Friday, June 16, 2017

திருமா..

கலைஞர் ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரப்புவார்..திருமா.. .. நண்பர் திருமா அவர்களுக்கு .. .. தங்களின் ஒப்பீடே தவறு.. எந்த நிலையைக்கொண்டு கலைஞரோடு ஜெயலலிதாவை ஒப்பீட்டீர்களென தெரியவில்லை.முதல்வராக ஐந்துமுறை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதையா அல்லது கவர்ச்சியில் உருவான கட்சியை கடைசிவரை தன் கட்டுபாட்டில் வைத்திருந்ததையா எதை சொல்கிறீர்.. .. முதலில் கலைஞரின் அரசியல்அறிவிற்கு முன் ஜெயலலிதா சூன்யமாக தெரிகிறார்.. அடாவடித்தனம் தான்தோன்றித்தனமும் .. விடாப்பிடியாக தவறை நியாயப்படுத்துவதும் தவிர அவரின் அரசியல் தொலைநோக்கென்று எதுவுமே இல்லை. திமுக எதை கொண்டுவந்தாலும் குறிப்பாக கலைஞரின் திட்டங்களை எதிர்த்ததை தவிர.. ஆனால் அவர் காலத்திலேயே அவரே சரியென சொல்லவைத்து காலம் பாடம் புகட்டியது.. காவரி நடுவர் மன்றம் வைத்த போது அதை எதிர்த்தவர்தான் கடைசியில் காவிரித்தாயானார்.. கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயில் நாட்டிற்கு பயனில்லை என்றவர்தான் கடைசியில் தானே கொடி அசைக்க வேண்டி வந்தது.. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. விவசாய கடன் தள்ளுபடி .. இரண்டு ரூபாய்க்கு அரசியென்ற போது சாத்தியமில்லை என்றவர்.. ஒரு ரூபாயாக்கி காட்டியவுடன் இலவசமாக தருவேன் என்றார்..இலவசங்களை எதிர்த்தவர் கடைசியில் இலவச அறிவிப்பு செய்யவேண்டி வந்தது.. சொல்லிக்கொண்டே போகலாம்.. தமிழகம் கண்ட அனைத்து நல்லதிட்டங்களும் கலைஞரின் அறிவில் உதித்தவை.. நடந்த நல்லவையெல்லாம் கலைஞரின் செயலில் வந்தவை.. .. ஜெயலலிதாவைப்போல ஒரு அரசியல்வாதி நாடு கண்டதில்லை.. அவர் பாப்பாத்தியாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டியிருந்திருக்கும்.. நானும் ஏதாவது ஒரு திட்டம் சுயமாக சிந்தித்து செயல்படுத்திருக்கிறாரா என யோசித்து பார்க்கிறேன்.. எல்லாமே கலைஞரின் துவக்கமாகவோ அல்லது அவரின் எண்ணத்தில் உதித்து எழுத்தில் வந்ததாகவோ தானிருக்கிறது. மலையோடு மடுவை ஒப்பீட்டிருக்கிறீர்.. .. கலைஞர் பெருமகன் #பெரியாரின்_பெரும்சீடர்..அவர் எண்ணத்தில் உதித்ததெல்லாம் பெரியார் சொன்னதும் எண்ணியதுமாகவே இருந்தது.. கலைஞரின் பிற திறமைகளை கணக்கில் கொள்ளதேவையில்லை அரசியல் ஒன்று மட்டும் போதும்.. இதுவரை தமிழகத்தில் என்றில்லை இந்தியாவிலேயே கலைஞருக்கு சமமான அரசியல்வாதி இல்லையென்றெ தோன்றுகிறது.. எல்லாவற்றிக்கும் சரியான தீர்வை தொலைநோக்கோடு.. இந்த சமூகத்தில் பரவிகிடக்கும் மூடங்களை சமூக அநீதிகளை தன் அதிகார வரம்பிற்குட்பட்டு தேசமே உற்று நோக்கும் வண்ணம் செய்திருக்கிறார்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை..இந்தியாவிற்கே வழிகாட்டியது.. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் இந்தியாவே ஆச்சரியம் அடைந்தது பார்பன கூட்டம் பதறியது.. .. சொல்லபோனால் சிறந்த வழிகாட்டியாக கலைஞர் திகழ்கிறார்.. தயவு செய்து இதுபோன்ற அற்பத்தனமாக ஒப்பீட்டை செய்யாதீர்.. .. ரஜினி .. அரசியலுக்கே வராதவரைப்பற்றி பேசுவதில்லை அது எங்கள் நாகரீகமல்ல.. குழந்தையோடு மல்யுத்தம் செய்வதில்லை நாங்கள்.. பிழைப்பிற்காக எதையாவது பேசுகிறவர்களோடு திருமாவும் இணைவது வேதனையான விடயம்.. நடிகை கஸ்தூரியின் கருத்தைப்போல அறிவிலித்தனமாக இருக்கிறது.. உயரத்திலிருந்து சறுக்கிவிழுகிறார்.. அந்த உயரம் கூட திராவிடம் (திமுக) தந்தது.. .. தோழர். ஆலஞ்சி..

No comments:

Post a Comment