Monday, June 5, 2017

காயிதெ மில்லத்

#காயிதெமில்லத்.. கண்ணியத்துக்குரியவர்... இஸ்லாமிய சமூதாயத்தின் தன்னிகரற்ற தலைவர்.. முகமதலி ஜின்னா தலைவராக இருந்த (ஒருங்கிணாந்த இந்தியாவில்) காலகட்டத்திலேயே மிக முக்கிய தலைவராக வலம் வந்தார்.. பிரிவினையின் போது இந்தியாவோடு இருப்பதென்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்..1949ல் அகில என்பதை நீக்கிவிட்டு IUML இந்திய யூனியன் முஸ்லீம் லீக்காக உருவாக்கினார் ..பின் அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார்.. .. 1952 ல் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை கொண்டுவந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர்.. அதற்கான தகுதி இந்திக்கில்லை என வாதிட்டார்.. இவரின் பெரும் முயற்சியில் சரிசமமான வாக்குகளை சபையில் பெற முடிந்தது... 244 வாக்குகள் இந்தி வேண்டுமென்றும் 244 வாக்குகள் வேண்டாமென்றும் விழ சபாநாயகர் தனது வாக்கை ஆட்சியாளருக்கு சாதகமாக்கி .. இன்று வரை இந்தி ஆட்சிமொழியாக தொடர்கிறது.. .. தொகுதிக்கே செல்லாமல் வெற்றிப்பெற்றவர் இவர் ஒருவர்தான் .. வேட்புமனுவைதாக்கல் செய்துவிட்டு தொகுதிக்கே செல்லமாட்டார்.. என்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பார்களென சொல்வார்.. மூன்றுமுறை தொடர்ந்து மஞ்சரியிலிருந்து இப்போது மலப்புரம். . வெற்றிப்பெற்றார்.. இவருக்கு பிறகு நிறைய தலைவர்களை IUML கண்டிருக்கிறது.. ஆனால் இவரைப்போல.... விடைதானில்லை.. .. காயிதெ மில்லத் மறைந்தவுடன் பெரியார் விரைந்து சென்று பார்த்து அழுகிறார்.. அதற்குள் போய்விட்டாயா தம்பி நான் போய் நீ இருக்க கூடாதா என்கிறார்.. இந்த சமுதாயத்திற்கு இனி யாரிருக்கிறார் என்கிறார்.. பெரியாரின் வார்த்தை சரியாக தானியிருந்தது.. யாரிருக்கிறார்..எத்தனை பிரிவுகள்.. பிரிவுகளுக்குள் கோஷ்டிகள் .. கோஷ்டிகளுக்குள் இழுபறிகள்.. யார் பெரியவன்.. சமுதாயத்தை கூறுப்போட்டிருக்கிறார்கள்.. இன்றுவரை சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தும் தலைவர் இல்லையென்பதே சுடுகிற உண்மை .. தலைமைக்குரிய பண்புகள்.. நட்பையும் எதிர்ப்பையும் சரியாக காட்டுதல் மொழி ஆளுமை.. நிர்வாக திறன் .. சிறந்த நாடாளுமன்றவாதி.. சமுதாயகாவலர்.. சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரே வரியில் சொல்வேண்டுமெனில் இந்தியா கண்ட சிறந்த ..நல்ல தலைவர்களில் ஒருவர்..ஆம் #கண்ணியத்துக்குரியவர்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment