Monday, October 30, 2017
ப.சிதம்பரம்..
ப. சிதம்பரம் ஒரு பிரிவினைவாதி, தேசத் துரோகி -- பா ஜ க கடுமையான தாக்குதல் ..
இதை எதிர்பார்த்ததுதான்.. பாசீசத்தை விரும்புகிறவர்கள் மத்தியில் இங்கே மற்றவர்கள் தேசதுரோகிகள் தான்.. அப்படி என்ன சொன்னார்.. மிக தெளிவாக எப்படியெல்லாம் சட்டம் மீறபட்டிருக்கிறது.. மரபுகளை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார்களென சாதாரணமானவர்களும் புரிகிற மாதிரி விளக்கினார்.. மேதாவித்தனமில்லாத எளிய மொழியில் எல்லோரும் விளங்கிக்கொள்ளவேண்டுமென்று தெளிவாக அமைதியாக ஒர் ஆசிரியர் மாணவர்களுக்கு புரிகிறமாதிரி பாடமெடுப்பாரே/சொல்லி தருவாரே அப்படி மோடியின் ஆட்சி அவலங்களை விளக்கியதுதான் இந்த கோபத்திற்கு காரணம்..
..
திடீரென்று ₹500 மற்றும் ₹1000 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டுமென்ற முடிவு ரிசர்வ் வங்கி மீது திணிக்கப்பட்டது .. சட்டப்படி ரிசர்வ் வங்கி தான் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் இங்கே எல்லாம் தலைகீழ் .. காபினெட் கூட்டத்தை கூட்டி அனுமதி வாங்கிவிட்டு அமைச்சர்களை வெளியேவர விடாமல் அவர்களது தொலைப்பேசிகளை பிடிங்கிக்கொண்டு பிரதமரை தொலைக்காட்சி உரையை கேட்க வைத்தெல்லாம் புட்டுபுட்டு வைத்து மோடி.. சர்வாதிகாரியைப்போல என்றார்.. மொத்ததில் குரங்கு கையில் பூமாலை..
..
நிச்சயமாக பணமதிப்பிழப்பு தொடர்பாக என்றாவது ஒருநாள் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் வங்கி அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றது அவர்களுக்கு கோபத்தை அதிகமாக்கியிருக்கிறது
அதனால் தான் ப.சிதம்பரத்தை தேசவிரோதியென சொல்கிறார்கள் ஒட்டுமொத்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்னவர்கள்.. கருப்புப்பணம் வெள்ளைபணமானதுதான் மிச்சம்.. சேகர் ரெட்டியிடம் ₹2000 கோடி எப்படி வந்ததென ரிசர்வ் வங்கியாலேயே சொல்லமுடியவில்லையாம்.. சாதாரண குடிமகன் தான் சேமித்த பணத்தை மொத்தமாக எடுக்க ஆதார் அவசியமென சொல்கிற அரசும் வங்கியும் மொத்தமாக சென்றது தெரியாதாம் ..எந்த மையத்திலிருந்து சென்றதென்பதை பணத்தின் சீரியலை வைத்து எளிதாக கண்டுபிடிக்கமுடியும் என்கிற போது
சேகர் ரெட்டி சென்றது தெரியாதென்கிற கயமைத்தனத்திற்கு ஊழல் இல்லாமல் வேறென்ன.. மூன்று கண்டெய்னர் பணத்தை ஆவணம் ஏதுமில்லாது வாகன பதிவு தவறாக இருந்தும் நகர்த்த முடிகிறது இதற்கு பெயர் பித்தலாட்டமில்லையா.. மோடி அரசின் அவலத்தை தோலுரிக்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்..
..
ப.சிதம்பரம் தேசதுரோகி என சொல்வோருக்கு ஆங்கிலேயனிடம் வேடிக்கை பார்க்க வந்தேனென மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த வாஜ்பாயெல்லாம் பாரத ரத்னங்களாக தெரிவார்கள்..
இந்தியாவில் ஆன்டி இந்தியன்கள் அதிகம்
துரோகிகளின் கண்களுக்கு தேசத்தை நேசிப்பவர்கள் வேறெப்படி தெரிவார்கள்..
#நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" தெரியாமல் போனதால் வந்த விளைவு..
..
#துரோகத்தின்_கைகளில்_எமது_இந்தியா..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment