Thursday, October 12, 2017
ஆபத்தானவர்
பிரதமர் அலுவலகத்தின் கிளை ஒன்றை சென்னை திறக்கலாம் பாமக ராமதாஸ்..
ஆம்..
..
வேலைவெட்டியில்லாதவரை பார்க்க வெட்டிபயல்கள் அடிக்கடி வாசம் செய்வார்கள் அதைபோல இருக்கிறது அடிமைகளின் படையெடுப்பு.. எனக்கு தெரிந்து இந்த வருடம் பிரதமரை அதிகமாக சந்தித்த தலைவர்..? பன்னீராகதானிருக்கும்.. முதல்வரின் கடிகத்தை கொண்டுபோய் கொடுக்க போனாராம்.. கூரியர் பையன் வேலையெல்லாம் செய்கிறார்..
எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டுமென
மொத்தத்தையும் அடகு வைத்தாவது அடைந்துவிட வேண்டுமென்ற வெறி.. தொடரோட்டம் ஓட சொல்கிறது..
மக்கள் நலனுக்கெதிராக எதில் வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன் என்று தமிழகத்தை நிர்கதியாக்கி.. உதய் திட்டம் நீட் தேர்வென நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு .. மொத்தமாய் அடகுவைத்த அயோக்கியத்தனத்தை பன்னீர் சிரித்துக்கொண்டே செய்கிறார்..
..
எனக்கும் எடப்பாடிக்கும் பிரச்சனை ஏதுமில்லை என்கிறார்.. பன்னீர்.. தானாகவே சொல்வதிலிருந்தே புகைவது தெரிகிறது.. இவர்கள் யாவரும் பதவிக்காக எதையும் செய்பவர்கள் பாஜகவின் சொல்லிற்கிணங்க இவர்கள் ஆடுவார்கள் .. தேர்தல் வரும்வரை இவர்களின் கூத்திதுதான்.. என்றைக்கு இரு சாராரும் இவர்களால் பலனில்லை என உணர்கிறார்களோ அப்போது தூக்கியெறிந்துவிடுவார்கள்..
..
தமிழகம் கண்ட அரசியல்வாதிகளில் மிகவும் ஆபத்தானவர் பன்னீர்.. தனக்காக எதையும் செய்ய துணிகிறவர் .. யாரையும் காட்டி கொடுக்கவோ செய்யவோ தயங்கமாட்டார்..
தனக்கு மகுடம் சூட்டி அழகுபார்த்த வரை ..தன்னை உயரத்திற்கு உயர்த்தி கொண்டுபோனவரையே புறமிருந்து தாக்கிய கோழை.. இவரை போன்றவர்கள் பொதுவாழ்விலிருந்தே விரட்டபடவேண்டும்..
..
ஆலஞ்சி
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment