Friday, June 9, 2017
கைப்புள்ள
#ஆபத்தானவரா..
சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.. அந்தளவிற்கு ஒர்த் (மதிப்பு) இல்லாதவர் தான் வைகோ.. ஆனால் சிலவற்றை பேசவேண்டும்.. விசா வழங்கப்பட்டிருக்கிறதே ஏன் அனுமதியில்லை என கேள்வி எழும்.. விசா வழங்கும் படிவத்திலேயே மிக தெளிவாக ஒரு வாகம் இருக்கும் அனுமதிப்பதை
Immigration குடியேற்ற அதிகாரிகள் முடிவு செய்வர்..
அதுதான் நடந்திருக்கிறது.. விசா வழங்குகிறவர்களுக்கு விசா விண்ணப்பவரைப்பற்றி தெரிந்திருக்கவேண்டியதில்லை ஆனால் குடியேற்ற அதிகாரிகள் Immigraton officers வழங்கபடுகிற பட்டியலில் வைகோவின் பெயர் இருக்கிறது.. அவ்வளவுதான்.. இதுதான் பார்வதி அம்மாள் விடயத்திலும் நடந்தது. அப்போது அரசை குறை சொன்னவர்களுக்கு இப்போது காலம் விளக்கியிருக்கிறது..
..
அது சரி வைகோ ஆபத்தானவரா. பாவம் சிறுப்பிள்ளைத்தனமானவர்.. சட்டென்று உணர்ச்சிவயப்படும் கூமூட்டை மலேசிய அரசு தீண்டதாகாதவர்/ தீவிரவாதிகள் தொடர்பு பட்டியலில் இவர் இருப்பதெல்லாம் கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது .. மற்றபடி வேறு காரணம் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம்.. தமிழர்களிடையே பிரிவினையை கொண்டுவரும்படியான பேச்சு.. இளைஞர்களை வழிகெடுத்தல் .. காட்டுகத்தல் கத்தி பொது அமைதிக்கு தீங்கு விளைவித்தல் இப்படி ஏதாவது நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம்..
..
மலேசியா அரசு அவமான படுத்தியதாக சில குரல்கள் கேட்கிறது அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நாம் விமர்சிக்க முடியாது அதை அளவுகோல்தான் இலங்கைக்கும் என்பதை புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டனர்.. அமைதியான ஜனநாயக பாதையில் தொடர் போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைத்து போராடினால்தான் எதிலும் வெற்றிபெற முடியுமென்பதை ஈழம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.. மீண்டும் தோக்கை நோக்கி நகர்வார்களோ என்ற அச்சம் அதற்கு இவரைப்போன்ற அரைவேக்காடுகளை பயன்படுவார்களோ என நினைத்து தடை விதித்திருக்கிறார்கள்.. ஆனால் அந்தளவிற்கு பயன்படாதவர் என அறிந்திருக்கவில்லை மலேசிய அரசாங்கம்.. ஆம் தமிழகத்திலேயே இருபத்தைந்து வருடங்களாக ஈழ ஆதரவு பேசி வந்தும் அவரால் எந்த மாற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தமுடியவில்லை என்பதும் அதைவிட இருக்கிற இடம் தெரியாமல் போனதும்.. இவரால் எந்த பயனையும் வெளிநாடுவாழ் தமிழ்சமூகம் அடையவில்லையென்பதுமே யதார்த்தம்..
..
#கைப்புள்ள..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment