Tuesday, October 3, 2017

மங்குனி அமைச்சர்கள்

என்ன தவம் செய்தோம்.. இங்கே இவர்களை போன்ற அமைச்சர்களை யாம் பெறவே.. .. சிவாஜி சிலையிலிருந்து கலைஞர் பெயர் அகற்றபட்டதே என்ற கேள்விக்கு 133 அடி சிலையை நிறுவ எம்ஜிஆர் அடிக்கல் நாட்டினார் சிலையிலிருந்து எம்ஜிஆர் பெயரை அகற்றியவர் கலைஞர் .. எப்ப சிலை நிறுவ முடிவெடுத்ததென்றே அறியாத அமைச்சர் .. டெல்லியிலிருந்து ஏர்பஸ்ஸில் வந்த கொசுக்கள்தான் டெங்கு பரவ காரணம்.. என்னை மாதிரி பெருத்த உடலை உடையவர்கள் சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் .. நீர் ஆவியாகுவதை தடுக்க தெர்மாக்கூல் போட்டு அணையை மூடலாம்.. மீன் இனபெருக்கத்தால் வைகை நீர்மட்டம் குறைவு.. நெய்யாற்றில் நுரை வர சோப்பு போட்டு குளிப்பதே காரணம்.. சுதா ரகுநாதன் சுஹாசினி.. பரதநாட்டிய கலைஞர்.. எடப்பாடி முதல்வரானாதால் தான் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகம்.. திமுக உறுப்பினர்கள் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை.. .. உண்மையிலேயே அறிவுஜீவிகளாகவே ஜெயலலிதா அருகில் வைத்திருந்திருக்கிறார்.. அறிவிலிகளின் தலைவராக ஜெயலலிதா திகழ்ந்திருக்கிறார்.. அத்தனை முட்டாள்கள் ஒரேநேரத்தில் அப்பப்பா.. தமிழகம் நிச்சயம் புண்ணியதேசம்தான் .. ஒருவர் கூட கொஞ்சமேனும் அறிவோடு கதைக்கிறாரா என பார்த்து பார்த்து அலுத்துவிட்டது.. ஆம் ஜெயலலிதா போன்றவரோடு அறிவுடையோர் இருக்கமுடியாது ஏன் எப்படி என கேள்வி கேட்காமல் வாய்பொத்தி தலைகுனிந்து கிடக்க அடிமைகள் தான் கிடைப்பார்கள் அவர்கள் முட்டாள்களாக இருந்தே பழகிவிட்டதால் .. திடீரென கேள்விகேட்டால் என்ன செய்வார்கள்.. கட்அவுட் வைத்து காலில் விழந்தும் நாலு காசுபார்க்கவும் தெரிந்தவர்களுக்கு வரலாறெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.. .. ஒட்டுமொத்தமாக கிறுக்குத்தனமாக பேசி திரிகிறார்கள் இவ்வளவு கேவலமாக தமிழக அமைச்சர்கள் இருந்ததில்லை.. ராஜாஜி சத்யமூர்த்தி ..சி.எஸ்.., பக்தவச்சலம்,காமராஜர் பரமேஸ்வரன் கக்கன்.. அண்ணா கலைஞர் நாவலர்.. நாஞ்சிலார் ராசாராம், ஹண்டே நம்ம துரைமுருகன்.. .. என நீண்டுக்கொண்டே போகும் எண்ணற்ற அறிவுடையோரை அமைச்சர்களாக கொண்டிருந்த தமிழகம் இன்றைக்கு படுகேவலமானவர்களை கொண்டிருப்பதெண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும் .. இவர்களுக்கு பதில் சொல்ல உண்மையிலேயே தெரியவில்லை யாராவது ஒருவருராவது சரியான முறையில் கேள்வியையோ பதிலையோ தருவார்களா என எதிர்பார்க்கிறோம்,ஒட்டுமொத்தமும் பூஜ்யமாகவே இருக்கிறது.. சிலர் முட்டாள்தனமாக செய்கைகளில் சிலநேரம் ஈடுபடுவார்கள் அது தவறென்று அறிந்து திருத்திக்கொள்வதை பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே மொத்தமும் கேனத்தனமாக பேசியும் நம்மையும் கேவலபடுத்துகிற இந்த மடையர்களை நாம் அமைச்சர்களென்றழைப்பது எவ்வளவு பெரிய #அவமானம்.. .. #அறிவிலிகள்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment