Wednesday, June 21, 2017

மதமேறிய கிறுக்கன்

நாம் ஏன் வெளிநாட்டு கடவுளை வணங்கவேண்டும்..உள்நாட்டு கடவுளையே வணங்ககூடாது.. டாக்டர் கிருஷ்ணசாமி.. .. என்னா அறிவு மதவெறியர்களோடு கை கோர்த்தால் இப்படிதான் பேச வரும்.. இவர் ஏன் நாட்டுவைத்தியராக சித்தவைத்தியராக இல்லாமல்/படிக்காமல் அலோபதி படித்தார்.. ஹானிமன்(C.F.S. Hahnemann) என்ற மேலைநாட்டவர் பெயரிட்ட அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தை ஏன் படித்தார்.. இவர் பயன்படுத்தும் எல்லா மருத்துவ உபகரணங்களும் மேலைநாட்டவர்கள் தந்ததுதானே..இவர் நாடி பிடித்து நோயாளிகளை பார்க்காமல் ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.. .. தந்தை பெரியார் சொல்வார்..சித்தவைத்தியன் காலத்தில அறுபது வயசுல அல்ப ஆயுசுல போனான் மேலைநாட்டு மருத்துவம் வந்துதான் என்ன வியாதின்னு தெரிஞ்சு வைத்தியம் பார்க்க முடிந்ததுன்னு.. கிருஷ்ணசாமி சித்தவைத்தியம் பார்க்கலாம்.. .. எந்த கடவுளையும் கும்பிடவோ மறுக்கவோ அவரவருக்கு உரிமை உண்டு இந்துக்கள் முஸ்லிம் கிருஸ்துவ கடவுளர்களையும்.. கிருஸ்துவர்கள் இந்து முஸ்லிம் கடவுளையும் ..முஸ்லிம்கள் இந்து கிருஸ்துவ கடவுளையும் மறுக்கிறார்கள்.. நான் மூவரின் கடவுளையும் மறுக்கிறேன் என்றார்.. கடவுளை வணக்கத்தை அவரவர் விருப்பத்திற்கு வைத்துக்கொள்ளவேண்டுமே தவிர குப்பனயோ சுடலைசாமியே ஏன் கும்பிடல என்று கேட்க கூடாது..அதுசரி கிருஷ்ணசாமி .. ராமர் கிருஷ்ணன்..என்ன தமிழரின் கடவுளா.. தமிழனுக்கு எல்லா கடவுள்களும் #வந்தேறிகள் தான்.. .. முதலில் அறிவார்ந்த விடயங்களில் விவாதம் செய்யலாம் கடவுள் இருக்கிறாரா ..யார் கடவுளென..? முடிவு செய்து சுடலைமடசாமியையே கும்பிடட்டும்.. வந்தேறி சாமிகள் நமக்கெதற்கு..? கிருஷ்ணசாமி முடிவு செய்து விட்டு பிறகு பேசட்டும்.. #மதம்_தலைக்கேறிய_பித்தன்… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment