Tuesday, October 24, 2017
ஆன்மீகம்
தீக்குளிப்பு..
ஹரி ராசா சர்மா இறந்தவனின் மீது நின்று கூட கொடூர தாண்டவம் ஆடுகிறார் பகுத்தறிவு தீக்குளிப்பை தான் தந்திருக்கிறதென்கிறார்.. ஆன்மீகம் நம்பிக்கையை தருமென்று வேறு சப்பைகட்டுகிறார் இறந்தவன் கடவுள் மறுப்பாளனில்லை கந்துவட்டி வரும்போதெல்லாம் அவன் தெய்வத்தை தானே துணைக்கழைத்திருப்பான்.. இந்த நாடும் அரசும் அவன் மீது திணித்ததுதானே .. எத்தனை வரிகள் இங்கே எல்லாம் வலுத்தவனுக்கானதால் தானே இந்த விபரீதம் நடந்தது.. தென் தமிழகத்தில் கந்துவட்டி தொழிலாகவே நடக்கிறதே.. நடுத்தர குடும்ப பெண்களின் கற்பு விலைபேச படுகிறதே இதையெல்லாம் கண்டிக்காமல் தன் கீழ்த்தர அரசியலை இதில் புகுத்துகிறார்..
..
ஆன்மீகம்..
சீதையை தீக்குளிக்க சொன்னதே அங்கு தொடங்கியதானே.. இறந்தவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற சொன்னதும் கந்தனையும் வள்ளலாரையும் தீக்குளிக்க சொல்லவில்லையா..
எங்காவது பகுத்தறிவாளன் தீக்குளிக்க சொல்லியிருக்கிறானா.. சட்டென்று உணர்ச்சிவயபடுபவரின் முடிவை எப்படி அறிவோடு தொடர்பு படுத்தமுடியும் அதை எப்போதுமே கண்டித்துவந்திருக்கிறோம்.. தூண்டி விட்டதில்லை.
மண்டல் கமிஷன் பரிந்துரைக்காக தீக்குளிக்க வைக்க மூளைச்சலவை செய்தது யார்.. பாதிரியாரை குடும்பத்தோடு எரித்ததும்..குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று எரித்ததும், வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து வீசியதும் இந்த ஆன்மீக வெறிதானே காரணம்.. எதிலாவது மதகலவரத்தை ஜாதி கலவரத்தை தூண்டிவிட வேண்டும் இதுதான் பாஜகவினரின் பணி.. அதனால்தான் தினம் தினம் ஏதாவது பேசி திருப்பிவிடுகிறார்கள் ..
..
இதோ இப்போது கூட விடுதலைச் சிறுத்தைகளை கட்டபஞ்சாயத்து கட்சியென தனிமைப்படுத்த பார்க்கிறது பாஜக.. வி.சி தோழர்களோடு பாஜக மோதல் என செய்திகள் வருகின்றன.. இங்கே மதவெறியை தூண்டலாமென்ற நினைப்பில் மண் விழுந்ததால் காரணம் நிறைய இஸ்லாமிய அமைப்புகள் தி.க.வோடும் திராவிட இயக்கங்களோடும் இணைந்து செயலாற்றுகின்றன பெரியாரை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை என்றவுடன் சாதியை கையிலெடுக்க முனைகிறார்கள் இடைச்சாதி கடைச்சாதிக்காரனுக்கிடையே கொம்பு சீவும் வேலை நடந்துவருகிறது குறிப்பாக கடைச்சாதிக்காரன் பிரித்து வைக்கும் சதியின் தொடக்கம் தான் பட்டியிலிருந்து விலகுகிறேன் என்பதும் கட்டபஞ்சாயத்துகாரனாக மக்கள் முன் பிம்பத்தை கட்டமைப்பும் கூட.. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.. தினம் தினம் பாஜகவினர் கலவரத்தை ஏதோவொரு வழியில் தூண்ட வாய்க்கு வந்ததை பேசி திரிகிறார்கள் கருத்தோடு மட்டுமே
நாம் மோத வேண்டும் ..
நாம் இவர்களை கிறுக்கனைப்போல எண்ணிக்கொண்டிருக்கிறோம்.. உண்மையில்
இவர்களை போன்றவர்கள் தான் பேரழிவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்
..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment