Saturday, June 10, 2017

#நம்ப_தகுந்தவரில்லை .. மிக சரியாக சொன்னால் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய நற்செயல் நம்ப தகுதல் (தகுதியாதல்) .. எதிரிகளை ஏமாற்றி திசை திருப்புவதென்பது ஒருவகை வியூகம் ஆனால் கூடவே நடந்தவனை.. தன்னை முழுமையாக நம்பியவனை தலையில் தூக்கிவைத்து ஆடியவனை .. நம்பியிருந்தவனை கழுத்தறுப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.. .. அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.. கொள்கையால் சேர்ந்தவர்களை தவிர... வேறெதையோ எதிர்ப்பார்பவரிடம் இந்த நம்பகதன்மை இல்லாமல் போகும்.. என் கொள்கையில் மாற்றம் எனச்சொல்லியோ.. அல்லது அவரோடு கருத்துவேறுபாடென்று பிரியலாம் அது நேர்மையான முறையிலாக இருக்கவேண்டும்.. ஈ.வி.கி.சம்பத் காமராஜரிடம் இருந்து வெளியேறிய போது அதை காமராஜரிடமே சென்று தெரிவித்தார் அவரும் வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தார்.. அது நாகரீகமான செயல்பாடு நம்பிக்கை துரோகமில்லை.. .. ஆனால் சிலர் கடைசிவரை நம்பிக்கையோடு இருப்பதுபோல காட்டிக்கொண்டுவிட்டு கழுத்தறுத்து செல்வார்கள்.. திரு.பண்ரூட்டி ராமசந்திரன்.. இவரைப்பற்றி சொல்லவேண்டுமெனில் நம்பிக்கை என்ற சொல்லின் எதிர்பதம் இவர்.. அவசரநிலைக்காலம்.. கலைஞருக்கு வாகன ஓட்டிகூட இல்லை.. பண்ரூட்டி காரை ஓட்டிக்கொண்டுவருகிறார்..கலைஞர் கைது செய்யபடலாமென செய்திவருகிறது.. திடீரென வாகனத்தை விட்டு இறங்கி போய்விட்டார்.. கலைஞரை நடுரோட்டில் விட்டு ஓடிவிட்டாரென சொல்வதுதான் சரி.. அப்போது வேறொரு காரில் வந்த கண்ணப்பன் கலைஞரின் காரையோட்டி பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார். அதனால்தான் அவரை #காரோட்டி_கண்ணப்பன் என்றழைத்தார்.. பிறகு திமுக ஆட்சியிக்கு வந்தபிறகு.. காரோட்டிக்கு போக்குவரத்து துறையை ஒதுக்கினார்.. இன்னொரு நிகழ்வையும் பதிவு செய்யவேண்டும்.. நாஞ்சிலார் அதிமுகவிலிருந்து மீண்டும் திமுகவிற்கு வந்த போது #வருவாய்_தம்பி என்றார்.. அவருக்கு திமுக ஆட்சியில் வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டது.... அதன்பிறகு கால சூழல் மாற எத்தனையோ முறை தூது அனுப்பியும் பண்ரூட்டியை கலைஞர் சேர்த்துக்கொள்ளவில்லை.. .. ஆனால் வைகோ விடயத்தில் இதற்கு நேர்மாறாக நடந்துக்கொண்டார்.. இன்னும் சொல்லப்போனால் மிகவும் நம்பினார் கனிவோடே எப்போதும் நடந்துக்கொண்டார்.. மூன்றாவதுமுறை மாநிலங்களவைக்கு இவரை தேர்வு செய்ய கடும் எதிர்ப்பு கட்சியினரிடையே இருந்தது அது பொதுக்குழுவில் கூட எதிரொலித்தது.... ஆனாலும் கலைஞர் வைகோவிற்கு வாய்ப்பை தந்தார்.. கட்சியை உடைத்து கண்ணப்பன் உட்பட ( மற்றவர் சென்றதற்கு காரணம் தெரியும் கண்ணப்பன் சென்றதற்கு காரணம்தான்தெரியவில்லையென்பார்) 9,மாவட்டசெயலாளரோடு சென்று கட்சிக்கு உரிமை கோரிபோதும் கூட அஞ்சாமல் எதிர்க்கொண்டு.. மதிமுக ஆரம்பித்தபோது மறுபடியும் திமுக என கருத்துகூறினார் .. பொடோ சட்டத்தில் ஜெயலலிதா சிறையில் வைத்தபோது கலைஞரே நேரில் சென்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்து பிணையில் வர சொன்னார்.. அப்போது வைகோ சொன்ன வாசகம் என் உயிருள்ளவரை கலைஞரை எதிர்க்கமாட்டேன்.. பிறகு ஜெயாவோடு கூட்டணி அமைத்து திமுகவை வரவிடாமல் செய்யவேண்டுமென்ற சகுனித்தனம் செய்து கடைசியில் கரைந்து கரைந்து... இடம் தெரியாதநிலைக்கு வந்திருக்கிறார்.. .. என் மாணவ பருவத்தில் அன்றைய மாணவரணி செயலர் எல்.ஜி யோடு வலம் வந்த கம்பீரதலைவராக மனங்களில் குடிக்கொண்டவர்.. அப்போதே மன்னை போன்றவர்கள் இவரை சரியாக கணித்திருந்தார்கள்.. கோ.சி.மணி போன்றவர்களெல்லாம் கலைஞர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவராக நடிக்கிறார் என்றார்கள் அவர்கள் சொன்னதுதான் நடந்தது.. மணி அண்ணனின் சொல்லில் சொல்லவேண்டுமெனில்.. அவர் இக்கட்டான நிலையில் தஞ்சையில் கூடிய பொதுக்குழுற்கான ஏற்பாட்டின் போது எங்களிடையே பேசியவார்த்தை... நம்பதகுந்தவனில்லையென சொன்னது இப்போதும் கேட்கிறது.. ஆம்.. .. கலைஞரின் கவிதையொன்று நியாபகம் வருகிறது.. எம்ஜிஆர் மறைவையொட்டி பெரியார் நிறுவிய கலைஞர் சிலையை கடப்பாரையால் ஒரு இளைஞன் பெயர்க்கிறான்.. அப்போது கலைஞர் எழுதினார்.. "#செயல்படவிட்டோர் சிரித்துமகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னதம்பி.. முதுகில் குத்தவில்லை நெஞ்சில்தான் குத்துகிறான்.. அதுவரை நிம்மதியெனக்கு".... .. இவர்கள் முதுகில் குத்தியவர்கள்.. நம்ப தகுதியில்லாதோர்.. வினைவிதைத்து வினையையே அறுப்பவர்கள்.. #தீதும்_நன்றும்_பிறர்_தரவாரா.. .. தோழர். ஆலஞ்சி படம்.. மலேசிய விமானநிலையத்தில்

No comments:

Post a Comment