Saturday, June 17, 2017
பெரியார்
மதம் இனம் மொழி ஆகியவற்றை கடந்தவராக ரஜினி இருப்பார் ஒட்டு மொத்த மக்களும் அவரை ஆதரிப்பார்கள் - திருமா
..
தீபாவும் நானும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக தொண்டர்கள் எங்கள் பின்னால் வந்து விடுவார்களோ என்று சசிகலாவுக்கு பயம்....மாதவன்..
..
ஜெ. இருந்த இடத்தில் என்னை வைத்துப் பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். - தீபா
..
எவ்வளவு கேவலமான நிலைக்கு தமிழக அரசியல் தள்ளப்பட்டிருக்கிறது.. கட்சியே ஆரம்பிக்காதவரை ஆஹா என புகழ்வதும்.. யாரென்றே அறிந்திராத மாதவனும் தீபாவும்.. அதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடுவதும்..
நாங்கள் வந்தால் தொண்டர்கள் பின்னால் வந்துவிடுவார்களென சொல்வதும்..
மிகவும் அருவறுப்பாக இருக்கிறது.. தமிழகமக்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள்.. 70 களில் ஏற்பட்ட சினிமா மோகம் இன்னமும் இருப்பதாக எண்ணுகிற மக்களை ஏமாளிகளென எண்ணுகிற இவர்களின் எண்ணம் ஈடேறாது..
..
ரஜினி தமிழக மக்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறாரா.. மக்களின் பிரச்சனைகளை பற்றிய அடிப்படை அறிவு இருக்கிறதா.. மதம் இனம் கடந்தென்பதிலிருந்தே அவர் இந்துத்துவாவை தூக்கி பிடித்திருப்பது தெரியவில்லையா.. ஆரம்பத்திலேயே அறிந்திருந்ததால் தான் திமுகவோடு இணைந்து செயல்பட தயாரென்ற போதும் கூட தளபதி செவிசாய்க்கவில்லை.. காரணம் ரவிக்குமாரின்.. எண்ணம் எழுத்திற்கெதிராக ... பெரியாரிய சிந்தனைக்களுக்கெதிரான ..சமூகநீதியின் அடித்தளத்தை அசைக்கிற ரவிக்குமாரின் செயலை கண்டிக்காமல் கள்ளமௌனம் காத்தபோதே தெரியும்.. இருபுறமும் துண்டை விரிக்கும் கடைந்தெடுத்த யோக்கியதையை அறிந்ததாலும்..
ஏறி வந்தபின் எட்டி உதைக்கிற செயல்களை நிறைய கண்டதாலும் இப்போது நடிகரின் அரசியல் வரவிற்காக காத்திருக்கும் இளவுகாத்த செயலை கண்டுக்கொள்ளவில்லை..
..
ஊடகங்கள் தூக்கிப்பிடிக்கிற அளவிற்கு தகுதியானவராகவோ மக்களின் உணர்வுகளை அறிந்தவராகவோ தியாகங்கள் செய்தவராகவோ.. இல்லாத ஒருவரை பாசிச சிந்தனையில் ஊறித்திளைத்த கவர்ச்சியும் காசும் உள்ளதை தவிர வேறேதுமில்லாத ஒருவருக்காக தன் அரசியல் வாழ்வை திமுகவில் ஆரம்பித்த திருமா போன்றவர்கள் முன்னில் எடுப்பது மடத்தனமன்றி வேறிலேலை..
ஒருவேளை தலித் மக்களின் எம்ஜிஆர் ஆதரவைப்போல ரஜினி ஆதரவும் இருக்கும் என திருமா நினைத்தாரோ தெரியவில்லை..
..
தீபாவும் மாதவனும் வெற்றிடம் வெற்றிடம் என கூச்சலிடும் ஜெயாவின் மறைவிற்கான இடத்தை ரஜினியென்றில்லை பாஜகவோ அல்லது வேறு கட்சிகளோ நிரம்பமுடியாது திமுக தான் எதிரியை கூட தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது.. யாரை தேர்வு செய்யவேண்டுமென காலம் தீர்மானிக்கும்..நிச்சயாக அது ரஜினியாகவோ பாஜகவோ அல்ல.. அதிமுகவின் அதிகார மையம் செயலிழந்திருந்தாலும் அது மிகப்பெரிய தலைவரை தராமல் போனாலும் நிச்சயமாக களத்தில் நிற்கும்.. பாசிசமும் மதமும் கவர்ச்சியும் இன மொழி ஜாதி வெறியும் தமிழகத்தில் தலைதூக்க முடியாது..
காரணம் இவர்களை/இவைகளை
#கிழவனின்_கைத்தடி_தடுத்துநிறுத்தும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment