Monday, October 9, 2017
கிறுக்கு..
தமிழிசையின் இம்சை தாங்க முடியவில்லை..
ஐந்துமுறை திமுக ஆண்டதே ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவில்லையென கேள்வி எழுப்புகிறார். அனந்தன் தன் மகளை மருத்துவம் படிக்கவைத்தற்கு பதில் அரசியல் படிக்க அனுப்பியிருக்கலாம்..
தமிழக அரசியலே தெரியாமல் தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார்.. இந்த சாணார் இன மகள்..
..
1970 டிசம்பரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் புரட்சிகரமான சட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார் ஆனால் பார்பனர்களும் தீட்சதர்களும்
உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். ஆகமவிதிகளை கற்றுணர்ந்தவரே அர்ச்சகராக வேண்டுமென தடை பெற்றார்கள்.. திரும்ப திமுக ஆட்சிக்கு வந்த போது.. ஆகம விதிகளை கற்க அரசு சார்பில் வகுப்புகள் எடுக்கபட்டது..
..
2006 ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது தனியாக ஒரு சட்டம் இயற்றி சைவ, வைணவ ஆகம பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்..
இதற்கும் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றார்கள் கடவுளுக்கு சேவை செய்ய பட்டயபடிப்பு பெற்றால் மட்டும் போதாது அதற்கு சில தகுதிகள் வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்
காலம்காலமாக இறைப்பணி செய்து வருகிற எங்களின் வாழ்வு பாதிக்கபடுமென்றும் இறைப்பணிக்காகவே சேவை செய்பவர்கள் நாங்கள் என சொன்னார்கள்.. பிறகு அதிகாரத்திற்கு வந்த ஜெயலலிதா வழக்கை சரியாக நடத்தாததாலும் பார்பனர்களுக்கு ஆதரவாக வழக்கை செயலிழக்க செய்தார்..
அதன் விளைவாக நமக்கு எதிராக
2015-ல் தீர்ப்பு வந்தது...
அப்போதே மேல்முறையீடு செய்யவேண்டுமென திமுக வலியுறுத்தியது.. சரியான காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைக்கவில்லையென கலைஞர் குற்றம் சாட்டினார்..
..
இதெல்லாம் தெரியாமல் தமிழிசை வாய்க்கு வந்ததை பேசுகிறார்..ஏன் திமுக 5 முறை ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை என்கிறார்..
..
நடப்பு அரசியலை கூட அறிந்திராதவராக இருப்பது குமரி மண்ணுக்கே கேவலம்.. சிறந்த தமிழறிவும் அரசியல் அனுபவமும் கொண்ட அனந்தனுக்கு இப்படியொரு அறிவில்லாத பிள்ளை..
தினம் தினம் எதையாவது பேசுவேண்டுமென்பதற்காக உளறகூடாது..
இது போன்ற உளறல்களை தொடர்ந்து செய்தால் மனநலம் குறைபாடுடையவராக தான எண்ண தோன்றும்..
..
#கிறுக்கு..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment