Wednesday, June 21, 2017

தளபதி

ஆளுநர் அனுப்பிய கடிதத்தை படித்துகாட்டமுடியாது சபாநாயகர்.. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவராக தகுதியில்லை எச்.ராசாசர்மா.. .. கிறுக்கன்களோடு மல்லுகட்டுவது எவ்வளவு சிரமம்.. சபாநாயகருக்கு சபையை எப்படி நடத்துவதென்று கூட தெரியவில்லை.. ஆளுநரின் ஒப்புதலோடுதான் அவரின் செயலர் கடிதம் எழுதமுடியும்..அது ஆளுநரே எழுதியதை போல்தான் என்பது கூட தெரியாமல் பேசுகிறார்.. விதிகளை முழுமையாக அறிந்தவராக சபாநாயகர் தனபால் இல்லை.. எதிர்க்கட்சி தலைவர் என்பது அமைச்சருக்கு நிகரான பதவி அவருக்கிருக்கிற அதிகார வரம்புகள் என்ன என்பதையும் அவருக்கு பதில் அளிப்பது சபாநாயகரின் கடமை என்பதையும் மறந்துபோகிறார் .. சபாநாயகரை இருக்கையில் அமர்த்த அவை முன்னவரோடு எதிர்க்கட்சி தலைவரும் தான் அழைத்தரவரவேண்டும்.. சபையின் நிகழ்வுகளை எதிர்க்கட்சி தலைவரின் ஒழுங்கிற்கேற்ப நடத்தவேண்டும்.. இந்திய அரசிலமைப்பு தந்த அதிகாரங்கள் எதிர்க்கட்சி தலைவருக்கென்ற பிரத்கேயமாக சொல்கிறது.. அமைச்சரின் அனைத்து அனுகூலங்களும் .. எதிர்க்கட்சிதலைவருக்கும் உண்டு.. எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகள் சபையை நேர்மையாக நடத்திட உதவிடவேண்டும் அதேவேளை சபாநாயகர் நேர்மையோடும் நடுநிலையோடும் நடந்திட வேண்டும்.. இங்கே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகள் நேர்மையானதாக சபை நாகரீகம் கொண்டதாக இருக்கிறது ஆனால் சபாநாயகர் விதிகளை அறியாதவராக ஆளும்கட்சிக்கு அல்லது அவரின் ஆதரவாளர்களுக்கு சாதகமானவராக இருக்கிறார்.. .. ராசா சர்மா நல்ல மருத்துவரை காணவேண்டிவரும்..திரு.ஸ்டாலினை விமர்சிக்கிற அளவிற்கு இன்னும் வளரவில்லை அதற்கான தகுதி கௌஞ்சம் கூட இல்லை மன பிறழ் Mental disorder அடைந்தவரைப்போல நாளுக்குநாள் உளறல்கள் அதிகமாகி கொண்டிருக்கிறது .. தினம் தினம் ஏதாவது பேசி திரிகிறார் தமிழகம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவராக தளபதி வலம் வருகிறார்.. பெரியாரின் பெரும் சீடர் கலைஞரின் வார்ப்பாய் .. மிளிருகிறார்.. நல்ல தலைமைக்குரிய நற்பண்புகளை கொண்டவராக எல்லோரும் விரும்புகிறவராக எப்போதும் களத்தில் காண்கிற தளபதியாக இருக்கிறார். எதையும் தெளிவோடு அறிந்துக்கொண்டு.. நாட்டிற்கு எது தேவை என்பதில் உறுதியாய் இருப்பதால் GST போன்றவற்றில் எதிர்ப்பதும் ..பாஜகவின் பாசிச சிந்தனைக்கு சிம்மசொப்பனமாய் திகழ்வதால் தமிழிசை பொன்.ராதா எச்.ராசா சர்மா போன்றவர்கள் எதையாவது பேசி ஸ்டாலின் வளர்ச்சியை தடுத்திட முடியுமென நினைக்கிறார்கள் காட்டாற்று வெள்ளத்தை கைகள் கொண்ட தடுத்திட முடியும்.. எதிரிகளே.. தளபதி நம்பியவர்களும் நல்லவர்களுக்கும் தென்றல்.. எம் எதிரிகளுக்கோ .. சூறாவளியுடன் கூடிய புயல்... தூக்கியெறியபடுவீர்கள்.. .. #எச்சரிக்கை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment