Sunday, June 11, 2017

தமிழிசை..

மாட்டுக்கறியை விட பிளாஸ்டிக் அரிசி ஒன்றும் தீங்கானதல்ல - தமிழிசை. எவ்வளவு வன்மமான மனநிலை உள்ளவரென்பது இதிலிருந்து தெளிவாகிறது.. பெரும்பான்மையினரின் உணவை தாழ்த்தி பேசவேண்டுமென்பதற்காக பிளாஸ்டிக் (நெகிழி) அரிசியை உயர்த்தி பிடிக்கும் கொடுமை .. தமிழிசை தன் நாற்காலியை (தலைவர் பதவியை) தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யகூடியவரென தெரிகிறது.. பாவம்.. கறிவேப்பிலையை போல் பார்பன கூடத்தால் தூக்கியெறிய படுவார். .. பாஜகவினரிடத்தில் நேர்மை இருப்பதில்லை ஆனால் இந்த விடயத்தில் காங்கிரஸை சேர்ந்தவர்களிடம் எல்லா கருத்துக்களையும் ஏற்க மறுக்கும் அல்லது மாற்றுகருத்தை சொல்லும் ஜனநாயக பண்பை காணலாம்.. பாஜகவோ ஆர்எஸ்எஸோ ஒரு விடயத்தை சொன்னால் அல்லது செய்தால் ..அது நேர்மையற்றது நம் மாநிலத்திற்கு ஏற்புடையதல்ல நம் கலாச்சாரத்திற்கு எதிரானது வெகுமக்களுக்கு விரோதமானதென்றாலும் விடாபிடியாக அதை தாங்கிப்பிடிப்பதோடு அதை நியாயப்படுத்தும் கேவலமான மனப்பான்மை பாஜகவினரிடத்திலும் ,..மோடி ரசிகர்களிடத்தும் இருக்கும்.. ஒற்றை இரவில் பண மதிப்பிழக்க செய்த மோடியின் கிறுக்குத்தனத்தை ஆஹாவென புகழ்ந்தார்கள் கடைசியில் 56 இன்ச் அறிவிலியால் 56 லட்சம் கோடி நஷ்டமானது.. பின் விளைவுகள் எப்படியிருக்குமென அறியாமல் முன்கூட்டி திட்டமிடாமல் ஆடிய கூத்தால் வளரும் நாடுகள் பட்டியல் இருந்து வெளியேற்றப்பட்ட கொடுமை.. காங் அரசில் பெட்ரோல் விலை சந்தையில் 90 டாலருக்குமேல் இருந்த போது கூட 70 ரூபாய்க்கு தர முடிந்ததை 48 டாலருக்கு விற்கிற போது விலையேற்றி அதாவது வரியை உயர்த்தி மக்களை பிழிந்தெடுக்கிற பாஜக அரசு .. பாஜக அரசு வெகுமக்களுக்கான அரசல்ல.. பாப்பனர்கள் மற்றும் அவர்களுக்கு சேவகம் செய்யும் ஆபத்தானவர்களின் அல்லது அறியாமையில் ஊறியவர்களுக்காக செயல்படும் அரசு.. நெகிழியை விட ஆபத்தானவர்கள் இவர்கள்.. பயன்தருவதாக பொய்சொல்லும் கூட்டம்.. வெகு மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத.. பார்பனர்களின் நலன் அவர்களின் கொள்கைகளை தாங்கிப்பிடிக்கும் அரசும் அதன் தீங்கை உணராத தமிழிசைகளின் ஈனராகமும்.. காதை கிழிக்கிறது.. தனிமனிதனின்_வாழ்வியலையும்_கிழிக்கிறது.. .. #கேடு்கெட்டவர்கள்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment