Monday, June 5, 2017
குமரியின் மகள்
நாட்டை விட்டு வெளியேறுவேன் தமிழிசை..
கிறுக்குத்தனமாக பேசிவருவது மதவாதிகளுக்கு புதிதல்ல. குமரியின் மகள் பேசும் போது நமக்கே சங்கடமாக இருக்கிறது.. நிறைய கருத்து பேதங்கள் இருந்தபோதும் குமரியின் சொல்லாடல்கள் ரசிக்கும்படியாகதானிருக்கும்..
..
வேறுவழியே இல்லை தமிழிசை தங்களை தயார்படுத்திக்கௌள்ளுங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்.. திராவிட நாட்டில் இடமில்லை உ.பி.வேண்டுமானால் செல்லலாம்.. அங்கும் இடம் கிடைக்காதே தமிழிசை.. வாரணாசி போன்ற புகழ்பெற்ற கோவில் நகரங்களில் .. சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார்கள்.. இன்றைய விடுதலை கூட கருத்திட்டிருக்கிறது.. முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த வாசகம்.. ஆங்கிலேயர் காலத்தில் அகற்றபட்டதே.. அது மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது..
உங்களுக்கு புரிகிற மாதிரி.. உங்கள் பாட்டிகளெல்லாம் தோளில் சீலையில்லாமல் திருவாங்கூரில் நடந்த காலத்தில் .. எழுதப்பட்டிருந்த வாசகம்.. மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது .. அங்கேயும் போக வழியில்லை..
..
முதலில் தன்மானத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. வாரணாசி அறிவிப்பை கண்டு கொதித்தெழந்திருக்க வேண்டாமா.. பாஜக தலைமைக்கு எடுத்து சொல்லியிருக்கவேண்டாமா.. இங்கிருந்து பக்தனாய் செல்லும் சூத்திரன்.. வெளியில் நிற்கதான் வேண்டுமா.. அதையெல்லாம் சரிசெய்ய மாட்டீர்கள்.. நாட்டைவிட்டு போய்விடுவதாக பேசி அசிங்கப்பட்டு நிற்காதீர்.. சரிசரி
போகும் போது சொல்லிவிட்டு போங்கள் ..
..
நாகரீகமாக பேசவும் தெரியவில்லை.. சுகாதாரமாக இருக்கவும் தெரியவில்லை.. பிறந்த நாளுக்கு கேக்கை பிசைந்து கொடுத்தபோதே உங்களின் தரம் மக்களிடம் வேடிக்கை பொருளாகிவிட்டது..
இனியாவது .. பேச்சை குறையுங்கள் .. பேசுவதன் பொருள் புரிந்து பேசுங்கள்.. வாய்க்குவந்ததை பேசி அவமானப்பட்டு நிற்காதீர்.. இதெல்லாம் குமரியின் மகள் .. தெருவோரம் திரிகிறவரைப்போல உளறிக்கொண்டிருக்கிறாரே என்பதற்காக..
..
அது சரி.. உங்கள் விருப்பம் விரைந்து நிறைவேறும்
உங்கள் பயணத்திற்கு எமது வாழ்த்துகள்
..
#தொலையும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment