி வேண்டாத விடயங்களை கசியவிட்டு அதன் பின்னில் அரசியல் செய்வதாக பாஜக மீது விமர்சனம் வருகிறது.. இதில் எந்தளவு உண்மையென தெரியவில்லை எனினும் சோ இருந்திருந்தால் வாய்மூடி பேசியிருப்பீர்..
சோ அல்ல ராஜாஜியை பார்த்துவந்தவர்கள் இன்றைய கேடுகெட்ட அரசு அமைய மிக முக்கியமான காரணர்களில் சோவும் ஒருவர்.. ராஜாஜிக்கு பிறகு வராதுவந்த மாமணி என்று உடல்நிலவுற்றிருந்த போதும் உங்களிடம் யாசித்தவர்தானே.. அதன் பலனைதான் தமிழகம் அனுபவிக்கிறது.. உங்களால் தமிழகமும் தமிழனும் தொடர்ந்து துன்பமடைகிறான்..
எனினும் தங்களின் எண்ணம் ஈடேறாது..
***************************************
கம்பராமாயணம் தந்த "சேக்கிழார்" பிறந்த பூமி தஞ்சை...எடப்பாடி பழநிச்சாமி
அண்ணாவிற்கு அதிகம் புத்தகம் படித்த முதல்வர் எடப்பாடி பழநிசாமியை எண்ணி வியக்கிறேன்..
ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு கூட தெரியும் விவரம் எடப்பாடிக்கு தெரியாமல் போனதே .. அதிகம் ஞானம் பெற்று முக்தி அடைந்திருப்பாரோ.. இவர் என்ன மாதிரி புத்தகங்களை படித்திருப்பார் என்கிற
நெருடல் வருகிறது..மேடை கிடைத்தால் எதையாவது பேசிவிட்டு போய்விடலாமென்ற அறிவுசூன்யங்களை எப்படி தயாரித்திருக்கிறார் ஜெயலலிதா .. இந்த வெல்லமண்டியை எப்படி எடப்பாடி மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.. தமிழகம் இதுவரை காணத அறிவிலித்தனங்கள் .. அடிமுட்டாள்கள் அமைச்சர்களாக வலம் வரும் கொடுமை ..ஒட்டுமொத்த கமிழகத்தையே தலைக்குனிவிற்கு ஆளாக்கிவைத்திருக்கிறார்களே..
என்ன இவ்வளவு பகை நம்மோடு ஜெயாவிற்கு(ஆரியத்திற்கு)..
மொத்த மடையர்களையும் சிந்திக்கவே விடாமல் வாய்மூடி வைத்திருந்து இதோ பாருங்கள் இதுதான் தமிழர்களின் லட்சணமென பறைசாற்றியிருக்கிறார்கள்.. இதனால்தான் நாங்கள் ஆளவேண்டுமென சொல்கிறோமென நம்மை பார்த்து நகைக்கிறார்கள்..
ஆம்..
பேரறிஞரும் முத்தமிழ்அறிஞரும் ஆட்சி செய்த தமிழகத்தை.. அரிதாரம் பூசி கலர் பவுடரில் கவர்ச்சியை வீசி கவிழ்த்தார்களே அன்று தொடங்கியதல்லவா இந்த ஈனம்.. இன்று வளர்ந்து நிற்கிறது.. காண சகிக்கவில்லை..
கண்டவனெல்லாம் நமக்கு கருத்து சொல்கிறான்
தமிழகம் அசிங்கபட்டிருக்காது என்று ..
என்ன செய்ய மொத்த மடையனையும் வீட்டுக்கு அனுப்புவரை இந்த இழிசொற்களை தாங்கிதான் ஆகவேண்டும்..
..
இப்போது மடைமை எனும் இருள் சூழ்ந்திருக்கிறது..
நிச்சயம் வெளுக்கும்.. அறிவெனும் கதிரவன் தன் கதிரொளியை பாய்ச்சுவான்.. மடைமையெனும் இருள் அகலும்.. அறிவு சுடர்விடும்..
..
#காத்திருப்போம்_கதிரவனுக்காக..
..
Aalanci Spm
Tuesday, November 28, 2017
செல்வி ஜெயலலிதா
#Character_assassination
..
செல்வி ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு அவரை Character assassination பண்ணுவது போல செய்திகள் வருவது வருந்தத்தக்கது
ஒரு பெண் தனது தாய் இவரென்கிறார் அது உண்மைதானா .. இல்லையா என்பதை சம்பந்தபட்டவர்களும் நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும் இதில் நாம் ஏன் நுழையவேண்டும் ஒருவரின் தனியுரிமைகளை அவரின் அந்தரங்கங்களை நாம் ஏன் அறிந்துக்கொள்ளவேண்டும் .. ஜெயலலிதா அரசியலோடு நாம் கடுமையாக நடந்துக்கொள்வோம் அவரை மிக கடுமையான சொற்களால் விமர்சனம் செய்வோம்.. அவர் தமிழ்நாட்டிற்கு செய்துவிட்டு போன கெடுதிகளை தொடர்ந்து தோலுரிப்போம்.. தமிழகம் கண்ட மிக கேடுகெட்ட அரசியல்வாதி இவரென வருங்கால தலைமுறைக்கு எடுத்து செல்வோம் ..அவரின் அரசியல் பயணம் நிறைய தடுமாற்றங்களை கொண்டது நிறைய ஏமாற்றங்களை தந்தது மக்களை மடையர்களாக்கிய அவரின் நரித்தனத்தை ..திட்டமிட்டு திருடி இரண்டுமுறை பதவிநீக்கம் செய்யபட்டதை, வழக்கின் விசாரணையை தான் நினைத்ததுப்போல் நடத்தி.. தீர்ப்பை
விலைகொடுத்து வாங்கியதை.. கிரிமனல் no1 என உச்சநீதிமன்றமே உரத்து கூறியதை.. சர்வாதிகாரியைப்போல் நடந்து ஜனநாயக அமைப்பையே கேலிகூத்தாக்கியதை .. நெஞ்செல்லாம் வஞ்சம் கொண்டு பகையோடு கடைசிவரை வாழ்ந்தது மறைந்ததை... அரசியல் நாகரீக பண்பை அடியோடு மாற்றி .. தான்தோன்றித்தனமாய் ..தன் பிறப்பு தனக்கு கைகொடுக்கும் யாராலும் ஏன் நீதிமன்றத்தாலே கூட எதுவும் செய்யமுடியாது .. மநு காக்குமென நம்பி ஆடாத ஆட்டமாடியதை கொஞ்சமும் தயங்காமல் விமர்சிப்போம்.. சகட்டுமேனிக்கு மற்றவர்களை வயதோதிகத்தை .. எள்ளிநகையாடிய கீழ்த்தரமான
தரகுறைவாக செயலை..ஜெயலலிதாவின் அறம் சாராத அரசியலை கடுமையாக விமர்சிப்போம் ..
..
ஆனால் அவர் செல்வியா திருமதியா அவருக்கு குழந்தை இருக்கிறதா இல்லையா .. யாருக்கு பிறந்ததென ..நாம் ஏன் சிந்திக்கவேண்டும்.. யாராரோ வருகிறார்கள் .. அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் அவரின் சொத்து சம்பந்தபட்டு உரிமை கொண்டாடலாம்.. அதனால் நமக்கென்ன வந்தது.. ஊடகங்கள் அவரின் உறவினர் என ஒருவரை பேட்டி காண்கிறது அது அசிங்கத்தின் உச்சம்..
அவர் பெண்குழந்தை பிறந்ததாக .. பெரியம்மா பிரசவம் பார்த்ததாக சொல்கிறார்.. ஏன் இதுவரை சொல்லவில்லை என நாம் எப்படி கேட்க கூடாதோ அதை போல மறைந்தவரை பற்றி பேசபடும் அவரின் தனிநபர் வாழ்க்கையை நாம் தெரிந்துக்கொள்வதில் தவறில்லை ஆனால் காதில் விழும் செய்திகளாக கேட்டு கடந்துபோக வேண்டுமே தவிர... அவரை இந்தவொரு விடயத்திற்காக தரம்தாழ்ந்து விமர்சிப்பதும் அவரை கேலி செய்வதும் அவரின் நடத்தையை பற்றி அவதூறு சொல்வதும் தவறு பெரும் தவறு..
..
ஜெயலலிதா என்ற அரசியல் வாதியின் பொதுவாழ்வைப்பற்றி விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர ..அவரின் தனிபட்ட அந்தரங்கங்களை குடும்பத்தை.. விமர்சிப்பதோ கருத்துகூறுவதோ கேடுக்கெட்டத்தனம்.. நாகரீகமற்ற செயல்..
பண்பட்ட அரசியலை கற்று தந்த திராவிட பேசுவோர் கூட விமர்சிப்பதும் நகைப்பதும் ஏற்புடையதாக இல்லை.
..
இங்கே யாருமில்லை உத்தமர்..
எல்லோரும் தனித்தனியே யோக்கியர்கள் தான்
#மற்றவர்_அறியாதவரை..
..
Aalanci Spm
Monday, November 27, 2017
திறமையல்ல..
அயோக்கியனின் திறமைகளை சிலாகிப்பதில்தான் உலகமகா அயோக்கியதனம் ஒளிந்திருக்கிறது...
தமிழ் மறவன்
..
யார் திறமையானவர் எது திறமை சாமார்த்தியமாக பதிலளிப்பதற்கு பெயர் திறமை அல்ல அது நழுவல்
விவேக் பற்றி கேட்டவுடன் திமிறி எழுந்தது அது தற்காப்பே தவிர திறமை அல்ல.. ஒரு கட்சியின் மிகப்பெரிய தனக்கு வழங்கபட்டதும் அதை திறமையோடு வழிநடத்த திறனற்று .. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து.. யாரை நம்பலாமென்று என்று கூட தெரிந்து வைத்திராமல் மொத்தமும் கை கழுவி போன பிறகு இருக்கிறவைகளை காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய சூழல் எதனால் வந்தது அதீத ஆசை.. ஆர்.கே நகரில் நிற்காமல் இருந்து திரை மறைவு அதிகாரத்தை செலுத்தியிருந்தால் கட்சி கையை விட்டு போயிருக்குமா.. ஆனாலும் பாண்டேவை மன்னிப்பு கேட்கவைத்ததை வெகுமக்கள் சிலாகித்து வரவேற்கிறார்கள்..
..
ஊடகவியலாளர்கள் தங்களை எல்லாம் அறிந்தவனென்ற மனமான்பையோடு நடந்துகொள்ளும் விதம் தொடர்ந்து வருகிறது ரபி பெர்னாட் தொடங்கி வைத்ததென நினைக்கிறேன்.. சிலர் சுதாங்கன் போன்றோர் எழுத்தில் காட்டிய விவேகத்தை நேர்காணலில் மறந்து போனார்கள் ..ஒருதலைசார்புநிலை ஊடகங்களில் கட்சிகளில் தொலைகாட்சியில் அதிகமதிகம் வளைந்து நின்றதும் பாண்டே போன்றவர்கள் பெரியளவில் பேசபட காரணமானது.. பாண்டே தொடர்ந்து எதிரில் அமர்ந்திருப்பவரை தாழ்ந்தவனாக எண்ணும் பாசிச மனபான்மையோடு நடந்துக்கொள்வதும் தனக்கு வேண்டியவர்களுக்காக பொய்யாயினும் அதை மிகைபடுத்தி நழுவிசெல்வதும் தான் மட்டுமே யோக்கியன் என்ற திமிரும் அவருக்கு என்றாக்காவது சறுக்கும்.. அல்லது சம்மட்டி அடி கிடைக்குமென எதிர்பார்த்ததுதான்..
அது திரு.ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியிலேயே தெரிந்தது.. மிக திறமையாக புரிகிறமாதிரி தெளிவாக பேட்டி தந்தார் அதில் திறமை மிளிர்ந்தது நேர்மையும் உண்மையும் இருந்தது .. ஆதாரங்களோடு சொல்லவந்ததை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதம் ..அதே வேளை எல்லாம் தெரிந்தவன் நானென்ற நினைப்போடு எதிரில் கேள்விகளோடு அமர்ந்திருந்த பாண்டேவை நீ.. ஒன்றும் தெரியாத மரமண்டை என எல்லாருக்கும் தெரியபடுத்தினார்.. அவர் திறமையானவர்..
..
ஆனால் தினகரன் திறமையானவரோ அல்லது அவர் சொல்வதெல்லாம் உண்மையென்றோ யாருமே நம்பமாட்டார்கள் .. எல்லா கேள்விகளுக்கும் சமாளித்து பதிலளிக்கிறார் .. தொடர்ந்து சோதனை, வழக்கு நீதிமன்றம் பிணை ..தண்டனை..
என நீண்ட பயணம் வந்தவர்களுக்கு அதிலுள்ள நெளிவுசுழிவுகள் அத்துபடியாகும் அதுதான் தினகரன் பேட்டி முழுவதும் தெரிந்தது .. கடைசிவரை விவேக் முதலாளி இல்லையென்றவர் யார் முதலாளியென சொல்லவும் இல்லை பாண்டே கேட்கவும் இல்லை..
தினகரன் போன்றவர்களை ஏன் வரவேண்டுமென விரும்புகிறார் என்றால் பன்னீர் எடப்பாடி போன்ற கேடுக்கெட்டவர்களின் கையில் பெரிய கட்சி சென்று சிதைந்துவிட கூடாதென்பதற்காகவே தவிர.. தினகரன் திறமையானவரென்பதற்காகவோ அல்லது சிறந்த ஆளுமை என்பதாலோ அல்ல இந்த கேடுக்கெட்டவர்கள் பாசிசத்திடம் மொத்தத்தையும் அடகுவைத்து .. அடிமைசாசனம் எழுதிதந்துவிட்டு அடிமைகளாய் .. சொரணையற்று உலா வருவது கண்டு சகிக்காமல் உள்ளதிலி மெச்சபட்டவர் என்பதால் அடிமைகளை அடக்கிவைக்கவேணும் இவர் தேவை என்பதால் தினகரனின் செயல்களை சிலர் ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்
..
தினகரன் ஆளுமை அல்ல
..
Aalanci Spm
Sunday, November 26, 2017
எச்சைகள்..
பெரியார் அண்ணா கருணாநிதி ஆங்கில அரசின் கைகூலிகள்..
தேசவிரோதிகள் எச்.ராசா..
..
தேசவிரோதம் என்பது பார்பனர்களை எதிர்த்தாலோ அல்லது பார்பனீயத்தை எதிர்த்தாலோ ராசாவால் சொல்லபடும் வார்த்தை தேசவிரோதி யாரென்பதை அவருக்கு விளக்கவேண்டும் ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவரும்.. சொத்து ஆசைபட்டு தன் சகோதரியை அம்மணமாக தெருக்களில் ஓடவிட்டு ஊரையே (குண்டிகாட்டி பாளையம்) எழுதி வாங்கியவர்கள் இவர்கள் கணக்கில் தேச தியாகிகள்..
ஏன் இவர்கள்(பெரியார் அண்ணா கலைஞர்) மீதுமட்டும் இவ்வளவு வன்மத்தை குறிப்பாக பிராமணர்கள் கொண்டிருக்கிறார்கள்..
..
ஆம் பெரியார் வரவிற்கு பிறகுதான் எல்லா பதவிகளிலும் நீக்கமற நிறைந்திருந்த வர்க்கத்தை கீழே இறக்கி .. பிற சாதியினரையும் மதத்தினரையும் தாழ்த்தவன் என்று ஒதுக்கி வைத்தவனையும் உயர தூக்கிவிட்டதால் காலம்காலமாக அனுபவித்து வந்த பலன்கள் பதவிகள் இல்லாமல் போனதால் கோபம் தலைக்கேறி பித்தனைப்போல் உளறுகிறார்கள்
..
தினம் தினம் வன்மத்தை விசத்தை கக்கிக்கொண்டிருக்கும் ..மக்கள் மனதில் சாதிமதவெறியை திணித்து பதட்டத்தோடு தமிழகத்தை வைத்து குளிர்காய நினைக்கும் இந்த அரைகுறையை புறம்தள்ளவேண்டும் நாமும் வாய்மூடி கொண்டு கருத்து சுதந்திரம் என விட்டால் இந்த சில்லறை அளவிற்கதிகமாக குலைக்க தொடங்கிவிட்டது..
காரைக்குடி திமுக தயவோடு வெற்றிபெற்ற போது தெரியவில்லை திமுக தேசவிரோத கட்சி என்று.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நின்று போன கோவில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது ஓடாத திருவாரூர் தேர் நகர்ந்தது.. கோயில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாற கூடாதென்பதே எங்கள் கொள்கை.. கர்ப்பகிரகத்தில் காமலீலை செய்கிற கயவர்களுக்கு நாமெல்லாம் தேசவிரோதிகள்தான்.. மதத்தின் மீதான கடவுளின் மீதான நம்பிக்கை வேறு .. சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பிற மதத்தை சேர்ந்தவர்களை வம்பிற்கிழுத்து கலவரத்தை உண்டு செய்வது என்பது வேறு .. இவர்களால் தமிழகத்தில் நினைத்ததை நடத்த முடியவில்லை என்றவுடன் சிலரை கொண்டு தமிழ் தேசியமென
மொழி ரீதியாக பிரித்து பார்த்தார்கள் யாரும் செவியேற்கவில்லை சாதியை சொல்லி பார்த்தார்கள் மதத்தை துணைக்கழைத்தார்கள் யாருமே கண்டுக்கொள்ளவில்லையென்றவுடன்.. பெரியாரை அண்ணாவை கலைஞரை ஆங்கிலேய கைக்கூலியென பிதற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.. அவர்கள் பாணியிலேயே பதில் சொல்லவேண்டிருக்கிறது..
ஆங்கிலேயனுக்கு வெண்சாமரம் வீசியவர்கள்.. வீட்டுபெண்களை அடகுவைத்து சொத்து சேர்த்தவர்கள் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்து எல்லா வழியிலும் சேவகம் செய்தவர்கள் நம்மை பார்த்து கேட்கிறார்கள்..
திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும் அவர்கள் கதைகளை சொல்லும்..
..
பகவானை பட்டினி போடுவதால்தான் இயற்கை சீற்றம் வருகிறதென்கிறார்... உண்மையில் பகவானை இதைவிட யாரும் கேவலபடுத்த முடியாது.... பகவான் தான் படியளப்பாரென்று நம்பியிருந்தவர்கள் பகவானுக்கும் நாம் தான் படியளக்கவேண்டுமோ என எண்ணவைத்திருக்கிறார்.. நாத்திகம் பேசும் நல்லவர்கள் வேலையை சுலபமாக்கியிருக்கிறார்..
..
உண்மையில் மனபிறழ் அடைந்தவராகவே தெரிகிறார். தினம் தினம் சென்சிடியூவ் பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை வெறியார்களாக மாற்ற நினைக்கும் மடையரை இப்போதுதான் பார்க்கிறோம்..
ஒருவேளை இவர் பிறந்த பிகாரில் வேண்டுமானால் பலன்தருமே தவிர தமிழகத்தில் செல்லுபடியாகாது.. ராசா
நல்ல மருத்துவரை அணுகவேண்டும்..
..
விரட்டபடவேண்டிய நபர்..எச்.ராசா
..
Aalanci Spm
Saturday, November 25, 2017
விசமேறியவர்கள்
படித்தால் பாஸாகலாம் திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் எப்படி பாஸாக முடியும் எஸ்.ஏ.சந்திரசேகர்
காணிக்கை கடவுளுக்கு தரப்படும் லஞ்சம்..
இதை சொன்னதற்காக எச்.ராசா ..
ரசிகர்மன்றத்தை கலைத்துவிட்டு இந்துவாக இணையுங்கள் என்கிறார்..
அதாவது திருப்பதி எழுமலையானுக்கு காணிக்கையை லஞ்சமாக சொன்னதும் ..சொன்னவர் கிருஸ்துவரென்பதும் அதனால் இந்துக்கள் வெளியேற வேண்டுமாம்.. ஆனால் இவர் மும்தாஜூம் சத்ரபதியும் டூயிட் பாடுவதை போல் படம் எடுப்பார்களா என்பது தேசபக்தியாம்.
..
எந்த கடவுளாக இருந்தாலும் காணிக்கை லஞ்சம் தான் முடி காணிக்கை தருகிறவன் கட்டைவிரலை வெட்டி காணிக்கையாக தருவானா.. பணம் தங்கமென தருவது கூட ஒருவகை ஏமாற்று இவ்வளவு தந்தால் அதில் ஒரு பகுதியை தருவேன் என்பது கூட ஒருவகை சுயநலம்..
கடவுள் எல்லோருக்கும் தருவார் என நம்புவதை வேண்டுமானால் நம்பிக்கையாக கொள்ளலாமே தவிர கொடுத்தால் தருவார் என்பதோ ..தந்ததால் கொடுப்பதோ ஒருவகை வியாபாரம்..
..
நிறைய தர்காகளிலும் தேவாலயங்களும் கூட பிராத்தனைகள் தந்தால் தருவேன் என்ற நிலையில் தானியிருக்கிறது.. இதில் சக்திபெற்ற கடவுளர்கள்..? கிராக்கி வந்து சேரும்.. இங்கே கடவுளை மதத்தை சொல்லி சாதாரண சினிமாவை பெரும் குற்றம் நடந்ததைப்போல சில அயோக்கியர்கள் தொடர்ந்து வன்மத்தோடு கதைத்து பரப்பரப்பாக வைத்திருக்கிறார்கள் .. முளை சலவை செய்யபட்ட கழுதைகளை தெருவில் இறக்கி வன்முறையை தூண்டி அமைதியை குலைப்பார்கள் முதலில் இவர் போன்ற தேசநலனுக்கு எதிரானவர்களை சட்டத்தின் நிறுத்தவேண்டும் அதைவிட ஊடகங்களும் மக்களும் புறக்கணிக்கவேண்டும்..
..
பத்மாவதி திரைக்கு வருவதற்கு முன்பே தடை கேட்கிறார்கள்.. வந்தால் கலவரம் வருமென்கிறார்கள்.. பத்மாவதி கதை புனையபட்டதாகவே இருக்கட்டும் மக்கள் பார்க்காமல் போனாலே பெட்டிக்குள் முடங்கி போகும்.. வரலாற்றை திருத்தி தங்களுக்கு அனுகூலமாக மாற்றுகிற கேடுகெட்ட செயலை சங்பரிவார் அமைப்புகளும் பாஜக ஆளும் மாநில அரசும் செய்யும் போது இவர்கள் எங்கே போனார்கள்..
..
பாஜக ஆட்சி வந்தபிறகு இவர்கள் உடல்மொழியும் பேச்சுக்களும் வன்முறையையே விதைக்கின்றது..
பார்பனர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் இதுபோன்ற மதவெறியை மக்களிடையே தொடர்ந்து பரப்ப பலேவேறு துணை அமைப்புகளை கொண்டு கச்சிதமாக செய்து ஒருவித பரபரப்பை தேசத்தை வைத்திருக்கிறது
தலையை கொண்டுவந்தால் ₹10 கோடி கண்ணத்தில் அறைந்தால் ₹1 கோடி.. என பகிரங்கமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களே பேசுகிறார்கள்.. இதை யாரும் கண்டிக்கவோ ..தொலைகாட்சிகளில் சமூகவலைத்தளங்களில் விவாதிக்கவோ .. குறைந்தபட்சம் கண்டனத்தை கூட செய்வதில்லை.. அதனால் தான் எச்.ராசா போன்றவர்கள் நாவில் இருந்து உதிர்வதெல்லாம் விசமேறிய வார்த்தைகளாக இருக்கிறது.. கடவுள் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை கடவுள் பெயரைச்சொல்லி செய்கிற கயமைத்தனத்தை... மூடபழக்கத்தை ..ஏற்றதாழ்வை விமர்சிக்கிறார்கள் அதை சரியான விளக்கத்தை/கருத்தைக்கொண்டு மறுக்கவேண்டுமெ தவிர மதவெறியை தூண்டும் வகையில் பதிலளிக்ககூடாது..
கடவுள் பெயரில் காசு பார்க்கும் செயலை கண்டித்திருக்காரே தவிர.. வேறில்லை..
..
#சுவாமி_விவேகானந்தர் இப்படி சொன்னார்
பார்பனர்களே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுங்கள்
அல்லது மண்ணில் கரைந்து காற்றில் கலந்து மறைந்துவிடுங்கள் அப்போதுதான் இந்த நாடு எழுச்சிபெறும் ஏற்றம் பெறும் .. நீங்கள் சூன்யம் ..மாயை ..கானல் நீர்.. மக்களை நாசமாக்கும் கும்பல் பேர்வழிகள்..
எத்தனை சத்தியமான/உண்மையான வார்த்தை ..
..
Aalanci Spm
Friday, November 24, 2017
தளபதி..
ஸ்டாலின் மௌனம் சரியானதாக தெரியவில்லை
இப்படியொரு விமர்சனம் தொடர்ந்து எழுப்பபடுகிறது.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சின்ன சின்ன லெட்டர்பேட் கட்சிகள் கூட தினம் தினம் அறிக்கை தருகிறார்கள்.. எந்த பிரச்சனையானாலும் முந்திக்கொண்டு கருத்து கெரிவிக்கிறார்கள் 2 விழுக்காடு வாக்கு இல்லாதவர்கள் கூட எதையாவது பேசிக்கொண்டே திரிகிறார்கள் என்கிறார்கள் கூடவே கலைஞர் .. பத்தாண்டுகாலம் எதிர்கட்சியாக இருந்தபோதுகூட தினம் தினம் அறிக்கை உடன்பிறப்பிற்கு கடிதமென உயிரிப்புநிலையிலேயே வைத்திருந்தார்..
..
மேம்போக்காக பார்த்தால் கவலைக்கொள்வதில் நியாயம் கூட கண்டகண்டதெல்லாம் கருத்து சொல்கிறதே .. 46 விழுக்காடுகளுக்குமேல் ஆதரவுள்ள திமுக எந்த விடயத்திலும் கருத்தை கடைசியில் சொல்கிறதே என்ற கவலை புரிகிறது.. சிலரின் பேச்சுகள் மிகப்பெரிய மாற்றத்தை தரும்
அரசியலில் சிலரின் கருத்து எதிராளிகளின் செயலை புரட்டிபோடும்.. எந்தவொரு விடயமானாலும் கலைஞரின் கருத்தே சரியானதென காலம் நமக்கு உணர்த்தியுமிருக்கிறது. ..
சரி..
..
திரு.ஸ்டாலின் கலைஞரைப்போலில்லை என்கிற வாதம் கேட்டு சலித்தது ..ஸ்டாலின் என்றில்லை யாருமே இங்கே கலைஞர் ஆகமுடியாது கலைஞரின் சாதூர்யம் இந்திய அரசியலில் எவருக்குமில்லை .. எழுத்தும் பேச்சும் அதிலுள் இடையோடும் நையாண்டியும்.. எதிர்த்தடிக்கும் கம்பீரமும் .. எவருக்கும் வராது.. அவரைப்போலில்லை என சொல்லி திசைதிருப்பும் செயலை கடந்துபோவோம்..
..
தளபதி.. நிதானமாக அதே நேரம் நேர்மையோடும்
ஒவ்வொரு அடியும் தடுமாற்றமில்லாமல் .. புதியதொரு அரசியல் இலக்கணத்தை தனக்கான வழியை பொய்த்துபோய்விட்ட அல்லது புரையோடிபோய்விட்ட அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கிறார்.. காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்து எம்ஜிஆர் காலம் தொட்டு .. அது ஜெயலலிதா அரசியலில் உக்கிரமடைத்த நிலையில் மெல்ல மெல்ல தன் நாகரீக செயல்பாட்டால் அதை திருத்தி சரியான பாதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் நிறைகுடமாக..
..
சிலரைப்போல அல்லாமல் அழகான அரசியல் என்கிற ஜனநாயக பாதையை .. அளவோடு அதேநேரம் கம்பீரமாய் .. தன் கொள்கையில் உறுதியோடு இருக்கிறார் அதனால் தான் s.v சேகர் போன்றவர்கள் நட்பை அரசியலுக்கு பயன்படுத்திய போது தெளிவான அறிக்கை மூலம்.. கொள்கைக்கெதிராக என்னால் செயல்படமுடியாதென்றும் ..நட்பு என்பது வேறு அதை அரசியலோடு போட்டு குழப்பிக்கொள்ளாதீர்களென பொட்டில் அடித்தாற்போல சொல்லமுடிந்தது..
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுபார்க்ககூட முடியாதென தெளிவாக சொல்லியிருக்கிறார்.. மோடி வீட்டிற்கு வந்து சென்ற சிலமணிநேரத்திலேயே மத்திய அரசிற்கெதிரான ஆர்ப்பார்ட்டம் என அறிவித்து கலைஞரின் அரசியலை கையிலெடுத்தார்..
..
எப்போதும் பரபரப்பாக பார்த்தே பழகிவிட்ட நம்மால் நிதானமான ஒவ்வொரு அடியையும் ரசிக்கமுடியவில்லை ..ஆனால் நீண்டகால பலன்தரும் என்பதும்..சரியான எதிரியே இல்லாத போது ஏன் கம்பு சுற்றவேண்டும்..
கொண்ட கொள்கையில் உறுதி தெளிவான சிந்தனை .. செல்லும் பாதைபற்றிய அறிவு.. மக்களிடையே நன்மதிப்பும் நம்பிக்கையும்
சிறந்ததொரு அரசியல்வாதியாக தம்மை நிலை நிறுத்த காலம் கடந்து பேசபடவேண்டிய நபராக .. திறந்த அரசியல் தலவர்களில் .. கனித்தன்மையோடு கூடிய தலைவர்களில் ஒருவராக தளபதி திகழ்வார்..
..
செதுக்க செதுக்கதான் சிலை கூட மிளிரும்..
தளபதி காலம் செதுக்கிய சிறந்த அரசியல் தலைவர்..
..
Aalanci Spm
Thursday, November 23, 2017
இலை இனி பலனில்லை
யாருக்கு கிடைத்தால் என்ன..
இரட்டை இலையில் தான் ஜெயலலிதாவே தோற்றார்..என்பதை நினைவில் கொள்க..
கட்சி யாருக்கென்பதில் சின்னம் பிரதான பங்கை வகிக்கும் ஆனால் அது தற்காலிகமானது.. ஏனெனில் கட்டுகோப்பாக வழிநடத்தும் தலைமை இல்லையெனில் கட்சி சிதறிபோகும் படுதோல்வி அடையும் ..எந்த கட்சியாக இருந்தாலும் சரியான தலைமையில்லையெனில்
அப்போது சின்னம் பெரிய மாற்றத்தை தந்துவிடமுடியாது..
..
தினகரனுக்கு கிடைக்காதென அப்போதே தெரியும் காரணம் உ.பி.யில் அதிகம் எம்எல்ஏக்களை தன்வசம் கொண்டிருந்த அகிலேஷ்விற்கு தான் கிடைத்தது
ஆனால் பலன் சூன்னம்.(0)
இங்கே அதிமுகவில் யார் தலைமை பன்னீரோ எடப்பாடியோ தலைமைக்குரியவர்களாக அவர்களே நம்பமாட்டார்கள் பதவிக்காக ஒருங்கிணைத்திருக்கிறார்களே தவிர .. இருக்கிற கால அவகாசத்திற்குள் ஏதேனும் சேர்த்துக்கொள்ள முடியாதா என ஒற்றை சிந்தனையை தவிர வேறொன்றும் பெரிதான எதிர்பார்ப்பு இருவருக்குமே இல்லை..
..
சிலர் அங்கலாய்த்து கொள்கிறார்கள்.. சிலர் தினகரனக்கு வீழ்ச்சி என்கிறார்கள்.. சின்னத்தை பெற்றதாலேயே அதிமுக வலுப்பெற்றுவிட்டதாக எண்ணமுடியாது அதே வேளை தினகரனுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கை குறைத்து மதிப்பிடவும் முடியாது.. தற்காலிக நிம்மதியை இருவர் அணிக்கு தரலாமே தவிர அது நீடிக்குமென்றோ வெற்றியை தேடிதருமென்ற சொல்லமுடியாது ..
..
இனி ..சின்னத்தை கொண்டு வெற்றிபெற முடியுமென அவர்களே நம்பமாட்டார்கள் காரணம் அவர்களுக்கு கட்சி ..சசிகலா தரப்பிற்கு போகவில்லை என்பதை காட்ட பயன்பட்டிருக்கிறது
அவ்வளவுதான் ..
..
அதிமுக ஆர்.கே.நகரில் இரட்டை இலையில் போட்டியிடவேண்டும் ..ஏனெனில் அப்போதுதான் மிகப்பெரிய தோல்வியை பெறும் ..அதிமுகவின் பலமும் தினகரனின் பலமும் தெரியலாம் ..
போலி வாக்காளர்கள் 45,000 பேர் நீக்கபட்டிருக்கிறார்கள் ஜெயலலிதாவே 36,900 வாக்குகளில் தான் வெற்றிபெற்றார் இதிலிருந்தே ஜெயலலிதாவும் பர்கூரை போல இங்கே தோற்றிருப்பது வெட்டவெளிச்சம் இந்தமுறை யார் நின்றாலும் தோல்வி உறுதி ஆனால் இதுவரை அதிமுக சந்தித்திராத தோல்வியாக கூட இருக்கும்
செத்தகிளியை சிங்காரித்து என்ன பயன் என்பார்கள் அதுதான் இப்போது நடந்திருக்கிறது..
..
இவர்களை விட டெல்லி ரொம்ப பதறியிருப்பதும் இதில் தெரிகிறது.. திமுகவை வீழ்த்த முடியாதென அறிந்து அருகதையற்றவர்களுக்கு சின்னத்தை கொடுத்தேனும் வெற்றியை தடைய முடியுமா என கணக்கு போடுகிறார்கள்.. உண்மை வேறுவிதமாக காட்சி தருவது தெரியாமல் .. இனி இவர்களால் ஒரு சிறிய அசைவை கூட தமிழக அரசியலில் நடத்தமுடியாது நம்பிக்கையில்லாத வழிநடத்த சரியான தலைமையின்மை வரலாற்று தோல்வியை தரும் மீண்டும் எழவே முடியாவாறு..
இதில் மற்றொரு உண்மையை தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமாக தந்திருக்கிறது.. அதாவது 111 பேர்தான் சட்டமன்றத்தில் இருவர் அணிக்கு அதாவது பெரும்பான்மை இல்லை..
..
இரட்டைஇலையில் நின்று ஜெயலலிதா தோற்றுயிருக்கிறார்.. அதே இலையால் கலைஞரை தோற்கடிக்கமுடியவில்லை.. ஆம்.. உதயசூரியனை வெல்ல முடியவில்லை.. உதயசூரியன் ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கிறது..
..
ஆம் .. நினைவில் கொள்க..
கலைஞரை வீழ்த்த முடியாத சின்னம் தான் இலை ஆனால்..
ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கிறது #உதயசூரியன்..
..
Aalanci Spm
Tuesday, November 21, 2017
சட்ட எரிப்பு நாள்
#நினைவில்கொள்வோம்..
திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள் நவம்பர் 26.. பெரியாரின் பிரதான கொள்கையான சாதி ஒழிப்பை வலியுறுத்தி 1957ல் நடத்திய சட்ட எரிப்பு போராட்டம் இந்திய அரசிலமைப்பில் சாதியநிலைப்பாட்டை எதிர்த்த மாபெரும் போராட்டம் அது இந்தியளவில் சாதிக்கெதிரான போராட்டமும் கூட.. இந்தியளவில் முதல்முறையாக சாதீய ஒழிப்பிற்காக பல்லாயிக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைச்சென்றனர்.. மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை தோழர்களுக்கு கிடைத்தது..
மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொல்லியும் .. வாஜ்பாய் போல மன்னிப்பு கடிதமெல்லாம் தந்து விடுதலையாகவில்லை
..
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சாதீய மறுப்பு திருமணம் என்ற எண்ணம் எழ காரணமாக அமைந்தது இந்த போராட்டம்..
..
மரணம் என்பது வீரன் தன் லட்சயத்திற்கு கொடுக்கும் விலை என்றார் பெரியார்
பெரியாரின் தன் வாழ்நாள் இலட்சியமான சாதி ஒழிப்பிற்காக 18 பேர் உயிரிழந்தனர்.. பட்டுக்கோட்டை இராமமடசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிறையிலேயே உயிரிழந்தனர்..
சிறையிலிருந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கப்பட்டபோதும் போராடி அங்கேயே சிலநிமிடம் மரியாதை செலுத்தினர் ..
இன்றைக்கும் பீகார் உ.பியை போல சாதீய கோரதாண்டவம் தமிழகத்தில் இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்கு பெரியாரின் பெருந்தொண்டே காரணம்..
..
இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை வர்ணம் சொல்லி பிரித்தாளும் ஆரிய சூழ்ச்சிக்கெதிரே முதல்முறையாக ஆணியடித்த நாள்..திராவிட இயக்க வரலாற்றில் மறைக்கமுடியாத மறுக்கமுடியாத சரித்திரத்தை எழுதிய நாள்.. நவம்பர் 26/1957.
..
இன்றைக்கு சாதி நெருப்பை சிலர் தூண்டி குளிர்காய நினைத்தாலும் அது பெரியளவில் கண்டுக்கொள்ளாமல் தூண்டுதல் செய்வோரை
தனிமைப்படுத்தி கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்திட முடிகிறதென்றால் அதற்கு #பெரியாரெனும்_அருமருந்தே காரணம்..
..
#சட்டஎரிப்புநாள்_திராவிடர்திருநாள்..
#Historic_day
..
ஆலஞ்சி
தேவையில்லாத களை
கலைஞர் மீண்டு வந்தால் தமிழகம் மீளும்.. வைரமுத்து..
என்ன சொல்ல வருகிறார்.. கலைஞர் வந்தால் தான் தமிழகம் மீளுமென சொல்லவருகிறாரா..
மேம்போக்காக பார்த்தால் புகழ்வதுபோல் தோன்றும் .. அதற்குள் ஒளிந்துகிடக்கும் நுண்ணரசியல்.. மற்றவர்களை குளிர்விக்க பேசப்பட்ட கருத்தென்பதும் .. ஊரோடு ஒத்துபோவேன் என்கிற சமாளிப்பும் தெரியும்..
..
முதலில் நிகழ்கால அரசியலை உணர்தல் வேண்டும் அல்லது அரசியல் நிகழ்வுகளின் போக்கை அறிந்தவராக இருக்கவேண்டும் மக்களின் எண்ணவோட்டம் எதுவென்பதைப்பற்றிய தெளிவாவது வேண்டும்..
மேடை கிடைக்கிறதென்பதற்கு வாய்ப்பு தந்தவரை புகழ்தலை செவ்வனே செய்பவர் அது அவரின் விரும்பமாக அல்லது தேவையாக இருக்கட்டும்.. நட்டு வச்ச சிலையை வணங்கிவிட்டு போகட்டும் .. #இரத்தகறைகள் அகிம்சையை போதிப்பதாக சொல்லட்டும் அதிலெல்லாம் கவலையில்லை அது அவரின் இயல்பு .. வாய்ப்பு கிடைக்கிறது வார்த்தை வழங்கிநிற்கிறதென்பதற்காக தகுதியின்மையை தரமேறியவை என புகழ்வது எதையோ எதிர்பார்த்து நிற்பவனின் பிதற்றல்..
#காக்கை பருக்கையை தேடுவது எப்படி இயல்போ அதைப்போல .. அவர் புகழட்டும்
அதனால் பயன்பெறட்டும் நமக்கு கவலையில்லை..
பிழைக்கதெரிந்தவன் என ஒதுங்கிப்போவோம்..
ஆனால் கலைஞரோடு முடிந்ததென்ற பலரின் அறுந்த பல்லவியை புதிய சுரத்தில் பாட வருகிறாரே அதை அதை ஏற்கமுடியாது..
..
திராவிட இயக்கம் தன் பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்வை திறம்பட செய்துக்கொண்டிருக்கிறது.. நான்காம் தலைமுறையின் தலைவனை தேர்வு செய்திருக்கிறது .. ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தோல்வி வெற்றி எதிலும் களைப்படையாத .. அதே உற்சாகத்தோடு உத்வேகத்தோடு பணி செய்து கிடப்பது எமது தலையாய பணியென தொண்டாற்றி.. கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேற்றிய தலைவனை காலம் தேர்வு செய்திருக்கிறது....
ஆம்.. #தளபதி..
..
கலைஞர் வயதின் மூப்பும் உடல் நலிவும் சிலருக்கு மகிழச்சியை தந்து முடிந்ததென எண்ணி திரிந்தோர் ..மறந்து போனார்கள்.. திராவிடம் இயக்கமென்பதையும் மக்களின் உணர்வோடு கலந்ததென்பதையும்.. திராவிட பெருவுடையார் கலைஞர் இத்தனை ஆண்டுகாலம் எம்மை வழிநடத்தி .. அடுத்தகட்ட நகர்வை நோக்கி எம்மை செலுத்தியிருக்கிறார்..
கலைஞரோடு முடிந்ததென எண்ணினால்.. பெரியோருக்கு பிறகோ அண்ணாவிற்கு பிறகோ முடிந்திருக்கவேண்டும் .. சரியான தலைமை தமிழனுக்கு /தமிழ்நாட்டிற்கு கிடைத்ததால் பலஆண்டுகள் பின்னிட்டும் வலுவோடு நிற்கிறது.. தலைவர்களை தேர்வு செய்து காலம் எமக்களிக்கும்..இன்னும் சில நூறாண்டுகள் எம் இன பகைவரோடு போராட வேண்டியிருக்கிறது..சிறிய வாய்ப்பு கிடைக்காதா என எம்பகைவர் கூட்டம் காத்துக்கிடக்கிறது..சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துகிடப்போருக்கு வலிய சென்று உதவும் துரோகிகளை நாம் இனம்கண்டு கொண்டுதானிருக்கிறோம்..அருகிலிருந்தே சங்கறுக்க நினைப்பவனை .. அயர்ந்து தூங்கும் போது கல்லெடுக்கிறவனை நாம் அறிவோம்..
புரிந்துக்கொள்ளுங்கள்..
..
எமது வரலாற்றில் நெடுக
துரோகிகளால் வீழ்த்தபட்டதே அதிகம் ஆனாலும் மீண்டும் மீண்டும் திமிரிதெழுந்து வருகிறோமே புரியவில்லையா.. கும்பலகாக சிலர் வைகோவோடு சென்றபோது கலைஞர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது.. #களைகள்_தானாக_கலைகின்றது..
..
#தேவையில்லாத_களை…
..
#கலைந்துபோன_வைகறை_மேகம்..
..
Aalanci Spm
Monday, November 20, 2017
அறிவிலிக் கூட்டம்
நானும் எப்போதாவது அறிவோடு பேசுவார்களா எம் அமைச்சர்களென பார்க்கிறேன்.. அரசியல் தெரியாதவர்களாக அல்ல அதன் வரலாற்றை கூட அறிந்திராதவர்களாக .. எத்தனை கோமாளித்தனத்தோடு விவரகேடுகளாய் இருக்கிறார்கள்..
முன்பெல்லாம் அரசியல் செய்கிறவர்களின் பேச்சில்
ஆழ்ந்த புரிதலும் .. சரியான விளக்கமும் அவர்கள் பக்கத்து நியாயமும் கூட இருக்கும்... இப்போதெல்லாம் இவர்களை எண்ணி சிரிப்புவருவதற்கு பதிலாக கோபமே வருகிறது.. தமிழக அரசியல்வாதிகளுக்கு வடநாட்டில் இருந்த மரியாதை.. இவரிகளின் பிதற்றலுக்கு பிறகு தமிழக அரசியலே கோமாளித்தனமும் பொய்யும் நிறைந்ததென முடிவுக்கு வருகிறார்கள்..
..
அதிமுக வரவிற்கு பிறகு அரசியலில் பொய் மிக சாதாரணமான விடயமாகிப்போனது .. கவர்ச்சி மூலதனம் கூட ஒரு அளவிற்கு மேல் கொஞ்சமேனும்
அறிவுடையோரை தம் பக்கம் சேர்த்து கொண்டு ஆட்சி செய்திருக்கவேண்டும்.. சில விசயதாரிகளை கைக்குள் வைத்திருக்கவேண்டும் வெறும் தலையாட்டிகளை வைத்துக்கொண்டு அரசியல்செய்ததின் விளைவு ஆளாளுக்கு ஒன்று பேசி திரிகிறார்கள்.. இப்போது கூட கச்சதீவை சர்காரியா கமிஷனுக்கு பயந்து தாரை வார்த்தாரென்கிறார் அமைச்சர்.. 74 ல் தாரை வார்க்கபட்டதை 76 விசாரணையோடு ஒப்பிடுகிறார்.. மற்றொருவர் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறவர் யாரென்றே தெரியாமல் உளறுகிறார்.. மத்தியிலும் மாநிலத்திலும் சான்றோரை அனுப்பிவைத்த தமிழக மக்கள்.. இப்போது தரம்கெட்டவர்களை அனுப்பி தங்களை தாங்களே இழிவுபடுத்திக்கொண்டார்கள்..
..
சில புள்ளிவிவரங்கள் தெரியாமல் கூட இருக்கலாம் ஆனால் அடிப்படையே தெரியாமல் இருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்..நல்லவேளை இவர்களையெல்லாம் மத்திய அமைச்சர்களாக்கவில்லை .. இல்லையெனில் நாடே நம்மை காறி துப்பும்.. பொய் பேசுகிற அமைச்சர்கள் தவறான விவரங்களை தருகிறவர்களை பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போதுதான் அடிமுட்டாள்களை மந்திரிகளாக பார்க்கிறோம்..
..
இது மத்தியிலும் தொடர்கிறது.. துப்பாக்கி சூடு கரையோர காவல்படைக்கு சொந்தமானதில்லையென மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்கிறார்.. குண்டு யாருடையதென்று தெரியவில்லை என்கிறார்.. ஊறுகாய்க்கு உப்பு எவ்வளவு இடுவதென்பதோடு நிறுத்தியிருக்கலாம்.. பாவம் பாதுகாப்பு படாதபாடு படுகிறது.. இப்போதெல்லாம் முட்டாள்தனம் அடிக்கடி நிகழ்வதால் சிரிக்ககூட முடியவதில்லை.. கேவலங்களை கோடியுடுத்தி சிங்காரித்ததால்.. பல்லிளிக்கிறது.. நமது மானம்..
..
மிக சிறந்த விவாதங்களை கேட்டு பலநாட்களாகிறது.. எதிர்கருத்திலும் இருக்கும் நயமான சொற்கள் நம்மை கவர்ந்திழுத்ததெல்லாம் பழங்கதையானது
அறிவுசாந்தோரின் கருத்தாழமிக்க சரியென்கிற விடயங்களை சபை அங்கீகரித்ததெல்லாம் இனி பழையவையாகுமோ.. சான்றோர் அலங்கரித்த சபை இன்று அறிவிலிகளின் கூடாரமாய்.. இவையெல்லாம் அதிமுகவை சில நாணயங்களுக்காக அறியணை ஏற்றியதற்கு பிறகு.. கைதட்டலும் தலையாட்டலும் கூச்சலும் தனிநபர் வக்கிரமங்களும் பழித்தலும் .. கோபத்தை கிளறி சபையை கேலியாக்கியதும்.. புகழ்ந்து புகழ்ந்தே நம்மை அசிங்கபடுத்தியதும் அசிங்கபட்டதும் ..இனியும் தொடரவேண்டுமா..
..
இந்த அறிவிலிக்கூட்டம் விரட்டபடவேண்டும்..நல்லவர்களை நம்பிக்கையோடு உழைப்பவர்களை அறிவின் துணைக்கொண்டு ஆட்சி செய்வோரை இனி தேர்வு செய்வோம்..
நம்பிக்கை தரும் கதிரொளி பரவட்டும்..
..
Aalanci Spm
Sunday, November 19, 2017
திராவிட இயக்கம்
கிறுக்கர்களுக்கு பதில் சொல்லதேவையில்லை.. ஆனால் கிறுக்கை தெளிய வைக்கவேண்டுமல்லவா..
..
// அதிமுக அழிந்துவிட்டது திமுகவை அழித்துவிடுவோம் பொன்னர்..
முதல் கூற்றே தவறு அதிமுக அழியவில்லை சிதறியிருக்கிறது சரியான தலைமை இல்லாததால் கண்டவனும் கொண்டவன் போல் பேசுகிற நிலை..
சசிகலா வெளியே வந்தாலோ அல்லது ஒரு மிகப்பெரிய தோல்விக்கு பிறகோ ஒருங்கிணையும் வாய்ப்பு உண்டு காரணம் இன்னமும் அடிமட்டத்தில் ஈரத்தோடு இருக்கிறவர்கள் உண்டு அவர்கள் கொள்கை வழி வந்தவர்கள் இல்லையெனினும். விவரகேடுகள் எனினும் அதிமுக என்ற அமைப்போடு சிநேகம் கொண்டவர்கள் அதனால் சரியான தலைமை கிடைக்குமாயின் உயிர்த்தெழலாம்..
..
திமுக.. சொல்லும் போது எதிரிக்கும் கம்பீரம் தரும் இயக்கம்.. மிசா காலத்திலேயே இன்று நூற்றாண்டு காணும் இரும்பு மனுஷி அசைத்துபார்த்தது தான் எத்தனை ரெய்டுகள்.. கோழைகளை விலைக்கு வாங்கி திமுகவை இல்லாதாக்க நினைத்து கடைசியில் .. எதிர்த்தாலும் தோழமைகொண்டாலும் அதில் உறுதியோடு இருக்கிறவர் கலைஞரென சொன்னார்..
அதற்குமுன்பே..
ராஜாஜியோ மூட்டை பூச்சியைப்போல திமுகவை நசுக்குவேன் என்றார்.. பக்தவச்சலமோ 6000 அடி குழித்தோண்டி புதைப்பேன் என்றார்..திமுகவை இல்லாதாக்குவேன் இந்த 15 பேரும் பங்குபெறும் கடைசி சட்டமன்றம் இதுதானென்றார்..காமராஜர்.. இதையெல்லாம் விட .. கூட இருந்தே குழிபறித்த எம்ஜிஆர் .. திமுகவை சுடுகாட்டிற்கு அனுப்புவேன் .. ஜெயலலிதாவோ கண்னுக்கெட்டிய தூரம் வரை எதிரியை காணோம் என்றார்..
இவையாவும் கொஞ்சமேனும் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் .. இங்கே நாகர்கோவிலை தாண்டி வேறெங்கும் கவுன்சிலராக கூட வரமுடியாத பொன்னர் போன்ற கிறுக்கர்கள் நல்ல மருத்துவரை பார்க்கலாம்..
..
திமுக ஏன் காலங்களை கடந்து நின்று வெற்றிபெறுகிறது.. நிறைய தோல்விகள் அதை தொடர்ந்தும் வெற்றிகள் ஆனாலும் இயக்கம் கட்டுபாடோடு செயல்படுகிறதே என்ன காரணம் ..ஆம் வெளிப்படையான ஜனநாயகம் உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்றோரும் தோல்வி அடைந்தவரோ இருவரையும் சமமாக மதிக்கும் தலைமை பண்பு .. எல்லாவற்றிலும் ஜனநாயகதன்மை கொள்கையிலிருந்து பிறழாமை... சில தவறுகள் வந்த போதும் அதை திருத்திக்கொள்கிற நேர்மை அதைவிட தோல்வியிலும் மக்களோடான தொடர்பு .. இவையெல்லாம் திமுகவில் மட்டுமே காண முடியும்..மக்கள்
மிகப்பெரிய தோல்வியை தந்திருப்பார்கள் மறுநாளே சலவை செய்த கட்சி வேட்டியோடு தொண்டன் காணமுடியும் கொஞ்சம் கூட சங்கடபடாமல் கட்சிப்பணியை செய்வான்..
காரணம் தோற்றது அவனோ அவன் கொள்கையோ அல்ல மாறாக மக்களின் அறியாமை..அல்லது அவசரதன்மை என்பதை அறிவான் அதனால்தான் மீண்டும் மீண்டும் மக்களை சந்திக்கமுடிகிறது
..
திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பு
தி.மு.கழகம்..
நேர் கொண்ட நன்னெறியோடு வலம் வர முடிகிறது.. திமுக கட்சி அல்ல
மக்களுக்கான இயக்கம் இது..
இயக்கம் இயங்கிக்கொண்டே இருக்கும் இயற்கைப்போல இயல்பாய்..
திராவிட இயக்கத்தை வீழ்த்த ஏன் தொட்டுபார்க்க எந்த கொம்பனாலும் முடியாது.. காரணம் கொள்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறோம்.. இளைய தலைமுறையிடம் .. ஆம் இயக்கம் இயங்கிக்கொண்டே இருக்கும்..
..
Aalanci Spm
Saturday, November 18, 2017
ஜெயலலிதா கிரிமினல் 1
போயஸ் கார்டன் ரெய்டை ஏன் எல்லோரும் பதைபதைப்போடு எதிர்க்கிறார்கள்.. ஆளும் அமைச்சரோ.. தெய்வத்தின் வீடு .. கறைபடியாத கரம் என்றெல்லாம் பீத்துகிறார்.. கவலையளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்.. எப்படி ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு சோதனைக்கு போகலாமென சிலர்.. செத்தவரை ஏன் களங்கபடுத்தவேண்டுமென சிலர் ..
..
ஒன்றை எல்லோரும் மறந்துபோகிறார்கள்.. இப்போது நடக்கிற இனியும் தொடர போகிற எல்லா (ரெய்டு) பரிசோதனைகளுக்கும் முழு பொறுப்பாளர்.. செல்வி.ஜெயலலிதா தான்
குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக படிக்காதவர்கள் அல்லது அரைகுறையாக படித்தவர்களின் வெற்று கூச்சல் இது ..
குன்ஹா ஜெயலலிதாவை A1 ஐ.. பற்றி குறிப்பிடும் போது .. ஜெயலலிதாவிற்கு தெரியாமல் அல்ல தெரிந்தே முறைகேடுகள் நடந்ததென கூறுகிறார்..
அதோடு அவருக்கு பங்குண்டு .. பதவியை முறைகேடாக பயனிபடுத்தியிருக்கிறாரென தொடர்ந்து 14 பக்கங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்லி.. அதிகபட்ச தண்டனை தரவேண்டும்.. மூன்று பிரிவுகளில் குறைந்தது ஒவ்வொரு பிரிவிற்கும் பத்தாண்டுகளும் ஒரு பிரிவில் எழாண்டுவரை தரவேண்டும்.. பெண் என்பதை கருத்தில் கொண்டும் மிக மிக குறைந்த தண்டனையாக நான்காண்டும்.. ₹100 கோடி அபராதமும் விதிப்பதாக தன் தீர்ப்பில் சொல்கிறார்.. அந்த தீர்ப்பைதான் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.. தண்டனையை குறைத்தோ அல்லது அபராத தொகையில் கழிவோ இல்லாமல் அப்படியே தீர்ப்பை வழங்கியது..
..
இன்றைக்கு மன்னார்குடி மாபியாவை குறைச்சொல்பவர்கள் ஜெயலலிதாவை புனிதராக்க முயல்வது உச்சகட்ட அயோக்கியத்தனம்.. இதைவிட யாரும் தமிழக மக்களையோ நீதித்துறையையோ கேவலபடுத்தமுடியாது.. உடனே இறந்துபோனவரை விமர்சிக்கலாமா என கேட்கிறார்கள் அப்படியெனில் கோட்சேவும் ஹிட்லரும் புகழபடவேண்டியவர்களா..
ஜெயலலிதா குற்றவாளியென அறிவித்து இதோ .. இவர்தான் மக்கள் வழங்கிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவரென சொல்லியிருக்கவேண்டாமா..நினைவு மணிமண்டபம் உலகிலேயே குற்றம் நிரூபிக்கபட்ட ஒருவருக்கு அரசு செலவில் என்பது ஏற்புடையதா..
எனது வரிப்பணத்தை கொள்ளையடித்தவரை .. தெய்வம் கர்ப்பகிரஹம் கோவில் என்றெல்லாம் சொல்பவர்களை விரட்டியடிக்கவேண்டாமா..
..
இன்றைக்கு அதிமுக சிதறி அதன் மூலம் பலன் பெறலாமென்ற பாஜகவின் கனவு தகர்வதும்.. அதிமுகவில் சிலரை விலைபேசி அல்லது மிரட்டி பணியவைக்கலாமென்ற நினைப்பில் சிலர் வளைந்து வர மறுப்பது இடையூறாகி விசாரணை சோதனை என்றெல்லாம் காய் நகர்த்த அது பலனை ..தினகரன் கோஷ்டிக்கு கொண்டுபோகிறது... சசிகலாவை கொள்ளைக்காரியாக சித்தரிக்கிற போது கூடவே ஜெயலலிதாவும் சேர்ந்தே நாறுகிறார் என்பதை உணர மறுக்கிறார்கள் இந்த அடிமைகளும் அடிமைகளை ஆட்டிவைப்போரும்..
..
சசியோடு ஜெயா சேராமல் இருந்திருந்தால் நல்லவராக நல்லாட்சி செய்திருப்பாரென சிவர் சொல்வது சிறந்த நகைச்சுவை..
அரசியலே வேண்டாமென்று ஓடியவரை அழைத்துவந்தது சசிகும்பல் தான்..
இங்கே ஜெயலலிதாவை சிறந்த ஆளுமையாக சொல்கிறவர்கள் சசியை மறந்து போகிறார்கள்.. தன் கட்டுபாட்டில் வைத்திருந்ததற்கு என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்..
..
சசிகலா வகையறா மட்டுமல்ல ஜெயலலிதாவையுமே சேர்த்தே குற்றவாளியாக நாம் கொண்டாட வேண்டும்..
அப்போதுதான் எதிர்வரும் காலங்களில் ஜெயலலிதா என்ற நபர் திருடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்தவராக வரலாற்றில் பதியமுடியும்.. சிலர் தெய்வமென புகழ்வது உண்மையில் பதவியை தேடியும் பதவியை காத்துக்கொள்ளவுமே தவிர உண்மையில் அவர்கள் அறிவார்கள்.. ஜெயலலிதா எனும் மகா திருடரை..
#Jayalalitha_no1criminal
..
Aalanci Spm
Friday, November 17, 2017
பெண் ஆளுமைகள்
பெண் ஆளுமைகள்.
குறிப்பாக எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள் அதனாலேவோ என்னவோ மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டியிருக்கிறது..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா கூட ..
இவர்களின் அரசியலை,
படுமோசமான நிர்வாகத்தை
அதிகாரஆணவத்தை அடாவடித்தனத்தை வெறுத்து எதிர்த்தாலும்.. இவர்களை சிறு புன்னகையோடு ரசித்திருக்கிறேன்
இவையனைத்தும் ஆண்கள் செய்வதில்லையா என கேள்வி வரும் மறுப்பதற்கில்லை அதையும் கண்டித்து எதிர்த்திருக்கிறோம் பெண்கள் என்பதால் பார்வை அதிகமாகிறது
அப்படியொரு ஆளுமைதான் திருமதி சுஷ்மாசுவராஜ் ..
..
உமாபாரதி/மம்தாவை போல எடுத்து வீசிவிட்டு வராமல் காத்திருந்து கொத்திக்கொண்டு போகும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்..அவர் உடல்நலம் பாதிக்கபட்டிருக்கிற சூழலில் கூட கிருஷ்ணனின் கீதையை பாடமாக்கவேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார்.. அவரின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தேன் ஆனாலும்
தன் உடல்நலபாதிப்பை கூட மறைக்காத அதை மக்களோடு பகிர்ந்துக்கொள்கிற நேர்மை ஜெயலலிதா போன்றோரிடம் எதிர்பார்க்கமுடியாது..
அரசியலில் நிறைய தவறுகளை (லலித்மோடிக்கு பரிந்துரை செய்ததுபோன்ற) எடுத்திருந்தாலும் அதை நாமெல்லாம் எதிர்த்திருந்தாலும் இவரை போன்றவர்கள் எதிர்மறை சிந்தனையாளராயினும் நிச்சயம் தேவை..
பொதுவாழ்வில் வருகிறவர்களின்.. நேர்மை குறித்து பேசவேண்டும்.. அவர்களின் அந்தரங்க விடயங்கள் கேலியாக்கபடுவதை ஏற்கமுடியாது பொதுவெளியில் அவர்கள் செயல்பாடு குறித்து நேர்மையான விமர்சனம் மட்டுமே வேண்டுமே தவிர அவரின் பாலியல் ரீதியான விமர்சனம்/தாக்குதல் அனுமதிக்கமுடியாது.. ஜெயலலிதா போன்ற சிலரின் அடாவடித்தனமான செயல்பாடுகளை கூட மறைத்து ..அவரை உயர்த்தி பிடிக்கிற ஊடகங்கள் நல்ல நியாயமான தெளிவோடு கூடிய நேர்மையாக செயல்படுவோரை புறக்கணிக்கிறது.. பெரியளவில் பெண்கள் பொதுவாழ்வில் பங்களிக்கவேண்டும்.. கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டுமல்ல சமூக சேவை அரசியல் போன்ற தளங்களில் அவர்களுக்குரிய பங்கை தருவதோடு அவர்களை அவர்கள் குடும்பத்தார் முதல்..யாவரும் அங்கீகரிக்கவேண்டும்
..
அரசியலில் பொதுவாழ்வில் பெண்ஆளுமைகள் நிறைய வரவேண்டும்..
..
Aalanci Spm
Thursday, November 16, 2017
சோனியாவிக்கு கடிதம்
எழு தமிழரை விடுதலை செய்ய கருணையுடன் உதவுங்கள்- சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம்..
நன்று..
பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் சரியும்கூட.. இழப்பின் வலியை உணர்ந்து அதை காலம் சரிசெய்யுமென நம்புகிறவர்கள். கருணையோடே நடந்துக்கொள்வார்கள்..
..
இங்கே சில இம்சைகள்.. காங்கிரஸையும் சோனியாவையும் தொடர்ந்து குற்றம் சுமத்துவதும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காங்கிரஸ் காரணம் போலவும் பேசி வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுகிறார்கள் .. முள்ளிவாய்க்கால் படுகொலையில் பிரபாகரனுக்கும் பெரும்பங்குண்டு..மனிதர்கள் ஒரே இடத்தில் திரட்டி மனிதகேடயமாக முயற்சித்தது பெரியளவிலான உயிர் இழப்பிற்கு காரணமாகியது..
..
தமிழ் அமைப்புகள் காங்கிரஸை மட்டுமே குறைகூறுவது சரியான செயல் அல்ல என்பதை நிறைய முறை விளக்கியாகிவிட்டது.. சார்க் மாநாட்டில் தீவிரவாதித்திற்கெதிராக ஒருங்கிணைந்து செயல்படுவதாக ஒப்பந்தம் செய்தபோதே விழித்திருக்கவேண்டும்..இந்திய அரசு புலிகளை தொடர்ந்து தீவிரவாத அமைப்பாகவே அறிவித்ததும்.. மக்கள் மனதில் வெறுப்பையே வளர்த்தது.. தமிழகத்தி் சக போராளிகளை கொன்றது அதையெல்லாம் கண்டு இங்கிருந்த சொற்ப ஆதரவையும் .. சில சுயநலமிகள் தங்களின் வருவாய் பெருக்கத்திற்காக பயன்படுத்தியதையும்
வெகுமக்களிடையே விடுதலைப்புலிகள் மீதான பார்வை கடும்கோபம் கொண்டதாக இருந்ததும் சிலர் உணர்ச்சி வயப்பட்டபோதும் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை..
..
யாரையும் பேரடுத்து குற்றம் சொல்ல தயாரில்லை ஆனால் விடுதலைப்புலிகள் தொடர்ந்து எதிர்த்தவரையே ஈழத்தாய் என புகழ்ந்து ..
சொந்த காசை செலவுசெய்து ஈழ உறவுகளை காத்த திமுககார்களையே .. பிரபாகரனை கடும் சொற்களால் விமர்சனம் செய்கிற அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்..
..
ராஜீவ் கொலையை துன்பயியல் சம்பவமென பிரபாகரன் சொன்னபோது கூட குற்றவாளிகளில் இவர்கள் எல்லாம் சம்பதமில்லையென ஏதேனும் கருத்து சொல்லியிருக்கலாம்..
..
இன்றைக்கும் கொடுஞ்சிறையில் வாடுவது சீமானின் உறவோ.. நெடுமாறனின் குழந்தைகளோ அல்ல ..இவர்களுக்கு இது வியாபாரம் .. ஒரு தாலி அறுத்ததற்கு ஊர் தாலியெல்லாம் அறுக்கணுமா என உணர்ச்சியை தூண்டிவிட்டு சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.. வருமானமே இல்லாமல் பங்களாக்களில் சொகுசு கார்களில் உலா வருகிறார்கள்
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இனியேனும் இதை உணர்ந்து .. சோனியாவிடம் முறையிடலாம்.. வீண் வீராப்பு பேசி திரிந்தால் உண்மை பொய்யாகிவிடாது காலம் கடந்தேனும் தவறை உணர்வோம்.. மிகப்பெரிய அரசியல்தலைவரின் கொலையில் .. சம்பந்தபட்டவர்கள் யாரும் தலையிட வில்லையென்றே இருக்கட்டும் ஆம் #இட்டுகட்டியாதாகவே இருக்கட்டும் நீதிமன்றமும் அரசும் கடுமை காட்டும் போது சம்பந்தபட்டவரிடம் முறையிட்டு பயன்பெறுவோம்..
..
முன்னாள் நீதிபதியின் தாமஸின் குரல் நம்முடையதாகவும் இருக்கட்டும்..
..
Aalanci Spm
Wednesday, November 15, 2017
மனிதகழிவை மனிதனே அள்ளும் கொஞ்ம் செயலை.
தூய்மை இந்தியா திட்டத்தால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை உருவாகியுள்ளது..
மனித கழுவை அள்ளும் பணியில் தாழ்த்தப்பட்ட மக்களையே பயன்படுத்துகிறது.. என ஐ.நா குற்றசாட்டு ..
..
இங்கே ஒன்றை நாமெல்லாம் கவனிக்கவேண்டும்..
பிரதமர் அறிவித்த ஒரு திட்டம் தோல்வி என்பதல்ல ..அதை மீறி இதிலுள்ள சூழ்ச்சியை நாம் கவனிக்கவேண்டும்.. பரம்பரை பரம்பரையாக அதே தொழிலை செய்கிறவர்களை... அதிலிருந்து மாறி கல்வி அரசு வேலை என்று நகர்த்தாமல் மலக்குழியிலேயே வைத்திருக்கும் வர்ணாசிரம திட்டம் நமக்கு புலப்படும்..
..
பிரதமர் மோடி பேசும் போது தொடர்ந்து ஒரு சமூகம் பீ அள்ளிக்கொண்டிருக்கிறதென்றால் இதிலிருந்து வெளியேற மறுத்து அதை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை புனிதமாக கருதியிருக்கவேண்டுமென்கிறார்.. எவ்வளவு அயோக்கியத்தனமிது... சத்தியமூர்த்தி தேவதாசி முறை ஒழிக்கவேண்டுமென்ற முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் கேட்டபோது அது தெய்வதொண்டென்றாரே .. அதைப்போல மலம் அள்ளும் சமூகத்தை புனித பணி என கூறி அவர்களை அதிலிருந்து வெளியேற விடாமல் செய்கிறார்..
..
எத்தனையோ நவீன உபகரணங்கள் வந்துவிட்டபிறகு மலத்தை அள்ள மனிதனையே பயன்படுத்துவதும் அதை அரசாங்கமே ஊக்குவிப்பதும் கேடுகெட்ட செயல்..
அவனவன் குலத்தொழிலை அவனவன் தான் செய்யவேண்டுமென்ற மநுநீதியை இங்கே நிலைநிறுத்த பாசிச அரசு முயல்கிறது.. தெய்வதொண்டு புனிதமென சொல்லி அந்தந்த நிலையிலேயே வாழ்ந்து மரிக்கவேண்டுமென அரசே சொல்வது #அரசபயங்கரம்..
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரபடும் திட்டங்களை ஆய்ந்தால் அவர்களின் சூழ்ச்சி நமக்கு புலப்படும்..
..
மனித கழிவை மனிதைக்கொண்டே அள்ள வைப்பதும் அதை ஒரு பிரிவினர் மட்டுமே செய்யவேண்டுமென சொல்வதும் திட்டமிட்ட சதி.. ஏன் மற்றவர்களை மனித கழிவை அகற்ற பயன்படுத்தகூடாதா.. ஒரு குறுப்பிட்ட பிரிவினர்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஐ நா கண்டித்திருக்கிறது.. மீண்டும் மநுதர்ம முறைய கொண்டுவர பாஜக அரசு முயல்கிறது .. தாழ்ந்தவன் உயர்ந்தவன் இவன் இதைதான் செய்வான்.. இவன் இதை செய்தே ஆகவேண்டுமென சொல்வது மனித அநீதி அல்லவா..
..
தூய்மை இந்தியா என்பது புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதல்ல.. போஸ் கொடுத்த நடிகர்களெல்லாம் எங்கே போனார்கள் அளவிற்கதிகமாக மோடியை புகழ்ந்ததை தவிர வேறென்ன பயன் கிட்டியது.. இங்கே எல்லோரும் நடிகர்களானோம்..
..
மனிதகழிவை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முடிவுகாண்போம்..
..
Aalanci Spm
Tuesday, November 14, 2017
அதிமுக அழியும்
கோவை வளர்ச்சிப்பணிகளை ஆளுநர் ஆய்வு..
தமிழக அரசின் உரிமைகளில் தலையிடுவது அத்துமீறிய செயல் ..
..
அதிமுக கட்சியை யாரும் அழிக்க மாட்டார்கள் அவர்களேஅழித்து கொள்வார்கள்-பொன்ராதாகிருஷ்ணன்..
..
அதிமுகவினருக்கு எச்சரிக்கை .. மாநில அரசு நிர்வாகத்தை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக செயல்படாத போது இதுபோன்ற மீறல்கள் வருமென்று சப்பைகட்டுவதை விடுத்து கடும்கண்டனத்தை பதிவு செய்யவேண்டும்.. நீங்கள் ஆளாளுக்கு அடித்துக்கொண்டிருப்பதால் உங்கள் இலையில் வேறொருவன் சாப்பிடுகிறான்..
பன்னீரும் எடப்பாடியும் அதிமுகவைப்பற்றியெல்லாம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இருக்கிறவரை சம்பாதித்துக்கொள்ளவேண்டும் பணம் பதவி இரண்டும் வேண்டும் மாநிலம் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என்று செயல்படுகிறார்கள்..
பாவம் தமிழக மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட செவியேற்பதில்லை/பார்பதில்லை.. கவர்னர் தலையிடுவது கூட அவமானகரமாக தெரியவில்லை
புதுவை மாநில முதல்வர் நாராயணின் அவர்களுக்கு இருக்கும் தன்மான உணர்வு கொஞ்சம் கூட இல்லை ..
..
பொன்.ராதா வின் பேச்சில் உண்மையில்லாமல் இல்லை அதேவேளை அதிமுகவை அழிக்கும் வேளையை அதிமுககாரர்களை கொண்டே செய்வது பாஜக தான் என்ற உண்மையை மறைக்கமுயலுகிறார்.. மெல்ல கொல்லும் விசம் பாஜக என்பதை அதிமுக உணராதவரை அவர்களின் இலக்கு இலகுவாகும்.. ஆனால் ஒன்றை பாஜக மறைந்து போகிறது இங்கே அதிமுக இருக்குவரைதான் எதையாவது செய்யலாம் அதை இல்லாமல் போனால் பாஜக இருக்குமிடமே தெரியாமல் போகும்.. ..
..
ஆசிரியர் வீரமணி சசிகலாவை பின்துணைத்தபோது நான் உட்பட எல்லோருமே ஏன் இப்படி செய்கிறாரென்று சொன்னோம்.. அதன் பொருள் இப்படி புரிகிறது.. பாஜகவின் பிடியில் அதிமுக மாடிடிக்கொண்டு விழிக்கிறது .. இவர்கள் செய்த தவறை மறைக்க அதிமுகவை அடகுவைக்கிறார்கள் இந்த எச்சிலைகள்..
அதிமுக திராவிட இயக்கத்தின் செயல்திட்டங்களை முன்னெடுப்பதில்லை என்றாலும் மாற்று அரசியலுக்கு மக்களுக்கு பயன்பட்டது ..
..
சசி குடும்பத்தை குறிவைத்து மத்தியரசு செயல்படுவதிலேயே எந்தளவிற்கு பாஜக பயப்படுகிறதென்பதை புரிந்துக்கொள்ளலாம்..
சாதீய கட்சிகளின் மதவெறியர்களின் கையில் நாடு போகாமல் இருக்கவேணும் அதிமுக என்ற கொள்கையற்ற கட்சி தேவை.. அது பாசிச,சாதிவெறியர்களுக்கு மாற்றாகவாவது இருக்கும்..
..
திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதற்கெதிரான கட்சியாக அதிமுக வரவேண்டுமே தவிர .. சாதி,மத வெறியர்கள் கூட்டமல்ல..
அதிமுகவினர்கள் இப்போது விழித்துக்கொள்ளாவிட்டால் நிறைய சிரமங்களை சந்திப்பார்கள்..
..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
Monday, November 13, 2017
திராவிடம் தோற்றதா...
திராவிடயிசம் எங்கே உள்ளது என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதை பத்திரிக்கையாளர் Sa Sufiyan நியாயபடுத்தியிருக்கிறார்.. அதற்கு அவர் சொல்லும் காரணம் .. கருணாநிதி குடும்பம் தொடங்கி எம்ஜிஆர் ஜெயலலிதா என எல்லோருமே கோவிலுக்கு போகிறார்கள் என்கிறார் ஜோதிடத்தை நம்புவதாகவும் சாதிய அடிப்படையிலேயே தேர்தலில் வாய்ப்பு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்.. கூடவே நிர்மலா உண்மையை பேசியிருப்பதாகவும் சப்பைகட்டுகிறார்..
..
முதலில் திராவிட கொள்கை என்பதை கடவுள் மறுப்பிற்குள் சுருக்கபார்க்கும் பார்பனர்களின் பழைய பல்லவியை வேறு சுரத்தில் பாடுகிறார்..
நீதிக்கட்சியின் வளர்ச்சியான திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான கொள்கை non bhramin பிராமணர் அல்லாதோருக்கான இயக்கம்.. அதாவது கல்வி வேலைவாய்ப்பில் பிராமணர் அல்லாதோருக்கான உரிமையை பெற்று தருதல் அதிலிருந்து வளர்ச்சியை எட்டிய திராவிட இயக்கம் .. பிராமணர்களுக்கெதிராக என்பதையும் தாண்டி.. இடஒதுக்கீடு பெண்ணுரிமை சமதர்மம்.. அனைவருக்குமான சமநீதி..என செயல்பாடுகளை விரிவாக்கியது.. இதற்கெல்லாம் இடைஞ்சல் தருகிற கடவுள் மறுப்பையும் பெரியார் முன்னெடுத்தார்..
..
அதற்காக அவர்கூறும் காரணத்தை கூர்ந்து கவனித்தால் அதிலுள்ள உண்மை புலப்படும்.. இந்த சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை கலையவேண்டுமென விரும்பினேன் .. அது சாதிய கட்டமைப்புக்குள் இருப்பதை கண்டேன்.. சாதிய மறுப்பை கையிலெடுக்கலாமென்ற போது அது வேதம் சொன்னதென்றார்.. அந்த வேதத்தை கொளுதிதலாமெென்ற போது அது கடவுள் அருளியதென்றார் அந்த கடவுளை எதிர்ப்பதென முடிவுக்கு வந்தேன் எனக்கென்ன கடவுள்மேல் தனிப்பட்ட வெறுப்பா என்றார்...
..
இன்றைய திராவிடம் பேசுவோர் மதநம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை .. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் உரிமைகளில் இயக்கம் எப்போதும் இடபடாது ..
அதேவேளை மதவெறியோடு செயல்படுவோருக்கு எதிராகவே எப்போதுமிருக்கும்.. மற்றொரு குற்றசாட்டு சாதி பார்த்து ஆளை நிறுத்துகிறார்கள் என்கிறார்.. மறுக்கவில்லை அந்தந்த பகுதிகளில் வாழும் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கபடுவது இயல்பான ஒன்று அவர்களுக்குரிய பிரதித்துவம் வேண்டுமென்பதற்காகவே தவிர .. சாதியை தூக்கிபிடிக்கவேண்டுமென்பதற்காக அல்ல.. அப்படி சாதிய சிந்தனையோடு செயல்பட்டிருக்குமாயின் எப்போதோ துடைத்தெறியபட்டிருக்கும்.. இப்போது கூட சாதிய சங்கங்கள் கட்சியை தொடங்கி நடத்திவந்தாலும் அவர்களால் சாதியை சொல்லி வெற்றிபெற முடியவில்லையே.. ஏன்..இங்கே சாதியை தூக்கிப்பிடித்தால் மக்கள் புறக்கணிப்பார்கள்..
மதத்தை கொண்டோ சாதியை மைய்யபடுத்தி இங்கே வெற்றி பெற முடியாமல் போகிறதே .. இதிலிருந்தே திராவிடம் இன்னமும் இங்கே அசைக்கமுடியாத சித்தாந்ததமாய் இருப்பது தெரியவில்லையா..
..
திடீரென்று ஒருநாள் மக்களை சந்திக்காமல் புறவாசல் வழியே அரசியலுக்கு வந்தவருக்கு வேண்டுமானால் இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம் .. சுபியான் போன்ற ஊடகவியலாளருக்கு தெரியாமல் போனதை ஏற்கமுடியவில்லை..
..
Aalanci Spm
Sunday, November 12, 2017
அரிதாரம் கலையும்
திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு..
நடிகர் பிரகாஷ்ராஜ்..
சரியென்றே,தோன்றுகிறது..காரணம் நிறைய பார்த்துவிட்டோம் எம்ஜிஆர் என்டிஆர் ஜெயலலிதா சிரஞ்சீவி வரை.. சினிமாவை போலவே பொய்களால் கட்டபட்டதால் அவர்கள் தொடர்ந்து
வரலாறு நெடுக தவறிழைத்து கொண்டே போனார்கள்.. கவர்ச்சியை மூலதனமாக்கி அன்றைய நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் .. தொலைநோக்கு சிந்தனையோ எதிர்கால நலனைப்பற்றிய அக்கறையோ சிறுதுமின்றி ஆட்சி செய்வார்கள்..
தமிழகம் ஒன்றே போதும்.. எம்ஜிஆர் எனும் மாயையும் ஜெயலலிதாவை தொடர்ந்து வந்தது ஆட்சி முழுக்க கோணலாகவே போனது..
அரசியலுக்கு அறிவுடையோர் தேவையில்லை அடிமைகள் போதும் அல்லது சிந்திக்க தெரியாத சிந்தித்து செயல்படாதோர் போதுமென்ற நிலை உருவாகிவிட்டது..
..
இதோ இப்போது கண்கூடாக பார்க்கிறோமே.. ஜெயலலிதா எத்தனை கேவலமான ஆட்சி செய்திருக்கிறாரென்று .. எல்லாநிலைகளும் மிக மோசமான விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.. அனுபவம் ஏதுமில்லாமல் ஆசை ஒன்றையே நோக்காக கொண்டதால் தமிழகம் சீரழிவை சந்திக்கிறது..
இந்நிலையில் நடிகர்கள் நாடாள ஆசைபடுவதைதான் பிரகாஷ்ராஜ் விமர்சித்து கருத்துகூறியிருக்கிறார்..
..
சினிமா ரசிகனை .. கவர்ந்திழுக்கும் கைங்கர்யம் அரசியலில் தோல்வியை தந்திருக்கிறது.. என்ன லட்சியத்திற்காக வருகிறார்கள்.. நாட்டை நன்னாக்கவா..இதுவரை எங்கிருந்தார்கள் முகம் சாயம் வெளுக்கும் போது இழந்த மதிப்பை சரிசெய்ய அரசியல் ,பொதுதொண்டென்பது இதுவரை அக்கறையில்லாத தன் நலம் சார்ந்த சுயநலத்தை மட்டுமே நமக்கு சொல்கிறதல்லவா..
மேற்கூரிய இருவருமே அரசியலை தங்களின் சுயலாபத்திற்காக சம்பாதியத்தை உயர்த்திபிடிக்க பயன்படுத்தினார்களே தவிர நிச்சயம் சமூகநலமோ .. நல்லெண்ணமோ சிறுதும் இருந்ததில்லை..
..
இவர்களின் கொள்கை என்ன .. எந்தமாதிரியான செயல்திட்டம் இவர்களிடம் உண்டு ஏதேனும் மக்கள் பணியாற்றியிருக்கிறார்களா.. என்ன காரணத்திற்காக வருகிறார்களென்பதை தெளிவுபடுத்தவேண்டாமா... சினிமாவில் கதைநாயகன் வேசம் கட்டினால் நல்லதை மட்டுமே செய்வானென்ற பழைய கஞ்சியை கொண்டு விருந்துவைக்காதீர் .. இப்போதெல்லாம் ஆண்டி ஹீரோ வே தேவலாம்.. சினிமாவும் கவர்ச்சியும் ரசிகனும் மட்டுமே மூலதனமென்றால் இது எழுபதுகள் அல்ல.. நிழலை நிஜமென்று நம்பி வாய் பிழந்து நின்றது.. இப்போதெல்லாம் வருவதற்குமுன்னே நிறைய எதிர்கேள்விகள் கேட்க தொடங்கிவிட்டார்கள்... இதோ பெருமழைக்காலத்தில் என்ன செய்தீர்கள்.. இருக்குமிடத்தில் கூட மக்களோடு சேர்ந்து அவர்களின் துன்பங்களை கவலையோடு பார்த்தீர்களா.. குளுகுளு அறையில் அமர்ந்துக்கொண்டு அரசியல் செய்வதெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்..
ஆம்.. இவர்கள் போன்ற அரிதார பூச்சுக்கள் பேரழிவையே தரும்..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
Saturday, November 11, 2017
அரசு சொத்து அடமானத்தில்
₹2,453 கோடிக்கு அரசு போக்குவரத்துக்கழக சொத்துகளை அடமானம் வைத்துள்ளது தமிழக அரசு...
இதுதான் இன்றைய நிலை..
..
#கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். என்றான் வள்ளுவன் ..
கோமாளிகள் கையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது..
நடுநிலையற்ற தான் தோன்றித்தனமாய் நடக்கிற அரசு நிதி ஆதாரத்தை இழந்தே நிற்கும்..
..
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ₹60,000 கடன்.. எதாவது நல்ல திட்டமிருக்கிறதா இந்த சூழலில் கூட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கபடுகிறது.. அமைச்சர்கள் இருக்கிற ஆதாயமென ஆற்றுமணல் தொடங்கி எல்லாவற்றிலும் கமிஷன் தொகை பேசபட்டு வெளிபடையாகவே கொள்ளையடிக்கிறார்கள்.. முன்பெல்லாம் அடித்த கொள்ளையில் பங்கு மேலிடத்திற்கு (ஜெ-சசி) கொடுக்கவேண்டும் இப்போது அது தேவையில்லை நேரடியாகவே கொள்ளையடிக்கிறார்கள்..
..
ஊழலுக்காக அதிமுக அமைச்சகர்கள் தண்டிக்கபட்டது புதிதல்ல முன்பு மருங்காபுரி பேராசிரியர் பொன்னுசாமியும்..நாகூர் பிச்சையும் நீதிமன்றத்தாலே தண்டிக்கபட்டு சிறைசென்றார்கள. இதோ இப்போது சசிகலா ...
உயிரோடிருந்திருந்தால் கிரிமினல் ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார்.. ஆனாலும் கொஞ்சம் கூட குற்றபோதமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள்
..
அரசு இயந்திரம் ஊழலால் கட்டமைக்கபட்டிருக்கிறது எதற்கும் அஞ்சுவதில்லையென ஊழல் எல்லாவற்றிக்கும் ஒரு விலை ..அரசு இயங்க அரசின் சொத்துக்களை அடமானம் வைக்கவேண்டிய சூழலை ஏற்படுத்திருக்கிறார்கள்..நிர்வாக சீர்கேடு எல்லாத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது முறையாக வரிவசூல் வந்தும் வருவாயை பெருக்க முயற்சிக்காமல் எப்போது ஆட்சி கவிழுமோ என்ற அச்சத்தில் கிடைக்கிற வரை லாபமென செயல்படுவதால் ..ஒட்டுமொத்த நிர்வாகமும் செயல்படாமல் நிற்கிறது..
..
அமைச்சர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே ஏதேனும் தேறுமா என்றுதான் எண்ணுகிறார்களே தவிர எதுவும் நடந்தபாடில்லை..
கம்பம் ஜக்கையன் எம்எல்ஏ காசு வாங்கிகொண்டுதானே வாக்களித்தீர்கள் பிறகு ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறார்.. எவ்வளவு அவமானம்.. இந்த கேடுகெட்டவர்களை ஆட்சி அமைர்த்த விலைபோன வாக்காளனை எண்ணி வேதனை கொள்ளவேண்டிருக்கிறது..
யாரும் எதற்கும் அஞ்சாமல் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் .. வந்தவரை லாபகணக்கில் செயல்படுவதால் நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது..
இன்னும் மிதமுள்ள காலத்திற்குள் அரசை திவாலாக்கிவிடுவார்கள்..
..
நாம் நட்டதே முளைத்தது..
குற்றம் சொல்லி பலனில்லை..
விலைபோகிவிட்டபிறகு ..யாரை குறைச்சொல்ல
₹500 க்கும்₹1000 க்கும் நம்மை அடகுவைத்ததால் அவன் அரசு சொத்தையே அடகுவைக்கிறான்..
..
இனியேனும் கவனமாய் இருப்போம்..
..
Aalanci Spm
Friday, November 10, 2017
கிரிமினல் ஜெயலலிதா
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதி கிரிமினல் ஜெயலலிதா தான்..
ஆம் இன்றைக்கு சசிகலா வகையறாக்கள் மீது தொடுக்கபடும் கேள்விகள் அனைத்தும் ஜெயலலிதாவை கேட்கவேண்டியவை இத்தனை சொத்துக்கள் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் நடந்ததென சொன்னால் ஜெயலலிதா சிறந்த நிர்வாகியென்றோ எல்லா தெரிந்தவரை போல இரும்பு பெண்மணி என்று ஊடகங்கள் கட்டமைத்தது பொய்யென்றல்லா ஆகிவிடும்..
ஜெயலலிதாவிற்கு தெரிந்தே தான் நடந்ததென சொத்துகுவிப்பு வழக்கில் மிக தெளிவாக குன்ஹா தீர்ப்பெழுதியிருந்தார் ஆனால் தமிழகம் காவடி தூக்கியும் மொட்டையடித்தும் .. குற்றவாளியை கொண்டாடியதே ஊடகங்கள் அவர்மீதான பார்வையை அப்பழுக்கற்றவர் போல கொண்டிருந்ததே இதெல்லாம் அயோக்கியத்தனமில்லையா.. சசிகலா மட்டுமே அல்லது அவரது குடும்பத்தை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து ஜெயலலிதாவை புனிதராக்கும் செயல் கயமைத்தனமில்லையா..
..
சசிகலாவை ஒருமுறை என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கூறி வெளியேற்றதை கொண்டாடிய ஊடகம் தான்.. இருவரும் இணைந்த போது இருபெரும் பெண் ஆளுமைகளென கூறியது.. ஊடகங்கள் என்றைக்காவது ஜெயலலிதா சசி வகையறாவிற்கு இத்தனை சொத்துக்கள் எப்படி வந்ததென கேட்டதுண்டா.. இன்றைக்கு ஊடகங்களும் சமூகவலைத்தளங்களில் பேசபடும் சங்கதிகளில் எதிலாவது கிரிமினல் ஜெயலலிதாதான் இதற்கெல்லாம் காரணமென்று கூறுகிறதா..
இப்போதும் கூட ஜெயலலிதா புனிதராக்க எவ்வளவு முயற்சிகள்.. அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி குற்றவாளியை கொண்டாடுகிற கேடுகெட்டத்தனத்தை ஏன் யாரும் கேள்விகேட்பதில்லை.. ஜெயலலிதாவிற்காக தீர்ப்பை தாமதபடுத்த முடிகிறதே ..அதே அளவுகோல் சசிகலாவிற்கில்லை என்கிற போது ஏன் யாரும் பேச மறுத்தார்கள்.. இதில் வர்ணம் இல்லையா..
..
சசிகலாவை தூக்கிபிடிக்கவில்லை மாறாக எல்லாவற்றிக்கும் காரணி கிரிமினல் ஜெயலலிதா என்று சொல்லவேண்டும்.. இந்தியாவில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறைக்கு சென்ற தலைவர் .. முதல்வராக இருக்கும்போதே .. பதவி நீக்கம் செய்யசெய்யபட்டவர்.. உச்சநீதிமன்றம் தண்டித்த குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவுமண்டபம் எழுப்பபடுவதை மக்கள் வரிபணத்தை செலவு செய்வதை கேட்க வக்கில்லாத ஊடகங்கள் .. சசிகலா வகையறாவை மிகபெரிய கொள்ளைக்காரர்கள் போல பேசுகிறது.. திருடர்கள் ஜாக்கரதை என்ற பலகை அல்லவா ஜெயாவும் சசியும் சேர்க்கபடவேண்டும்..
..
சசிகலா குற்றவாளியென்கிற போது ஜெயலலிதாவும் குற்றவாளியென பொது அரங்கில் பேசபடவேண்டாமா.. குற்றம் சாட்டபட்டவர்கள் அல்ல இவர்கள் குற்றம் நிரூபிக்கபட்டு தண்டனை பெற்றவர்கள்.. சசிகலா வகையறாவிடம் கண்டெடுக்கபடும் ஒவ்வொரு தொகையிலும்/சொத்திலும் ஜெயலலிதாவின் பங்குமிருக்கிறது..
..
#ஜெயலலிதா_முதல்குற்றவாளி_no1criminal..
..
Aalanci Spm
லட்சுமி
லட்சுமி..
குறும்படம்.. என்ன சொல்லவருகிறது.நீ சரியா இருந்தா நானும் சரியா இருப்பேன் இல்லைன்னா நானும் அப்படிதான் .. இதுதான் பெண்ணியமென்று இயக்குனருக்கு யாரோ தவறாக சேதி சொல்லியிருக்கிறார்கள் .. ஒருவரின் தனிப்பட்ட உரிமைகளை தலையிட கூடாதென்பதின் அளவுகோல் இதுவல்ல..
..
போக்குவரத்து நிறுத்தபட்டு கட்டியவள் வர முடியாமல் தவிக்கிற போது கூட வந்து அழைத்துச்செல்ல மறுக்கிற கணவரை .. தூக்கியெறிநிது விட்டு நானொன்றும் உன் உணர்ச்சிகளின் வடிகால் இல்லையென .. வாழ்க்கையென்பது புரிதல் ..சமமான உரிமைகளை தருவது என வெளியேறியிருப்பாராயின் .. லட்சுமியை கொண்டாடியிருக்கலாம்.. சாதாரண சக மனிதன் கூட அக்கறையோடு பஸ் ரயில் ஓடல பார்த்து போமா என கூறுகிற நிலையில் எநித கணவனும் அதுக்கென்ன .. என்பதும் எங்கம்மாவீட்டில தங்கிட்டு வரேன் என்றவுடன் காலையில யார் சமைப்பா என்பதும்
காலையில சீக்கிரம் வந்திடுறேன் என பதில் சொல்கிற கணவனோடு வாழ்வது வீண் என சொல்லியிருக்கவேண்டும்..
..
அது ஒரு இரவில் பாரதியார் கவிதை சொல்லி .. முற்போக்குத்தனமாக பேசினால்.. எந்த
பெண்ணையும் படுக்கைக்கு கொண்டுவந்திடலாம் அவ்வளவு பலவீனமானவளா பெண்.. எத்தனையோ பெண்கள் விடாபிடியாக வென்று காட்டியிருக்கிறார்கள்.. பெண்ணை பலவீனமாக சித்தரிப்பது சினிமாவில் மட்டுமே காணமுடியும் தனியாக சாதித்துகாட்டியிருக்கிற பெண்கள் .. குடும்ப சூழலிலும் அமைதியாக வென்றிருக்கிற எத்தனையோ பெண்மணிகளை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.. அதேவேளை பெண்ணுக்கு மட்டுமே கற்பெற்கிற நாற்றமடித்த சிந்தனையை ஏற்கமுடியாது.. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்கிற ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வது இருவருக்குமே சலிப்பை தரும் .. அதைவிட பொறுப்பற்ற இணையரோடு இருவருமே வாழ்வது ஒருவகை போலித்தனம் ..
..
ஒரு குறும்படம் அதிகம் விமர்சிக்கபட்டதும் இப்போதுதானென நினைக்கிறேன் அதிலும் பெண்ணை (லட்சுமி) பரத்தை என்கிற விமர்சிக்கிற சூழல் பக்கா ஆணாதிக்க திமிர்.. ஒரு தவறு (தவறென்போருக்கு) ஒருபெண்ணைப்பற்றி (பாத்திரத்தை ) எடைபோட முடியுமென்பதோ தீர்மானிப்பதோ சரியான அணுகுமுறையல்ல..
சராசரி மனிதனாக கூட நடந்துக்கொள்வதரோடு வாழ்வது ..அல்லது ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு வாழ்வதென்பது கடைந்தெடுந்தெடுத்த கயமைத்தனம்..
..
தூக்கியெறிந்து விட்டுவெளியேறியிருந்தால் லட்சுமியை கொண்டாடியிருக்கலாம்..
..
Aalanci Spm
Thursday, November 9, 2017
ரெய்டு
வருமானவரித்துறை ஜெயலலிதா மீது ஒரு வழக்கு பதிவு செய்தது..
பதினெந்தாண்டுகள் வழக்கு நடந்தது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள்( IT ரெய்டின் போது கிடைத்தது) போதுமானதாக இருக்கிறதென நீதிபதி தீர்ப்பு தேதியை குறிக்கிறார்.. புதிதாக ஒரு மனு வழக்காடுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா..
..
அபராதத்தோடு செலுத்தவேண்டிய தொகையையும் அதாவது வருமானத்திற்கதிகமாக சேர்த்த தொகைக்கு வரியையும் செலுத்திவிடுகிறேன் என்கிறார்.. அதாவது திருடிய தொகைக்கு வரியை இதுவரை செலுத்தாதற்கான வட்டி உட்பட அபராதமும் சேர்த்து தருவதாக சொல்கிறார் ..
அதை வருமான வரித்துறை ஏற்பதாக சொல்லி வழக்கிலிருந்து ஜெயலலிதா&கோ வை விடுவிக்கிறார்..
..
இவ்வளவுதான்.. இந்திய வருமானவரித்துறையின் லட்சணம் தினகரன் இன்று நாங்கள் பார்க்காத சிறையா என்று பேசமுடிகிறதென்றால் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட சலுகைகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை..
மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயா சசிகலா கட்சியைவிட்டு நீக்கபட்டபோது தன் ராஜகுரு சோவை தான் மிடாஸ் இயக்குனராக நியமித்தார்.. சோ வீட்டிற்கு ரெய்டு போகுமா..
..
இதுபோன்ற பரிசோதனைகள் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கிறதா.. முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக சொல்வதும் விசாரணைக்கு அழைப்பதும் கைது செய்வதும் தற்காலிகமாக அவர்களின் செயல்பாடுகளை தடையலாமே தவிர வேறொன்றும் பயனிருப்பதாக தெரியவில்லை..
..
இதுவரை IT ரெய்டு எந்த பிராமணராவது சிக்கியிருக்கிறாரா.. சுதந்தர இந்தியாவில் ஆடிட்டர்களில் பெரும்பாலோனர் அவர்கள் தான் எல்லா திருட்டுகளும் அவர்களுக்கு தெரியும் முறையாக அவர்களை விசாரித்தாலே எவ்வளவு கருப்பு என்று புள்ளிவிபரத்தோடு சொல்லிவிட முடியும் இவையெல்லாம் மத்தியில் ஆள்வோர் தங்களின் பகடைக்காக பயன்படுத்துகிறார்களென பட்டவர்த்தனமாக தெரிகிறது.. சேகர்ரெட்டிக்கு பணம்போனதே தெரியாதென சொல்கிற நாட்டில் ரெய்டுகளால் பலனில்லை.
..
ரெய்டு குறித்துபொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன் அவர்கள்
கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் SIT (சிறப்பு புலனாய்வு குழு) நியமித்தது அது மோடி ஆட்சிக்கு வந்த நேரம் இறக்குமதி ஏற்றுமதியில் 6000 கோடி ருபாய் அளவிற்கு வருமான ஏய்ப்பு செய்த ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி விட்டு வருகிறது, அடுத்த சில நாட்களில் டெல்லி சிபிஐ அந்த ரெய்டை நடத்திய அதிகாரியிடம் சோதனை நடத்தி கார்ப்பரேட் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டுபோய் விடுகிறது அந்த சிறப்பு அதிகாரி மாற்றப்படுகிறார்..
இதைதான் இப்போது காண்கிறோம்..
போன ரெய்டுக்கு ஏன் நீங்க வரலன்னு அதிகாரிகளை பார்த்து சசி குடும்பம் கேட்க நிலையில் தான் ரெய்டு.. இத்தனை இடத்தில் ரெய்டா .. என்போருக்கு இவ்வளவிற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம் அதை ஏனோ பேச மறுத்து சசி மீதும் மட்டுமே குற்றம் சாட்டுவது ..ஜெ உயிரோடு இருக்கிறவரை தீர்ப்பை சொல்லாமல் செத்தபிறகு தீர்ப்பை சொன்னதை போலதான்..
..
#ரெய்டு_பக்கா_பாஜகஅரசியல்..
..
Aalanci Spm
Wednesday, November 8, 2017
செல்லாகாசு
சென்ற ஆண்டு இதேநாளில்
எழுதியது..
..
1978 ல் திரு.மொராஜி தேசாய் 5000 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்றார்.. கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லையென காரணம் சொன்னார்..
78 ல் ₹5000 ₹1000 என்பதெல்லாம் பெரியதொகை சாதாரண மக்களிடம் இருக்காது அதனால் பெரியளவில் தாக்கத்தை /பாதிப்பை தரவில்லை
..
ஏறக்குறைய 38 ஆண்டுகள் பின்னிட்டும் கள்ளநோட்டுகளை கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லை..
திரு.மோடி உருக்கமாக பேசி நாட்டுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ளவேண்டுமென்கிறார் நன்று
சிரமங்கள் சாதாரண இந்தியனுக்கு பழகியதுதான்..
ஏனெனில் அவன் மட்டுமே பாதிக்கபடுகிறான்.
பெருத்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரியகாரியமே அல்ல. இந்த நடவடிக்கையால்
கள்ளபண புழக்கத்தை இது சரிசெய்துவிடுமா என்றால் இல்லையென்றே பதில் வரும் .. காரணம் பணிவர்த்தனையை இலகுவாக்கியிருக்கிறார்.. ₹2000 நோட்டுகள் அதிகளவில் கடத்த மாற்ற வகை செய்யும் .. ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு சர்வசாதாரணமாக மக்கள் கைகளில் வந்துவிடும்....
வரி ஏய்ப்பு செய்து கள்ளபணமாக வைத்திருப்பார்கள் என நம்புவது எவ்வளவு கிறுக்குத்தனம்.. எலேலோருமே பினாமிகள் பெயரில் சொத்துக்களாக #asset ஆக வைத்திருப்பதே சாத்தியம் அல்லது தங்கங்களாக..
பணமாக வைத்திருக்கமாட்டார்கள் .. நேற்றையதினம் ஏழையும் நடுத்தரமும் தான் தெருவில் நின்றது..
பெரும் முதலைகளை கிரிடிட்கார்டுகளில் காலம்தள்ளுபவர்கள் தெருவிற்கு வரவேண்டிய அவசியமில்லை..
..
இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு சிலருக்கு தெரியுமென்கிறார்கள் அந்த சிலர் யார் நிச்சயமாக நீங்களோ நானோ பக்கத்துவீட்டுபரமசிவனோ அல்ல..#அறியவேண்டியவர்கள்_அறிந்துக்கொண்டார்கள்
இந்த நடவடிக்கையால் அம்பானிகளும் அதானிகளும் பாதிக்கபட்டிருப்பார்கள் என நினைத்தால். நாம் தான்
கூறுகெட்டவர்கள் அம்பானி வேலைக்காரன் ரிசர்வ் பேங்க் ஆளுனராக இருக்கும் போது காத்து #கருப்புக்கள் அண்டாது..
நேர்மையாக வரிசெலுத்தாதவன் தானாக வந்து வாழ்த்துச்சொல்கிறான்..கருப்பு வெள்ளையும் கலந்து நிற்பவன் .. நம்முன் நடிக்கிறான்..
..
ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கில் பணம் வங்கியை தேடிவருகிறது இத்தனை பணத்தை யாருக்கெல்லாம் கடனாக தரபோகிறது என்பதை கொஞ்சம் கவனித்தால் இதன் நோக்கம் புரிந்துவிடும். . அம்பானிகளும் அதானிகளும் தொழில் தொடங்க இனி பணத்திற்கு பஞ்சமில்லை...ஜனநாயக நாட்டில் ஜனநாயக வழியில் ஒரு சர்வாதிகாரம்.. நினைத்ததும் முடிக்கலாம்.. ஒன்றுமட்டும் உண்மை..
ஏழைகளில் சேமிப்பு செல்லாகாசானது
..
#பெரும்தொழில்அதிபர்கள்_ஆட்சிசெலுத்துகிறார்கள்.
..
Aalanci Spm
கருப்புபணம்..
எங்கே போனார்கள் என்று பார்க்கிறேன்..
யாரையும் காணோம்.. புதிய இந்தியா பிறந்தது வாழ்த்துகள் மோடி ஜி என்ற ரஜினி தொடங்கி இன்னமும் நம்பிக்கையிருக்கிறது என கடைசியில் மன்னிப்பு கோரும் கமல் வரை.. நல்ல வசனத்தை கேமிராவிற்கு முன்பு பேசுவதோடு நிறுத்தியிருக்கலாம்.. இடையில் காமெடியன் வேறு நோட்டில் சிப்ஸ் இருக்கு கள்ளபணத்தை கண்டுபிடித்துவிடலாமென மக்களிடம் கூத்தடித்தவர்கள்..
எந்தவொரு விடயத்தையும் அறிந்திராமல் கருத்து சொல்வது எவ்வளவு ஆபத்தானதென்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்..
அப்படிதான் எல்லோரையும் நம்பவைத்தார் மோடி.
இதோ இனி கள்ளநோட்டோ கருப்புபணமோ இந்தியாவில் இருக்காதென்றார்.. அப்போது தெரியவில்லை ஒட்டுமொத்த கருப்பையும் அமிர்ஷாவிடம் கொடுத்து வெள்ளையாக மாற்றிக்கொள்ளமுடியுமென்று ..
..
ஆம் கவிஞர் மேத்தா வரிகளில் சொல்லவேண்டுமெனில்..
#கொள்ளை நோட்டுக்களும்
கள்ளநோட்டுக்களும்
குளிர்சாதன அறையில்
கூடி பேசுகின்றது
பாவம்
நல்ல நோட்டுக்கள்தான்
அலைகின்றன
நடுத்தெருவில்..
..
ஆம்.. சேகர்ரெட்டி போன்றவர்களால் ₹2000 கோடிகளை பெற முடிந்தது சாமானியன் ₹4000 ரூபாய் வாங்க கையில் கருப்புமை வைக்கபட்டது..
இந்திய பொருளாதாரம் இறங்குமுகமாகுமென டாக்டர் மன்மோகன்சிங் நாடாளுமன்ற உரையாற்றியபோது சிலர் காங்கிரஸிற்கெதிராக கம்பு சுத்தினார்கள்.. அறுபதாண்டுகள் பாழாக்கிவிட்டது என்றெல்லாம் சொல்லி கடைசியில் இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்கிறது..
பித்துக்குளி தலையில் கிரீடம் சூட்டியதன் விளைவை மக்கள் அனுபவபூர்வமாக உணர்கிறார்கள்.. பாஜகவிலேயே இருபிரிவினர் .. சிலர்
மோடியையும்.. மோடியின் ரசிகர்கள் ஆர்எஸ்எஸையும் கைகாட்டி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் மோடியின் அவசரத்தனமென்று சிலரும்.. மோடியை இயக்குவதே பாசிச கும்பல்தானென சிலரும் மாறி மாறி கதைத்து கைநழுவ பார்க்கிறார்கள்..
..
எங்கே போனது கருப்புபணம்.. நல்ல பணமாய் மாறி நம்மை பார்த்து சிரிக்கிறது..இதில் கொடுமை.. திரை உலகத்தை சேர்ந்த நடிகர்கள் கலைஞர்கள் மோடியை உச்சிமுகர்ந்து புகழ்ந்ததுதான் வேடிக்கை.. ரஜினி,கமல், சூர்யா தனுஷ்.. இவர்களெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ அதற்கு சரியாக வரிகட்டியவர்கள் ..நம்பவேண்டும் .. 2014 வருமான வரித்துறை அளித்த தகவல்படி .. ரஜினி சம்பளம் ₹4 கோடி கமல் 3. .. இதுதான் இவர்கள் அந்த ஆண்டில் சம்பளமாக பெற்று நடித்தார்கள் இந்தளவிற்குதான் அவர்கள் வருமானமிருந்தது என நம்பவேண்டும் கருப்புபணமா அதெல்லாம் என்னவென்றே தெரியாதவர்கள்.. இவர்கள்தான் மோடியின் கருப்புபணயொழிப்பை .. புதிய இந்தியா பிறந்ததாக கொண்டாடியவர்கள் ..
..
கருப்புபணமோ குளுகுளு அறையில்
நல்ல பணமோ நடுத்தெருவில்..
..
Aalanci Spm
Tuesday, November 7, 2017
மா.நன்னன்
முனைவர்.மா.நன்னன்..
..
பேராசிரியர் முனைவர்.மா.நன்னன்.. நிறைய கற்று தந்தவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்க பாடுபட்டவர்..
அய்யா அவர்களோடு நிறைய முறை சந்தித்து அளவளாவியிருந்தாலும் இரண்டுமுறை உரையாடிய இனிய அனுபவம் மறக்கமுடியாதவை..
திராவிடர் கழகம் ஜெயலலிதா ஆதரித்து நின்ற போது சந்தித்து கொஞ்சம் கடுமையாக விவாதித்தது நினைவுக்கு வருகிறது.. அப்போது அவர் சொன்ன வார்த்தை இப்போதும் சரியென்றே தோன்றுகிறது.. இங்கே யாரும் பெரியாரில்லை ..எத்தனை ரத்தின சுருக்கமாக சொன்னார் என்பதை இப்போது நினைத்துபார்க்கிறேன்.. சில வரலாற்று தவறுகள் எல்லா இயக்கப்பணியிலும் நடக்கும்.. அதையெல்லாம் மீறி கொள்கை மிளிரும்.. எல்லாவற்றையும் கடந்து போக நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என்பார்.. எந்த சூழலிலும் கொள்கை பிறழ் வராமல் பார்த்துக்கொண்டவர்..
..
இரண்டாண்டு முன்பு பெரியார் திடலுக்கு என் மகளோடு சென்றிருந்தேன் மறுநாள் மாட்டிறைச்சியும் மத அரசியலும் என்ற தலைப்பில் ஆசிரியர் உரையாற்றுகிறார்.. முதல் நாளே சில தகவலுக்காக சென்றிந்தபோது பேராசிரியர் வருகை தந்திருந்தார் அவரை ஆனால் சந்திக்க முடியவில்லை.. மறுநாள் ஆசிரியர் உரை முடிந்த பிறகு கூட்டம் கலைந்த பிறகு சந்திக்கலாமென காத்திருந்தேன்.. ஆசிரியரோடு உரையாடிவிட்டு வெளியேறிய சமயத்தில் அருகில் சென்று நலம் விசாரித்தேன் என்னையும் நலம் விசாரித்தார் .. எழுத்தில் கொஞ்சம் கவனம் தேவை என்றார்.. கடும் கோபத்தில் இருக்கும் போது எழுத்தை தவிர் .. எதையாவது வாசி என்றார்.. சிரித்துக்கொண்டே நகர்ந்தேன்..
..
சிலநேரங்களில் கடிதம் மூலம் கோபத்தை காட்டியிருக்கிறேன் மாறனின் தவறான முடிவென்று பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தபோது எழுதியிருக்கிறேன்.. நம்மை விட அரசியலை அறிந்தவர் கலைஞர் .. நம்பலாமென மறுபடி தந்தார்.. ஆம் கொள்கையை விட்டுகொடுக்காமல் நம்மை நேர்வழிபடுத்துபவர்.. முதன் முதலில் சந்தித்ததும் பெரியார் திடலில் தான் இறுதியாக நான் சந்தித்ததும் பெரியார் திடலில் தான்..
..
இப்போதுகூட நல்ல நினைவாற்றலோடு இருக்கிறேன் இயக்க செயல்பாடுகளுக்கு என்னை பயன்படுத்தி கொள்ளுங்களென தளபதியிடம் சொல்லியிருக்கிறார்.. தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்.. நாம் அன்றாடும் பேசும் வழக்கில் கூட வந்துவிடும் தவறுகளையெல்லாம் சரி செய்தவர்.. எழுத்தறிவித்தலில் #நன்னன்_முறையை என்ற புதியமுறையை அறிமுக படுத்தியவர்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் கொள்ளும் ..
..
கடைசி வரை பெரியாரின் பெருந்தொண்டராகவே வாழ்ந்து மறைந்தவர்..
..
போய்வாருங்கள் ஆசானே..
..
Aalanci Spm
Monday, November 6, 2017
பொதுவுடைமை போலிகள்
அறிவியல் பூர்வமான சமூக விஞ்ஞானமான மார்க்சிய தத்துவமே, இந்தியா சந்திக்கும் சவால்களில் இருந்து விடுதலை அளிக்கும் என
இடது கம்யூ தமிழ்மாநில பொதுசெயலர் ஜி.ராமகிருஷ்ணன்..
நூற்றாண்டு பின்னிட்டும் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் .. இந்தியாவில் இவர்களின் நிலை ஏன் பரிதாபகரமானது அல்லது சுருங்கிப்போனது..
இந்த பொதுவுடமைவாதிகள் எங்கே நிற்கிறார்கள் என்று பாருங்கள் இவர்களின் தத்துவத்திற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா ஆனால் அழைக்காமலேயே ஓடிபோய் நின்றார்களே ஏன்.. எந்தவொரு அரசியல் முடிவையும் அன்றைய சூழலை மட்டுமே ஆலோசித்து எடுத்தால் தொலைநோக்கு புதைந்து போகும் அப்படி தொலைநோக்கு சிந்தனையில்லாத திட்டங்களும் செயல்பாடுகளும் பொதுவுடமை சித்தாந்தத்தை புதைத்து விட்டதென எண்ணுகிறேன்..
இந்தியாவில் மார்க்சியம் தோற்று வெகுநாட்களாகிவிட்டது இன்றைய காம்ரேட்களுக்கு தெரியவில்லைபோலும்.. ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் வங்கத்தை ஆண்ட இவர்களால் மனிதனை மனிதனே இழுக்கும் இழிவிலிருந்து மீட்க முடியவில்லை.. பொலிட்பீரோ என்கிற அதிகாரபீடத்தில் பார்பனர்கள் கையில் இருந்தது/ அவர்கள் அதை வெகு சாமர்த்தியமாக வளரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்..
பொதுவுடமை சித்தாந்ததிலிருந்து வெகுவாக விலகி கரைந்து மறைந்து போனார்கள் ...
உலகெங்கும் கம்யூனிஸம் வெகுவாக மறைய தொடங்கும் வேளையில் தோழரின் பேச்சு சற்று நகைச்சுவையாக தோன்றுகிறது உலகமயமாக்கல்/தாராளமயமாக்கல் நோக்கிய உலகநாடுகளில் அதிவேக பாய்ச்சல் தொழிலாள வர்க்கத்தை மிகவும் அடிமைத்தனத்திற்கு அல்லது மிருகத்தைவிட கேவலமாக நடத்தபடுகிற நிலைக்குதான் கார்ப்பரேட் நடந்துக்கொண்டிருக்கிறது/நடத்திக்கொண்டிருக்கிறது.. இதை கம்யூனிஸ நாடுகள் கூட பின்பற்ற தொடங்கிவிட்ட காலகட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்..
..
இந்திய வர்த்தக சந்தையை குறிவைத்து உலகின் பிரபல கார்பரேட்டுகள் வியாபார அரசியலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் .. விரும்பியோ விரும்பாமலோ மக்களும் அதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது மார்கிசியம் பேசுகிறார்..கொள்கை அரசியலிருந்து பின்னோக்கி பயணிக்கும் ராமகிருஷ்ணனும் சகாக்களும்.. இந்தியாவிற்கு ஏற்றது மார்க்சியம் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. கேரளாவில் இடதுசாரிகள் எல்லாம் கார்பரேடுகளோடு கைகுலுக்கி சந்தை செய்கிறார்கள் வங்கத்திலோ புறக்கணிக்கப்பட்டு.. அவர்களின் #தீதியோடு கைகோர்த்துவிட்டார்கள்..
..
இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் மதவாதம் ஆனால் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரிக்கும் சிலரோடு கைகோர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்திய சந்திக்கும் சவால்களுக்கும் அதுவும் அறிவியல்பூர்வமான சமூகவிஞ்ஞான பூர்வமான சவால்களுக்கு தங்களின் சித்தாந்தமே சரியென்கிறார்..
இந்தியாவில் தோல்விகண்ட கம்யூனிஸம்.. கம்யூனிஸ்ட் உச்சபட்ச அதிகார மையத்தில்/சபையில் (பொலீட்பீரோ)
இருப்பவர்களை /இருந்தவர்களைஒருமுறை கவனித்தாலே போதும் உயர்மட்டத்தில் உயர்வகுப்பினரே ஆட்சி செலுத்துவார்கள் .. பொலீட்பீரோவில் ஒரு பெண் வருவதற்கு கூட விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.. இவர்கள் பேசும் பொதுவுடமை என்பது #நோக்கு_கூலி ரகம்..
அதிலும் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பொதுவுடமையின் போலிகள்..
..
#சாயம்வெளுத்த_செஞ்சட்டைகள்…
..
Aalanci Spm
திராவிட பெருவுடையார்
திராவிட பெருவுடையாரை சந்தித்தார் பாரத பிரதமர்..
இன்றைய தினம் மகிழ்ச்சி பெருக்கில்.. காரணம் பிரதமரே வந்து சந்தித்தார் என்பதால் அல்ல.. எங்கே அந்த செய்தி பெரியதொரு விடயமாக பேசபடுமோ தாக்கத்தை தந்திடுமோ என்று கூட யோசித்தேன் ..ஆனால் கலைஞரின் வருகை
சில நொடிகளிலேயே வெளியே வந்து தொண்டர்களை மக்களை சந்தித்து கையசைத்தார் பாருங்கள் அங்கே எல்லாம் அடிபட்டு போனது..
அதுதான் கலைஞரின் அரசியல் எதை எப்போது செய்யவேண்டுமென்பதில் எதை செய்தியாக்கி முன்னிலைபடுத்த வேண்டுமென்பதை கலைஞரைப்போல தீர்மானிக்க இந்திய அரசியலில் எவருமே இல்லை.. மோடி வந்து போனதை கூட மறந்து சிரித்து நிற்கிறான் உடன்பிறப்பு..
..
திடீரென பிரதமர் வருவதாக சொன்னதும் சிலர் வேறுமாதிரியான சூழல் உருவாக போகிறதென்றெல்லாம் சொல்லி திரிந்தார்கள்.. ஆண்டவரை தரிசிக்க யார் வேண்டுமானாலும் வரலாம் தரிசனம் பொதுவானது வருகிறவர்களை வரவேற்பதும் வீடு வரை வந்தவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடுவதும் கோபாலபுரத்து பெருவுடையாரின் பழக்கம்..
மோடிக்கு தெரியும் தமிழகம் வருகை பெரிய விளம்பரம் வேண்டுமெனில் .. இதுவரை தம்மை துரத்திக்கொண்டிருக்கிற திராவிட போராளிகள் சத்தத்தை குறைக்கவேண்டுமெனில் பெருவுடையாரை தரிசிப்பதை தவிர வேறுவழியில்லையென்று.. GST , பணமதிப்பிழப்பு ..என..தொடர்ந்து வரும்
கடும் கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிவருமென்பதால் பெருவுடையாரிடம் சரணாகதியாகி நின்ற காட்சியை ரசிக்க தோன்றியது..
ஆம்..
அவருக்கு புரியும் எந்த சூழலிலும் கொள்கை மாறாத .. போர்க்குணத்தோட
படை நடத்தும் இந்த பெருமகனை .. வயோதிகம் ஒன்றும் செய்துவிடாது ..எந்நேரமும் மக்களின் துடிப்பை அறிந்து செயலாற்றும் பெரும் கருவி ..
தமிழகம் செய்த பெரும் தவத்தால் கிடைத்த பெருவுடையார்.. அவரை சந்தித்து பாவம் போக்கலாமன்றிருப்பார்கள்..
..
ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு.. கலைஞரின் கை அசைவு..
ஒரு கை அசைத்தே கவனத்தை தம் பக்கம் ஈர்க்கமுடியுமென சமிக்கை தந்திருக்கிறார்.. இனியும் சூரியனைச் சுற்றி எதுவுமே நடக்கும்
தமிழக அரசியல் இந்த #சூரியனைச்சுற்றித்தான்..
..
#தெற்கிலிருந்தும்_சூரியன்_உதிக்கும் …
..
Aalanci Spm
Sunday, November 5, 2017
கமல்..எனும் பாசிசம்
ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக் கொண்டிருந்தோம். ..கமல்
இல்லை கமல் அவர்களே
ஐம்பது ஆண்டுகளாக உங்கள் பூணூலை மறைத்துக் கொண்டிருந்தீர்கள்.. ஆனாலும் அதையெல்லாம் மீறி அடிக்கடி எட்டிபார்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்..
..
கொஞ்சம் கவனித்தால் புரியும் இதுவரை கமல் பாஜகவை விமர்சிக்கவே இல்லை .. ஆனால் பகுத்தறிவு வேடம் கட்டி நம்மை விமர்சிப்பார். விமர்சனம் செய்யட்டும் அதில் காரியமாக ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.. ஐம்பதாண்டுகள் என யாரையெல்லாம் சொல்கிறார் ..
அண்ணா கலைஞர் மகோரா ஜெயா ஆட்சி .. நாங்களே மகோரா ஜெயா ஆட்சியை திராவிடத்தின் ஆட்சியாக கருதியதில்லை திராவிட போர்வையில் ஏறக்குறை பாசிச கைகூலிகளின் ஆட்சி அது .. இங்கே நேரடியாக வலம் வரமுடியாதென்பதால் திராவிட போர்வையில் ஆட்சி செய்தார்கள் அதனால் மயிலு குயிலென்றென்லாம் பெயர் சூட்டி மத்தியில் ஆள்வோரை/அதிகாரிகளை குளிர்வித்து ஆட்சி செய்தார் .. ஜெயாவோ நேரடியாகவே இந்துத்துத்துவவாதிகளை செயல்படவிட்டார் கடைசி காலங்களில் அவர்களாலேயே மிரட்டலுக்கும் ஆளானார்.
..
அண்ணா.. கலைஞர் இருவரின் ஆட்சியில் இன்று காண்கிற நல்ல திட்டங்கள் காலம் கடந்தும் பயனளிக்கிற திட்டங்கள் .. ஒடுக்கபட்டிருந்த சமூகத்திலிருந்தவர்களை கை கொடுத்து மேலிழுத்து அவர்களை சரிசமாக நடமாடவிட்டது..
ஆண்டே சாமி என்றழைத்தவைனை .. யோவ் அய்யரே என அழைக்க காரணமானவர்கள் பெரியாரும் அண்ணாவும் தான் .. இன்றைக்கு நாங்களெல்லாம் உம்மை போன்றவரை எதிர்த்துநின்று கதைக்கிறோமே அதெல்லாம் பெரியாரும் அண்ணாவும் கற்று தந்ததுதான்..
ஏன் என கேட்க வைத்ததும் திராவிடம் தான். நூற்றாண்டாய் எங்களை பழக்கி பழக்கி..திருந்துடா திருந்துடா என பெரியார் எங்களை திட்டி திட்டியே சொரணையை வரவைத்து .. இனி எக்காலத்திலும் பாசிசத்தை காலூன்ற வைக்காமல் பார்த்துக்கொள்ள பழக்கியிருக்கிறார்கள்.. அதனால்தான் சின்ன சின்ன அசைவுகளை கூட எங்களால் இனம்காண முடிகிறது..
..
கமல் அவர்களே .. உங்கள் நடிப்பை ரசிக்கிறவன் என்பதற்காக தமிழனை மதிமயக்கத்திலேயே வைத்திருக்கலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது எழுபதுகளில் நடந்த தவறுகள் இனியும் இங்கே நடக்காதென்பதை காலம் உணர்த்தும்
..
கட்சி நடத்த நிதியை ரசிகர்கள் தருவார்கள் மிக கவனமாக காசை எடுக்காமல் அடுத்தவன் தலையை தடவுகிறீர்.. கொள்கைக்காக கட்சி தொடங்கினால் தாமாக முன் வருவார்கள். வெறும் டீயும் பண்னையும் தின்றுவிட்டு கட்சி பணியாற்றுவான் .. ரசிகன் தருவான் என்கிற போதே முதலீடு செய்ய சொல்வது புரிகிறது..
முதலில் எதேனும் ஒன்றில் தெளிவாக நில்லுங்கள்..
மிக தெளிவாக சிந்திக்கிற மக்கள் .. தனிகட்சி தொடங்குவதாக சொல்வது கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குவதைப்போல.. விரைந்து இறங்குங்கள்
பாஜகவை விமர்சிக்காமல் அங்கொரு காலும் இங்கொருகாலும் வைக்காமல் ஒரே இடத்தில் நிற்க பழகுங்கள்.. தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு .. இருபக்கம் அடிவாங்க நானென்ன மத்தளமா.. என்கிறீர் அதைதான் சொல்கிறோம்
ஏன் சங்கடபடவேண்டும்.. கறுப்புச்ச்டை போர்வில் காவி சிந்தனையோடு திரியவேண்டும் நேரடியாக பாஜகவில் சேர்ந்து எதிர்நின்று போராட வா.. மறைந்துநின்று தாக்கும் ராமசந்திரன் பரம்பரையே.. நேர் வா..
..
இல்லையெனில் வாய்மூடி போ..
..
Aalanci Spm
Mansoor Mohammed..
ஆலஞ்சியார்
Saturday, November 4, 2017
காலத்தின் வெகுமதி
கலைஞர் எங்களை கவிதை நயத்தோடு திட்டுவார், ஸ்டாலின் பட்டவர்த்தனமாக திட்டுகிறார்..என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
..
கலைஞரின் விமர்சனங்கள் நயத்தோடு இருக்கும் எதிர்ப்பை கடுமையாக அதேவேளை இலக்கிய நயமாக சொல்லிவிடுவார்..
தன் சிலை உடைக்கபட்டபோது கூட ..
#செயல்படவிட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்ன தம்பி
என் முதுகில் குத்தவில்லை
நெஞ்சில் தான் குத்துகிறான்
அதுவரை நிம்மதியெனக்கு
என்று பாட முடிந்தது..
..
அதே போல் மகோராவை (எம்ஜிஆரை)
மானமிகு வாலியை
மறைந்து நின்று தாக்கிய
மாண்புமிகு ராமசந்திரனை
மாவீரனென்று
மகாகவி கம்பனே ஏற்றுக்கொள்ளவில்லையென பாடமுடிந்தது..
..
கவி நயத்தோடு சொற்களை அள்ளி வீசுபவர் கலைஞர் அவரைப்போல இனி யாரும்,இப்படி தனி ராஜாங்கம் நடத்தமுடியுமா என தெரியாது ஆனால் அவர் காட்டிய வழியில் .. அவர் பயிற்சியில் அவரது மேற்பார்வையில் தளபதி வேகமாக செயல்படுகிறாரென்பது அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார்..
..
தளபதி விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை .. தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்துகிறார் அவசரமில்லாமல் அதே வேளை ஆணித்தரமாக சொல்லவந்ததை சொல்லிவிட்டு போகிறார்.. தளபதியின் வளர்ச்சி சிலருக்கு உறுத்தலாம் ஆனால் காலம் செய்த தேர்வு தளபதி.. அவரைச் சுற்றிதான் இனி தமிழக அரசியல் ..
அவரின் கருத்து மட்டுமே இனி அரசியலின் திசையை தீர்மானிக்கும்.. தளபதியை தவிர்த்து ஒரு அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.. அவரின் கருத்துகள்/பேச்சுகள்/நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கபடுகிறது தமிழகம் காத்து நிற்கிற தலைவராக உருவாகிறார்.. ஆம் யாரும் தலைவராக உருவாக முடியாது அதை காலம் தான் தீர்மானிக்கும் அப்படி காலம் உருவாக்கிய தலைவர்தான் தளபதி அவர்கள்....
..
நிறைய புலம்பல்கள் வரும் அது சாதீய மத உணர்வுகளை தூண்டகூடும்.. இனத்தை மொழியை ஆயுதமாக்கி போரிட முயற்சிக்கும்..பழைய வரலாற்று கசப்புகளை தோண்டியெடுக்கும் எங்கோ எப்போதோ நடந்த சில நிகழ்வுகளை முன்னிலைபடுத்தும்..பிரதான எதிரிகளோடு சேர்ந்து வீழ்த்தலாமெனஆசை கொள்ளும்.. வாரிசு அரசியல் .. திராவிட அரசியல் என்றெல்லாம் கூப்பாடு போடும்.. எப்படியேனும் வீழ்த்திவிட முடியாதா என ஜோதிடம் என்ற பொய்யை பரப்பகூடும்.. இதோ இவரை விட இவரின் பங்காளி சரியான தேர்வு என முடிச்சு போடும்.. இவர் பின்னால் அணிவகுக்கும் சாமானியனை சொறிந்துவிடும்.. ஆனால் இவையாவும் தவிடுபொடியாக்கி. தள்ளிக்களைய வேண்டியவை..
எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி ..எல்லாவற்றையும் கடந்து நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் நம் தளபதி #காலத்தின்_கட்டாயம்…
..
#தளபதி_காலம்தந்த_பரிசு..
..
Aalanci Spm
Mansoor Mohammed
Friday, November 3, 2017
எனது உரிமை..
கமல் மீது வழக்கு..
உ.பி. வாரணாசியில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அப்படியென்ன சொல்லிவிட்டார்.. விகடனில் கேரள முதல்வருக்கு எழுதிய செய்தியில் இனி இந்து தீவிரவாதிகளை காட்டுங்களென அவர்களால் இனி சொல்லமுடியாதென கூறியிருக்கிறார்.. அதாவது இந்து தீவிரவாதமும் இருக்கிறதென எழுதியது அவர்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது அதனால் அவரை தீவிரவாதியென்றும் தீவிரவாத்திற்கு துணைபோகிறவர் என்றும் அவரிடம் #தேசபக்தர்கள்..? கவனமாக இருக்கவேண்டுமென்றும் பாஜகவினர் சொல்கிறார்கள்.. தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகையெடுத்தவர்கள்..
..
முதலில் கமலில் கருத்துரிமையை எதிர்க்கிறார்கள் அதோடு மிரட்டுகிறார்கள் அதாவது யாரும் இந்து மதவெறியைப் பற்றி எந்த எதிர்கருத்தும் சொல்லகூடாதென்று அதுமட்டுமல்ல மதத்தை சொல்லி இவர்கள் நடத்தும் கேடுகெட்ட அரசியலை குறைகூற கூடாதென்கிற சர்வாதிகார திமிரும் இதில் வெளிபடுகிறது.. எழுத்துரிமை பேச்சுரிமைக்கெதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல் .. தபோல்கர் தொடங்கி கௌரி லங்கேஷ்வரை எதிர்கருத்தாளர்களை கொன்று மற்றவர்களை பேச கூடாதென்கிற மறைமுக மிரட்டலை விடுக்கிற இவர்கள் தீவிரவாதிகள் இல்லையா..
..
கமலின் கருத்தோடு நிறைய வேறுபட்டிருக்கலாம் ஆனால் வழக்கென்றும் தீவிரவாதியாக சித்திரிப்பதும் ஒரு வகை கோழைத்தனம்.. இந்துமதத்தை கேவலபடுத்துவதே கமலுக்கு வேலையாக போய்விட்டதாகவும் கேரள முதல்வரை சந்தித்தின் விளைவு அவர் கம்யூனிஸ்டாக காட்டிக்கொள்ள இப்படி பேசுவதாகவும் .. ₹2000 யில் சிப் இருக்கென்ற மேதை எஸ்.வி.சேகர் .. சுப்ரமணிய சுவாமி.. நாடு கடத்தவேண்டுமென்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்..
..
ஒன்று மட்டும் புரிகிறது மதத்தை முன்னெடுக்காமல் இவர்களால் ஒரு மயிரும் புடுங்கமுடியாது.. இவர்கள் உண்மையில் ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதை செய்தாலும் அதை அப்படியே நம்பவேண்டுமென எண்ணுகிறார்கள்.. அறிவிற்கு வேலை தராது மக்களை சிந்திக்க வைக்காமல் மத நம்பிக்கையென்ற பெயரில் பொய் பித்தலாட்டத்தை
மக்களிடம் பரப்பும் இவர்கள் உண்மையிலேயே ஒழிக்கப்படவேண்டியவர்கள்.. இந்துமதம் வாழ்வியல் முறையாம் .. எப்படி தலையில் பிறந்தவன் மட்டுமே வாழ வழிச்சொல்லும் முறை மிக சிறந்த வாழ்வியல் முறையா.. ஏற்றதாழ்வில்லாமல் அனைவரும் சமமான உரிமையோடு வாழ சொல்லாத ஒரு வழிமுறையை எதன் பெயரில் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க மட்டுமல்ல பின்பற்றாதீர்களென கூற இங்கே எஸ்லோருக்கும் உரிமை உண்டு..
..
கமலில் கொள்கையில் நமக்கு உடன்பாடில்லையென்றாலும் அவரது கருத்தை புறந்தள்ள முடியாது அவரின் கருத்துரிமையும் கூட..
..
#My_right…
..
Aalanci Spm
யது கிருஷ்ணன்
யது கிருஷ்ணன்..
இந்த பெயரை கேட்டிருப்பீர்கள் முதல் தலித் அர்ச்சகர்
கேரள இடதுமுன்ணணி அரசு கோவில் அர்ச்சகராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்த நியமித்தது அப்போதே சிலர் பார்பனர்கள் இனி கேரளா சென்றால் கோவில்களுக்கு செல்லகூடாதென்றெல்லாம் ட்விட் செய்தார்கள்..
இப்போது இவர் கையால் பிரசாதம் வாங்குவதை சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் தவிர்த்து அருகிலுள்ள கோவில் பிராமண அர்ச்சகர் கையால் வாங்கி செல்வதாக வருத்தபட்டிருக்கிறார்..
அதாவது அவர் பூஜை செய்யும் நெல்லிக்கனி தேவி கோயிலில் இவரிடம் யாரும் பிரசாதம் வாங்குவதில்லையாம் ..
தேவி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சாஸ்தா கோவில் பிராமணர் அர்ச்சகர் இடம்போய் பிரசாதம் வாங்கி செல்வதாக மிகவும் மனம் வருந்திகூறுகிறார் யது கிருஷ்ணன்..
..
அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமென்றாலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் அதிகமிருப்பதாக சொல்லிக்கொண்டாலும்.. இன்னமும் மூடபழக்கவழக்கங்களை அதிகம் நம்புகிற அதில் மூழ்கி கிடக்கிற கூட்டம் சற்று அதிகம் அங்கே உண்டு.. எந்தவொரு நிகழ்விற்கும் பணிக்கரை அழைத்து சோலி உருட்டி நேரம் பார்க்கும் அதி முட்டாள்த்தனம் கொண்டவர்கள் அதிகம்.. அதனால் தான் இதுபோன்ற விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பி யதுவிடம் பிரசாதம் வாங்க யோசிக்கிறார்கள்.. இது மூடத்தனம் மட்டுமல்ல ஒருவகையான யுத்தமும் கூட .. கடவுளின் கருவரைக்குள் காலம்காலமாய் தாங்கள் மட்டுமே ஆட்சி செய்ததை அதுவும் தொட்டாலே தீட்டென்கிறவனை நுழைய விட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து இவர்கள் செய்யும் விசமத்தனம் இது .. திட்டமிட்டே குறிப்பாக பெண்களிடத்தில் இவர் கையால் வாங்கினால் அது தோஷம் என்று செய்தியை கசிய விடுகிறார்கள் .. சட்டென்று நம்பிவிடும் பெண்களின் மனநிலையை பயன்படுத்தி
குழப்பம் விளைவிக்கிறார்கள்..
இனியும் இதுபோன்று தலித் நியமனங்கள்
நடக்ககூடாது .. நியமிக்கபட்டவர்களையும் பின்மாற செய்யவேண்டுமென்று சதி செய்கிறார்கள்..
..
அரசு உடனே இதுபோன்று பரப்புரையில் ஈடுபடுவோரை இனம் காண வேண்டும் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும்.. காலகாலமாக ஏமாற்றி பிழைத்த பிழைப்பில் மண் விழுந்துவிட்டதென்றெண்ணி இவர்கள் நடத்தும் நாடகத்தை உலகறிய செய்யவேண்டும்..இனியும் நிறைய பட்டியலின சகோதர்களை அர்ச்சகர்களாக Priests நியமிக்க வேண்டும்..
..
யதுவிற்கு
இதுபோன்று நிறைய சங்கடங்களை தருவார்கள் மறைந்துநின்றே தாக்கி பழக்கமுடையவர்கள் புறவாசல் அரசியல் மட்டுமே செய்ய தெரிந்தவர்கள்..
நேர்நின்ற கதைக்க அஞ்சுகிற கூட்டமது.. ஏற்றதாழ்வுகளை கடவுள் பெயரால் பரப்பி அதில் தாங்கள் மட்டுமே வாழவேண்டுமென நினைக்கிறவர்கள்.. நிறைய அம்புகள் பலதிசையிலிருந்தும் வரும்.. எய்தவன் யாரென்றே தெரியாது.. எதுவாயினும்
தொடர்ந்து பணியாற்று.. ஆம்..
துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய் கொண்டே இரு..
..
#இனி_நமது..
..
Aalanci Spm
Wednesday, November 1, 2017
தகிடுதித்தோம்
தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு கடுமையான நெருக்கடியை மத்திய தொலைத் தொடர்பு துறை கொடுப்பதாக தகவல் வருகிறது ஒரு கவுன்சிலர் சீட் கூட வெற்றி பெற முடியாத பாஜக பிரதிநிதிகளை அழைத்து ஏன் எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து கேட்க வேண்டும் ..
விவாதித்தில் பங்கேற்க செய்யவேண்டும்
திருமுருகன் காந்தி ..
..
அவர் சொல்வதில் தவறில்லை ..
யாரென்றே தெரியாதவர்கள் திடீரென பொருளாதார நிபுணராக ..அவரே அரசியல் விமர்சகராக, நடுநிலையாளராக சமூக ஆர்வலராக பாஜகவாக வருகிறார் ஒருவருக்கு எத்தனை முகங்கள்.. வலுகட்டாயமாக பாஜகவை சேர்ந்தவர்களை அழைத்துவந்து அவர்கள் கருத்துக்களை மக்களிடம் திணிக்கும் செயலை தொலைக்காட்சி ஊடகங்கள் செய்கிறது.. எந்த சேனலும் விருப்பட்டு செய்வதாக தெரியவில்லை மாறாக கட்டாயபடுத்தி தங்களின் பிரதிநிதிகளை பாஜக திணிப்பதாகவே தெரிகிறது இது யதேச்சயமாக நடப்பதாக தெரியவில்லை எல்லா விவாதங்களிலும் திமுக அதிமுக பங்கேற்கிறதோ இல்லையோ பாஜகவின் ஆட்கள் பங்கேற்கிறார்கள்..
..
அதிகாரம் கையிலிருப்பதால் அழுத்தம் Pressure
தந்து தொடர்ந்து பங்கேற்க செய்வதால் பாஜக வளர்கிறதென்ற தோற்றத்தை ஏற்படுத்தலாமென எண்ணுகிறார்கள் ஆனால் பெரிய பலனை தராது இடைவிடாது கூச்சல் போடுவதால் சலிப்பையே தரும் அமைப்பு ரீதியாக காங்கிரஸூக்கு இருக்கிற பலம் கூட பாஜகவிற்கில்லை.. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் நிறைய பேர் பாஜக போன்ற மதத்தை கையிலெடுக்கிற கட்சியை பின் நிற்கிறார்களே தவிர பெருவாரியான பிற சமூக மக்களிடம் பெரியதொரு தாக்கமில்லை அதைவிட தமிழகமக்கள் சாதி மதம் சொல்லி பிரிவினை உண்டாக்குவோரை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்..
..
நிறைய குறுக்கு வழிகளை கையாண்டு பார்க்கிறார்கள் உளவுத்துறை ரிப்போர்ட் என்று சில நாட்களாக கசியவிடுகிறார்கள் அதில் எடப்பாடி அரசை பிடிக்கவில்லையென 89 % பேர்
இதில் 80 % மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லையாம் அதில் 46 % பேர் தி மு க வுக்கும் வாக்களிக்க மாட்டார்களாம்.
இதில் ரஜினிகாந்த் 19 % சதவீதம் ,. விஜய் 9 %,. கமல் 4 % சதவீதமும் பெறுவார்களாம்
பா ஜ க மத்திய உளவுத்துறை அறிக்கையை பார்த்து விட்டு திகைத்து போய் விட்டதாக சொல்லி செய்தியை கசிய விட்டிருக்கிறார்கள் ..
அதாவது ரஜினிக்கு 19 % பேர் ஆதரவு இருப்பதாக உளவுத்துறையை கொண்டு பிரசாரம் செய்யும் உக்தி எப்படியாவது ரஜினியை கொண்டுவரவேண்டுமென்று பாஜக பல முயற்சிகளை மேற்கொள்கிறது அதில் இதுவும் ஒன்று ..
..
நிறைய உளவுத்துறை ரிப்போர்ட்களை பார்த்தவர்கள்.. இதெல்லாம் எதற்காக செய்படுகிறதென்று அறிவோம்.. தினம் ஒரு ஆளை அனுப்பி ஆதரவாக பேசவைத்தாலும் மக்களிடம் எடுபடாது .. காரணம் மிக எளிது இது தமிழகம் பெரியாரிய தாக்கம் இல்லாமல் எதுவும் நடக்காது..
அந்தளவிற்கு எம்மைபண்படுத்தியிருக்கிறார் #பெரியார் ..
இங்கே #தகிடுதித்தோம் வேலைக்காகாது..
..
அமைப்பு ரீதியாக பலமில்லாதவர்கள் வெற்றிபெற முடியாதென்கிற எளிய உண்மை தெரியாமல் தினம் தினம் உள்ளேன் அய்யா சொன்னாலும் கரைசேர முடியாது.. சர்வ அதிகாரமும் தங்களுக்கிருப்பதாக எண்ணி ஊடகங்களை மிரட்டலாம் உளவுத்துறையை பயன்படுத்தலாம்.. களம் வேறுமாதிரியான பதிலடியை தரும்..
..
#திராவிடமண்
..
Aalanci Spm
Subscribe to:
Posts (Atom)