Saturday, October 14, 2017

பதறுகிறார்கள்

ஏன் பதறுகிறார்கள் .. உண்மையைதானே சொன்னார் தமிழன் பிரசன்னா.. யார் பிராமணன்.. அடுத்த வேளை சோத்துக்கு யாசிப்பவனே பிராமணன் என்கிறதே மநு தர்மம்... அதை தான் வேறு மாதிரியாக வீட்டுக்கு வீடு யாசிப்பவனென்றார் .. அசுரனின் சொல் கிழித்திருக்கும் .. .. காஞ்சி பெரியவரின் அருளுரையை வாங்கி படிக்கலாம் .. எதற்கும் ஆசைபடாத கடவுளின் அருளை மட்டுமே நம்பி வாழ்வது தவமென்கிறாரே.. பார்பனனின் அருமைகளை தான் பிரசன்னா சொன்னார் கோபம் வருகிறதா.. பார்பான் என்றால் ஏன் பதறுகிறீர்.. ஒழுக்கமான வாழ்வியல் என்கிறாரே.. பெரியவர் அதை இல்லையென்கிறீர்களா.. திமுகவின் வாக்குவங்கி குறையும் என்கிறார் சேகர் .. பாவம் என்றைக்கு வாக்களித்து இருக்குறீர்.. .. என் சிறிய வயதில் நான் பார்த்திருக்கிறேன்.. எங்களுர் அக்ரஹாரங்கள் சூழ்ந்த ஊர்.. வட்ட வடிவிலான செம்பு கையில் தூக்கிக்கொண்டு சிறிய குச்சியால் அடித்துக்கொண்டே வருவார் பிராமணர்.. அக்ரஹாரத்து பெண்கள் அவரின் சிறிய துணி கட்டிய செம்பில் (கூஜா போன்றவடிவ பாத்திரத்தில்) பணத்தை இடுவார்கள் .. ஏதோ சொல்லிக்கொண்டே போவார்.. நீண்ட நாள் கழித்து தான் அவர் ஏழை புரோகிதரென்றும் வறுமையில் அவர் யாசிப்பதார் என்றும் அறிந்தேன்.. நிறைய முஸ்லிம் மிராசுதாரர்கள் .. அறுவடையில் அவருக்கும் நெல் அளப்பார்கள்.. பிறகு காலம் மாற இப்போதெல்லாம் அக்ரஹார சூழலே இல்லை .. ஏறக்குறைய வெளியேறி விட்டார்கள் நிறைய இஸ்லாமிய குடும்பங்கள் குடியேறிவிட்டன.. நெடுந்தெரு அக்ரஹாரத்தில் ஜாதி இந்துக்கள் குடியேறிவிட்டார்கள்.. .. இவர்களுக்கு கோபம் பிரசன்னா மீதுதான் .. அதை திசை திருப்ப திமுகவை இழுக்குகிறார் இருக்குமிடமே தெரியாமல் இருந்தவர்கள் இப்போதெல்லாம் அதிகம் கதைக்கிறார்கள் அவ்வளவும் விசமேறிய சொற்களால்.. பிராமண லட்சணத்தை தான் பிரசன்னா சொன்னாரே தவிர.. இப்போது யாரும் அப்படியில்லையென்று பதில் சொல்லியிருக்கலாம்.. அதைவிடுத்து கொரூரமான வசவுகளை கையாண்டிருக்க வேண்டாம்.. .. எத்தனை காலம் இழிவு படுத்தி வந்திருக்குறீர் .. திருப்பி தாக்கும் போது பதறுகிறீர்.. காலம் திருப்பி செய்கிறது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment