Monday, June 12, 2017
Mla for sale
#விற்பனைக்கு..
வாக்குகள் விற்பனைக்கு என்றான பின் சில்லரையை செலவு செய்தவன் மொத்தமாய் வரும் போது வேண்டாமென்றா சொல்வான்..
விற்பனையானது தமிழனின் மானம் ..இந்த கேடுகெட்டவர்களை இன்னும் நாம் பொறுமையோடு சகித்துக்கொண்டிருக்கிறோமே..
நிச்சயமாய்..இது அமைதி தமிழகம் தான் ..
..
இங்கே இப்போது பேசபடும் மூவரின் செயல்கள் நம்பிக்கையோடு இருந்ததில்லை.. காரணம் அதிமுகவை சேர்ந்தவரல்லாத தனி கட்சியை அல்லது குழுவை நடத்திவரும் வியாபார சிந்தனையோடு அரசியல் நடத்துபவர்கள்.. ஜாதியையும் மதத்தையும் தங்களின் கவசமாக்கிக்கொண்டு கிடைத்ததுவரை தேத்திக்கொள்ளலாமென்ற குறிக்கோளோடு செயல்படுபவர்கள்.. இதில் எந்தளவு உண்மை என்பதைவிட அன்று நடந்த சம்பவங்கள் இவர்களின் நம்பகதன்மையை கேள்வியாகிறது..
..
கருணாஸின் சேவை கீழ்தரமானதாக இருந்ததாக பேசப்பட்டதும் தனியரசின் அன்றைய தினங்களின் அமைதி எப்போதுமில்லாததாய் இருந்ததும் குற்றசாட்டை மெய்பிக்கிறது.. நண்பர் அன்சாரி.. நாகையில் மக்கள் கருத்து கேட்பதென்று முடிவெடுத்து பெட்டியெல்லாம் கடைசியில் அதை திறந்து பார்க்காமலேயே ..மக்களின் கருத்தென்ன என்பதை அறியாமலேயே படிவமில்லை தீர்ந்துவிட்டதென கூறி சலசலப்பாகி..அங்கிருந்து தேரழந்தூர் சென்று திடீரென .. மாயமாகி பின் சசிகலாவை ஆதரிப்பதாக இஸ்லாமிய சமுதாயத்தின் இரு கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் அதை ஏற்றார்கள் அதனால் ஆதரித்தேன் என சப்பைக்கட்டி.. இருந்த மரியாதையும் இழந்து நின்ற காட்சி கண்முன் வந்து போகிறது.. என்ன கோரிக்கை அந்த கோரிக்கைகள் என்னவானதென கேட்காதீர்கள் அது அன்சாரிக்கே தெரியாது..
..
தங்கள் சமூகத்தை/சமுதாயத்தை .. தன்னை நம்பியவர்களை விற்கிற #கேடுக்கெட்டத்தனம் இது..
அதிமுககாரர்கள் விலைபோனார்கள் என்கிறபோது
எழும் தாக்கத்தை/கோவத்தை விட தங்கள் இனத்தை ஜாதியை மதத்தை சொல்லி நாங்கள் காக்க வந்த கனவான்களென பேசி திரியும் இந்த கழிசடைகளை இனம் கண்டு இவர்களை போன்றோர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படவேண்டும் .. இன்று மறுத்து அறிக்கைவிடுவதென்பது எல்லோரும் சொல்லும்/செய்யும் அரசியல் .. பாவம் மாட்டிக்கொண்டவர்கள் தங்களை யோக்கியசிகாமணி என சொல்வதைப்போல..
..
இந்த ஆட்சி இனியும் தொடரவேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டிய காலம் நெருங்கிவிட்டது ..
..
#கழுத்தறுக்க_தயங்காதவர்கள்..
#MLA_for_Sale..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment