Sunday, June 4, 2017
வைரவிழா சொல்லும் சேதி
#வைரவிழா..
நிறைய கருத்துகளை விதைத்திருக்கிறது.. பாஜக மட்டுமல்ல அதிமுகவும் பதறியதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.. வயதானோர்கான விழா என பொன்னர் சப்பைகட்டுகிறார்.. காங்கிரஸின் குடியரசுதலைவர் வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.. வழக்கமான நாஞ்சில் பேச்சாக இது இல்லை.. அதிமுகவின் குறிப்பிட்ட ஒருபிரிவின் குரலாக தெரிகிறது..
..
சிலர் விமர்சனங்களில் ஆசிரியருக்கு திருமாவிற்கு இடமில்லை ப.சிதம்பரம் போன்றோர் முன்னிலை படுத்தபடவில்லை என சொல்கிறார்கள்.. எல்லோரும் ஒரே பதில்தான் .. விழாவின் நோக்கம் சிதைந்துவிடாமல் ஆளும் அரசுகளுக்கு எதிரான பங்களிப்பை ஒருங்கிணைக்க செய்த முதல் முயற்சி அதில் வெற்றி கண்டிருக்கிறது.. எவ்வளவோ இடைஞ்சல் எதிர்மறை கருத்துகள் விழாவின் சிறப்பை களங்கமடைய செய்ய செய்த சூழ்ச்சிகள் அத்தனையையும் முறியடித்து சிறப்பித்திருக்கிறார் தளபதி.. இதில் மற்றொரு சேதியும் அடங்கியிருக்கிறது .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் திமுகவின் அடுத்த தலைவராக முன்னிருத்தப்பட்ட திரு.ஸ்டாலினை தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெறுதல் ..
..
தமிழகத்தின் பல்வேறு உதிரிக்கட்சிகளின் தலைவர்களை அழைக்கவில்லை என்பதை வேறொரு கோணத்தில் காண வேண்டியிருக்கிறது.. தேவையில்லாத சுமையை ஆரம்பத்திலிருந்தே சுமக்க வேண்டியதில்லை.. தேவைபடுமெனில் அது அப்போதைய நிலைமையை கண்டு முடிவெடுக்கலாமென்ற யுக்தியாக கருதவேண்டும்.. ஆம்.. தளபதி அவர்களை நாடு நம்ப தொடங்கியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் மிக சிறந்த தலைவர்கள் வரிசையை தளபதி அடைந்திருக்கிறார்.. மக்கள் விரும்புகிற தலைவராக மாற்றே இல்லாத இடத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்.. இந்த நேரத்தில் எங்களால்தான் என #சிறுசுகள் கூச்சலிட வாய்ப்பை வழங்காமல் காயை நகர்த்துகிறார்.. மேடையில் கூட மிக சாதூர்யமாக சிலரை அமர்த்தவில்லை..
மேடையை அழகாக்கியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்..
..
நாகரீகமான அரசியலை எதிரிகளும் வியக்கும் அரசியலை நல்லதொரு தொடக்கத்தை.. நாடு விரும்பும்..மக்கள் விரும்புகிற புதியதொரு மாற்றத்தை திரு.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்
#மகிழ்ச்சி_பெரும்மகிழ்ச்சி..
..
#தளபதியின்_புதியபாதை …
..
தோழர். ஆலஞ்சி
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment