Saturday, October 14, 2017

பிரணாப்பின் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் 2004ல் “காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைதான போது தான் மிகவும் கோபம் அடைந்ததாகவும், ஜனநாயக வரைமுறைகள் எல்லாம் ஹிந்து மதகுரு விஷயங்களில் மட்டும்தான் கடைபிடிக்க படுவதாகவும், இதே ஒரு முஸ்லிம் மதகுருவை முக்கியமான மதசடங்கு நடக்கும்போது கைது செய்ய முடியுமா என்று தான் அப்போது நடந்த கேபினெட் மீட்டிங்கில் கேள்வி கேட்டிருந்ததாக கூறியிருக்கிறார்.. கூடவே.. 2004ல் இவரை பிரதமர் ஆக்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியத்தில் இவருக்கு வருத்தம் எற்பட்டதாகவும் சொல்கிறார்.. தகவல்// su sufiyan .. பிரணாப் நினைவுகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.. அதில் இடம் பெற்ற வாசகங்கள்.. காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.. பிரணாப் போன்ற ஆர்எஸ்எஸ் சிலிப்பர்களை பிரதமராக்கால் இருந்ததற்கு.. ஒன்றுக்கும் உதவாத பதவிக்கு ரப்பர்ஸ்டாம்பாகவே வைத்திருந்தமைக்கு .. முஸ்லிம் மதகுருமார்களை மதசடங்குகள் நடக்கும் போது கைது செய்யமுடியுமா என கேட்பதிலிருந்தே விசத்தை கக்கியிருப்பது தெரிகிறது.. மிகபெரியளவில் அழுத்தம் தந்தும் கடைசி வரை வளரவிடாமல் செய்ததில் ஒரு காலத்தில் வருத்தமிருந்தது.. கலைஞர் போன்றோர் பின் துணைக்கிறார்களே என எண்ணியதுண்டு எப்பாப்பானாயினும் தலையை தடவ பாப்பானென்ற பாவேந்தர் வரிகள் நினைவுக்கு வந்துபோகிறது.. .. ஆரம்பம் முதலே பிரணாய் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தார் காங்.காரிய கமிட்டியில் எதிர்பேதுமில்லாமல் வந்துவிடுலாமென்றிருந்த நிலையில் காங்.தலைமையின் ஆலோசகராக இருந்த குஜராத் எம்பி அக்பரின் காய் நகர்த்தலை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் முகர்ஜி ஆனால் கடைசிவரை ஏற்காமல் போனதின் கோபம் தெரிகிறது... காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லதை தந்திருக்கிறார்.. திரு.மன்மோகன் சிங் போன்ற மேதைகள் நாட்டிற்கு கிடைத்தார்கள் .. சோனியா பிரதமராக கூடாதென Campaign பிரச்சாரம் செய்தார்கள் sms மூலம் நாடே அல்லோலப்பட்டது இதன் பின்னில் பிரணாப்பின் கரம் இருப்பதாக அப்போது கசிய தொடங்கியது.. காரணம் சோனியாவை தவிர்த்தால் தனக்கு கிடைக்குமென முழுமையான நம்பினார் அதன் கோபம் இவரது எழுத்தில் தெரிகிறது ..ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் நிறம் தெரிந்தது .. இப்போது முழுமையாய் .. #காங்கிரஸில்_காவி.. .. Aalanci Spm

No comments:

Post a Comment