Tuesday, October 3, 2017
சிவாஜி
சிவாஜியைப் போல் ஸ்டைலாக நடக்கவும், நடிக்கவும் எந்த நடிகராலும் முடியாது எனக்கு சிவாஜிதான் இன்ஸ்பிரேஷன் அதிமேதை அமைச்சர் ஜெயக்குமார்..
..
உண்மையில் சிவாஜி நடிகன் தான் மறுக்க முடியாது சந்தர்ப்பம் அறிந்து நடிப்பதில் வல்லவர்.. இன்றைக்கு சிவாஜி சிலையில் கலைஞர் பெயர் அகற்றபட்டதை பெரிய விடயமாகவே கருதவில்லையென ராம்குமார் இப்போது பிஜேபி இருக்கிறாரென நினைக்கிறேன்.. சொல்லியிருக்கிறார் அப்பனுக்கு பிள்ளைதான்..
..
சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கபட்டபோது ஜெயலலிதா தலைமையில் பாராட்டுவிழா நடந்தது அப்போது பேசிய சிவாஜி .. லைட்மேன் தொடங்கி நேஷனல் அதிபர் பெருமாள் வரை நன்றி சொன்னார் தன்னை வேண்டாமென சொன்ன ஏவிஎம்.செட்டியாரை கூட நினைவுகூர்ந்தார்.. செட்டியார் கதாநாயகனை மாற்ற வேண்டும் இல்லையேல் தான் விலகி கொள்வதாக சொல்ல சிவாஜி தான் வேண்டுமென்று அடம்பிடித்த அறிஞர் அண்ணாவையும் .. பெருமாளை கொண்டு படமெடுக்க பணித்த கலைஞரையோ நன்றியோடு நினைவு கூறவில்லை.. அந்தளவு யோக்கியன் தான் சிவாஜி.. உங்களை நினைவுகூர்ந்து நன்றி சொல்லவில்லையே என்ற போது இந்த நாளையாவாது சிவாஜி மறக்காமல் இருந்தால் சரியென்று தனக்கே உரிய நகைச்சுவையோடு பதிலடி தந்தார் கலைஞர்..
..
சிவாஜி மட்டுமல்ல கலைஞரால் வாழ்ந்தவன் உயரத்திற்கு போனவன் .. நிறையபேர் ஏறிவந்தவுடன் ஏணியை எட்டி உதைத்திருக்கிறார்கள்.. ஆனால் ஏணி .. நம்பி ஏறுகிறவர்களை உயரத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்.. அதுதான் #கலைஞர்..
..
அமைச்சர் ஜெயகுமார் சிவாஜியை போல சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல மாறி பேசும் நடிக்கும் திறன் உள்ளவர்தான்.. ஜெயலலிதா கடைகண் பார்வைக்காக .. போலீஸ் வளைத்திற்குள் கயிறுக்கு அப்பால் நின்று அடங்கி கும்பிட்டு நின்ற புகைப்படம் இப்போது பார்த்தால் கூட பாவம் தோன்றும்.. பரிதாபகரமாக சசிகலாவை கும்பிட்டுநின்ற நடிப்பெல்லாம் சிவாஜியிடம் கற்றாரோ..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment