Wednesday, October 4, 2017
திராவிடம் குறிப்பு
காளிங்கன் எழுதுகிறார்::
திராவிட என்பது இடத்தின்/நிலத்தின் பெயரே.
எந்த ஒரு மரபினத்தின் பெயரும் அல்ல. மொழிக்குடும்பத்தின் பெயருமல்ல. எனது முன்வைப்பிற்கு சான்றுகள் தருவேன்.
1) காரவேளன் அத்திகும்பா கல்வெட்டு தமிழ்நாட்டை"திரமிகா/Dramica என்று குறிப்பிடுகிறான்.
2) கி.பி 5நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்குதேச ராசாக்கள் சரிதத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறான்.
3) கி.பி. 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறித்துள்ளார்.
4) திராவிடம ்= தமிழ்நாடு; திராவிடம்; ஆந்திரம்; கர்னாடகம்; மகாராட்டிடம்;கூர்சரம் என்ற பஞ்ச திராவிட தேசங்கள். திரமிளம் = திராவிடம். செந்தமிழ் அகராதி.
5) கி.பி. 1246-1279 மூன்றாம் ராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று (காகதீய அரசன் கனபதி வென்று) கப்பம் வாங்கினான்.(Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு.
6) ஆந்திர தேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33; செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்".
7)" பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள். பி.வி.ஜகதீஸ் அய்யங்கார் "கிருஷ்னாநதியின் தென்பகுதியும் ; காவிரியாற்றின் வடபகுதியும் ; கர்ணாடகமும் ;இணைந்த பகுதியே திராவிட நாடு."
8) "அந்நாளிலே திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்தது"-- பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழு.
9) "நமாம யஹம் த்ராவிட வேத சாகரம்"-- திருவாய்மொழி - நாதமுனி தனியன்கள்.
10) 18453-1903 சபாபதி நாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.
11) தாயுமான சுவாமிகள் தம் பாடலில் "வல்லான் ஒருவன் வரவுந் திராவிடத்திலே" என்கிறார்.
13) கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை தஇமிழ் நாட்டை "திராவிட நல் திருநாடு"என்கிறார்
14) ரவீந்திரநாத் தாகூர் தமது தேசிய கீதத்தில் "திராவிடநாடு"என்கிறார்.
15) வேதாந்த தேசிகர் "திராவிடோ உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி "நூல் யாத்தார்.
- மணி பாரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment