Monday, October 16, 2017

ஜனநாயகம்

சுயேட்ச்சைகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது பாஜக.. பாஜகவிற்கு ஜனநாயகத்திற்கு எப்போதுமே தொடர்பில்லை..அனைத்து சட்டங்களையும் மரபுகளையும் நெறிமுறைகளையும் மீறுவதுதான் பாஜக.. எவரும் 25 வயதை கடந்தால் இந்தியாவில் எங்குநேண்டுமானாலும் போட்டியிடலாம்.. அந்த தொகுதி சேர்ந்த 10 பேர் மனுவில் பரிந்துரைத்து கையெழுத்திட வேண்டும்.. நிறைய பேர் போட்டியிடுவார்களே என்றால் அது அவர்களின் உரிமை கட்டுபடுத்த முடியாதா என்றால் வைப்புதொகையை அதிகமாக்கலாமே தவிர போட்டியிட கூடாதென சொல்ல இங்கே யாருக்கும் உரிமையில்லை.. .. என்ன பயம் சில தொகுதிகளில் கட்டிவைத்த பணம் (டெபாசிட்) கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவிட தனி நபர்கள் அதிகம் வாக்குகளை பெறுகிறார்கள் என்பதற்காக சட்டத்தை வளைக்க நினைக்கிறார்கள்.. மோடியின் சாயம் வெளுக்க தொடங்கியிருக்கிற வேளையில் எங்கெல்லாம் இவர்கள் அதிகார திமிரோடு ஆட்டமாடினார்களோ அங்கேயெல்லாம் குஜராத் உட்பட மக்கள் மௌனமாய் புரட்சி செய்துவருகிறார்கள்.. உள்ளாட்சிகளில்.. இடைதேர்தல்களில் தங்களின் கோபத்தை காட்டுகிறார்கள்.. ஊடகங்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டிய கோட்டை #காகிதத்தால் ஆனதென்பதை ..மக்கள் உணர தொடங்கியதின் விளைவு கண்முன் தெரிகிறது.. பணமதிப்பிழப்பு .. ஒரே இரவில் தன்னை மன்னராக எண்ணிக்கொண்டு அதிரடியாய் மக்களை தெருவில் நிறுத்திய கோமாளி அரசரின் செயல் இப்போதுதான் திருப்பி அடிக்க தொடங்கியிருக்கிறது.. மக்கள் வரிப்பணத்தை ₹25 ஆயிரத்திற்கு நிலக்கரியை வாங்கி ₹2500 விற்கும் அதுவும் தன்னை அரசனாக்கிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிலை கண்டு கொதித்து போனதின் விளைவு தெரிய தொடங்கியிருக்கிறது.. எதை கேட்டாலும் திமிரோடு பதிலளிக்கும் அமைச்சர்கள் ..இனியாரும் இல்லை எம்மை எதிர்க்க என்ற அகம்பாவம் ..ஊடகங்களை விலைக்கி வாங்கிவிட்டால் போதுமென்கிற நினைப்பு இவையெல்லாம் காங்கிரஸ்காரர் கஷ்டபடாமலேயே வெற்றியை அடைய வழிவகுக்கிறது.. .. ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குறவரை பாஜக தனக்கு தானே குழிவெட்டிக்கொள்ளும் இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.. வெற்றி தோல்வியை தாண்டி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களே வரலாற்றில் பேசபடுவார்கள்.. அவர்களின் கட்சியும்/இயக்கம் வேரூன்றி நிற்கும்.. .. ஜனநாயகம் மிகப்பெரிய சக்தி .. ஜனங்களே அதை தீர்மானிப்பார்கள்.. மக்களரசின் மாண்பே அதுதான் #ஜனநாயகம் .. Aalanci Spm

No comments:

Post a Comment