Sunday, October 15, 2017
சபரிமலையில் பெண்கள்
திருவாங்கூர் தேவசம்போர்டு கோபால கிருஷ்ணன்.. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் sex touriest spot ஆகும் என்கிறார் கூட நல்ல குடும்ப பெண்கள் வரமாட்டார்கள் ..
தெய்வ நம்பிக்கை உள்ளோரை இதைவிட கேவலபடுத்த முடியாது.. சாமிகளெல்லாம் 40 நாட்கள் விரமிருந்து உணவில் கூட கட்டுப்பாடோடு இருப்பவர்களை .. பெண் பித்தர்களை போல சித்தரிக்கிறார்.. இதிலிருந்தே அவர்களின் எண்ணம் செயல் புரிகிறது..
..
ஒட்டுமொத்தமாய் பெண்களை தங்கள் வீட்டு பெண்களை போல எண்ணிவிட்டாரோ ..மன கட்டுபாடு பெண்களுக்கு இல்லையென்கிறாரா.. அல்லது ஆண்கள் சபலக்காரர்கள் என்கிறாரா..
பிற கோவில்களுக்கு பெண்கள் ஆண்களோடு செல்கிறார்களே .. அப்போதெல்லாம் நடக்காது ஆனால் சபரி பயணத்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்..
மன உறுதியில்லாதவர்கள் பக்தர்கள்/கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கிறார்..
..
அறிவிற்கு இடமில்லாத போது அங்கே அறியாமையும் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் வந்து ஒட்டிக்கொள்ளும்.. ஒருவரின் நம்பிக்கையை இதைவிட கேவலப்படுத்த முடியாது.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் நேரத்தில் இதுபோன்ற கருத்தை சொல்லவது நீதிமன்றத்தை கேலிக்குரியதாக ஏறக்குறைய மிரட்டுகிற செயல் இப்படிதான் தீர்ப்பு வேண்டுமென கேட்பதை போல இருக்கிறது..
சட்டம் என்ன சொல்கிறதென்பதை பார்ப்போம்..
..
கோவிலுக்கு வருகிற பெண்களை ஒழுக்கமில்லாதவர்கள் போல் சித்தரிக்க முயல்கிறார் அழுத்தமான ஆட்சேபம் வந்திருக்கவேண்டும்.. வராது .. இவர்களின் ஜகத்குரு காஞ்சி பெரியவர் .. வேலைக்கு போகிற பெண்களை விபச்சாரி என்ற போதே சுற்றிவளைத்து நகரவிடாமல் செய்திருந்தால் இன்றைக்கு கோபால கிருஷ்ணன்கள் இவ்வளவு தைரியமாக பேசியிருக்க முடியாது..
பெண்களை மட்டுமல்ல தூய்மையோடு வருகிற ஆண்களையும் கேவலப்படுத்திருக்குறார்..
..
சபரிக்கு பெண்களை அனுமதிக்கவேண்டுமென #நம்பூதிரி காலத்திலிருந்தே பேசபடுகிற விடயம்தான் இப்போதுதான் விடிவு பிறக்கும் நேரம் வந்திருக்கிறது.. கம்யூனிஸத்தை வளரவிடாமல் பார்பனர்கள் பார்த்துக்கொண்டார்களென பெரியார் சொல்வார்.. ஆம்..
இப்போதுதான் பொதுவுடமை அங்கே ஆட்சி செய்கிறது.. எல்லோரையும் அர்ச்சகராக்கி அழகுபார்த்து முன்னுதாரணமாய் திகழ்கிறது..
..
இனி..
#சபரிக்கும்_விடிவு_கிடைக்கும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment