Tuesday, October 10, 2017
எங்கே சறுக்கியது என் இன விடுதலை
சே.குவேராவோடு ஒப்பிட்டு பிரபாகரனை முகநூலில் சிலர்..
சே குவேரா நிஜ போராளி
அவனை
அசிங்க படுத்தாதீர்கள்
வேலுபிள்ளை பிரபாகரன்
சக தோழனைக்கொன்று தனக்கென சிம்மாசனம் அமைத்தவர்
ஒரேஒரு சம்பவம்
என் இனபோராளி (சகதோழர்)
சீறீ சபா ரத்தினத்தை கொல்ல இரண்டு பேரை தேர்வு செய்கிறார்கள்..
திரு மாத்தையா அவர்களின் ஆலோசனையோடு ஆறுபேர் சென்று சீறீயையும் அவரது துணைவியாரையும் சுட்டு கொன்றனர் தாயின் அலறல்கேட்டு சீறீயின் முன்று வயது மகள் ஓடிவருகிறாள்
இரத்தவெள்ளத்தில்
தாயும் தந்தையும் அழும் குழந்தைமுன் தோக்கை தூக்குகிறான் போராளி ..?
அவன் மனம் தளர்கிறது தோக்கை கீழே தாழ்த்துகிறான் உடன் உத்தரவு வருகிறது 15 வருடம் கழித்து உன்னை பழிவாங்குவாள் கொன்றுவிடு .. கொன்றார்கள்..
..
உமா மகேஸ்வரனை ஏன் அமைப்பிலிருந்து வெளியேற்றினார்கள் தெரியுமா ..
திருமணம் செய்துக்கொள்ள கூடாதென்ற கட்டளையை மீறினார்.. அதற்காக தான் அவரையும் கொன்றார்கள்.. பிறகு பிரபாகரன் திருமணம் செய்ததெல்லாம் சட்டவிதிகள் மாற்றபட்டதென்றார்கள்..
..
14 வயது பால சந்திரன் சுட்டுக்கொல்லபட்டபோது அழுத தமிழினமே முன்று வயது பச்சிளம் குழந்தை கொல்லபட்டபோது மெளனம் காத்தது ஏன் ( சிறுவன் பால சந்திரன் கொலையையும் ஏற்றுக்கொள்ளதவன் நான்) சிறுவர்கள் கையில் தோக்கை தருவதையும் என்னால் ஏற்க முடியாது..
பிரபாகரன் போராளிதான் ஒரு காலகட்டம்வரை எங்கே சறுக்கியது என்று உணராததால் வீழ்ந்தார்
சர்வதேச சமுகம் வேறு கண்ணோட்டத்தில் விடுதலை புலிகளை பார்க்க தொடங்கியபோதே தன்போராட்ட களத்தை யுக்தியை மாற்றி கொள்ள தவறியதே அழிவின் ஆரம்பமாகியது
..
திரு.ராஜிவ் கொலைக்கு பிறகு தமிழகம் இவர்களை போராளியாகவே கருதவில்லை
உறவின்முறை சொந்தங்களாக கொண்டாடியவர்களே .. விரட்டுகிற சூழல் நிழவியது .. அதுவரை அகதியென்ற சொல்லை உச்சரிக்காதவன் அப்பதுதான் வெறுக்க தொடங்கினான்..
ஆன்டனின் மறைவுக்கு பிறகு தமிழகத்தின் தவறான வழிகாட்டுதலும் ஒரு காரணமாகியது
இறுதியாக
ஈழ விடுதலை போராடத்தில் பிரபாகரன் ஓர் அத்தியாயம் அதுவே முடிவு அல்ல
ஈழ போராட்டம் மீண்டும் உயிர் பெறும்
போராளிகள் தோன்றுவார்கள்
சே.குவேரா
போல தன்னலமற்றவர்கள்..
..
இன்றைக்கு வாய்கிழிய பேசுகிறவர்களெல்லாம் என்பதுகளில் என்ன நடந்ததென அறிந்திராதவர்கள்.. இன்றைக்கு தாம் தான் எல்லாமென்கிற நெடுமாறனெல்லாம் என்ன செய்தார்.. ஏன் வைகோ உட்பட இன்றைக்கு பேசி திரிகிறவர்களுக்கு .. என்பது தொடக்கத்தில் அகதியாய் வந்து நின்ற உறவுகளை அரவணைத்தவன் யாரென்று கேட்டால் தெரியும்
அவன் திமுககாரனாக இருப்பான்..
..
சீறியின் கொலையை பங்காளி சண்டை அளவிற்கு தரம் தாழ்த்தியதை அறியாதவர்கள்.. அதற்கு பிறகும் திமுக என்னவெல்லாம் செய்தது என்பதை மறந்தவர்கள்.. எனக்கு எழுத உரிமையிருக்கிறது.. இரவெல்லாம் கண் விழித்து கோட்டைப்பட்டிணம் கடற்கரையில் காத்து அழைத்து வந்தெல்லாம் நினைவில் வருகிறது.. மறைந்த தஞ்சை மாமணி ..கோ.சி.மணி சொன்னாரே என்பதற்காக காத்திருந்து காவல்காத்து திருப்பி அனுப்பியவர்களோடு இருந்தவன்.. இன்றைக்கு வெளிநாடு வாழ் ஈழமக்களின் பணத்திற்காக செயல்படுவோர்கள் அன்று சொந்த காசை செலவு செய்த தி.க/திமுககாரன் முன் நிற்க கூட தகுதியில்லாதவர்கள்...
..
#தீதும்_நன்றும்_பிறர்தரவாரா ..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment