Monday, October 2, 2017
சரியாக கணிக்கிறார் ரஜினி
அரசியலில் வெற்றிபெற சினிமா புகழ் மட்டும் போதாது ரஜினி..
மிகச்சரியாக சொல்கிறார்.. அவர் சிவாஜியை உதாரணமாக சொல்கிறார்..அவர் சொல்கிற காரணங்கள் சரியல்ல எம்ஜிஆரும் ராமராவும் வெற்றி பெற்றார்கள் அதற்கு அவர்கள் சூப்பர்ஸ்டார்களாக இருந்தார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறாரென நினைக்கிறேன் அது கமலுக்கு தரும் தாக்கீது.. தற்காப்பு பெருசா தன்மானம் பெரிசா என்ற கமலுக்கு பதில்
..
உண்மையில் சிவாஜி திமுகவிலிருந்து வெளியேறிய போது அந்த இடத்தை நிரப்ப கலைஞரால் காங்கிரஸிலிருந்து கொண்டுவரபட்டவர் எம்ஜிஆர்.. சிவாஜியின் நாடகங்கள் திரைப்படம் மூலம் திராவிட கருத்துகள் அதிகளவில் கொண்டுசெல்லபட்டது.. அந்தளவிற்கு பிறகு எம்ஜிஆர் கூட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில்லை.. திரும்பிபார் பட வந்த நேரம் சிவாஜிகணேசன் திருப்பதிக்கு போனாரென்றவுடன் திருப்பதி கணேசா திரும்பி பார் என கேட்டார்கள் அப்போதுதான் திமுகவிலிருந்து காங்கிரஸ் சென்றார் ..
எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்துவந்த நேரம் அவ்வளவாக வாய்ப்பில்லாதவராக இருந்தார் .. கலைஞர்தான் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் முதலாளியிடம் சொல்லி மந்திரிகுமாரியில் கதாநாயகன் வாய்ப்பை வாங்கி தந்தார் ..
எம்ஜிஆரை கதாநாயகனாக்க மறுத்தார் சுந்தரம்.. தாவகட்டையில் பள்ளமிருக்கிறதென சொன்னபோது சிறிய தாடியை ஒட்டிக்கொள்ளலாமென சொன்னவர் கலைஞர்.. மாதம் 90 ரூபாய் சம்பளத்தில் ஆறுமாதம் நடிக்கவேண்டுமென ஒப்பந்தம்.. கலைஞருக்கு கொடுக்கப்பட்ட தொகையில் பாதிகூட இல்லையென பிலிம்நியூஸ் ஆனந்தன் சொல்வார்..
சரிவிடயத்திற்கு வருவோம்..
..
எம்ஜிஆர் பிரிந்து சென்ற போது அவரோடு திமுகவினர் மாவட்ட வட்ட கிளைகழகத்தை சேர்ந்தவர்கள் சென்றார்கள் ஆனால் சிவாஜி கட்சி ஆரம்பித்த போது ரசிகர்களை தவிர யாரும் கூட வரவில்லை.. சிவாஜிகணேசன் அரசியலை சரியாக கணிக்கவில்லை அவர் நிறைய தவறுகளை செய்திருந்தார் முதலில் ஜானகியோடு கூட்டு வைத்து 50 இடங்களில் மட்டுமே போட்டியிட்டார் .. அது முதல் தவறு தமிழகம் முழுவதும் போட்டியிட்டிருக்கவேண்டும் அப்போதுதான் அவர் மீது நம்பிக்கை வரும்.. 50 இடங்களுக்குள் என்றவுடன் அவர்மீதான அரசியல்பார்வை குறுகியதாகிவிட்டது இரண்டாவதாக தொகுதி தேர்வு.. கள்ளர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை தேர்வு செய்தார்.. தஞ்சையில் ஒரத்தநாடு திருவையாறு என சில தொகுதிகளில் அவர் திருவையாறை தேர்வு செய்தது பெரும் தவறாகிபோனது.. அங்கே கள்ளர்கள் அதிகளவில் இருந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. அந்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் .. கணபதி அக்ரஹாரத்தில் .. அதுதான் திருவையாறு தொகுதி தொடங்குமிடம் காவிரிக்கரையில் .. தேநீர்கடையில் அமர்ந்திருந்தேன்.. சில கார்களில் சிவாஜி உட்பட வந்தார்கள் எல்லோருக்கு டீ சொன்னார்கள் சிவாஜி சிரித்துக்கொண்டே டீ மாஸ்டரிடம் கேட்டார் என்னப்பா தொகுதி எப்படி வெற்றிவாய்ப்பு எப்படியென்றார்.. கொஞ்சமும் தயங்காமல் சொன்னார் .. இங்கே ஜெயிக்கமுடியாதுன்னே.. ஊர்க்காரனை தவிர எவனுக்கு ஓட்டுபோட மாட்டாய்ங்க என்றார்.. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவர்கள் போனபின் ஏன்ப்பா இதெல்லாம் சொல்லுறே என்றேன்.. உண்மைதானே கள்ளர் அதிகமுன்னு நிற்கவச்சுட்டானுக ஒரத்தநாடு பக்கம் போய் நின்னுருக்கலாம்.. அவர் சொந்த ஊரும்,அதுல வரும் என்றார் .. அதைபோலவே சிவாஜி திமுகவின் துரை சந்திரசேகரிடம் தோற்றார்..
..
சிவாஜியின் தோல்வி மக்களின் தோல்வியென்றார் ரஜினி இல்லை அது முழுக்க முழுக்க சிவாஜியின் தோல்வி.. காங்கிரஸ்லேஸே இருந்திருந்திருந்தால் கொஞ்சம் மெச்சபட்டிருக்கலாம் அல்லது அப்போது திமுகவோடு கூட்டுவைத்திருந்தால் அருகில் பாபநாசத்தில் நின்று மூப்பனாரையே தோற்கடித்திருக்கலாம்.. (சொற்ப வாக்குகளில் மூப்பனார் வென்றார் -எங்கஊர்) அரசியலை அறியாதவராக இருந்தார் சிவாஜி ..எம்ஜிஆர் ரசிகர்களை மட்டும் நம்பியிருந்தால் தேவுடு தெய்வமன்று சொன்ன ராமராவ் ஏற்பட்ட கதிதான் ஏற்பட்டிருக்கும்.. இப்போதெல்லாம் மிக தெளிவாக மக்கள் அன்றாட பிரச்சனைகளை அலசுகிறார்கள்.. இன்றைய காலம் வெகுவாக மாறியிருக்கிறது அதனால்தான் ரஜினி தயங்குகிறார்.. ஆழம்தெரியாமல் காலைவிட தயாரில்லை..
..
இனி யார் வந்தாலும் சட்டென்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..ரஜினி கமல் போன்றவர்கள் வரவேண்டும் அப்போதுதான் உண்மை தெரியும்.. சினிமா மோகமெல்லாம் சிலநாட்களென புரியும்...
ரஜினி தெளிவாக இருப்பதாக தெரிகிறது எதையும் இழக்க தயாரில்லை.. பரமகுடிகாரர் பாவம்..
..
#பட்டுதான்_திருந்தவேண்டும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment