Saturday, June 24, 2017

மிசா..

25.6.1975.. #கறுப்புதினம் இன்றைய இளைய சமூகம் அதிகம் அறிந்திராத நாள்.. அவசரநிலைபிரகடனம். எமர்ஜென்ஸி மிசா MISA maintainence of internal security act இந்திய சட்ட செயலாக்க பிரிவினருக்கு அதிகாரம் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது எந்தயொரு தனிநபரையும் கைது செய்யலாம் அவரது செயல்பாடுகளை முடக்கலாம் அவரது உடமைகளை பறிமுதல் செய்யலாம் இச்சட்டம் அதிகளவில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டது.. .. இந்தியாவின் இரும்பு பெண்மணி என அறியப்பட்ட இந்திராகாந்தி செய்த மாபெரும் #வரலாற்றுப்பிழை.. நாடெங்கும் ஜனநாயகவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.. கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது பத்திரிக்கைகள் சென்சார்( தணிக்கை)செய்து வெளிவந்தது.. தமிழகம் திமுக ஆட்சி அகற்றப்பட்டதும் இந்த மிசா காலத்தில் தான் .. .. மகோரா (எம்ஜிஆர்)போன்ற ஜால்ராக்கள் இந்திராவின் நடவடிக்கையை எதிர்க்க அஞ்சி வாய்மூடியாய் இருந்தார். காமராஜரை கைது செய்யவேண்டுமென்ற கோரிக்ரையை நிராகரித்த கலைஞர் ஆட்சி போனாலும் பரவாயில்லையென காமராஜரை கைது செய்ய மறுத்தார்.. .. மிசாவில் திமுகவினர் அதிகளவில் சிறைச்சென்றனர். மாறன் தளபதி உள்ளிட்டோர் ஒருவருடம் கொடும்சிறையில்.. ஆனால் அப்போது வெளியே ம.கோ.ரா டூயிட் பாடிக்கொண்டிருந்தார்.. இவரையெல்லாம் புரட்சிதலைவனாக்கிய தமிழகம் செய்த மாபெரும் தவறு ஜனநாயகத்தின் ஆணிவேரையை அசைக்க தொடங்கியது எனலாம்.. .. மிசாவில் கூட கலைஞர் தன் எழுத்தை நிறுத்தவில்லை மாறாக உடன்பிறப்புகளுக்கு புரிகிறமாதிரிதான் எழுதிக்கொண்டிருந்தார்.. யாரெல்லாம் சிறை செல்லவில்லையென எதிர்மறையாக எழுதினார்.. படிக்கிறவர்களுக்கு கலைஞர் எழுத்தை புரிகிறவர்களுக்கு புரியும்.. மிசா இந்திய ஜனநாயகத்தில் கரும்புள்ளியாக இருந்தது.. 25.6.1975 கறுப்புதினம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment