Thursday, October 12, 2017

சரிநிகர்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதி மறுப்பது அரசியல்சாசன பிரிவு 14க்கு எதிரானதா..உச்சநீதிமன்றம் .. .. பெண்களை தீட்டு வந்தால் வீட்டிற்கு வெளியே நிறுத்திய நிலையிலிருந்து மாறி கோவில்களில் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்போம்.. மாதவிடாய் என்பது இயற்கை உபாதை அவ்வளவுதான்.. அதை தீட்டாக்கும் பிராமண சூத்தரத்தைதான் ஆரம்பம் முதலே எதிர்க்கிறோம். மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு போனால் புறவாசல் வழியாக குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் பழக்கம் இப்போதும் சில வீடுகளில் இருக்கிறது.. மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்கு நுழைய விடமாட்டார்கள்.. இதெல்லாம் நமக்கு ஆரியன் சொல்லி தந்தவை..இப்போது அவர்களே அதை கடைப்பிடிப்பதில்லையென கூற கூடும் .. சடங்கும் சம்பரதாயங்களும் நமக்கு தான் தவிர அவர்களுகில்லை. .. அரசியல் சாசன பிரிவு 14 க்கு எதிரானது ஆனால் நுழைந்தால் மநுவிற்கு எதிரானது என்று சில அரைகுறைகள் கூச்சலிடகூடும்.. காரணம் நம்மை அப்படிதான் சிந்திக்கவிடாமலே வைத்திருக்கிறார்கள் தலித்தை தொட்டால் தீட்டு சாணாரை பார்த்தாலே தீட்டு என்றெல்லாம் சொல்லி நம் அறிவை மழுங்க செய்த கூட்டம்தான் அது அதனால் தான் பெரியார் அவனுக்கு எதிராகாதவரை நம்மை அடக்கிகொண்டே இருப்பானென்றார்.. படிப்பு எல்லாவற்றையும் மாற்றும் என நம்பினார் .. பெண்கள் கையிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தர சொன்னார்.. .. இன்னமும் நிறைய பேர் அசிங்கமென எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.. அது வலிதரும் வேதனையென்று அறியாமல்.. முகம் சுழிக்கலாம் தெய்வ குத்தமென்கலாம் கலிகாலமென புலம்பலாம். ஆனாலும் சக மனுஷியின் இயல்பான வேதனை தரும் ஒரு நிகழ்வென அறிந்திருந்தல் வேண்டும் . .. #ஆண்களுக்கு_நிகரானவர்கள் என்ற உண்மையை உணரவேண்டும்.. .. #சரிநிகர்... .. Aalanci Spm

No comments:

Post a Comment