Thursday, June 1, 2017

அரசியல் கழிசடை மணியன்

தமிழருவி மணியன்.. அரசியல் கழிசடை.. வார்த்தை கொஞ்சம் தடிமனாகி போனதற்காக வருத்தமில்லை.. காரணம் எங்குமே நிலையில்லாத.. கற்ற தமிழை பேசும் திறமையை கொண்டு வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான பிறவி.. முதலில் எங்கிருந்தார்.. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி சிண்டிகேட் காங்கிரஸ் அதாவது நிறுவன காங்கிரஸ் மா.பொ.சி.யின் தமிழரசு கழகம் பிறகு ஜனதா கட்சி .. லோக்சக்தி ..மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் பிறகு..காந்திய மக்கள் இயக்கம் காந்திய மக்கள் கட்சி கடைசியாய் மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் மக்கள் தந்த மரண அடியை தொடர்ந்து வீர வசனம் பேசி அரசியலில் இருந்து விலகினார்.. இப்போது மீண்டும் சோற்றுக்கு வழியில்லாமல் போய் ரஜினியை பின் துணைப்பதாக சொல்லி ஏதேதோ உளறிக்கொண்டியிருக்கிறார் அதில் பிரதானமாய் திராவிட கட்சிகளை ஒழிப்பேன் அது என்னால் மட்டுமே முடியும் .. நிலையற்ற கொள்கையும், குணமும் கொண்டவரால் என்ன செய்துவிடமுடியும்.. .. காங்கிரஸில் இருந்து வெளியேறி.. பல மரகிளைகளில் தாவி கடைசியில் கலைஞரிடம் தான் வந்தார் கலைஞரின் தனக்கே உரித்தான இளகிய உள்ளம் திட்டகமிஷனில் இடம் அளித்தார்.. கடைசியில் கலைஞரை வசவு பாடிதான் இப்போது பிழைத்துக்கொண்டிருக்கிறார்.. வீட்டுவசதி வாரியம் இவருக்கு திட்டகமிஷனில் இருந்த போது வீடு ஒதுக்கியது .. காலகெடு முடிந்தவுடன் வீட்டை காலி செய்ய முறையான அறிவிப்பு தந்தும் அதை அலட்சியபடுத்தியதால் ..கடைசி கட்டத்தில் வீட்டைவிட்டு இறக்கிவிட வேண்டிய சூழல்..அதனால் கலைஞரின் மீது தீராத பகை கொண்டு திரிகிறார்.. முறைகேடாக மூன்றாண்டுகளுக்கு மேல் இருந்தும் ஆசைவிடவில்லை.. இது தான் இவரது லட்சணம் .. .. திராவிடத்தை ஒழிப்பேன் என கூவிக்கொண்டி திரிகிற மணியனே .. முதலில் நிற்க காலில் இருக்கிறதா பார்.. கட்டை காலில் அடுத்தவன் தயவில் அரசியல் செய்கிற ..இந்த லட்சணத்தில் திராவிட கட்சிகளை என்னால் தான் ஒழிக்கமுடியுமென சொல்கிறாய் கேட்கதான் ஆளில்லை ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாதவரின் வெற்று கூச்சலென்பதை அறிவோம்..வீரவசனம் பேசி அரசியலை விட்டே போனவர் தானே .. திராவிடத்தை ஒழிப்பேன் என்றவனெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் போனான்.. இருக்குமிடமே இல்லாத நீரெல்லாம்.. அரசியல்வாதியே அல்ல.. .. #வாய்சவடால் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment