Sunday, October 29, 2017

விசமேறிய..

திண்டுக்கல் சீனிவாசன்.. பாரதபிரதமர் மன்மோகன் சிங்.. என்று கூறி நம் முன் கோமாளியாய் நிற்பதாக தோன்றும்.. பாவம் அவரது அறிவு அவ்வளவுதான்.. சுதா ரகுநாதனை பெயர் மாற்றி சொன்னபோதே புரிந்ததுதான் ஒரு நாள் இல்லையென்றால் மற்றொரு நாள் தன்னையே யாரென்று கேட்பார் திரு.ஸ்டாலின் எழுச்சிப்பயணத்தை அது அவரின் இறுதி பயணம் என்கிறார்.. .. நகைச்சுவையாக கடந்து போக முடியவில்லை வரலாற்றில் நெடுக தன்னை காமடியனாக காட்டிக்கொண்டவர்கள் தான் கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆம்.. திடீரென துப்பாக்கியால் சுட்டதும் நடந்தது.. தன்னை வெகுளியைப்போல ஏதும் அறியாதவனைப்போல காட்டி நின்றால் அறியாமையை நம்பிவிடுவார்களென செயல்படுகிறார்.. ஆனால் உள்ளக்கிடைக்கில் வன்மம் குடிகொண்டிருப்பதும் அது சட்டென்று எட்டிப்பார்க்கிறது.. அதை கேலியாக எடுத்துக்கொள்ள முடியாது.. .. நிறைய பேர் இதே வன்மத்தோடு அலைகிறார்கள் இது அவர்களின் அரசியலின் இறுதி அத்தியாயம் என அறிந்து இனி எப்போதுமில்லை வருங்காலத்தில் தளபதியை மைய்யபடுத்தியே தமிழக அரசியல் இயங்குமென்பதை புரிந்துக்கொண்டதால் அவர் மீதான கோபம் வார்த்தைகளில் வந்து விழுகிறது.. நேரடியாக தாக்குதல் நடத்தவும் தயங்காத வார்த்தை பிரயோகங்கள் பொதுவெளியில் தெரிகிறது ..இனி கவனத்தோடு செல்லவேண்டும்.. .. சிலர் காமெடியனாக தெரியலாம் உள்ளின் உள்ளில் விசமேறி கிடக்கிறது.. அது வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறுவதை தான் கடும் வார்த்தைகளில் காண்கிறோம்.. கோபமல்ல ..எச்சரிக்கை இது இனியும் சிலர் வரகூடும் .. .. #கவனம்தேவை .. Aalanci Spm

No comments:

Post a Comment