Friday, October 6, 2017

மகிழ்ச்சி பெரியார் வழியில்

#மகிழ்ச்சி.. கேரள திருவாங்கூர் தேவசம் போர்டு..கேரள அறநிலையத்துறை 6 தலித் உட்பட 36 பார்பனரல்லாதோர் அர்ச்சகராக priests நியமித்திருக்கிறது கேரள இடதுசாரி அரசு .. அமிர்ஷா பாதயாத்திரைக்கு சரியான பதிலடியாக .. இதைதான் கலைஞர் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றினார்.. நிறைய தடைகளை பார்பனர்கள் கொண்டுவந்தனர்.. இந்த இடத்தில் மட்டும்தான் மிக கடுமையாக .. வேதம் சாஸ்திரம் என சொல்லி உச்சநீதிமன்றத்தை தடுமாற செய்து .. மதவிடயங்களில் தலையிட கூடாதென்றெல்லாம் தடை வாங்கினர்.. .. நல்ல தொடக்கம் இது அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலத்தில் .. நாங்கள் திராவிடர்கள் என வெளிப்படையாக சொல்லி பாசிசவாதிகளின் சங்கை பிடித்து தள்ளும் கைரளியர்களுக்கு நன்றிகள்.. ரத்தகறையோடு தொடங்கலாமென்றிருந்த அமிர்ஷா கும்பலுக்கு செவிட்டில் அறைந்தாற்போல இது வேற நாடென்ற உண்மையை சொல்லியிருக்கிறார்கள் வரலாற்றில் மிக முக்கியமான நாளென மலையாள மனோரமா பத்திரிக்கை பாராட்டியிருக்கிறது.. இது தொடக்கம் தான் .. பாஜக ஆட்சிக்கு வந்ததில் ஒரு சௌகரியம் பிரிந்துகிடந்தவர்களை ஒருங்கிணைகிறார்கள் ஒரே நோக்கோடு ஒரு திட்டத்தோடு.. பாசிசத்தை பார்பனீயத்தை கருவருக்கவேண்டுமென்ற ஒற்றை கருத்தில் இணைகிறார்கள்.. 50 வருடங்களுக்கு முன்னரே எங்கள் பெருங்கிழவன் சொன்னதை தான் .. இதோ கலைஞர் வழியில் கேரளமும் செய்கிறது.. இது கர்நாடகம் தெலுங்கென பரவும்.. எங்கெங்கினும் எம் பெரியாரின் சிந்தனையும் செயலுமே இனி வெல்லும்... .. தொலைநோக்கு சிந்தனையை.. எல்லோரும் சமமென்ற தீர்க்கத்தை.. செப்பிய பெரியாரை இந்நாளில் மகிழ்வோடு நினைக்கிறேன்.. இந்நாட்டிற்கு பெரியார் காட்டிய சமதர்மபாதையே சரியானதாய் இருக்கும் .. மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment