Saturday, June 24, 2017
காதல்
#கொஞ்சம்காதல்செய்வோம்
********************************
உயிர் என்றாள்
ஊமையாய் போனேன்..
உள்ளகிடக்கையில்
உயிரெழுதி..
மெல்ல..குதறும்
பிசாசு நீயென்றேன்..
..
ஆயுதம் கொண்டுதான்
அறுத்தெடுக்க முடியுமாயென்ன..
உன் ..அழகுச்சொற்கள்
அதை..
செவ்வனேச்செய்யும்..
..
விழியோரும் கசியும்
இருதுளி நீர்கூட..
வாள் கொண்டு வீசும்
வல்லமைக்கொண்டது..
..
பக்கம் பக்கமாய்
பேசுவதை..
உன் உருட்டுவிழி
சொல்லிவிடும் ..
ஒற்றைப்பார்வையில்..
..
காதல் எல்லாம் இல்லை
உன் குரலோசையின்
மயக்கம்தான்..
தெளிந்தபாடில்லை..
காதலா..தெரியவில்லை ..
..
ஆயிரம் வார்த்தையில்
சொல்லித்தெரிவதை..
உன்..
மௌனமொழி
உணர்த்தும்..
..
உன்
சிங்காரம் பேச்சு.
சில்லென்ற
குளிர்க்காற்று..
நீண்டநேரமானால்
மூச்சடைக்கும்..
சுவாசம் போகும் ..
..
நீ..
அழகிய..பிசாசு..
ஆனாலும்..
நெஞ்சு சொல்லும்..
நீயே..என்
நிம்மதி பெருமூச்சு ..
..
#ராட்சசி ..
..
தோழர். ஆலஞ்சி
*******************
(பின்-குறிப்பு)
1989.ல் எழுதியது..
இன்றெழுதச்சொன்னால்..
கொஞ்சம் பெண்ணை மெச்சி எழுதியிருப்பேன்..
அது கானாகால தேடல்..
இளமைபருவத்தில்.(இப்போதென்ன குறைந்து விட்டது எனகேட்பது காதில் விழுகிறது)..
#சண்டைக்குவராதீர்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment