Friday, October 27, 2017

சிறுபகையே.. சீண்டாதே..

பெரியாரியம் பேசுகிற கறுப்புச்சட்டைகாரர்களும் பொதுவுடமை பேசும் சிவப்பு சட்டைகாரர்களும் பட்டியலினத்தில் இருக்கிறார்கள் ஆனால் நில நிறம் அணிந்த அம்பேத்கரிஸ்ட்கள் பிற்படுத்தவராக. இருக்கிறார்களா..? என்கிறார். பா.ரஞ்சித் .. அம்பேத்கரை முன்னெடுப்பதில் தவறேதுமில்லை ஆனால் பெரியாரியவாதிகளும் காம்ரேட்களும் அம்பேத்கரை மதிக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.. முதலில் அம்பேத்கர் சரியாக படித்துவிட்டு வந்திருக்கலாம்.. பெரியாரை மிகவும் மதித்தவர் மட்டுமல்ல இங்கே பெரியார் போன்ற ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என வருத்தியவர் .. வடநாட்டில் பெரியாரை போன்ற ஒருவர் பிறந்திருந்தால் இந்த இழிநிலை வடமாநிலங்களில் வந்திருக்காது தலித்கள் மீசை வைத்துக்கொள்ள கூட அனுமதிக்க மறுக்க சமூகபார்வையில் இருக்கிறது இந்திய மாநிலங்கள் தமிழகத்தில் தான் திமிரோடு கூட பேசமுடியும் நான் இந்த திமிரோடு என்ற வார்த்தையை புண்படுத்த பயன்படுத்தவில்லை மாறாக அடங்க மறு அத்துமீறு என உரக்க சொல்லமுடிகிற சூழலை நினைவூட்டுகிறேன்.. நிறைய தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரை பின்பற்றியிருக்கிறார்கள் இன்னும் சொல்லபோனால் இடைசாதிகாரர்கள் அம்பேத்கரை முன்னெடுத்ததைப்போல பட்டியலின தலைவர்கள் கூட முன்னெடுக்கவில்லை.. .. அம்பேத்கரை முன்னெடுத்தால் மட்டும் மாற்றத்தை தந்திடும் என்றால் வடமாநிலங்களில் பட்டியிலனத்தவர்கள் வாழ்வு மேம்பட்டிருக்கவேண்டும்.. அதனால் அம்பேதேகரிஸம் தேவையில்லை என்பதல்ல பொருள் .. அதிகம் படித்த மேட்டுத்தனம் அம்பேத்கரிடமிருந்ததால் .. எளியவனும் புரிகிற மொழியில் பேச மறந்ததால் பெரியாரை போல அண்ணலால் வெற்றிப்பெற முடியவில்லை..சாமானியனுக்கு உரைக்கிற மாதிரி பேசினார் செயல்பட்டார் #பெரியார் அதனால்தான் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிந்தது.. அங்குதான் அம்பேத்கர் தோற்றுப்போனார் அதனால் அவரின் கருத்துக்கள் தவறென்று பொருளல்ல.. சாமானியனை சென்றடையாத எந்த சீர்திருத்தமும் வெற்றிபெறாது .. .. பெரியாரால் ஒரு பட்டியலனத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக பரிந்துரைக்க முடிந்தது... பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர்(இரட்டைமலை சீனிவாசன்பேரன்) அறநிலைய துறை அமைச்சரான போது.. அம்பேத்கர் சொன்ன வாசகம் ஒன்றே போதும்.. என் சாதியில் பட்டவனை குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குளத்தில் குனிந்து அள்ளி குடிக்கவும் விடமாட்டேன் என்கிறான்.. ஆனால் தமிழகத்தில் அறநிலைய துறை அமைச்சராக்கி கருவரைக்குள்ளே செல்லும் அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறார் பெரியார் என்றார்.. .. அம்பேத்கரை முன்னெடுப்பாத சொல்லி திராவிடத்தை பொதுவுடமையை குறைச்சொல்ல நினைப்பதிலிருந்தே..புரிகிறது.. எங்கிருந்து இயக்கபடுகிறீர்கள் என்று.. பெரியாரை மீறிய எதுவும் எந்த பயனும் தராது.. நீங்கள் தைரியமாக பேசுகிறீர்களே.. அனிதா நினைவேந்தல் நிகழ்வில் மைக்கை பிடித்து கலாட்டா செய்ய முடிந்ததே இந்த கருத்து சுதந்திரமெல்லாம் நாங்கள் (பெரியாரியவாதிகள்) பெற்று தந்தது.. நீங்கள் சொல்கிற அம்பேத்கரால் வடமாநிலங்களில் பேசும் உரிமையை கூட பெற்றுதர முடியவில்லை.. .. யாரையும் குறைவாக மதிப்பிடும் பழக்கத்தை விடுங்கள் அம்பேத்கர் போன்ற மாமேதைகளை தந்த சமூகம் என்பதில் எப்போதும் மரியாதை உண்டு.. எல்லா சமூகங்களிலும் சில புல்லுறுவிகள் வருவார்கள். ஆனால் அந்த சமூகமே அவர்களை புறந்தள்ளும்.. பா.ரஞ்சித் போன்றவர்கள் இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாமல் இருந்தால் சரி.. இல்லையெனில்.. புறக்கணிக்கபடுவீர்.. .. கொடும்பகைகள் கண்ணுக்கு தெரியும் ஆனால்.. சில சிங்காரித்து வரும் சிறுபகைகள் .. வேரறுக்க முயற்சிக்கும் #எச்சரிக்கை. .. Aalanci Spm

No comments:

Post a Comment