Tuesday, June 6, 2017
கலைஞர்...
கலைஞர் உடல் நலிவுற்றிருந்தார்.. இப்போது விரைந்து குணமாகிவருகிறார்.. மிக நம்பிக்கையோடு மன உறுதியோடு எதிர்கொண்டு வருகிறார்.. உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் செய்யவில்லை எதையும் வெளிப்படையாக செய்தது திமுக..
..
எட்டுமாதங்களாக அவரின் பெயரின் அறிக்கைகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றவில்லை. தொண்டர்களை காவடி தூக்க சொல்லவில்லை மண் சோறு சாப்பிட சொல்லி தெய்வத்தை.? ஏமாற்றவில்லை.. மொத்தமாய் மொட்டையடித்து ஊரை ஏமாற்றவில்லை..
எதையும் வெளிப்படையாக நேர்மையாக செய்திருக்கிறார் தளபதி..
..
வயதுமூப்பும் தொற்றும் செய்த தொந்தரவை மருத்துவம் கொண்டு வென்று வந்திருக்கிறார்.. மூப்பில் வரும் இயலாமையை அதன் போக்கிலே போய் .. கடந்து வந்திருப்பது பெரும் #மகிழ்ச்சி..
இதுவரை தமிழகத்தில் உடல் நோவை அரசியலாக்கி அதில் பயனடைந்திருப்பதை தான் கண்டிருப்பீர்கள்.. அதிமுகவில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் .. தங்களுக்கு வந்த நோவை மிகப்பெரிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திருக்கிறார்கள் நேர்மையற்ற செயல்பாடுகள் ..அதுதான் அரசியலென்று கட்டமைத்து போய்விட்டார்கள்..
..
ஒரு அரசியல்வாதியின் பயணம் எப்படி இருக்கவேண்டுமென்பதை கலைஞரின் என்பதாண்டு பொதுவாழ்வு நமக்கு உணர்த்தி வந்திருக்கிறது.. எப்போது ஒளிவுமறைவற்ற #நெஞ்சுக்குநீதியை தந்திருக்கிறார்..எத்தனையோ விமர்சனங்கள் குற்றசாட்டுகள் எதிலுமே எதிரிகளால் ஆதாரங்களை தரமுடியவில்லை மாறாக எதிர் அணியினர் மீது இவர் தரும் ஆதாரங்கள் பொய்யாய் போனதே இல்லை.. ஜெயா வழக்கு உட்பட.. சட்டென்று நம்பிவிடும் தமிழனின் பலவீனத்தால் நிறைய இழந்து நிற்கிறோம்..
தமிழகமக்கள் சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரும் நிதியை தொலைத்துவிட்டுநிற்கிறார்கள்..
..
புரிந்துக்கொள்ளுங்கள் கலைஞரைப்போல ஒரு தலைவன் வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு இனத்திற்கோ/ சமூகத்திற்கோ கிடைத்திருப்பானேயானால் ..அந்த சமூகம்/இனம் கலைஞரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்கும்..
கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோதுதான் நீங்கள் இப்போது அனுபவிக்கிற உரிமைகள் அனைத்து கிடைத்தது.. கலைஞரைப்போல வெளிப்படையான திறந்த புத்தகமாய் வேறு தலைவரை நாடு கண்டதில்லை
..
#கலைஞர்_எம்இனம்செய்த_தவம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment