Thursday, October 5, 2017

திராவிட பேரினம்

தமிழர்கள் இந்தியர்கள் கிடையாது.. சுப்ரமணியசுவாமி.. தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை.. anti indian.. இப்படியெல்லாம் சொல்கிறார்கள் ஏறக்குறைய இப்போதுதான் நேர்கோட்டிற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை நீண்ட வரலாற்றை கொண்ட பேரினமாக கருதுகிறார்கள்.. நீங்கள் சொல்லும் இந்தியாவிற்குள் அடைத்திட முடியாது பரந்துவிரிந்து கிடக்கும் பேரினம் எங்கள் தமிழினம்.. .. இதை சொல்லகூட சுப்ரமணியன் வகையறாக்களுக்கு யோக்கிதையில்லை.. யூத வழித்தோன்றலாய் கைபர் வழியே சமவெளியைத் தேடி ஆடுமேய்க்கவந்த ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட நம்மிடம் சொல்கிறார்கள் தமிழர்கள் இந்தியர்கள் இல்லை.. உண்மையில் இந்திய துணைகண்டமே தமிழனின் பூமியாய் இருக்கவேண்டியது..இடையில் வந்தவர்களில் வழிகேட்டில் பிரிந்து கிடப்பதால் மதம் ஜாதி சொல்லி தலையென்று காலென்றும் காரணம் சொல்லி கவிழ்த்தவர்கள்.. இப்போது தமிழன் இந்தியன் இல்லையென்கிறார்கள்.. .. இந்தியாவில் வசிக்கும் பலதரப்பட்ட இனமக்களை வேறுபடுத்தி அதிலும் தங்கள் இனம் சவுரியங்களை வலியே இல்லாமல் அனுபவிக்க இவர்கள் வரைகிற திட்டமிது. தேசியநீரோட்டத்தில் தமிழர்கள் இணையவில்லையென காரணம் சொல்வார்கள்..தேசியஇனம் என்பதே ஒருவகை பொய் .. பலதரப்பட்ட இனங்களின் ஒற்றுமை.. அதாவது வேற்றுமையில் ஒற்றுமை.. ஒரு இனத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதென்பது அத்தனை ரசமுள்ள விடயமில்லை மற்றொரு இனத்தின் மீது வெறுப்பும் கொள்வதும் கூட இறையாண்மையை கேள்விக்குறியாக்கும்.. சுவாமியின் கருத்தை உளறல் என கடந்துவிட முடியாது அது வேறொரு திட்டத்திற்கிற்கான காய்நகர்த்தல் .. .. தொடர்ந்து நீங்கள் கவனித்து வந்தால் பாசிசவாதிகள் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தம் பேசுவோர் ஆரியர் ஆரிய அடிவருடிகள் ..இவர்கள் யாவரும் இந்தியாவில் பிற மொழிபேசும் மக்களிடத்திலோ பிற இன மக்களிடத்திலோ இதுபோன்று கடும்வஞ்சகத்தை கொண்டு நடப்பதில்லை மாறாக தமிழர்களிடத்தில் மாத்திரம் பெரும்பகையோடே இருந்துவந்திருக்கிறார்கள் இப்போதுமிருக்கிறார்கள்.. காரணம் பிற இனமொழி மக்கள் அவர்களோடு ஒத்து போகிறார்கள் அல்லது கீழ்படிந்து அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.. அதைவிட அவர்களின் இனத்திற்கான வரலாற்றை தொலைத்திருப்பார்கள் பிறரின் கலாச்சாரத்தோடு தங்களை ஐக்கியபடுத்திருப்பார்கள்.. ஆனால்.. இதை திராவிட இன தமிழர்கள் செய்வதில்லை காரணம் இயல்பாகவே ஆரியர்களோடு பெரும்பகையோடு இருப்பதாலோ அல்லது ஆரம்பம் தொட்டே திராவிட இனத்தை அழித்தொழிக்க எண்ணும் ஆரிய சூழ்ச்சியை அறிந்ததாலோ என்னவோ குறிப்பாக தமிழர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.. .. பி.வி.ஜகதீஷ் அய்யங்கார் .. கிருஷ்ணா நிதியின் தென்பகுதி காவிரியின் வடபகுதியும் கர்நாடகவும் சேர்ந்ததுதான் திராவிட நாடென சுருக்கி சொன்னார் அதாவது வரலாற்றை திரித்து புனைந்தார்.. ஆனால் வரலாற்று தொல்பொருள் ஆய்வுகளின் தமிழனின் தொன்மையை பறைசாற்ற தொடங்கியதும் .. நிறைய சங்கதி வெளியில் வர இப்போது தமிழனை தனிமைபடுத்த பெரும் முயற்சியெடுக்கிறார்கள்.. சில குறிப்புகளில் மாகாராஷ்ராவும் இணைந்ததென காணமுடிகிறது.. தாகூர் கூட திராவிட நாடென்று தான் சொல்வார் .. காரணம் ஒருங்கிணைந்த தேசத்தில் திராவிடம் தனியாகதான் தெரியும் பல்முனை பண்பாட்டில் தமிழர்களின் பண்பாடு தனித்துவமாக தெரிவதால்.. உலகின் தொன்மையான நாகரீக தோன்றல் Dramica திரிமிளம் என்றறியபட்ட திராவிடர்கள்/தமிழர்கள் தனித்துவமாக தான் தெரிவார்கள்.. .. உலகின் மூத்த நாகரீகத்தை தன்னகத்தே கொண்ட திராவிட பேரினம் தன் மூலமொழி தமிழின் வளத்தோடு இன்றும் உலகமெங்கும் பரிந்து விரிந்து ஆட்சிமொழியாகவும் அலுவல்மொழியாகவும் இருப்பதை காண சகிக்காமல் இவர் போன்றவர்களின் பிதற்றல்கள் நாள்தோறும் வரும்.. #தள்ளிக்களைவோம் ஆனால் கவனம் கொள்வோம்.. .. #வந்தேறிகள்அல்லநாங்கள்_நாட்டின்_பேரினம்… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment