Sunday, June 11, 2017
பேரழிவு காலம்
குடும்ப சண்டையில் நாம் தலையிட தேவையில்லை நாங்கள் தான் வாரிசு என்பதிலும் பெரிய எதிர்ப்பேதும் வராது .. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வது அநாகரீக செயல் ..
..
வாரிசில்லாத ஜெயாவின் சொத்துகளுக்கு இரத்தஉறவின்முறை சொந்தங்கள் ..அவகாசம் கோருவது எங்கும் நடப்பதுதான் அதில் பிரச்சனை ஏதும் வந்தால் வழக்காடுமன்றத்தை நாடலாம்.. அழைத்தார் அடித்தார்களென நாடகமாடுவதும்..பிரதமரிடம் (வேலைவெட்டியில்லாதவர்) முறையிடுவதாக சொல்வதும் கொஞ்சம் மிகை..
மறுதலித்து பேட்டி தந்த சகோதரர்.. ஜெயலலிதாவைவிட கலைஞர் சிறந்தவரென சொன்னது நிறைய பேருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்..
..
அதிமுகவின் நிலையை பார்க்கிறபோது.. உண்மையில் சங்கடம் தோன்றவில்லை.. காரணம்..
நயவஞ்சமும் நம்பிக்கை துரோகமும்.. பதவிஆசையும் நீண்டநெடிய வரலாறை எழுதுவதில்லை வரலாற்றில் இடம்பெறும் ஆனால் அது புகழுக்குரியதாக இருந்ததில்லை.
மகோராவின் (எம்ஜிஆர்)பதவி ஆசையில் உதித்த அதிமுக ..
அவரின் அந்தரங்கத்தின் அபிலாசைகளின் கையில் சிக்கி .. தாயும் மகளும் செய்த நன்றி..? க்காக வாரிசாக்கி... கடைசியில் யாராரோ கட்சியின் வாரிசுகள் நாங்கள்தான் என சொல்ல கேட்கிற நிலைக்கு வந்திருக்கிறது.. #காலக்கொடுமை
..
தமிழகம் கண்ட அரசியல் பேரிடர் காலம்
Political calamity period என இதை கூறலாம்.. ஆட்சியாளர்கள் இல்லை யார் வழிநடத்துகிறார்கள் தெளிவில்லை.. எல்லோரும் இருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி எவ்வளவு சேர்க்கலாம் என்ற ஒற்றை சிந்தையில் .. ஒன்று கூடி நிற்கிறார்கள்.. நாடு என்ன ஆனால் எனக்கென்ன ..எங்களுக்கு எவ்வளவு தேறும் அது ஒன்றே இந்த கேடுகெட்டவர்களின் நினைப்பில் இருக்கிறவரை சுருட்டுவோம்..மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தால் நமக்கென்ன ..இதுதான் நடக்கிறது ஜெயலலிதா சொத்தும் ..கட்சியும் பசியெடுத்த குள்ளநரிக்கூட்டத்திற்கு கிடைத்த இரையாய்..குதறி வைக்கிறார்கள்..
..
இன்னமும் நிறைய காண வேண்டியிருக்கிறது..
ஆனால் ஒன்று இவர்கள் ஆட்டம் முடியும் போது பார்த்தால்..
சூறாவளியில் சிக்கிய சருகைப்போல தூக்கியெறியப் படுவார்கள்..
எதற்கும் உருப்படியில்லாதவர்கள்..
#உதவாக்கரைகள்_worthless_fellow..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment