Friday, June 2, 2017

கலைஞர்..முகம் கண்டு

விழா மலரை கலைஞர் பார்வையிடும் காணொளி காட்சி.. தமிழ் நல்லுலகம் பூரித்துநிற்கிறது.. வயது மூப்பும் உடல்நலிவும் புரிகிறது ஆனால் எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்.. .. என்பதாண்டுகாலம் தமிழக நலன் மட்டுமே எண்ணத்தில் கொண்டு சொல்லால் செயலால் ஓய்வறியாது உழைத்த எம் தலைவரின் 94 ம் பிறந்தநாள் விழா.. அறுபதாண்டுகள் தொடர்ச்சியாய் சட்டமன்ற உறுப்பினராய்.. யாராலும் தொடமுடியாத சாதனை நாயகராய் .. வைரவிழா காணும் கலைஞரை.. எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.. சதா எதிர்த்து கொண்டிருந்தவரெல்லாம் இப்போது நல் வாழ்த்தை சொல்கிறார்கள் #மகிழ்ச்சி.. .. தேசத்தின் பல்வேறு தலைவர்கள்.. தங்களின் வாழ்த்தை மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.. இந்திய துணைக்கண்டமே இவரது சாதனையை எண்ணி வியக்கிறது.. எள்ளல் பேசியவன் வாய்மூடி கிடக்கிறான்.. காரணம் மிக எளிது.. விமர்சனங்களை இரும்புகரம் கொண்ட அடக்கவில்லை.. அவரவர் உரிமையதென அதன் போக்கில் விட்ட மாபெரும் தலைவர் இவர்.. அதனால்தான் சோர்ந்து விழுகிறார் எம் எதிரிகள்.. .. வீழ்த்தி விடலாம் வேரோடு என்றலைந்தவர்கள்..பாவம் வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கிறார்கள் எத்தனை விமர்சனம் கலைஞரின் உடல் நலம் குறித்து மூப்பென்றும் பாராது வாய்க்கு வந்ததை பேசி திரிந்த/திரியும் சிறுப்பிள்ளைகளே.. கலைஞர் யாருமே எழுத முடியாத வரலாறு.. இந்திய துணைக்கண்டம் கண்ட ஒப்பற்ற அரசியல் தலைவர்.. தமிழ் உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் தலைவர்.. இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் எழுச்சி நாயகர்.. தமிழ் பெற்ற பேறு.. தமிழ்நாடு செய்த #அருந்தவம்.. .. தமிழகமே வணங்கி நிற்கிறது இந்த #தமிழ்கிழவனின் முகம் கண்டு.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment