Wednesday, June 14, 2017
தளபதி(தீ...))
விவாதிக்க முடியாத பிரச்சனையை ஸ்டாலின் எழுப்பினார் சபாநாயகர் தனபால்.
விவாதிக்க முடியாத பிரச்சனையா அது .. காசு வாங்கிக்கொண்டு எடப்பாடிக்கும் பன்னீருக்கும் வாக்களித்ததாக /ஆதரவளித்ததாக அதிமுக எம்எல்ஏவே சொன்னபிறகு அதில் உண்மையிருக்கிறதா என்பது குறித்து விவாதித்து நீதிவிசாரணைக்கு பரிந்துரை செய்வது தானே சரி..
என்ன பயம்..
வெளியேற்றிவிடலாமென்ற உக்தி சரியானதல்ல.. திருப்பி அடிக்க ஆரம்பித்தால் ரணகளமாகிவிடும் எச்சரிக்கை.. அமைதியாக இருப்பதால் அல்லது வெளியேறுவதால் மீண்டும் மீண்டும் அதே வழியை பின்பற்றினால் விளைவுகளுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டி வரும்..
..
கேவலமான ஆட்சி அதன் சபாநாயகர் தன் நிலை மறந்து நேர்மையின்றி செயல்படுவது சரியான நடைமுறையல்ல.. மக்கள் மன்றத்தில் மிக பெரிய வெறுப்பை ஆளும் அரசும், அமைச்சர்களும் அதிமுக உறுப்பினர்களும் பெற்றிருக்கிறார்கள்.. எதனால் மூடி மறைத்தாலும் உங்கள் யோக்கியதை நாளுக்குநாள் சிரிப்பாய்சிரிக்கிறது.. இப்போதே திருத்திக்கொள்ள முயலுங்கள் இல்லையெனில் வரலாற்றில் தடமே இல்லாமல் அதிமுகவை அழித்துவிடுவார்கள் மக்கள்.. மிக மோசமான நிர்வாகம்.. கொள்ளையடிப்பதும் அதற்கு துணைபோவதும் வெளிப்படையாகவே நடக்கிற அவலம்.. தட்டி கேட்கிறவனின் ஜனநாயக குரலை நெறிப்பது.. நிச்சயமாக நல்லதொரு விடயமாக இருக்காது .. மக்கள் முன் நாளுக்கு நாள் மதிப்பிழந்து வருகிறீர்கள்..
..
விற்பனைக்கு வந்தது எம்எல்ஏக்கள் அல்ல தமிழர்களின் மானம் ... கேடுகெட்டவர்களை தேர்தெடுத்துவிட்டு மரியாதை கெட்டு கிடக்கிறது தமிழ்சமூகம்.. நாட்டின் பிற மாநிலங்கள் முன் கூனிகுறுகி நிற்கவைத்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல வலம் வருகிறீர்களே அறிவுகெட்டவர்களே.. காலம் குறித்துவைத்துக்கொள்கிறது.. இருக்குமிடம் தெரியாமல் அழித்தொழிக்கப்படுவீர்கள் ..
..
விடுவதாயில்லை நாளையும் கூவத்தூரின் கூத்துகள் பற்றியும்.. பெண்ணையும் பொன்னையும் தந்து இவர்கள் ஆடிய கள்ள களியாட்டம் பற்றியும் சட்டமன்றத்தில் எழுப்பாமல் விடுவதாயில்லை ..
நாடும் மக்களும் உண்மை அறிந்திருந்திருக்கிறார்கள்..
..
இனி..
#அடித்தாடவேண்டும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment