Wednesday, October 4, 2017

சுஹாசினி

#மக்கள்_விரும்பினால்.. எப்போது விரும்புவார்களென அறிந்திருத்தல் நல்லது.. நான் நல்லவனென சிலர் நம்பகூடும் வேறு சிலரோ எதற்காக இவன் ..ஏதோ காரியத்திற்காக குழைகிறாரென பேசகூடும்.. எல்லோராலும் எல்லோரையும் கவர்ந்திழுக்க முடியாது ஆனால் நான் வருகிற பாதை சரியானதா .. சரியான பாதையைதான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனா. அந்த பாதையில் வழி நெடுக செடிகளை நட்டிருக்கிறேனா. அது மக்களுக்கு பயனுள்ளதா பயன் தருமா/தருகிறதா என ஒருநிமிடம் சிந்திந்து பிறகு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் .. யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்கான உரிமை அவர்களுக்குண்டு ஆனால் நினைத்தவுடன் கைக்கு பழம் வேண்டுமென்பது கடைந்தெடுந்த அயோக்கியத்தனமில்லையா.. நட்டிருக்கவேண்டும் .. நீர்பாயிச்சி அதை காத்து வளர்த்திருக்கவேண்டும்.. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது சரிதானா.. எல்லோருக்கும் ஆசைதான்.. தகுதியில்லாதவனெல்லாம் ஆளும் தேசத்தில் கண்ட கண்ட கழிசடைகள் கூட அதிகார போதையில் திரிவதை காண சகிக்கவில்லை.. .. அது என்ன மக்கள் விரும்பினால் மக்கள் யாரை விரும்புகிறார்களென உள்ளங்கை நெல்லியாய் தெரிகிற போது .. சிலருக்கு ஆசை எப்படியேனும் தடுத்திட முடியாதா என சிலர் கொம்பு சீவ.. அதை நம்பி நட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கரைசேரமுடியாமல் அடித்து தள்ளபட்டு எங்கோ ஒதுங்கி கிடப்பார்கள் யாருமே காணமுடியாமல் ..பரிதாபகரமாய் .. வாருங்கள் மக்களை சந்தியுங்கள் மக்களோடு கலந்துரையாடுங்கள்.. அவர்களின் குறையை செவிமடுங்கள்.. அவர்களோடு சேர்ந்து போராடுங்கள் மெல்ல அவர்கள் மனதில் இடம் பெறலாம்.. இவர்களை நம்பலாமென்ற நல்லெண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்துங்கள் கவர்ச்சியோ காசோ , ஆள்பலமோ தான் சார்ந்த மதமோ சாதியோ குறிப்பிட்ட எல்லைவரை நம்மோடு வரும் அதற்கு பிறகு திடீரென திரும்பிபார்த்தால் காணமல் போய்விடுவார்கள் .. மக்களின் மனதில் விதைக்கிற நம்பிக்கையெனும் நல்விதை மட்டுமே காலம் கடந்தும் நிழல் தரும் ..அந்த நிழலில் நீவிர் அரசாளலாம்.. .. பெண்கள் வரகூடாதாயென கேட்கிறார் திருமதி சுஹாசினி.. வரலாம் வரவேண்டும் அதிகமதிகம் வரவேண்டும் அதற்கு கொஞ்சமேனும் கருணையோடு சேவை செய்யவேண்டும்.. ஆணாதிக்க சூழலில் பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதில் மாற்றுகருத்தே இல்லை அதற்கு புகழ் Popularity மட்டும் போதாது ஆளுமை Personality வேண்டும் அதை வளர்த்துக்கொள்ளுங்கள் மக்களோடு மக்களாக பழகுங்கள் தோழர். பாலபாரதியை போல ..தோழர்.அருள்மொழியை போல .. சேவை மனப்பான்மையோடு பணியாறறுங்கள்.. மக்கள் தாமாக முன் வந்து அதிகாரத்தை தருவார்கள்.. .. வந்ததும் கிடைக்கவேண்டுமென்றால் அது அரசியலில் முடியாது அதற்கு வேறு களம் இருக்கிறது.. சுஹாசினி.. .. தோழர். ஆலஞ்சி..

No comments:

Post a Comment