Tuesday, June 6, 2017
சிவா..
#திருச்சிசிவா..
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.. நண்பரின் திருமணத்தை நடத்திவைக்க பாபநாசம் வந்திருந்த போது நீண்டநேரம் விவாதிக்கின்ற சூழல் ஏற்பட்டது.. தளபதி மீது தனிபிரியம் கொண்டிருந்தார்.. திரு.வைகோவைப்பற்றி பேச்சு வந்தபோது.. அப்போது திமுகவில் இருந்தார் வைகோ மௌனமாக.. கடந்தார்.. நிறைய அர்த்தம் பொதிந்த சிரிப்பை தந்து மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்தார் ஒரு கட்டத்தில் .. நான் கொஞ்சம் அதிகபிரசங்கியாக .. தஞ்சை பெரியாரென அழைக்கப்பட்ட மன்னை அவர்கள் .. அவன் நடிகன் நம்பமுடியாதவன் என்று ஒருமுறை சொன்னதை சொன்னபோது.. பெரியவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிட போகிறதென்றார்..
..
இங்கே ஒப்பீட்டை கொண்டுவர நினைக்கிறேன்.. சிறந்த நாடாளுமன்றவாதியாக அடிக்கடி தன்னை சொல்லிக்கொள்கிற வைகோவின் நாடாளுமன்ற பேச்சுகளை சற்று கூர்ந்து கவனித்தால் .. அனைத்து வெத்துவேட்டாக தெரியும்.. தமிழகம் சிறந்த தலைவர்களை தந்திருக்கிறது.. காயிதெமில்லத், அறிஞர் அண்ணா .. தொடங்கி இரா.செழியன் மாறன்.. என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் இடம்பெற தகுதியானவர் திருச்சி சிவா..
நிச்சயமாக அந்த வரிசையை வைகோ இன்னும் தொடவில்லை என்பதுதான் நிதர்சனம்..
..
இடைமறித்து விவாதம் செய்வதென்பதோ அல்லது உணர்ச்சிவயப்பட்டு விவாதிப்பதோ நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல.. வேகமாக பேசுவதால் மட்டும் சாதித்துவிட முடியுமா என்றால் வைகோவே பதிலாக இருக்கிறார்.. எந்தவொரு தனிநபர் மசோதாவை இதுவரை கொண்டுவந்ததாக என் அறிவில் இல்லை.. அப்படியே கொண்டுவந்திருந்தாலும் அதில் வெற்றியை பெற்றதில்லை.. 18 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவையில் இருந்தார் என்பதை தவிர.. எந்தவொரு மசோதாவின் போக்கை மாற்றியதாகவோ அல்லது தோல்வியடைய செய்ததாகவோ திருத்தங்களை கொண்டுவந்ததாகவோ தெரியவில்லை காரணம் மாறன் அந்தவேலைகளை சிறப்பாக செய்துவந்தார் அவரை மீறி செயல்படமுடியாமை ஒரு காரணமென்றாலும் எப்படி செயல்பட வேண்டுமென கலைஞர்தான் இங்கிருந்து இயக்கிக்கொண்டிருந்தார்.
..
திருச்சி சிவா மேற்சொன்ன பட்டியலில் இடம்பெற கூடிய தகுதியுடையவர்.. ஆவேசமாக பேசிதள்ளாமல் ..ஆழமாக அளவோடு .. எல்லோரையும் ஈர்க்கிற வித்தை தெரிந்தவர். மக்களவையில் திமுகவிற்கு உறுப்பினரே இல்லாத காலகட்டத்திலும் மாநிலங்களவையில் தனிநபர் தீர்மானத்தை கொண்டுவந்து சிறப்பாக பேசி அதில் உள்ள நியாயத்தை எடுத்துச்சொல்லி வெற்றிபெற செய்திருக்கிறார்... திருநங்கை மசோதா ஒன்று போதும் அதேபோல் நரிகுறவர்கள் மசோதா மீதான பேச்சும் சிறப்புவாய்ந்தது..
..
நல்ல பார்லிமென்டேரியனாக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். வீணான கூச்சல் இடாமல் உணர்ச்சி வயப்பட்டு கத்தி தீர்க்காமல்.. சொல்ல வந்ததை தெளிவாக எல்லோரும் ஏற்கும்படி செய்பவர்..
நல்ல அரசியல்வாதியாய்.. எல்லோருக்கும் பிடித்தவராய் கொண்ட கொள்கையில் உறுதியும் கலைஞர் மீதும் தளபதி மீதும் பற்றும் கொண்டவர் இன மொழிக்கு ஆபத்தென்கில் பாய்ந்திடும் புலியாய்.. எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய்.. திகழ்கிறார்..
..
நிச்சயமாக மாறனுக்கு பிறகு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் (பார்லிமென்டேரியன்) இவர் என்பதில் மாற்றுகருத்தே இல்லை..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment